Friday, December 16, 2016

தகவல் - ஆன்லைனில் பணம் ட்ரான்ஸ்பர் செய்வது எப்படி - ONLINE TRANSFER

பழைய ரூ 500 மற்றும் ஆயிரம் ரூபாய்கள் செல்லாதவை ஆகிவிட்டதாலும், நமது அக்கவுண்டில் உள்ள பணத்தினை வங்கியில் இருந்து எடுப்பதற்க்கும் சில கட்டுப்பாடுகளை RBI விதித்து இருப்பதாலும் பணத்தினை கைகளில் கொண்டு வராமலே ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்யும் முறையினை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.ஆன்லைன் மூலம் நமது எல்லாத் தேவைகளுக்கும் பணத்தினை செலுத்தி விடலாம்.ஏடிஎம் கார்டு, கிரடிட் கார்டு இருப்பின் அதை பயன்படுத்தி கடைகளில் உள்ள ஸ்வைப்பிங் மெசின் உதவி கொண்டு பொருட்களைப் பெறலாம்.மளிகைப்பொருட்கள், துணிமணிகள், பர்னிச்சர், சினிமா, என எல்லாவிதமான தேவைகளையும் பெறமுடியும்.பணம் செலுத்தக்கூடிய சிறு சிறு அத்தியாவசிய இடங்களில் வங்கியில் இருந்து பெறப்படும் பணத்தினை கொண்டு செலவு செய்யலாம்.செக் எனப்படும் காசோலை மூலமும் ஒரு சில இடங்களில் கொடுத்து பரிவர்த்தனை பண்ணலாம்.
ஒருவரின் அக்கவுண்ட்க்கு நமது அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்பும் முறையை இப்போது பார்க்கலாம்.
ஆன்லைன் ட்ரான்ஸ்பர்  என்பது நெட் பேங்கிங் என்பதாகும்.இந்த வசதி தனியார் வங்கிகளில் தற்போது அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது.மக்கள் அதிகம் புழக்கம் உள்ள  ஸ்டேட் பேங்க், கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ், இந்தியன் பேங்க் போன்ற வங்கிகளில் ஒரு சிலரே பயன்படுத்துகின்றனர். இண்டர்நெட் மற்றும் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவரும் இந்த வசதியினை உபயோகப்படுத்தினால் மட்டுமே இந்தியா டிஜிட்டல் இந்தியாவாகும்.

நான் தனியார் வங்கியினை உபயோகப்படுத்தி வருவதால் அந்த முறையினை இப்போது பார்க்கலாம்.
தனியார் வங்கியில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தபின், உங்களுக்கு ஒரு கஸ்டமர் ஐடி தருவார்கள்.அந்த ஐடிக்கு ஏற்றபடி பாஸ்வேர்ட் டும் தருவார்கள்.அந்த பாஸ்வேர்டை உங்களுக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்ள முடியும்.வங்கியின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் நுழைந்து நெட்பாங்கின் ஆப்சனை தேர்ந்தெடுத்து உங்கள் அக்கவுண்ட்டின் கஸ்டமர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைய வேண்டும்.

நுழைந்தபின் உங்கள் அக்கவுண்டின் பொதுவான மெனுக்கள் தோன்றும்.ACCOUNT SUMMARY, TRANSACT, ENQUIRE, REQUEST  போன்ற மெனுக்கள் தோன்றும்.மேலும் FUND TRANSFER, BILL PAY, CARDS மற்றும் இன்னபிற மெனுக்கள் தோன்றும்.ஒவ்வொன்றாய் கிளிக் பண்ணி தாங்களாகவே எதற்கு இந்த ஆப்சன் என்றும் அறிந்து கொள்ள முடியும்.

நாம் இப்பொழுது பணம் அனுப்பும் முறையினை பார்ப்போம்.FUND TRANSFER எனும் மெனுவினை கிளிக் பண்ணினால், கீழ்க்கண்ட மெனுக்கள் தோன்றும்.WITH IN BANK, INSTANT TRANSFER, NEFT, RTGS,  என இருக்கும்.

