Monday, February 25, 2013

கோவை மெஸ் - கோவை பிரியாணி ஹோட்டல், R.S. புரம், கோவை

கோவை மெஸ் - கோவை பிரியாணி ஹோட்டல், R.S. புரம், கோவை
இந்த ஹோட்டல் புரூக் பீல்ட்ஸ் எதிரில் பெட்ரோல் பங்க் பின்புறம் இருக்கிறது.இந்த ஹோட்டலில் வீச்சு புரோட்டா மிக நன்றாக இருக்கும் என்று நண்பர் சொன்னதால் அங்கு படைஎடுத்தோம்.வீடு போன்ற அமைப்புதான்.கீழ் தளத்திலும் மாடியிலும் இருக்கிறது.உள் நுழைந்ததும் உரித்த கோழிகள் கிரில்லில் சுத்திக் கொண்டிருப்பதை பார்த்தபடியே நாங்கள் மாடிக்கு சென்றோம்.சுற்றிலும் மூங்கில் பிளைண்ட்ஸ் தொங்கவிட்டு மிக ரம்மியமாக இருக்கிறது.அதை விட அங்கே ஏகப்பட்ட அம்மணிகள்...ப்ரூக் பீல்ட்ஸ் போய்ட்டு வந்து தெம்பாக ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தனர். நோட்டம் விட்டபடியே எங்களுக்கென்று தோதாய் இடம் பிடித்து அமர்ந்தோம்..
சர்வர் வர ஒவ்வொன்றாய் ஆர்டர்..
பிரியாணி, முட்டை வீச்சு, சாதா வீச்சு, சிக்கன் கொத்துகறி என்று...
பிரியாணி நிறைய தடவை சாப்பிட்டு இருக்கிறேன் இங்கு..சுவை அதிகம் ஈர்க்கவில்லை.பிரியாணி நிறம் குறைவாகவே இருக்கிறது எப்போதும் இங்கு.அங்கண்ணன் கடை பிரியாணி  போலவே இங்கும் இருக்கிறது.டேஸ்ட் குறைவு தான்..
 

முட்டை வீச்சு...ரொம்ப சாஃப்டாக..நன்றாக இருக்கிறது.அதுபோலவே சாதா வீச்சும்..ரசித்து ருசித்ததில் இன்னும் சுவை அதிகமாகிக் கொண்டே போகிறது.
கொத்துகறி மட்டனில் தான் கிடைக்கும் என்று நினைத்தேன்..சிக்கனிலும் நன்றாக இருக்கிறது.செம டேஸ்ட்..மட்டன் போன்று ரொம்ப தூளாக இல்லை.ஆனால் சின்ன சின்ன துண்டுகள்..மிக நன்றாக இருக்கிறது.
 
 கடைசியாய் ஒரு லைம் சோடா குடித்துவிட்டு எஸ் ஆனோம்...

 
 
 பில் எப்போதும் போல கோவைக்கே உண்டான ரேட்டுதான்.ஒன்றும் மாற்றமில்லை..முன்பெல்லாம் ஞாயிறுகளில் மட்டுமே இங்கு கூட்டம் அள்ளும்..இந்த ப்ரூக் பீல்ட்ஸ் வந்ததினால் இந்த ஹோட்டலில் இப்போது செம கூட்டம் அள்ளுகிறது. சாப்பிட்டு பார்க்கலாம்..
அதேபோல் இந்த ஹோட்டலின் சுவை பத்தி சொல்ல  தனி மொபைல் நம்பர் வைத்து இருக்கின்றனர்.நேரிலேயே சொல்லி விட்ட படியால் போன் பண்ணவில்லை..


