Thursday, July 26, 2012

கோவை மெஸ் - M.S.R பிரியாணி ஹோட்டல் - கோவை

M.S.R பிரியாணி ஹோட்டல்
கோவையில் நிறைய முஸ்லிம் அன்பர்கள் இருக்கிறதால் இங்க பெரியாடு என்கிற மட்டன் (மாட்டு இறைச்சி) அதிகம்.அதனால் பீப் பிரியாணி கோவையில் பல இடங்களில் நல்ல சுவையா கிடைக்கிறது.இதுல ரொம்ப முக்கியமான ஹோட்டல் போத்தனூர் டு சுந்தராபுரம் ரோட்டில் இருக்கிற MSR ஹோட்டல் ரொம்ப பேமஸ்.போத்தனூர் வழியா செல்லும் போது திடீர்னு ஞாபகம் வந்ததால் இந்த ஹோட்டலுக்கு போனோம்.
முன்புறம் சின்ன  கடை போல் தான் இருக்கிறது ஆனால் உள்ளே ஏகப்பட்ட இடம்.நிறைய பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் சுவரை ஒட்டி ஓரு அடி அகல டேபிள் டாப் வைத்து இருக்கின்றனர்.போய் அமர்ந்ததும் நமக்கு வேண்டிய பிரியாணி, சில்லி பீப், பீப் சுக்கா வறுவல் ஆர்டர் பண்ணினோம்.



 

நல்ல வாசத்துடன் பிரியாணி இருந்தாலும் சுவை முன்பு போல் இல்லை. கொஞ்சம் கம்மியாக தான் இருக்கிறது.ஆனாலும் நன்றாக இருக்கிறது .ரொம்ப வருடங்களுக்கு முன்பு இன்னும் சுவையாக இருந்தது.அப்புறம்  கறி மெதுமெதுவென்று பஞ்சு போல் நன்றாக இருக்கிறது.வறுவல் கொஞ்சம் காரத்துடன் இருக்க, குடிமகன்களுக்கு ஏற்ற சைட் டிஷ் போல் இருக்கிறது.அப்புறம் சில்லி வறுவல் நன்றாக இருக்கிறது. என்ன ...ரொம்ப நேரம் எண்ணையில் பொரிக்க வைப்பதினால் என்னவோ கொஞ்சம் சிவந்து இருக்கிறது.மத்தபடி டேஸ்ட் ஓகே.இரண்டு பிரியாணி ஒரு வறுவல்,ஒரு சில்லி 120 ரூபாய்.சாப்பிட்டு கையை கழுவிய பின்னும் பிரியாணியின் வாசம் இருக்கத்தான் செய்கிறது.
மதிய  நேரம் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.அப்புறம் சிக்கன் , காடை மீன் என்று எல்லா வகையும் இருந்தாலும் இங்க பீப் மட்டும் அதிகமா விற்பனை ஆகும்.பீப் சாப்பிட விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம்.விலையும் குறைவுதான்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

Monday, July 23, 2012

ஆலம்பரா கோட்டை - கடப்பாக்கம் (Alambara Fort )


ஆலம்பரா கோட்டை...
ஈசிஆர் ரோட்டில் முதலியார் குப்பம் படகு இல்லம் சென்று விட்டு அடுத்து எங்காவது பீச்சுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து போனது கடப்பாக்கம் என்கிற ஒரு சின்ன கடற்கரை கிராமத்திற்கு..சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னும் முழுமை அடையாமல் இருக்கிறது இந்த ஊர்.சென்னையில் இருந்து பாண்டி செல்லும் ஈசிஆர் ரோட்டில் இருந்து இடது பக்கம் திரும்பினால் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் கடற்கரையை அடையலாம்.
கடற்கரை வரை சென்று இறங்கியவுடன் நம்மை வரவேற்பது மீன் கவிச்சியும், காய வைத்துள்ள மீன் கருவாடும்... அப்புறம் நல்ல கடல் காற்றும்.


ஆட்களின் நடமாட்டம் அதிகம் இல்லாமல் நன்றாக அமைதியாக இருக்கிறது இந்த கடலோர பகுதி.மீனவர்களின் கட்டுமரங்கள் நிறைய இருக்கின்றன. காய்ந்து போன மீன்களின் முள் கூடுகள் நிறைய கிடக்கின்றன.கொஞ்சநேரம் பீச் மணலில் நடந்து விட்டு பார்க்கையில் ஒரு சிதிலமடைந்த கோட்டை நம் கண்ணுக்கு புலப்பட என்னவென்று கேட்க ஆலம்பரா கோட்டை என்றும் திப்பு சுல்தான் கோட்டை என்றும் சொன்னனர்.நடந்து செல்ல லேட்டாகும் என்பதால் வண்டியில் கோட்டைக்கு கிளம்பினோம்.கிராமத்தின் ஊடே செல்கிற ரோட்டில் சென்றோம்.நிறைய வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னும் அப்படியே இருக்கின்றன.
ஆலம்பரா கோட்டை ரொம்ப சிதிலமடைந்து காணப்படுகிறது என்பதை உணர்த்தும் விதமாகவே இக்கோட்டையின் பெயர் தாங்கிய போர்டும் மிக மோசமான நிலையில் இருக்கிறது.கோட்டையை அடைந்தோம். பேக் வாட்டரில் உள்ளபடி பாதி மணலில் புதைந்தபடி இதன் சுவர்கள் இருக்கின்றன.கோட்டை சுவர் இன்னும் பலம் மிக்க தாகவே இருக்கிறது.






