Monday, November 30, 2015

கோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவில், திருப்பதி, பகுதி - 1

திருப்பதி பயணக்கட்டுரை:

                   அடாது மழையிலும் விடாது பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.நீண்டு செல்லும் இரு கம்பிவேலிகளுக்கு இடையில் மழையின் சாரலில் நனைந்தும், நனையாமலும் சென்று கொண்டிருந்தோம்.செல்லும் வழியில் 300 ரூபாய் தரிசனம், விஐபி தரிசனம் என இரு வழிகள் பிரிக்கப்பட்டு பக்தர்கள் பிரிக்கப்படுகின்றனர்.அங்கு நமது டிக்கெட் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுப்பப் படுகின்றனர்.அங்கும் நம்மை சோதனை செய்கின்றனர்.வெகு தூரம் சென்று கொண்டிருந்தோம் வளைந்தும் நெளிந்தும்.....ஓரிடத்தில் எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை நின்று கொண்டிருக்க, அங்கிருந்து எங்களின் பயணம் வெறும் அங்குலமாக மாறியது.நாங்கள் அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்க, அவ்வப்போது கோவிந்தா....... கோவிந்தா என்கிற கோஷம் அதிர ஆரம்பித்தது....செல்லும் வழியில் பக்தர்களை தங்க வைப்பதற்கான அறைகள் நிறைய இருக்கின்றன.கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து இடங்களிலும் பொருத்தி வைத்து சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

                                     சென்று கொண்டிருக்கும் வரிசையில் ஆங்காங்கே பாதுகாப்பு சோதனை வளையங்கள்.பக்தர்கள் இன்னும் கூடுதலாக சோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுகின்றனர்....கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரிசையில் மெதுவாய் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தோம்.கடைசியாய் எம்பெருமான் வீற்றிருக்கும் மண்டபத்தில் நுழைய ஆரம்பித்தோம்.பக்தர்கள் கூட்டம் நெருக்கித்தள்ள ஆரம்பிக்கிறது.அப்போது ஏற்படும் தள்ளுமுள்ளுவை சகித்துக்கொண்டு கோவிந்தா..... கோவிந்தா... என கோஷம் போட்டுக்கொண்டு திருப்பதி ஏழுமலையானை மனமுருக வேண்டிக் கொண்டோம்...அதற்குள் ஜர்கண்டி...ஜர்கண்டி ...என தெலுங்கில் உத்தரவு வர அங்கிருந்து நகர்ந்தோம்....

                   திருப்பதி ஏழுமலையானை சந்தித்த மகிழ்ச்சியில் அங்கிருந்த மண்டபம் ஒன்றில் அமர்ந்து கொண்டோம்...பின் அங்கிருக்கும் ஒரு சில தெய்வங்களை வணங்கிவிட்டு, வெளியேறினோம்.அடுத்து லட்டு கவுண்டர்.... ஒரு மண்டபத்தில் இருபுறமும் ரயில்வே கவுண்டர் மாதிரி வரிசையாய் டிக்கட் கவுண்டர்.நாம் வைத்திருக்கும் தரிசன டிக்கெட்டினை வாங்கி பார்கோட் ரீட் பண்ணி டிக்கெட்டுக்கு உண்டான லட்டினை தருகின்றனர்.லட்டினை பெற்றுக்கொண்டு வெளியே வர திருப்பதி மலையின் மழையோடு கூடிய சுதந்திர காற்றினை சுவாசிக்க ஆரம்பித்தோம்...

                 பின் மெதுவாய் நடக்க ஆரம்பித்து கோவிலுக்கு உள்ளே நாம் கொடுத்து வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே இருக்கும் கவுண்டரில் வாங்கிக்கொண்டு எங்களின் தங்குமிடத்திற்கு சென்றோம்....
மாலை ஆறு மணிக்கு கோவில் வரிசையில் செல்ல ஆரம்பித்து, திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு வர இரவு 9 மணி ஆகிவிட்டது.மிக சிறப்பான தரிசனம்...என்ன கொஞ்ச நீண்ட தரிசனம்...பெருமாளை சந்திப்பது என்ன அவ்வளவு சுலபமா...?என்னதான் தள்ளு முள்ளு, நெருக்கடி இருந்தாலும் மீண்டும் அவரை சந்திக்க வேண்டி விரும்புகிறது.இனி அடுத்த முறை அவரை பார்க்க செல்லவேண்டும்...
திருப்பதி ஏழுமலையானை தரிசித்தபின், அலர்மேல்மங்கை தாயார் திருக்கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.திருப்பதி அடிவாரத்தில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.