நேசங்களுடன்
ஜீவான்ந்தம்



இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 20, 2013

சினிமா - விஸ்வரூபம், இலக்கிய சந்திப்பு - 27

விஸ்வரூபம்:
கடந்தவாரம் கோவை சென்ட்ரல் தியேட்டரில் மிகுந்த கூட்டத்தினிடையே காணச்சென்றேன்.திருவிழா கோலம் பூண்டிருக்கிறது.எங்கெங்கும் கமலின் அவதாரங்கள்....விஸ்வரூபமாய்...ஏகப்பட்ட தடைகள், வில்லங்கங்கள் என அத்தனையும் தாண்டி வெற்றிகரமாய்.....
புதிதாய் பல மாறுதல்களுடன் சென்ட்ரல் தியேட்டர் அமைக்கப்பட்டு இருக்கிறது.புதிய சவுண்ட் சிஸ்டத்தில் படம் நன்றாக இருக்கிறது. விறுவிறுப்பான, பிரம்மாண்டமான காட்சிகள் என விழிகள் விரிய வைக்கிறது.கமலின் நடிப்பில் இன்னுமொரு பரிமாணம்.
பெண் தன்மை மிக்க கேரக்டரில் மலையாள ஸ்டார் திலீப் சாந்துபொட்டு என்கிற படத்தில் மிக அம்சமாக நடித்து இருப்பார்.அவரின் குரல்வளமும் மேனரிசமும் அந்த படத்திற்கு அழகினை சேர்த்தது.அதில் படம் முழுவதும் பெண் தன்மை மிக்க கேரக்டரில் வாழ்ந்திருப்பார்.
                     
                                  
ஆனால் இந்த படத்தில் ஒரு சில சீன்களில் மட்டுமே தோன்றும் கமல் அவரையே மிஞ்சி இருப்பார்.அந்த ஒரு பாடல் போதும் கமலின் நடிப்பிற்கு...
கமல் எடுக்கும் ஆக்சன் விஸ்வரூபம் இரண்டு இடங்களில்...ஒன்று முதல் சண்டைக்காட்சி...அடுத்து ஹேர் கட் பண்ணி ஸ்டைலாக படியில் இறங்கும் காட்சி...தியேட்டரில் கைதட்டல் விசில் சத்தம் காதை பிளக்கிறது...ஆப்கன் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் டாகுமெண்ட்ரி போல இருந்தாலும் புதிதாய் காணும் ஆவலில் அதுவும் நன்றாகவே செல்கிறது.
படம் எதையுமே யோசிக்க வைக்க விடாமல் காட்சிகளில் ஒன்ற செய்கிறது.இந்த படத்திற்கு எதற்கு தடை விதித்தார்கள் என்று இன்னமும் புரியவில்லை.பல்வேறு உலக சினிமா பார்த்ததில்லை.திரைப்பட அறிவு என்பது கொஞ்சம் கூட இல்லை..ஆனால் ஒரு சாதாரண ரசிகனாக என்னை ஈர்த்து விட்டிருக்கிறது.(இத்தனைக்கும் நான் கமல் ரசிகன் இல்லை.தீவிர ரஜினி ரசிகன்) மேலும் இந்த பதிவுலகில் பல்வேறு ஜாம்பவான்கள்  விஸ்வரூபம் பத்தி அலசி ஆராய்ந்து விட்டிருக்கின்றனர்.

அவர்களின்  பதிவுகள் தங்களின் பார்வைக்கு...



மெட்ராஸ்பவன்

அட்ராசக்க

கோவை ஆவி

பிலாசபி பிரபாகரன்

 ஜாக்கி சேகர்

அகிலா

அப்புறம் முக்கியமா ஒண்ணு...
கோவையில் நடக்கிற இலக்கிய சந்திப்பு விழா 27 ம் நிகழ்வில் கோவை ஞானி தலைமையில் பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப் பட்டு பல்துறை சார்ந்த இலக்கிய ஆர்வலர்களின் மேற்பார்வையில்  கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

உலக சினிமா பாகம் - 1 
அறிமுக உரை 
இயக்குனர் ராம் (கற்றது தமிழ் ) 

