Friday, September 20, 2019

கரம் - 36

விநாயகர் சதுர்த்தி 

                             எங்கள் ஏரியாவில் நண்பர் ஒருவர் பணம் வசூல் செய்து விநாயகர் சிலையெல்லாம் வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை மிகச் சிறப்பாக நண்பர்கள் மற்றும் அந்த ஏரியா மக்களோடு கொண்டாடினார்கள்.இந்த விழாவின் செலவுத் தொகையை அவரிடம் கேட்ட போது மொத்த செலவு 138000 ஆனதாம்.அவரது தெருவிற்குட்பட்ட பகுதியில் மட்டும் இந்த தொகை.இது ஒவ்வொரு ஏரியாவிற்கும் சிலையின் வடிவம், டெகரேசன் மற்றும் வாணவேடிக்கை இவைகளை பொறுத்து விலை மாறும்.கோவையில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டிருக்கின்றன.(இன்னும் மொத்த எண்ணிக்கை தெரியவில்லை).
இவைகளின் ஒட்டு மொத்த மதிப்பினை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.தண்ணீரில் கரைந்து போன தொகையின் மதிப்பை கண்டால் கண்ணீரே வந்து விடும்.தண்ணீரில் கரைவது மட்டுமல்லாமல் சுற்றுப்புறம் மாசு அடைவதும் உண்மைதான்.



                  இவ்வளவு செலவு பண்ணி நகரை பரபரப்பிற்குள்ளாக்கி, சுற்றுப்புற சூழலையும் மாசுபடுத்தி, மக்களை நெரிசலில் அல்லல்பட வைக்கும் விழாவினை கொஞ்சம் மாற்றி செய்யலாமே..

உங்கள் தெருவில் வசூல் செய்த பணத்தில் சின்னதாய் ஒரு விநாயகர் போதும்.அதுவும் களிமண்ணால் செய்ததாய் இருக்கட்டும்.

அந்த தெருவில் உள்ள பள்ளி (அ) கல்லூரி செல்லும் யாருக்காவது, கல்வி உதவியை அளியுங்கள்.

ஏழைப் பெண்களின் திருமணத்தை நடத்தி வையுங்கள்.

மாற்றுத்திறனாளிகள் யாராவது இருப்பின் அவர்களுக்கு கை கொடுங்கள்.

முடியாமல் இருக்கும் மக்களுக்கு மருத்துவ உதவியை அளியுங்கள்.
உங்கள் தெருவினை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

மருத்துவ முகாம் அமைத்து நோய்களை கண்டறிந்து குணமாக்க உதவி புரியுங்கள்.

விநாயகர் பெயரைச் சொல்லி அன்னதானம் செய்யுங்கள்.

அரசாங்கம் செய்து தராத வேலைகளை இந்த தொகையில் செய்து கொள்ளுங்கள்.
இப்படி ஒவ்வொரு ஏரியாவும் செய்தால் ஒட்டு மொத்த ஊரும் நன்றாக மாறிவிடும்.இப்படி எவ்வளவோ செய்யலாம்.

மூன்று நாட்கள் தெய்வமாய் வணங்கிவிட்டு, பின் அதை சித்ரவதை செய்து தண்ணீரில் மூழ்கடிப்பதை எங்ஙனம் ஏற்றுக்கொள்வது.ரசாயன கலவைகளால் குளங்கள் ஏரிகள் ஆறுகள் கடல் மாசு அடைவதையும் தவிர்க்கலாமே.

அடுத்த வருடமாவது சிக்கனத்தை கடைப்பிடியுங்கள்.
ஊர் கூடி தேர் இழுங்கள். நாமும் சுத்தமாவோம்.நாடும் சுத்தமாகும்.
உங்கள் பக்தி என்பது நாட்டின் நலனிலும் இருக்கட்டுமே.
இன்னும் கொஞ்சம்...

பு(து)த்தகம் - நான் ஷர்மி வைரம் ( A), 24 சலனங்களின் எண்

பு(து)த்தகம் 

நான் ஷர்மி வைரம் ( A)



நாவலுக்கு A சர்டிஃபிகேட் கொடுத்தமைக்காகவே எழுத்தாளர் கேபிள் சங்கருக்கு வாழ்த்துக்கள்.

                      சாதாரண வைர கொள்ளை கடத்தல் தான் நாவலின் கரு.ஆனால் அதை மிகவும் ரசிக்கும் படியாய் காமத்தோடு கதையையும் எழுதியிருப்பது தான் மிக சிறப்பு.1998 - 2000 வாக்கில் எப்பொழுதோ கேள்விபட்டிருக்கிறேன் கோவாவில் ஆண் ஐட்டங்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.வெளிநாட்டினரோடு செக்ஸ் வைத்துக் கொண்டு பணமும் மகிழ்ச்சியையும் பெறுவர் என்று.அவர்களின் பெயர் ஜிகிலோ என்று இன்றைக்குத் தான் அறிந்து கொண்டிருக்கிறேன்.சென்னையில் இதற்கென ஒரு கூட்டமே இயங்கி வருவதை கண்டு மனம் அதிசயமும் ஆச்சர்யமும் அடைகிறது.கேபிள் சங்கர் தன் வசீகர எழுத்தில் இவர்களின் செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக எழுதி இருப்பதை பார்க்கும் போது கதை தானே என்று ஒதுக்கி வைக்க முடியவில்லை.

