Showing posts with label திருமுக்கூடலூர். Show all posts
Showing posts with label திருமுக்கூடலூர். Show all posts

Thursday, May 10, 2012

கிராமத்து அனுபவம் - திருமுக்கூடலூர்- கரூர்

கிராமத்து  அனுபவம் 
பள்ளி விடுமுறை விட்டாச்சு..ஊரிலிருந்து அழைப்பு அதனால நாங்கலாம் சொந்த ஊருக்குப் போனோம்.நம்ம ஊர் ஒரு கிராமமுங்க.அங்க போக எங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.இயற்கை, நல்ல காற்று, சுற்றுப்புற அமைதி, நெரிசல் இல்லா பயணம், என ரொம்ப பிடிக்கும்.கிராமத்து வீட்டுல இருக்கிற சுகமே தனிங்க.அதுவும் அம்மா கைல வேற சாப்பாடு...நேரத்துக்கு நேரம் மறக்காம ...

அதில்லாமல் நம்ம ஊருல இரண்டு ஆறு வேற ஓடிட்டு இருக்கு.சிறுவயசில போய் குளித்தது, மீன் பிடித்தது என ஒரே ஞாபகம்.
இப்போ ஆத்துல தண்ணீர் வரத்து கொஞ்சம் கம்மியா இருக்கிறதால் மீன் பிடிக்கலாம்னு நம்ம நண்பர்கள் கூட ஆத்துக்கு போனோம்.கூடவே வலை, கத்தி, பை எல்லாம். நம்ம மாப்ள செடிகளுக்குள், ஆத்து குட்டைக்குள் கை வச்சி மீன் பிடிக்கிறதுல கில்லாடி.

உடைகளை கழட்டி எல்லாம் மேட்டுல வச்சிட்டு தண்ணிக்குள்ள இறங்கினோம்.வலையை சுத்தி கட்டி விட்டு செடிகளுக்குள் மீன் தேட, மாப்ள அவரு பாட்டுக்கு மீன் கைல பிடிச்சி வெளிய போடுறாரு, நாங்க செடிகளை அலச உள்ளே இருந்த மீன்கள் பதறி அடிச்சு வலையில் வந்து மாட்ட கிட்ட தட்ட 5 கிலோ பக்கம் மீன் பிடிச்சோம்.



 

கெண்டை, உளுவை, ஜிலேபி, ஆரான், கொக்கு மீன் என நிறைய வகைகள்.நாங்க பிடிச்ச மீன்கள் நிறைய முட்டைகளோட செனையா இருந்துச்சு.மீன் கழுவும் போது இந்த மீன் செனையை மட்டும் தனியா எடுத்து வச்சி கிட்டோம்.மீன் முட்டை பொரியல் ரொம்ப டேஸ்டா இருக்கும் தெரியுமா.

(பெரிய வெங்காயம் நல்லா வதக்கி கொஞ்சம் மஞ்சள் தூள், வர மிளகாய் போட்டு வதக்கி, பின்னர் மீன் முட்டைகளை போட்டு வதக்கி, தேங்காய் துருவல் போட்டு வதக்கி, கொஞ்சம் உப்பு போட்டு இறக்கினால் பொரியல் ரெடி..) ஹி ஹி ஹி ..சமையலும் செய்வோம்ல...

அப்புறம் எல்லா மீன்களையும் அலசி எடுத்து கிட்டு அப்படியே ஒரு குளியலை போட்டு கிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

 இங்க பாருங்க.. கொக்கு மீன் எப்படி இருக்கு பாருங்க...பாய ரெடியா...



ஆத்துல இருக்குற போது அடிக்கிற வெய்யிலில் நம்ம உடம்பு அப்படியே கருப்பா ஆயிடும்.அதில்லாமல் உடம்புல மீன் கவுச்சி அடிக்கும் பாருங்க.யாரையும் பக்கத்துல வர விடாதுங்க..அவ்ளோ நாத்தம் அடிக்கும்.இதுக்காக ரெண்டு எக்ஸ்ட்ரா ஷாம்பு போட்டு குளிக்கணும்.வீட்டுக்கு வந்தவுடன் மீன்லாம் நல்லா கழுவி மசாலா பொடி போட்டு நல்லா குலுக்கி அதை கொஞ்ச நேரம் வெயிலில் உலாத்தி எண்ணையில் பொரிச்சு சாப்பிட்டா ....அடடா...என்னா டேஸ்ட்...