உலக சினிமா பாகம் -2
அறிமுக உரை
ஆனந்த் (கோணங்கள் ஃபிலிம் சொஸைடி)
பீர் முகமதுவின் இரண்டு நூல்கள் 
அறிமுகம்
கோவை ஞானி மற்றும் அறிவன்

ரா.முருகனின் நாவல்
அறிமுகம்
சுப்ரபாரதிமணியன்
கோவை பதிவர்களின் புத்தகங்கள்  

அகிலாவின்
 சின்ன சின்ன சிதறல்கள்  குறித்து
கவிஞர் யாழி

கோவை மு சரளாவின்
மெளனத்தின் இரைச்சல்கள் குறித்து
கவிஞர் ப.தியாகு
ஜீவாவின்
கோவை நேரம் குறித்து
பொன் - இளவேனில்


 மேற்கண்ட புத்தகங்களின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நடைபெறுகிறது. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

இடம் : எஸ்பி நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி
மரக்கடை, கோவை
நாள் - 24.2.2013
நேரம் - 10.00 மணி முதல் 1.30 வரை

மற்றும் இன்னொரு நிகழ்ச்சி
தா இளங்கோவனின் ஆவணப்படம் ”மாதவிடாய்” சிறப்புரை மற்றும் திரையிடல் 

கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் அதே தினம் மாலை 2 மணி முதல் 4 மணிவரை நடைபெற உள்ளது.

விரிவான பதிவிற்கு இனியவை கூறல்  பார்க்க

அன்புடன் வரவேற்கிறோம்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, February 18, 2013

கோவை மெஸ் – ஞானம் காபி பார், கும்பகோணம்


ஒரு காலைப்பொழுதில் 5 மணி அளவில் கும்பகோணம் சென்றபோது பசியின் பார்வை இந்த ஹோட்டலுக்கு திரும்பியது.எம்மை வரவேற்ற நம்ம சொந்தக்காரர் இந்த கடையில் சுவை நன்றாக இருக்கும் ஆனால் சைவம் தான் என்று சொல்லவும் மனம் கொஞ்சம் வருத்தப்பட்டாலும் தற்போதைக்கு பசியை தள்ளி வைப்போம் என்று எண்ணி இந்த ஹோட்டலுக்கு சென்றோம்...

ஓட்டு வீடுதான்.சின்ன கடை.நாலைந்து டேபிள் தான் இருக்கிறது. எந்தவித உள் அலங்காரமும் இல்லை..உள் நுழைந்ததும் கடப்பா கல் போட்ட மரபெஞ்சுகள் இருபுறமும் இருக்கின்றன.சுட சுட இட்லி, மற்றும் பூரி ரெடியாகி இருந்தது. அந்த பச்சை இலையில் இட்லி சூடாய் வைக்க ஆவி பறந்தது.இட்லி ரொம்ப மெது மெதுவென்று..சாம்பார் ஊற்றவும் அதில் ஊறிய இட்லி ஒரு விள்ளலை எடுத்து சாப்பிட ஆஹா....என்ன ருசி...
சாம்பாரும் சட்னியும் போட்டி போட்டுக்கொண்டு சுவையை கூட்டின.வெறும் சைவம் தான்..ஆனால் நல்ல சுவை.அக்ரஹாரத்து ஹோட்டல் போன்ற சுவையில் இருக்கிறது.அதுபோலவே பூரி மற்றும் கிழங்கு மசால்.நன்றாக இருக்கிறது.காலையிலேயே கடை நிறைய ஆரம்பிக்கிறது வாடிக்கையாளர்களால்....
அதுபோலவே காபி...சுவை ஊரைக்கூட்டுகிறது.எப்போதும் பால் கொதித்துக்கொண்டு இருக்கிறது.காபி டிகாசன் தனியாய் ஒரு பாத்திரத்தில் ரெடி பண்ணி வைத்திருக்கின்றனர்.சுத்தமான பாலில் டிகாசன் கலந்து கும்பகோணம் காபி தருகின்றனர்.
அந்த காலை வேலையில் இவ்ளோ சீக்கிரமாக கிடைக்காது எந்த கடையிலும்..ஆனால் இந்த ஞானம் மெஸ்ஸில் காலை 5 மணிக்கே ரெடியாகி விடுமாம்.தஞ்சாவூர் செல்லும் ரோட்டில் இருக்கிறது.இந்த மெஸ்ஸின் உரிமையாளர் ஒரு இளம் கல்லூரி பேராசிரியர்.

