Thursday, August 30, 2012

தென் திருப்பதி - மலை வையாவூர், காஞ்சி புரம்

பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் - தென் திருப்பதி,  மலை வையாவூர், காஞ்சி புரம் மாவட்டம் 

போன முறை வேடந்தாங்கல் போன போது மலை மீது ஒரு கோவிலை கண்டேன்.அது தென் திருப்பதி கோவில் என்று கேள்விப்பட்டதோடு சரி. அப்போ போக நேரமில்லாத தால் நேற்று மீண்டும் தரிசனம் பெற சென்றேன்.
இயற்கை சூழ்ந்த மலை.மலை அடிவாரத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் அரச மர பிள்ளையார் கோவில் ஒன்றும் இருக்கிறது.
 
 

இந்த ஊரில் தான் ஆஞ்ச நேயர்  சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வந்த போது  இந்த இடத்தில் சற்று இளைப்பாற எண்ணி, மலையை கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மலையை மாற்றிக் கொண்டாராம். எனவே, மலையை கீழே வைக்காத ஊர் என்பதே மருவி மலை வையாவூரானது என்று ஒரு தல வரலாறு இருக்கிறது.இங்கே நர்த்தன அவதாரம் எடுத்து இருக்கிற கோலத்தில் காட்சி அளிக்கிறார் ஆஞ்ச நேயர்.
                  இக்கோயிலின் ஆஞ்சநேயரை வேண்டுபவர் தங்கள் எண்ணங்களை வெள்ளைத் தாளில் எழுதி அதன்மீது மட்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள் துணியில் முடிந்து அனுமனின் பாதத்தில் வைத்து வணங்குகின்றனர். பின்னர் அதை கோயிலில் அதற்கென இருக்கும் கொம்பில் கட்டி விட்டுச் சென்றால் நாற்பத்தெட்டு நாட்களுக்குள் அவர்களது எண்ணம் கை கூடுகிறது என்பது நம்பிக்கையாக உள்ளது.
              இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றியும், வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
                           இவரின் எதிர்ப்பக்கத்தில் இருக்கிற மலையில் தான் பிரசன்ன வெங்கடேச  பெருமாள் அருள் புரிகிறார்.அடிவாரத்தில் இருந்து  மலைக்கு செல்ல படிகள் இருக்கின்றன.வண்டிகள் செல்ல ஒரு மலைப்பாதையும் இருக்கின்றன.
              நான் மட்டுமே படியில் சென்றால் சீக்கிரம் இளைத்தும்... களைத்தும் விடுவோம் என்று எண்ணி காரிலேயே மலைப்பாதையில் சென்றேன்.ஒரே ஒரு ஹேர் பின் வளைவுடன் அழகாய் வளைந்து செல்கிறது.மலை பாதை தற்போது செப்பனிடப்பட்டு வருகிறது.இந்த மலைப்பாதையில் செல்லு போது  சுற்றிலும் பார்த்தால் இயற்கை பசுந்தோலை போர்த்தி கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.மலையை சுற்றிலும் இயற்கை அன்னையின் மடியில் பசுமை தோட்டங்கள் பரந்து விரிந்து கிடக்கிறது.கோவிலை அடைந்தோம்.ரொம்ப அமைதி தவழ்கிறது.நல்ல விசாலமான கோவிலாகத்  தான் இது இருக்கிறது.
 