திருப்பதி செல்ல ஒரு சில முன்னேற்பாடுகள்: 

1) திருப்பதி செல்ல திட்டமிடுபவர்கள் ஆன்லைனில் தரிசன நேரம் புக் செய்து கொள்ளலாம்.செல்லும் நாள், நேரம் ஆகியவற்றை உங்கள் புகைப்படத்தோடு பதிவு செய்து கொள்ளலாம்.லட்டுகள் கூட எத்தனை வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளலாம்.
2) திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்குவதற்கும் ஆன்லைனில் புக் செய்து கொள்ளவேண்டும்.இல்லையேல் திருப்பதியில் தங்கிக்கொண்டு பின் மேல் திருப்பதிக்கு செல்லலாம்.

3) தங்குவதற்கு அறை கிடைக்க வில்லை எனில் திருப்பதி மலையில் இலவச அறைகள் இருக்கின்றன.லாக்கர் வசதிகள் உள்ளன.அங்கு தம் பொருட்களை வைத்துவிட்டு தரிசனம் செய்ய கிளம்பலாம்.

4)தங்களின் உடைமைகள், செல்போன், காலணிகள் இவைகளை லாக்கரிலேயே விட்டு செல்வது நல்லது.

5)செல்போன், உடைகள் மறந்து எடுத்துச் சென்றால் தரிசனம் செல்லும் வழியில் லாக்கர் வசதி இருக்கின்றன.அங்கு ஒப்படைத்து விட்டு, தரிசனம் முடிந்தபின் கோவிலுக்கு வெளியே வந்து பெற்றுக்கொள்ளலாம்.கையோடு ஏதாவது துணிப்பை இருப்பின் நல்லது.

6)லட்டு வாங்க கவர் அங்கேயே பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இல்லையேல் கையில் பை இருந்தால் நல்லது.

7)மாதவா இல்லம் என்கிற தங்குமிடத்தில் பாய், போர்வை வாங்கிக்கொண்டு இரவு தூங்கிக்கொள்ளமுடியும்.இல்லையேல் வெளியே வாடகைக்கு பாய் போர்வை கிடைக்கும்,அதை வாங்கிக்கொண்டு இரவை கழித்துக்கொள்ளலாம்.

8)தங்குமிடங்கள் அனைத்தும் அத்தனை சுத்தம்..24 மணி நேரமும் பணியாளர்கள் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

9) பொது தரிசனம் என்கிற இலவச தரிசனத்தில் போனால் எப்படியும் ஒரு நாள் அல்லது இரு நாள் ஆகிவிடும்.ஆனாலும் சாப்பாடு, குடிநீர் வசதிகள், கழிவறை போன்ற வசதிகள் இருக்கின்றன.

பத்திரமாய் பாதுகாப்பாய் திருப்பதி செல்ல வாழ்த்துக்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Thursday, November 26, 2015

கோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவில், திருப்பதி

                      திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்கவேண்டி கடந்த வாரம் பயணப்பட்டேன்.அதிகாலை கோவை ரயில் நிலையத்தில் கோவை திருப்பதி எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் கிளம்பினோம்.எங்களை மழை வாழ்த்தி வழியனுப்பியது.கோவையில் ஆரம்பித்த மழை திருப்பதி செல்லும் வரை நீண்டு கொண்டிருந்தது.பத்து நிமிடம் மழை நிற்பதுவும் பின் தொடர்வதுமாய் எங்களுடனே பயணித்தது மழை.திருப்பதி ரயில் நிலையத்தினை மதியம் 2 மணிக்கு அடைந்தோம்.ஸ்டேசனை விட்டு வெளியே வர, தூறலாய் பெய்து கொண்டிருந்த மழை எங்களை வரவேற்க கொஞ்சம் கனமாய் சட சடவென பொழிய ஆரம்பித்தது.கொட்டும் மழையில் கொஞ்சம் நனைந்தும் நனையாமலும் அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் ஓரம் ஒதுங்கி நின்றோம்.
  