கிசுகிசு : இந்த மெஸ் அருகிலேயே நம்ம கடை இருக்கிறது.வெளிப்பக்கம் பூட்டிய மாதிரி இருக்கிறது.ஆனால் உள்ளே வியாபாரம் பிச்சிக்கிறது.24 hrs சர்வீஸ்.காலை வேலையில் சந்தைக்கு வரும் ஆட்கள் தான் இங்கும் ஒரு வருகையை போடுகின்றனர்.அன்று மட்டும் புதிதாய் கோவையில் இருந்து ஒருத்தர்....ஹி ஹி ஹி

அப்புறம் கும்பகோணத்தில் நகர்வலம் வந்தபோது கிளிக்கியவை..
பூ மார்க்கெட்டில்  விற்பனைக்கு மலர்கள்...
ஏகப்பட்ட கோவில்கள்...சந்து பொந்தெல்லாம் எதாவது கோவில் இருக்கிறது.
 
 
 
 
 
 
 

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 13, 2013

கோவை மெஸ் - கடலை மிட்டாய் - கோவில்பட்டி

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...
 இந்த பதிவை கொஞ்சம் இனிப்பா ஆரம்பிப்போம்...போன மாதம் அம்பாசமுத்திரம் போனபோது போற வழியில் இருக்கிற எல்லா ஊர்களிலும் ரொம்ப பேமசா இருக்கிற தின்பண்டங்களை வாங்கினேன்...முதலில் போனது கோவில்பட்டி...இங்க கடலை மிட்டாய் ரொம்ப ஃபேமஸ்.கோவில் பட்டியில் ஜன நெருக்கடி மிகுந்த சாலையான மார்க்கெட் ரோட்டில் உள்ளே நுழைந்தவுடன் ஏகப்பட்ட கடைகள்...எல்லா கடைகளிலும் கடலைமிட்டாய் விற்பனை போர்டுகள் தொங்கிகொண்டு இருக்கின்றன.VVR மற்றும் MNR என்கிற இரண்டு கடைகளில் தான் டேஸ்ட் மிக நன்றாக இருக்கும் என்பதால் அங்கு சென்றேன்.கடைகளின் முகப்பில் ஒரே கூட்டம்..கும்பலாய் வாங்கி குவித்துகொண்டிருந்தனர்.நானும் அப்படியே கொஞ்சம் ஓரமாய் நிற்க சாம்பிளாய் சுட சுட ரெடியாகிக்கொண்டிருந்த கடலை மிட்டாயை இளம் சூட்டில் தந்தனர்.சாப்பிட சுவையாக இருக்கிறது.நம்ம பங்குக்கு கொஞ்சம் வாங்கினேன்..கால் கிலோ 26 ரூபாய் என்பது குறைவான விலை..ஆனால் டேஸ்ட் மிக நன்றாக இருக்கிறது.
 
 
 