 
   இந்த கோவிலுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.மன்னன் அபராஜிதவர்மப் பல்லவன். திருப்பதி பெருமாளின் அழகில் மயங்கி அதே நினைவுகளுடன் தீர்த்த யாத்திரை செய்துகொண்டிருந்தபோது, ஒரு மலையைக் கண்டார். தன்னுடைய எண்ணத்தில் எப்போதும் நிறைந்திருக்கும் திருப்பதி ஸ்ரீனிவாசனை அங்கேயும் எழுந்தருளும்படி வேண்டினார்.அபராஜிதன் மனத்தில் தோன்றிய பிரான், அவருக்காக அங்கே ஒரு ரதத்தில் காட்சி தந்தார். குதிரைகள் பூட்டப்பட்ட அந்த ரதத்தில் இருந்தபடி மன்னருக்கு அருள்புரிந்தார் திருப்பதி ஸ்ரீவேங்கடேசப் பெருமான்.தன் நாட்டின் பாதுகாப்புக்காக ரதத்தில் செங்கோல் பூண்டு காட்சி தந்த பெருமாளுக்கு பிரசன்ன வேங்கடேசர் என திருநாமம் இட்டு அழைத்தார்.பின்னர், இந்த மலை மீது ஒரு கோயிலையும் கட்டுவித்தார்.பிற்காலத்தில், ராஜா தோடர்மால் திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் பல செய்வித்தார்.
        ரதத்தின் மீது காட்சி அளித்தததின் அடையாளமாய் ரத சக்கரமும் குதிரை கால் குளம்பும் ஒரு பாறையில் இன்றும் இருக்கிறது

 
 
 
 
         மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் அமையப் பெற்ற தலம் இது. திருமலை திருப்பதியைப் போல் விளங்கும் தலமும்கூட. கோவிலை சுற்றி வலம் செல்ல பாதை சுத்தமாய் இருக்கிறது.முதலில் நம்மை வரவேற்பது கொடி மரம்.இதற்கு எதிரில் லட்சுமி வராகர் கோவில் இருக்கிறது.மேலும் ஸ்ரீசக்கரத்தாழ்வார், வேணுகோபாலர், ராமர் சந்நிதிகள் இருக்கின்றன.அலர்மேல்மங்கைத் தாயார் இதே மலையில், தனி சந்நிதி கொண்டுள்ளார்.மலை மீது, வலம் வந்து பெருமாள் சந்நிதிக்குள் சென்றால், இங்கே மூலஸ்தானத்தில் பெருமாள் செங்கோலுடன் ராஜகோலத்தில் காட்சி தருகிறார்.இவரது இரு மார்புகளிலும் இரண்டு மகாலட்சுமிகள் என்றும் நீங்காது அருள் புரிகின்றனர்.
      திருப்பதியில் எவ்வாறு வராக சுவாமியை வணங்கிய பிறகே வெங்கடாசலபதியை தரிசிக்கச் செல்ல வேண்டுமோ அதே போன்றுதான் இங்கும். 

      கோவிலின் பின்புற சுவற்றில் சிறு சிறு கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. இது என்ன வேண்டுதல் என்று தெரியவில்லை.
    மலை அடிவாரத்தின் கீழே நிறைய குடிசைகள் அழகாய் வைக்கோலால் போர்த்தப்பட்டு இருக்கிறது.
நல்ல இயற்கை சூழலில் குடி கொண்டுள்ள திருப்பதி பெருமானை வணங்கி மேன்மை அடைவோம்.

கோவில்  நடை திறக்கப்படும் நேரம்:
காலை  8.00 to 12 மணி வரை மாலை  4 to 7

ஆஞ்ச  நேயர் கோவில் :சனி ஞாயிறு மட்டும் காலை 8 to 1 மணி வரை. 
அப்புறம் எப்பவாவது அய்யர் ப்ரீயா இருந்தா வந்து திறப்பாராம்..(அவரே சொன்னது..)ஏன்னா அதிக வருமானம் இல்லாத கோவிலாம்.(கடவுளே காணிக்கை கேட்குதே..)

செல்லும் வழி :
மதுராந்தகம் டு செங்கல்பட்டு ரோட்டில் படாளம் கூட்டு ரோட்டில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் வழியில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்  மலை வையாவூர் இருக்கிறது.