மேலும் இடது பக்கத்தில் இருக்கும் மெனுவில் REQUEST என்கிற மெனுவில் ADD BENEFICIARY என்கிற மெனுவினை கிளிக் செய்து  நமக்கு தேவையான மெனுவான NEFT ஐ கிளிக் பண்ணினால் இன்னொரு பக்கம் தோன்றும்.அதில் நாம் யாருக்கு பணம் அனுப்ப வேண்டியிருக்கிறதோ அவரின் அக்கவுண்ட் எண், பெயர், IFSC CODE, மெயில் ஐடி போன்றவற்றை எண்ட்ரி செய்யவேண்டும்.



மேற்கண்ட தகவல்களை எண்ட்ரி செய்து ஒகே செய்தவுடன், உங்களின் மொபைல் எண்ணுக்கு ஒரு ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) வரும்.அதை மீண்டும் எண்ட்ரி செய்தவுடன் உங்களின் அக்கவுண்ட்டில் பெயர் சேர்த்துக்கொள்ளப்படும்.வெரிஃபிகேசன் ஆன அரைமணி நேரம் கழித்துத்தான் அந்த அக்கவுண்ட் எண்ணுக்கு பணம் அனுப்ப முடியும்.
பின் மீண்டும் மேற்சொன்ன வழிமுறைகளை கடந்து உங்களின் அக்கவுண்டை திறந்து FUND TRANSFER இல் TRANSACT என்கிற மெனுவை கிளிக் செய்தால் ஒரு மெனு உண்டாகும்.அதில் உங்கள் அக்கவுண்ட் எண், மற்றும் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களின் பெயர் லிஸ்ட் வரும்.அதை செலக்ட் செய்து விட்டு, என்ன காரணம், எவ்வளவு தொகை, மொபைல் எண் போன்றவற்றை செலக்ட் செய்து ஓகே செய்தால் மீண்டும் ஒரு OTP பாஸ்வேர்டு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும்.அதை எண்டர் செய்தவுடன் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து இன்னொரு அக்கவுண்ட்க்கு பணம் அனுப்பப்பட்டு விடும்.உங்கள் மொபைல் எண்ணுக்கு பணம் செலுத்திய விவரம் குறுஞ்செய்தியாக வந்து சேரும்.

இப்படி பல பேருக்கு சில நிமிடங்களில் பணம் அனுப்ப முடியும்.தொகைக்கு ஏற்றார்போல NEFT அல்லது RTGS ஐ தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.கிட்டத்தட்ட நூறு அக்கவுண்ட் எண்களை சேர்த்துக்கொள்ள முடியும்.
மேலும் வங்கி கொடுத்துள்ள வசதிகளைக் கொண்டு கிரடிட் கார்டு, டெலிபோன் பில், லைப் இன்சூரன்ஸ், ரீசார்ஜ் என எல்லா சர்வீஸ்களுக்கும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்.
உங்கள் அக்கவுண்ட்டின் ஸ்டேட்மெண்ட், செக் புக் போன்றவற்றை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.வங்கி கொடுத்துள்ள அத்தனை வசதிகளையும் ஆன்லைன் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்போது வங்கிகள் மொபைல் அப்ளிகேசன் தருகின்றன.ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் இந்த வசதியை தரவிறக்கம் செய்துகொண்டு, மொபைல் மூலமும் பணத்தினை அனுப்பலாம்.
இந்த வசதிக்கு கண்டிப்பாக இண்டர்னெட் வசதி தேவை.இப்போது அனைத்து இடங்களிலும் பிராட்பேண்ட் சேவை, வை பை போன்றவை கிடைக்கின்றன.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதால் நமக்கு நேரம் மிச்சம் ஆகிறது.அதுமட்டுமல்ல பணமும் பாதுகாப்பாய் சென்று சேர்கிறது.உங்களின் ரகசிய பாஸ்வேர்டு மற்றும் பின் நம்பரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.அதன் மூலம் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் கொள்ளை போக வாய்ப்புண்டு.

புதிய டிஜிட்டல் இந்தியாவிற்காக என்னால் ஆன சிறு முயற்சி இந்த பதிவு.

நேசங்களுடன்
ஜீவானந்தம்






இன்னும் கொஞ்சம்...