மிகப்பெரிய பரப்பளவில் இக்கோட்டை அமைந்து இருந்தாலும் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே மண்ணில் புதைந்து இருந்தாலும் இந்த கோட்டையை ஆண்ட மன்னர்களின் வரலாற்றை, அவர்களுடைய பலத்தை பறை சாற்றுகிறது.இந்த கோட்டைக்கு நடுவில் ஒரு சமாதி இருக்கிறது.இது யாருடையது என்பதற்கான விவரம் தெரியவில்லை.ஆனால் இங்கு அதிகம் நடைபெறும் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளின் பெயர்களை மட்டும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் இங்குள்ள வாசிகள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு திரும்பினோம்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, July 19, 2012

மாமல்லபுரம் ஒரு பார்வை - 3

மாமல்லபுரம் ஒரு பார்வை - 3
சிற்பம்...சிற்பம்..பல்லவர்களின் கலை எங்கெங்கும்......நுணுக்கமான கலைத் திறன்......எப்படி செய்து இருப்பார்கள்..ஆச்சர்யமும் அதிசயமும்...பண்டைகால தமிழர்கள் திறம் வாய்ந்தவர்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு இந்த சிற்ப கலை.








கடற்கரை  கோவில் போகாத தால் அங்க இருக்கிற சிற்பங்களை புகைப்படம் எடுக்க முடியவில்லை.அங்கும் சிறப்பு வாய்ந்த சில சிற்பங்கள் இருக்கிறதாம்.அப்புறம் மாமல்லபுரத்தில் நிறைய இடங்கள்  இருக்கின்றன.சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே தெரிந்து வைத்து இருக்கிறோம்.நமக்கு நம்ம பண்டைய காலத்து பொக்கிசங்கள் எதையும் தெரிந்து வைத்து கொள்வதில்லை.பாதுகாத்து கொள்வதில்லை.இருக்கிற இடங்களை எல்லாம் பாழ் செய்து கொண்டு வருகிறோம்.(எங்க பார்த்தாலும் தனிமையை தேடி திரிகிற ஒரு கூட்டமே இங்க சுத்திட்டு இருக்கு.)
எங்கிருந்தோ வருகிற வெளிநாட்டவனுக்கு நம்ம நாட்டோட கலை, பண்பாடு பற்றி தெரிந்து இருக்கிறது.
நமக்கு....? சுத்தம்..?
இன்றைய தலைமுறையினருக்கு இந்த இடங்களை சுற்றி காட்டுங்கள்.அறிந்து கொள்ளட்டும்....தமிழன் மிக திறமை வாய்ந்தவன் என்பதை..
மீண்டும் செல்லக் கூடிய ஆர்வத்தினை ஏற்படுத்தி விட்டது இந்த மாமல்லபுரம் பயணம்.கண்டிப்பாக கைடு கொண்டு அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

முந்தைய  பகுதி
மாமல்லபுரம் ஒரு பார்வை - 1
மாமல்லபுரம் ஒரு பார்வை -2


நேசங்களுடன் 
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, July 18, 2012

மாமல்லபுரம் ஒரு பார்வை - 2


மாமல்லபுரம் ஒரு பார்வை - 2
மலை பகுதிகளை அங்க இருக்கிற சிற்பங்கள், கோவில்கள் போன்று இருக்கிற ரதம் இவைகளை சுத்தி பார்த்துட்டு இருக்கும் போது அம்மணிகள் அவங்க ஜோடிகளோட பண்ற இம்சைய தாங்க முடியாம கடற்கரை கோவில் போலாம்னு நினைச்சு முடிவை மாத்தி பீச்சுக்கு போனோம்.அங்க போனா எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊத்தினது போல அங்கயும் ஜோடி ஜோடியா... (எப்படிதான் பிக்கப் பண்றானுங்க ன்னு தெரியலையே... நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே மாட்டேங்குதே...ம்ம்ம்)