கிசு கிசு : கோவில் ன்னா சாமி இருக்கிறதும், மலை ன்னா மாமி சாரி அம்மணி இருக்கிறதும் சகஜம். (கடலை போட ஏத்த இடமாத்தான் இந்த மலை கோவில் இருக்கிறது போல )


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Tuesday, August 28, 2012

மெரீனா பீச், சென்னை


பதிவர் சந்திப்பு விழாவிற்கு கொஞ்சம் முன் கூட்டியே வந்ததினால் எங்கயாவது போய்ட்டு ஒரு பதிவ தேத்தணும் அப்படின்னு முடிவு பண்ணி போனது உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா பீச்.......சத்தியமா நான் மட்டும் தான். (அம்மணிகள் யாரும் வரல..) எப்படியாவது முக்காடு போட்டுக்கிட்டு சில பேரு இருப்பாங்க...அவங்கள பார்த்தாவது கொஞ்சம் மனசு ஆறிடுமே..அப்டிங்ன்கிற நல்ல எண்ணத்துல தான் போனேன்). நான் வந்தது கார்ல என்றாலும் சென்னையின் முக்கிய அடையாளமாய் இருக்கிற சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ஐ கடக்கும் போது கோவையில் இருந்து வந்துகிட்டு இருக்கிற நண்பர்களோட ஞாபகங்கள்....
அப்புறம் வர்ற வழியெல்லாம் மெட்ரோ ரயில் வொர்க் நடந்திட்டு இருக்கிறதால் கொஞ்சம் ட்ராபிக்..கொஞ்சமென்ன... அதிகமாவே ட்ராபிக் தான்... பை பாஸ்ல 160 கிமீ வேகத்துல வந்தாலும் சென்னையில் நுழையும் போது 20க்கும் அதிகமாய் போகமுடியல...தட்டு தடுமாறி....கொஞ்ச கொஞ்சமாய் ஊர்ந்து கிட்டே எப்படியோ மெரீனா போய் விட்டோம்..

நல்ல மொட்டை வெயிலில் நிறைய பேர் முக்காடு போட்டு கிட்டு கடலை வருத்ததில் பொசுங்கி போனது நம்ம மனசும் தான்...(எங்க படம் அப்படின்னு கேட்க கூடாது....)
நேரம் குறைய குறைய மக்களின் கூட்டம் அதிகமாகி கொண்டே போனது.வெட்ட வெளியாய் இருந்த பீச் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நிறத்திற்கு மாறிக் கொண்டு இருந்தது..பீச் மணலில் காலாற நடப்பதில் ஒரு சுகம்..அதுவும் கை கோர்த்து கொண்டு......சத்தியமா நமக்கு அந்த கொடுப்பினை இல்லை......பக்கத்துல போன ஜோடியை கண்டதால் காதோரத்தில் கொஞ்சம் புகை வாசனை வந்ததென்னவோ உண்மைதான்...
     எப்பவும் போல கிளி ஜோசியம், மாங்கா பட்டாணி, சுண்டல், பலூன்கடை, பஜ்ஜி கடை, குடை ராட்டினம் என அனைவருக்கும் ஆங்காங்கே வாடிக்கையாளர்கள்......கடலின் அலையை ரசித்ததில் நேரம் போனதே தெரியவில்லை..(கூடவே கடலலையில் கால்களை நனைத்து விளையாடிய அம்மணிகளையும்...)
 
யாராவது வந்து என்கூட நின்னு போட்டோ எடுத்து கொள்வார்களா என ஏங்கி நிற்கும் திரையுலக நட்சத்திரங்கள் வரிசை கட்டி நின்றது ரொம்ப அதிசயம்...(நான் நம்ம கேப்டன் கூட நின்னு எடுத்துகிட்டேன்...வரலாறு முக்கியம்...)
அப்புறம் நண்பர்கள் வந்தடைந்த சேதி வந்ததால் மெரீனாவை விட்டு விலக மனமில்லாமல் (சே.... நல்ல படம் ஓடிட்டு இருந்துச்சு,.....கொஞ்ச நேரம் நல்லா இருந்தா பிடிக்காதே நம்மாளுங்களுக்கு.....ரொம்ப சீக்கிரத்துலேயே வந்துட்டாங்களே என்று புலம்பிய படியே. .....) விலகினேன்.
அப்புறம் பதிவர் சந்திப்பு நடந்த இடம் போனது, வந்தது, நடந்தது எல்லாம் நிறைய பேரு எழுதிட்டதால் இங்க இருந்து ஜகா வாங்கிக்கிறேன்.....