 இரண்டு கடைகளிலும் கொஞ்சம் வாங்கிகொண்டு இருக்கையில் பக்கத்து தெருவில் சீனி மிட்டாய் மற்றும் சேவு மிக நன்றாக இருக்கும் என்று நம்ம நண்பர் காதை கடிக்க , அங்கும் ஒரு அட்டனன்ஸ் போடுவோம் என்றெண்ணி சுப்பையா தேவர் மிட்டாய்கடை இருக்கிற  அடுத்த தெருவுக்கு சென்றேன்..
சீனி மிட்டாயில் சர்க்கரை மற்றும் மண்டை வெல்லத்தில் செய்த இரண்டு வகைகள் இருக்கின்றன.சும்மா சுத்தி சுத்தி வைத்து இருக்கின்றனர் ஒரு ஐந்து அடி உயரத்திற்கு....மிட்டாயை சுத்தி பேப்பர் வைத்து இருக்கின்றனர்...
நம்ம முகத்தினை பார்த்தவுடனே வெளியூர்காரன் என்று தெரிந்து விடும் போல...வாங்க வாங்க என்று சொல்லி சாம்பிள் பார்க்க ஒரு பிடி கொடுக்க நன்றாகத்தான் இருக்கிறது..வெளியே கொஞ்சம் கெட்டியாக இருந்தாலும் உள்ளே இனிப்பு பதம் சுவையாய் இருக்கிறது..நம்மூர் தேன்மிட்டாய் போல உள்ளே தேன் போன்ற சர்க்கரை பாகு இருக்கிறது.சுவையாய் இருக்கிறது.

 
சேவு சொல்லவே வேணாம்..அம்புட்டு சாஃப்ட்...மொறு மொறுன்னு இருக்கு..சைட் டிஷ்க்கு சரியான டிஷ்...எதுக்கும் நமக்கு போற வழியில் யூஸ் ஆகுமே அப்படின்னு அதிலயும் கொஞ்சம் வாங்கிகிட்டேன்...எல்லா பலகாரமும் விலை குறைவாகத்தான் இருக்கு..ஆனா சுவை ரொம்ப சூப்பராக இருக்கு...

இதெல்லாம் வாங்கிகிட்டு அடுத்து போனது நம்ம இருட்டுகடை இருக்கிற திருநெல்வெலிக்கு...நெல்லையப்பர் கோவில் கூட தரிசனம் பண்ண போகல..கோவிலில் இருக்கிற கூட்டத்தினை விட எதிரில் இருக்கிற இருட்டுக்கடையில் தான் அதிகமா இருக்காங்க...சாயந்திர நேரம் மங்கலான வெளிச்சத்தில் வியாபாரம் கன ஜோராய் நடந்து கொண்டு இருக்கிறது.அங்கேயே சாப்பிட கொஞ்சம் வாங்க இளம் சூட்டில் வாழையில் வைத்து தருகின்றனர்.மிக நன்றாய் இருக்கிறது..தாமிரபரணி தண்ணீர் சுவையில் அல்வா செம டேஸ்ட்...வழுக்கி கொண்டு செல்கிறது இலையிலும் ....போட்டவுடன் வாயிலிலும்...
 வந்ததுக்கு கொஞ்சம் வரலாறு வேணும் என்பதால் இரண்டு கிலோ அல்வா பார்சல் கோவைக்கு..தெரிந்தவர்களுக்கு அல்வா கொடுக்கலாம் என்பதால்.....
கிலோ 140 ரூபாய்....அப்புறம் .சாந்தி அல்வா பெயரில் ஏகப்பட்ட அல்வா கடைகள் இருக்கு... அதே போல்....ஏகப்பட்ட போலிகளும் இருக்கு.பார்த்து வாங்கணும்...

இன்னும் இருக்கு..இப்போதைக்கு கொஞ்சம் இடைவெளி...

நேசங்களுடன்
ஜீவானந்தம்...


இன்னும் கொஞ்சம்...

Saturday, February 9, 2013

கோவை மெஸ் - தக்‌ஷின் நவ்ஷிஜான் (Dakshin naushijaan) காந்திபுரம், கோவை

கோவை காந்திபுரம் கற்பகம் காம்ப்ளக்ஸ் எதிரில் இருக்கிற ரோட்டில் கொஞ்ச தூரம் சென்றால் இந்த ஹோட்டலை அடையலாம்.வீட்டினை ஹோட்டலாக மாற்றி இருக்கின்றனர்.வீட்டில் இருக்கின்ற அத்தனை பெட்ரூம் மற்றும் ஹால்களையும் தனித்தனி ரூம் ரூம் ஆக்கி டேபிள் போட்டு இருக்கின்றனர்...மெல்லிய இசை எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது..அத்தனை சுத்தமாக இருக்கிறது அனைத்தும்..
நண்பர்களுக்கு ட்ரீட் தர வேண்டி நானும் நண்பர் கோவை ஆவி அவர்களும் அங்கு சென்றோம்...இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதால் ஒன்று கூடினோம்...
மெனு கார்டினை பார்க்க எல்லாம் புதிது புதிதாக இருந்தது.ஒவ்வொன்றாய் ஆர்டர் பண்ணினோம்...
 