பீச்சுக்கே உரித்தான குதிரை சவாரி, பலூன் சுடுதல்,கிளி ஜோசியம், தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் என களை கட்டுகிறது...
கொஞ்சநேரம் காத்தாட நடந்து விட்டு கடல் காற்றை சுவாசித்து விட்டு வெளியேறினோம்.இருபக்கமும் நிறைய கடை கண்ணிகள் (கன்னிகளும் சேர்த்து.. கூட்டிட்டு வந்ததுக்கு மொய் வைக்கும் விதமாய் பையன்களும்....) அப்புறம் சூடாய் மீன் வறுவல், பேன்சி ஸ்டோர், கிளிஞ்சல் பொருள்கள், என நிறைய....கடைகள்....
இதெல்லாம்  பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் பார்க்க வேண்டிய இடங்கள் இருப்பதினால் அங்க கிளம்பினோம்...

இனி  அடுத்த பதிவில்...

நேசங்களுடன்
ஜீவானந்தம் 

இன்னும் கொஞ்சம்...

Monday, July 16, 2012

மாமல்லபுரம் ஒரு பார்வை 1


மாமல்லபுரம்
பொழுதுபோகாமல் இருக்கிறதால் எங்காவது வெளிய போலாம் அப்படின்னு முடிவு பண்ணி போனது நம்ம பல்லவர்களோட ஊரான மாமல்ல புரத்துக்கு..
போற வழியிலேயே ஆரம்பிக்கிறது சிற்பக்கலையின் வெளிப்பாடுகள்.மாமல்ல புரம் வந்து விட்டதை அறிவிக்கும் விதமாக வழியெங்கும் ரோட்டின் இருபுறத்திலும் ஏகப்பட்ட சிறு சிறு சிற்ப தொழிற்சாலைகள்.
 
பல்லவ மன்னவனின் நகரமான மாமல்லபுரம் நம்மை வரவேற்கிறது.முதலில் போன இடம் ஐந்து ரதம் இருக்குமிடம்.ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், பெரிய யானை, நந்தி என நிறைய சிற்பங்களை நேரில் பார்த்த போது ஒரு வித மகிழ்ச்சி.



அப்புறம் உலக பாரம்பரிய சின்னமாக மாமல்லபுரம் இருப்பதாலும் நம்ம பல்லவர்கள் புகழ் வெளிநாடு வரை பரவி இருப்பதாலும் அயல்நாட்டவர்களின் வருகை ரொம்ப அதிகமா இருக்கு.கூடவே நம்ம ஜோடிகளும்...
ஐந்து ரத சிற்பங்களை பார்த்துவிட்டு காலாற நடக்கையில் இருபுறமும் தற்கால பல்லவர்களின் கைவண்ணத்தில் உருவான சிலைகளை கண்டோம்.இவைகள் பெரும்பாலும் சிலை வடிக்கும் கருங்கல் கல்லினாலே இருக்கிறது.பல்லவர்களின் சிற்பங்கள் அனைத்தும் பாறைகளில் இருக்கின்றன. 
(                    புத்தருக்கு போட்டியா போஸ் கொடுக்கும் பெரியவர் )



அப்புறம் முக்கியமா காதலர்களுக்கும் ( மத்தவங்களுக்கும்..?) சொர்க்க பூமியா இருக்கிற மலை பகுதிக்கு சென்றோம்.ஒரு பாறை துண்டு எந்த வித சப்போர்ட்டும் இல்லாமல் நிற்கிறது.ஆச்சர்யம்தான்.அந்த மலை முழுவதுமே பல்லவர்களின் கைவண்ணம் தான்.அப்புறம் அந்த மலை பகுதியில் நிறைய குறியீடுகள், நீர் தேக்க பள்ளங்கள் என நிறைய ஆச்சர்யங்கள்.


அதைவிட ஆச்சர்யம்...எங்கெல்லாம் பாறைகள் இருக்கோ இல்லையோ... ஆனா அம்மணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கு.செடி கொடிகளுக்குள் பாறை மறைவுகளுக்குள் புதுப்புது ரூட்டு போட்டு மறைவான பகுதிகளில் ஆளாளுக்கு தத்தம் ஜோடிகளுடன் மலை பகுதிகளில்...(அப்படி என்னதான் பேசுவாங்க ஒரு டவுட்டு....ஒரு ஜோடிய பார்த்துட்டு கூட வந்த நண்பர் சொன்னது மச்சி...அங்க பாரேன்...மைக்குல பேசறாங்க... )
அவங்களை தொந்தரவு பண்ணி பழிபாவத்துக்கு ஆளாக வேண்டாமே என்று அங்கிருந்து நகர்ந்தோம்.விடு ஜூட்...

இனி அடுத்த பதிவில்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்

 
இன்னும் கொஞ்சம்...