கிசுகிசு: அம்மணிகள் எல்லாரும் என்னமா இருக்காங்க. சென்னை சென்னைதான். அட்டு பிகருக்கு good boyம்   good பிகருக்கு அட்டு boy ம்
கிடைக்கிறது இங்கதான்... ஹி ஹி ஹி

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, August 22, 2012

கிடா வெட்டு - அந்தியூர் வனம் - குருநாத சுவாமி கோவில்

அந்தியூர் வனம்
நண்பர் சங்கவி அவர்களின் கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன்.கோவையில் இருந்து சத்தி வழியாக அந்தியூர் சென்றேன்.அந்தியூரை நெருங்க நெருங்க வண்டிகளில் கூட்டம் கூட்டமாய்...பெரும்பாலும் மினி டோர் வகை வண்டிகளே...ஒவ்வொரு வண்டியிலும் ஆடு, கோழி மற்றும் இன்ன பிற இத்தியாதிகள்...கூடவே மக்கள் கூட்டமும் ..
அதுவரை  வேகமாக சென்ற நம்ம வண்டி கூட்ட நெரிசலின் காரணமாக நடந்து செல்பவர்களே  ஓவர் டேக் பண்ணும் படி ஆகிவிட்டது..
நிறைய கடைகள்..அல்வா, தேங்காய் மிட்டாய், கரும்பு சாறு கடைகள், பேன்சி ஸ்டோர், அப்புறம் இரும்பு கடைகள் என இருபுறமும் நிறைந்து இருக்கிறது.
பொறுமையாய் ஒவ்வொன்றையும் பார்த்த படியே முன்னேறி கொண்டு இருந்தோம்.வனம் செல்லும் வழி வந்ததும் சங்கவி யை தொடர்பு கொள்ள அவர் காட்டிய (சொல்லிய ) வழியின் படி சென்றோம்.கடைசியில் கண்டே விட்டோம். கூட்ட நெரிசலில் தனியாய் தெரிவதற்காக மலையூர் மம்பட்டியான் போல அவர் ஏற்பாடு செய்து இருந்தார்.
எப்படின்னா அவரு சாலை போட்ட  இடத்தின் மீது ஒரு  நீண்டகம்பில் அடையாள குறிப்பை கட்டி தொங்க விட்டு இருந்தார்..
அந்த கம்பு இதுதான்..

அப்புறம் அவருடன் ,அவரது குடும்பத்தாருடன் பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு கிடா வெட்டும் இடத்துக்கு கிடாவை ஓட்டி கொண்டு சங்கவியுடன் சென்றோம்.
             (எப்படா கறி ஆவ அப்படின்னு ஏக்கதோட பார்க்கிற சங்கவி )