இதுக்காகவே இந்த மீன் கவுச்சி, நாத்தம் இதெல்லாம் பொறுத்துக்கொள்ளலாம்.ஆத்துக்குள்ள ஓடுற தண்ணில, பிடிச்ச மீனுகளோட, அப்புறம் வலைகளை இழுத்து கிட்டு கால்கள் மண்ணுக்குள் புதைய புதைய  ஆதிவாசி மாதிரி நடந்து வேணுங்கிற அளவுக்கு மீன் பிடிச்சி, அப்புறம் அதை நாமளே கிளிஞ்சல் மூலம் செதில், செவுள், குடல் எல்லாம் எடுத்து, கழுவி சுத்தம் பண்ணி மசாலா தடவி எண்ணையில் பொரிச்சு சாப்பிடுகிற இந்த அனுபவம் காசு கொடுத்து மீன் வாங்கி சாப்பிடுவதில் சத்தியமா இல்லைங்க..

கிசுகிசு: மீன் சாப்பிட முடியலையேன்னு வருத்த படாதீங்க மக்களே (தேங்க்ஸ் கேப்டன்)...சாரி பதிவர்களே..கண்டிப்பா நம்ம ஊர் பக்கம் வந்தீங்கன்னா நல்லா கவனிக்கிறோம் ..


எங்க  ஊர் பத்தின பதிவுங்க...பிரபலமான திருமுக்கூடலூர் கோவில்

அப்புறம்      மூன்று ஆறுகளின் சங்கமம் -- திருமுக்கூடலூர்

இன்னும்   - கிராமத்து நினைவுகள்

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Thursday, March 8, 2012

கிராமத்து தொழிற்சாலை.- செங்கல்சூளை

கிராமத்து தொழிற்சாலை.
கடந்த சனி ஞாயிறு அன்னிக்கு ஒரு விசேசம் காரணமாக எங்க ஊருக்கு போனேன் .அப்போ அங்க இருக்கிற செங்கல் தயாரிக்கிற  சூளையை பார்த்தவுடன் எனது சிறு வயது நினைவுகள் உருண்டோடியன.







.9 ம் வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் லீவ் விடும் போது இங்க இருக்கிற சூளைக்கு வேலைக்கு போவோம்.பத்து ரூபாய் சம்பளம்...டைம் வந்து காலை 7  மணி முதல் 4  மணி வரை..இடையில் ஒருமணி நேரம் சாப்பாடு இடைவேளை. ஐந்து ஐந்து செங்கற்களாக கொண்டு செல்லனும்.சும்மாடு சுத்தி தலையில வச்சு அதுல அந்த ஐந்து கல்லை தூக்கி வைப்பாங்க...இப்படி யாக கல்லு அறுக்கிற இடத்திலிருந்து சூளைக்கு கொண்டு வரணும்.ஒவ்வொரு இடத்தில சூளை பக்கத்திலேயே இருக்கும்...ஒரு சில இடத்தில தூரமா இருக்கும்..இப்படி யாக வேலை செய்வேன்.மேலும் என்கூட படிக்கிற மத்தவங்க..அப்புறம் பொண்ணுங்க எல்லாரும் வேலைக்கு வருவாங்க...( அப்போலாம் ஏதுங்க. இந்த குழந்தை தொழில் ஒழிப்பு ).நல்லா ஜாலி யா இருக்கும் ..அந்த சனிக்கிழமை அன்னிக்கு காலையில பணம் தருவாங்க..ஐந்து நாள் சம்பளம் ஆக 50  கிடைக்கும்..இதை வாங்கினவுடன் கிடைக்கும் சந்தோசம் இருக்குமே...அதை வார்த்தையில் விவரிக்க முடியாது....அடுத்த நாள் காலையில் கரூர் கிளம்பி அமுதா ஹோட்டல் போய் புரோட்டா சாப்பிட்டு ஏதாவது ஒரு படம் பார்த்துட்டு வருவோம்..வீட்டுக்கு வரும்போது அப்பா அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க...ஏன்னா...சம்பாதிச்சு செலவு பண்றான் அப்புறம் அவங்ககிட்ட காசு வாங்கிட்டு போகல..அதனால்....இப்படி ஒவ்வொரு வகுப்பு லீவிலும் வேலைக்கு போய் ஜாலியா இருப்போம்....