  
சிக்கன்ல நிறைய கபாப் இருக்கு..அதுல ஒண்ணு கல்மி டிக்கா கபாப்...பேரே வாய்ல நுழையமாட்டேன்குது..ஆனா சிக்கன் செம டேஸ்டா நுழையுது... எல்லாம் நார்த் இண்டியன் வகைகள்...அளவு குறைந்த பீஸ்கள்..ஆனால் டேஸ்ட் அதிகம்...அப்புறம் மொகலாய் பரோட்டா...இது செம சாஃப்ட்....சாப்பிட சாப்பிட நன்றாக இருக்கிறது...நம்மூர் புரோட்டா போல பிச்சி போட்டு குருமா விட்டு கலந்து கட்டி சாப்பிட முடியாது...தொட்டாலே பிய்ந்து வருகிறது அவ்ளோ சாஃப்ட்...செம டேஸ்ட்...

சிக்கன் காந்தாரி கபாப்...சிக்கன் புதினா கபாஃப் என ஏகப்பட்ட மெனுக்கள்...அனைத்தும் நன்றாக இருக்கிறது....
இது மட்டன் களாவாட்டி கபாஃப்...என்ன பேருன்னு வாயிலயே நுழையில... மட்டன்  வடை போன்ற அமைப்பில்...அவ்ளோ மெது மெதுன்னு...கையில் எடுக்கவே பிய்ந்து விழுகிறது..ஸ்பூனில் தான் எடுத்து சாப்பிட்டோம்...அவ்ளோ டேஸ்ட்..
வெஜிடபிளில் ஒண்ணு ஆர்டர் பண்ணினோம்...ஹனி ஃபிங்கர் சிப்ஸ்...இது ஃபிங்கர் ஃபிரையை தேனில் பிரட்டி ஃபிரை பண்ணியிருந்தனர்...செம டேஸ்ட்...

இது சிக்கன் ரோல் போன்ற மெனு...ஏதோ சொன்னோம்...ஒரு ட்யூப் போன்று வடிவில் சிக்கன்..இதுவும் செம டேஸ்ட்...மெனுக்கள் அனைத்தும் புதிதாய் இருக்கிறது .சாப்பிட சுவையாய் இருக்கிறது...பில் வரும் வரை..

அதுக்கப்புறம் மட்டன் பிரியாணி, ரைஸ் புலாவ்..என அடுத்த அயிட்டம்....புலாவ் நன்றாக இருக்கிறது...மட்டன் பிரியாணி மட்டன் தனியாக ரைஸ் தனியாக இருக்கிறது...பாசுமதி ரைஸ் தான்....சுவை நம்மூர் பிரியாணி போன்று இல்லை...சாப்பிட்டு பார்க்கலாம்...
சுவை அதிகம் ஈர்த்தது என்பதினாலும் நல்ல சூழல் அமைப்பினை கொண்டு இருப்பதாலும் தொடர்ந்து மூன்று முறை சென்றுவிட்டேன்...விலை கொஞ்சம் அதிகம் தான்..ஆயினும் சுவை நன்றாக இருக்கிறது.ஒவ்வொரு வார இறுதியிலும் பிரியாணி பபே, மற்றும் பஃபே திருவிழா இருக்கிறது....போனால் செம கட்டு கட்டலாம்...அதிக நான் வெஜ் வகைகள் பஃபே மெனுவில் இருக்கின்றன...

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...