கிட்ட தட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் கிடா , கோழி வெட்டி நேர்த்தி கடன் செய்து கொண்டு இருந்தனர்..ஒரு பக்கம் கிடா வெட்டி கொண்டு இருக்க , மற்றொரு பக்கம் அதை உரித்து தொங்க விட்டு துண்டுகளாக்கி கொண்டு இருந்தனர்.அதே போல் கோழிகளும் குழம்பாவதற்கு முன்னரே கொதி நீரில் போட்டு வேக வைத்து கொண்டு இருந்தனர் முடி பிடுங்குவதற்காக....
சங்கவியின் கிடா ரொம்ப நேரம் துளிர்க்காமல் விளையாட்டு காட்டி கொண்டு இருந்தது.அப்புறம் அவர் குடும்பத்தோட போய் கும்பிட பெரிய மனசு பண்ணி உயிரை விட்டது ஒரே வெட்டில்...
இதே போல பல குடும்பத்தினரின் வேண்டுதல் நிறைவேறிக் கொண்டு இருந்தது தொடர்ச்சியாக...
மக்கள் கூட்டம் வரிசையில் நின்று கடவுளின் தரிசனம் கிடக்க காத்து கொண்டு இருக்கையில் நாங்கள் அந்த வனத்தினுள் காலாற நடை போட்டோம்........காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக...
காமாட்சி வனம், பெருமாள் வனம் என போர்டுகள் ..ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் இணைந்து சமையலில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.வனம் முழுவதும் நல்ல கறிக்குழம்பு வாசம்.கிடைத்த இடத்தில் அமர்ந்து சமைத்து கொண்டும் சாப்பிட்டு கொண்டும் இருந்தனர் மக்கள்..
கிட்ட தட்ட அந்த ஏரியா முழுக்க கூட்டம் ..கூட்டம்...100 ஏக்கருக்கும் மேல் இருக்கும்.கிடைக்கிற இடங்களில் வயல் வெளிகளில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தனி தனி சமையலறை கொண்டு......
வேண்டுதல் நிறைவேற முடி காணிக்கை செலுத்திய பக்தர்கள் நிறைய தங்களின் தலையை தடவிக் கொண்டே தத்தம் குடும்பத்தினரை தேடி கொண்டு இருந்தனர்...
அப்புறம் கிராமத்து திருவிழாவில் கண்டிப்பாய் இடம் பெரும் சிறு சிறு கடைகள், பாட்டு புத்தகம், வளையல் கடைகள், பலூன், ஐஸ் வண்டிகள், என நிறைய...
எல்லாவற்றையும் சுற்றி பார்த்து விட்டு சங்கவியின் கொட்டகைக்கு திரும்புகையில் ரெடியாகி கொண்டு இருந்த மட்டன் வாசம் நம்மை அழைத்தது...கூடவே சங்கவியும்....
 
பிரியாணி, மட்டன், சிக்கன், குழம்பு, என அனைத்தும் சுவையாய் இருக்க வயிறும் மனதும் நிறைய சாப்பிட்டு விட்டு எழுந்தோம்...
தாம்பூல தட்டுடன் வந்த சங்கவியிடமும் அவரது குடும்பத்தினரிடம் சொல்லி கொண்டு விடை பெற்றேன்...

இந்த நாளை இனிய நாளாக ஆக்கிய சங்கவி அவர்களுக்கு நன்றி..

கிசு கிசு:வெளியூர் அம்மணிகள் வருகை அதிகமா இருக்கு.ஆங்காங்கே கிராமத்து குயில்கள் நிறையவே சுத்திக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. 

நேசங்களுடன்  
ஜீவானந்தம் 


இன்னும் கொஞ்சம்...

Monday, August 20, 2012

மூணாறு - இயற்கை அன்னையின் மடியில்

மூணாறு
கொச்சின் ல வேலையை முடிச்சிட்டு மதுரை போலாம்னு முடிவு பண்ணி மூணாறு வழியை தேர்ந்தெடுத்தோம்.வளைந்து வளைந்து செல்லும் பாதை.பசுமை இருபுறமும்.வழியெங்கும் இயற்கை கொட்டி கிடக்கிறது. ரோட்டின் ஓரத்திலேயே நுரை பொங்கி வரும் அருவியின் ஆர்பாட்டம்.பசுமை மேலாடையை போர்த்தி வைத்து இருக்கிற நிலப்பரப்புகள்.தேயிலை தோட்டங்களின் பசுமை புரட்சி...என எங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை..பசுமை..









நாங்க போன நேரம் வானம் பொத்து கிட்டு ஊத்தியதில் எதையும் பார்க்க முடியாமல் போய் விட்டது.கிடைத்த கேப்பில் எடுத்த படங்கள் கொஞ்சமே..
மேகங்கள் சூழ்ந்த மழையின் சாரலில் பயணித்த படியே மூனாறுல இருந்து மலைப்பாதை வழியா போடி மெட்டு வந்து சேர்ந்தோம்.
அதிகமா போட்டோ எடுக்க முடியல..அவ்ளோ மழை.நல்ல இதமான சூழ்நிலையில் திரும்ப செல்லவேண்டிய ஆவலை ஏற்படுத்தி விட்டது...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...