இப்போ இந்த சூளை அதிகமா எங்க ஊர் பக்கம் வர ஆரம்பிடிச்சு.காரணம் என்னன்னா....பெருகி வரும் கான்க்ரீட் காடுகளால் செங்கல்களின் தேவை அதிகரித்து கொண்டே வருகிறது மேலும் மிக முக்கியமான காரணம் ....விவசாயம்.....விவசாயம் பண்ண ஆள் இல்லாததால் காட்டை ஏன் தரிசாய் போடணும் என்று சூளைக்கு பணம் வாங்கி கொண்டு விட்டு விடுகின்றனர்.இதனால் அங்கு விளைச்சல் இல்லாமல் விவசாயமே பாதிக்க படுகிறது.அப்புறம் வயல் வெளிகள் அனைத்தும்  நல்ல தரமான வண்டல் மண்ணை இழந்து விடுகிறது..பின்னர் அந்த இடத்தில மீண்டும் விவசாயம் பண்ணும் போது நல்ல சத்துக்கள் இல்லாமல் செடிகள் பயிர்கள் வளர்கின்றன .மேலும் பள்ளம் ஏற்பட்டு வடிகால் வசதி இல்லாமல் போய் விடுகிறது.இதெல்லாம் தெரிஞ்சும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் நிறைய சூளைகள் பெருகி கொண்டிருக்கின்றன.

அடடா....என்னமோ எழுத வந்து ஏதோ விழிப்புணர்வு பதிவு மாதிரி ஆயிடிச்சே...( நாமலாம் மெசேஜ் சொன்னா விளங்கிடும்..)

சிறு வயது ஞாபகங்கள் அனைத்தும் எப்போதும் இனிமை யானவை..சுகமானவை...


அப்புறம்...இந்த மண்ணை எடுத்து கல்லு தயாரிக்கிற கட்டையில் போட்டு அதை குத்தி மட்டம் படுத்தி தண்ணீர் தெளித்து வழித்து அலுங்காமல் அந்த கட்டையை எடுக்கும்போது கல்லு அழகா வந்திருக்கும்...ஆனா நம்ம எப்படி இருப்போம்...வெய்யிலில் காஞ்சு மேலெல்லாம் களிமண் சேறு அப்பி , டவுசர்லாம் மண்ணாகி பார்க்கவே கேவலமா இருப்போம்.இதுக்காக தனியே வீட்டுல அடி வாங்கினது தனிக்கதை ...இப்பவும் நினைத்தால் இனிக்கிற நிகழ்வுகள் நம் சிறு வயது நிகழ்வுகள் 


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, January 2, 2012

சதாசிவ பிரம்மேந்திரள் - நெரூர்

பதிவுலக பெருமக்களுக்கு, நண்பர்களுக்கு அனைவருக்கும் எனது  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டை முன்னிட்டு நம்ம ஊர் பக்கத்துல இருக்கிற சதாசிவ பிரம்மேந்திரள் கோவிலுக்கு சென்றேன்.நல்ல அமைதியும் மன நிம்மதியும் கிடைக்கும் இடம் என்பதில் சந்தேகமே இல்லை.சதாசிவ பிரம்மேந்திரள் அவர்கள் ஜீவ சமாதி அடைந்த இடம் என்பதால் மிகவும் பிரசித்தி பெற்ற இடம்.காவிரி நதி கரை ஓரம் இக்கோவில் அமைந்து உள்ளது.வில்வ மரங்கள் சூழ்ந்து ஒரே அமைதியை கொண்டு இத்தலம் இருக்கிறது.காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி இங்கு குடி கொண்டு இருக்கிறார்கள்.




இப்போது மிகவும் நல்ல முறையில் பராமரிக்க பட்டு வருகிறது.சமிபத்தில் தான் இக்கோவில் புனர் அமைக்கபட்டு கும்பாபிசேகம் நடை பெற்றது.   இங்கே சற்குரு சதாசிவ பிரம்மேந்திரள் அவருக்கு அப்புறம் சதாசிவானந்தா அவர்கள் ஜீவ சமாதி ஆன இடம் இருக்கிறது.27 வருடங்கள் ஆகி இருக்கிறதாம். 

