ஆச்சரியம்:
சமீபத்தில் நாமக்கல்லில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தபோது வரும் வழியில் திருச்செங்கோட்டில் நம்ம வண்டி மக்கர் செய்ய ஆரம்பித்து விட்டது.பேட்டரிக்கு திடீரென்று பவர் செல்லாததால் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டது.கரெக்டாக திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் பேட்டரி கடைக்கு அருகிலேயே நின்றுவிட்டது.நல்லவேளை.பக்கத்திலேயே இருந்ததால் கவனிக்க வசதியாக இருந்தது.மெக்கானிக்கிடம் சொல்லி பேட்டரியை சரி பண்ண சொல்லி விட்டு அருகில் இருந்த கார் பட்டறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.அப்பொழுது டாடா நானோ கார் ஒன்று சர்வீஸுக்காக நின்று கொண்டிருந்தது.எதேச்சையாய் பார்த்ததில் அதன் பின்பக்க கதவில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.பார்த்ததில் ஆச்சர்யமும் கொஞ்சம் அதிர்ச்சியும் ஆனோம்.வீட்டு கதவுக்கு தாழ்ப்பாள் மாட்டி பார்த்திருப்போம்.ஆனா காருக்கு தாழ்ப்பாள் போட்டதை இப்போதான் பார்க்கிறோம்.நல்லவேளை டாடா ஓனர் பார்க்கல…பார்த்து இருந்தா இந்நேரம் இந்த கார் தயாரிக்கிற பிசினஸையே விட்டுட்டு ஓடி இருப்பார்.
நம்மூர்ல தான் இப்படி பட்ட அறிவாளிங்க இருக்காங்க.எதையாவது எடக்கு மடக்கா செய்யுறது, ஒரு பொருளோட மதிப்பு தெரியாம அதை சேதாரம் பண்றது இப்படி….இப்படி பட்ட ஆளுங்க இருக்கிறதால தான் நமக்கும் நல்ல கண்டெண்ட் கிடைக்குது.
வாவ்…..வாட் எ
ஐடியா சேட்ஜி…..
பாலமே இன்னும் முடியாத நிலையில் அவசர அவசரமாக பெயிண்ட் அடித்து அரசாங்கத்திடம் பணம் பெறும் முயற்சியில் இருக்கின்றனர் காண்ட்டிராக்ட் காரர்கள்.பாலம் கான்கிரீட் போட்டு சரியான நாட்கள் வரை கியூரிங் விடுகிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.அதற்குள் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர்
நடப்பு ஆட்சி முடிய இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் உடனடியாக காந்திபுரம் முதல் ஏர்போர்ட் வரை மேம்பாலம் கட்ட அனுமதி அளித்து இப்பொழுது அங்கும் வேலை பிசியாக போய்க்கொண்டிருக்கிறது.
கோவையில் ஏகப்பட்ட பாலங்கள் முடிவுறாமல் இன்னமும் இழுத்துகொண்டிருக்கிறது.கவுண்டர்மில்ஸ் பாலம் இன்னும் தொடங்காமல் இருக்கிறது.இத்தனைக்கும் கவுண்டம்பாளையம், கவுண்டர்மில்ஸ் இரண்டும் ஒரே சமயத்தில் ஆரம்பித்தனர்.கவுண்டம்பாளையம் பகுதியில் 30% பணிகள் முடித்து விட்டனர்.ஆனால் அங்கோ போட்டது போட்டபடி இருக்கின்றது.உக்கடம் மற்றும் ராமநாதபுரம் பாலமும் இன்னமும் முடிவுறாமல் இருக்கிறது.
முழுதாய் ஒவ்வொரு பாலத்தையும் முடித்துவிட்டு பின் புதிய பாலங்களை ஆரம்பிக்கலாம்.ஆனால் எதையும் முடிக்காமல் கோவை முழுவதும் தோண்டி வைத்து நகருக்குள் மாபெரும் வாகன நெரிசலை உருவாக்கிவிட்டிருக்கின்றனர்.
அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக மக்களை வாட்டி வதைக்கின்றனர்.இன்னும் மெட்ரோ ஆரம்பிக்க வில்லை.அது வந்தால் இன்னும் கந்தரகோலம் தான் கோவை....
சீக்கிரம் அனைத்து பாலங்களும் முடிந்து அழகான கோவையை பார்க்க வேண்டும்.
இப்பொழுது விலையும் ரூ 10. என இருக்கிறது.ஒரு ரூபாய் இருந்த போது குடித்தது.பன்னீர் சோடா மற்றும் ஜிஞ்சர் என வெரைட்டியாக இருந்தது.வயிற்று வலியா...ஜிஞ்சரை குடித்தால் போதும் .விருந்தாளிகள் வருகிறார்களா, கலர் இருந்தால் போதும்.இப்படித்தான் ஒருகாலத்தில் கோலோச்சியது கோலி சோடா.பன்னாட்டு கம்பெனிகளின் வருகையில் இப்போது தொலைந்து விட்டது.ஆனாலும் ஒரு சில பேர் இன்னும் இதை நடத்திக் கொண்டு வருகின்றனர்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்