              
               மிகவும் டிடெய்ல்டு ஆன நாவல்.கதையும் விறுவிறுப்பாகவே செல்கிறது.நான் என்கிற ராஜன், ஷர்மி என்கிற பெண், வைரம் என்கிற ஆள் அல்லது வைரக் கடத்தலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.மூவரையும் தனித்தனியாய் விவரித்துக் கொண்டு ஒற்றைப் புள்ளியில் இணைத்து பின் கதையை ஆச்சர்யத்தோடு முடிப்பது ஒரு திரைப்படத்தை பார்த்த மாதிரி இருக்கிறது. ணக்கார பெண்களின் லைஃப்ஸ்டைல், அவர்களின் மறுபக்கம் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.சரோஜாதேவி புக் கொஞ்சம் அப்பட்டமாய் இருக்கும்.
                               ஆனால் இதில் பூசி மெழுகப் பட்டிருக்கிறது.படிக்க ஒன்றும் விரசமாய் தெரிவதில்லை அதான் இந்த நாவலின் சிறப்பம்சம்.காதல் காமம் துரோகம் என எல்லாம் கலந்து கட்டி, படிக்க படிக்க மிக சுவாரஸ்யத்தை தந்திருக்கிறார் எழுத்தாளர்.புத்தகத்தை படிக்க ஆரம்பித்து முழுவதும் முடிக்கும் வரை பல ஆச்சர்யங்களை தந்து கொண்டே இருக்கிறது.செம இண்டரஸ்டிங்.



24 சலனங்களின் எண்


                          ஒரு சினிமா என்பது இரண்டரை மணி நேரம் மட்டும் தான்.ஆனால் அதை சரியான திட்டமிடலுடன் பலரது உழைப்பின் காரணமாக 35 நாட்களுக்குள் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.மூன்று வருடத்தில் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

படத்தினை முடிக்க முடியாமல் திரைக்கே கொண்டு வராதவர்களும் இருக்கிறார்கள்.
திரைக்கு வந்த படத்தினை மட்டும் நாம் சிலாகிக்கின்றோம்.திரைக்கு பின்னால் இந்த திரைப்படம் எப்படியெல்லாம் உருவாக்கம் பட்டிருக்கும் என்று நினைப்பது இல்லை.இந்த நாவல் அதைத்தான் சொல்லுகிறது. 

                    திரையுலகின் கறுப்பு பக்கத்தினை தெளிவாய் சொல்லி இருக்கிறார் நாவலாசிரியர்.ஒரு திரைப்படம் என்னென்ன இடர்களால் பாதிக்கப்படுகிறது என்பதை திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.அதை அப்பட்டமாய் உரித்திருக்கிறார் ஆசிரியர். 
                              ஸ்ரீதர், ராம். சுரேந்திரன், நித்யா, பிரேமி, திருப்பூர் மணி, ராம்ராஜ் என ஒவ்வொரு பாத்திர படைப்புகளும் அருமை. ஒவ்வொரு கேரக்டர்களும் ஒரு விதம். விறுவிறுப்பாக நாவலை முழுதும் ரசிக்க வைக்கிறது..நட்பு, காதல், காமம், துரோகம் என எல்லாமும் நிறைந்திருக்கிறது இந்த நாவலில்.

                         ஒரு திரைப்படம் உருவாக எத்தனையோ பேர் உழைப்பு காரணமாகிறது.கஷ்டபட்டு உருவாக்கிய திரைப்படம் திரைக்கு வராமலே முடங்குவதால் எத்தனையோ பேரின் உழைப்பும் திறமையும் வீணாகி போய்விடுகிறது.அதை விரிவாய் நாவலில் விறுவிறுப்புடன் படிக்க சுவாரஸ்யத்துடன் எழுதி இருக்கிறார்.இந்த நாவலில் வரும் இயக்குநர் ராம்ராஜ் அத்தியாயங்கள் ஒரு விக்ரமன் படம் பார்த்தது போல் இருக்கிறது.அவ்வளவு அருமை.சோக காட்சிகள் வந்தால் எப்படி தொண்டையை துக்கம் கவ்வுமே, அது மாதிரி அவரது அத்தியாயங்கள்.கடைசி கிளைமாக்ஸில் ஒரு திரைப்படம் பார்த்த விளைவு.

                           படிக்க படிக்க செம இண்ட்ரஸ்டிங்கான நாவல்.திரையுலகில் திரைக்கு பின்னால் நடக்கும் சம்பவங்களை ஒளிவுமறைவின்றி சொல்லி இருக்கிறார் நாவலின் இயக்குநர்.இந்த நாவலில் ஒரே ஒரு குறைதான்.நாவல் முழுக்க விரவிக்கிடக்கும் வாக்கிய
எழுத்துப் பிழைதான்.தமிழை தப்பாகவே எழுதி இருந்தாலும் படித்துவிடக்கூடிய நிலையில் இருந்தாலும், எழுத்துப்பிழை இருப்பதால் கவனம் சிதறுகிறது. அதையும் தாண்டி இந்த நாவல் படிக்க படிக்க நன்றாகவே இருக்கிறது.
                           இந்நாவலை படித்து முடிக்கையில் வெள்ளித்திரை படம் கண்ணுக்கு முன்னால் வந்து செல்கிறது.
வாழ்த்துக்கள் கேபிள் சங்கர்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...