இன்னும் சில புகைப்படங்கள் அடுத்த பதிவில்

செல்லும் வழி : கரூர் டு திருமுக்கூடலூர் செல்லும் வழியில் நெரூர் அடுத்து இக்கோவில் அமைந்து உள்ளது.4 எண் பேருந்து செல்லும்.9 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும் என நினைக்கிறேன்.

இன்னும் கொஞ்சம்...

Saturday, November 26, 2011

கோவில் குளம் - அகஸ்தீஸ்வரர் கோவில் - திருமுக்கூடலூர்(THIRUMUKKUDALUR), கரூர்

திருமுக்கூடலூர் (THIRUMUKKUDALUR)                
முதல் முறையாக தமிழில் அர்ச்சனை செய்யப்பட்ட கோவில் உள்ள ஆலயம்.(புதியதாய் கட்டிய கோவிலுக்கு மட்டுமே தமிழில் அர்ச்சனை). மூன்று ஆறுகள் கூடும் இடம் திருமுக்கூடலூர்.இங்கு அமராவதி நதிக்கரை ஓரமாக இக்கோவில் அமைந்து இருக்கிறது.பல நூற்றாண்டு களுக்கு முன்னரே  இக்கோவில் கட்டப்பட்டு இருக்கிறது.இக்கோவிலின் தல வரலாறு தெரியவில்லை.ஆனால் சோழ மன்னன் கட்டிய கோவில் என்று நம்பப்படுகிறது.இப்போது இக்கோவில் பராமரிப்பின்றி சிதில மடைந்து இருக்கிறது.கல்வெட்டுகள், ஒரே கல்லில் செதுக்கிய தூண்கள், அதில் சிற்பங்கள், கருங்கல்லில் செய்யப்பட்ட மண்டபங்கள், இப்படி நுண்ணிய அரிய கட்டிட சான்றுகள் இருக்கின்றன.தொல் பொருள் துறையினரால் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது.
 பிரதோஷம் , பௌர்ணமி அன்று மிகவும் சிறப்பாய்  பூஜை செய்யப்படுகிறது. அன்று நல்ல கூட்டம் காணப்படும். 























கோவிலை சுற்றி கோட்டை மதில் சுவர் உள்ளது.தற்போது இந்த கோவிலை கிருஷ்ணன் மற்றும் அவரது வாரிசுகள் நிர்வகித்து பூஜை செய்து வருகின்றனர்.


செல்ல வழி : கரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவு.4 ம் எண் பேருந்து திருமுக்கூடலூர் செல்லும்.

கிசுகிசு: இந்த ஊர்ல தான் நான் பொறந்தேன் வளர்ந்தேன்.எப்படியோ எங்க ஊரை பத்தி ஒரு பதிவ போட்டுட்டேன்..

THIRUMUKKUDALUR, KARUR DISTRICT

நேசங்களுடன்

ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Sunday, July 3, 2011

கிராமத்து நினைவுகள் - திருமுக்கூடலூர்(THIRUMUKKUDALUR)

(THIRUMUKKUDALUR)
அப்புறம்...திருமுக்கூடலூர்.... இந்த ஊர் என்னோட பிறந்த ஊர்.என் பெற்றோர்கள் இங்குதான் உள்ளனர்.கோவை நகர பரபரப்புலிருந்து விடுபட இங்கு சென்று ஓய்வு எடுப்பது வழக்கம்.சுத்தமான காற்று, அமைதியான சூழ்நிலை, வாகன நெரிசல் அற்ற, மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய இடம்.அப்புறம் எங்களுக்கென்று ஒரு தோட்டம் உள்ளது.அதில் தென்னை, நெல் மற்றும் கோரை உள்ளது.





தோட்டத்தில் உள்ள மோட்டாரில் ரொம்ப நேரம் குளித்து விட்டு ஒரு இளநீர் சாப்பிட்டால் அந்த சுகம் வேறு எங்கும் கிடைக்காது.கயிற்று கட்டிலில் படுத்தால் உடனே உறக்கம் வரும்..அந்த அளவுக்கு அமைதி....கொடுத்து வைத்தவர்கள் இந்த கிராமத்து மக்கள்.சிறு வயது ஞாபகங்களை கிள்ளி பார்க்கின்ற கிராமத்து நினைவுகள்.ஆற்றில் குளித்தும் , மீன் பிடித்தும் விளையாண்ட கணங்கள் இப்போதும் இனிக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...