                 ரயில் நிலையத்திற்கு வெளியே திருப்பதி தேவஸ்தான பஸ் அந்த மழையிலும் பக்தர்களை ஏற்றிக்கொண்டிருந்தது.ஒரு பஸ் நிரம்பி கிளம்பியதும் உடனடியாக அடுத்த பஸ் நிரம்பிக்கொண்டிருந்தது.நாங்களும் அடுத்து வந்த ஒரு பேருந்தில் ஏறிக்கொள்ள பஸ் கிளம்பியது.கிளம்பி இரண்டு நிமிடம் கூட இருக்காது, அருகில் உள்ள பஸ்ஸ்டாண்டில் ஓரங்கட்டினர். வெளியே இருக்கும்  டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கிக்கொள்ள தெலுங்கில் மாட்லாடினார் அந்த பேருந்தின் ஓட்டுனர். குடும்பம் குடும்பமாக வந்திருப்பதால் யாராவது ஒருத்தர் போய் வாங்கினால் போதும் என சொல்ல, நானும் என் பங்குங்கு டிக்கெட் வாங்கினேன்.போக மட்டும் 50 ரூபாய். போக வர சேர்த்து வாங்கிக்கொண்டால் 90 ரூபாய்.மூன்று நாட்கள் வரை இந்த பயணச்சீட்டை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

                          அனைவரும் டிக்கெட் வாங்கி வந்தவுடன் பஸ் கிளம்பியது.ஒரு பத்து நிமிட பயணம்.மீண்டும் வண்டி நின்றது.பார்த்தால் செக் போஸ்ட். மலைக்கு மேல் செல்பவர்களை சோதனை செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு செக்போஸ்ட்.ஏர்போர்ட்டில் இருப்பது போன்று மின்னணு சோதனை.நமது அத்தனை உடைமைகள், லக்கேஜ், பிறகு நம்மையும் செக் செய்துவிட்டு மீண்டும் பஸ்ஸில் ஏற்றுகின்றனர்.ஒரு மணி நேர பயணம்.மலைப்பாதையில் கொட்டும் மழையினூடே பயணிக்கிறது பேருந்து.இருபுறமும் மழையைத்தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை.பேருந்து மேல் திருப்பதியை அடைந்த நேரம் மதியம் மூன்று மணி தான் இருக்கும் ஆனால் இருட்டுவதற்குண்டான அறிகுறியில் சாலைகளில் மழையுடன் மேகம் தவழ்ந்து கொண்டிருக்கின்றன.இருட்டை பகலாக்கும் முயற்சியில் தெருவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. சாலைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசித்தவர்கள், தரிசிக்க போகிறவர்கள் என பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் நகர்ந்து கொண்டிருந்தனர்.
                           

         

                  நாங்களும் பேருந்தை விட்டு இறங்கி குடை பிடித்துக்கொண்டு மழையில் நடக்க ஆரம்பித்தோம்.பஜார் போன்ற கடைவீதிகளில் மழையையும் மீறி கூட்டம் மொய்த்துக்கொண்டு இருந்தது.கார்கள்,ஜீப்கள், பேருந்துகள், என எல்லாம் பக்தர்களை சுமந்து கொண்டு இயங்கிக்கொண்டிருந்தன.பேருந்து நிலையத்திற்கு பக்கத்திலேயே உள்ள மாதவா இல்லம் என்கிற தங்குமிடத்திற்கு சென்றோம்.அங்குதான் லாக்கர் வசதியும், மொட்டை போடுவதற்கான இடமும் இருப்பதால் அங்கு சென்றோம்.முதலில் லாக்கர் வசதியை பெற்றுக்கொண்டு ஈர துணிகளை மாற்றிக்கொண்டு மொட்டை போட சென்றோம்.
                           மொட்டை போட இலவச டோக்கன் தான்.டோக்கனோடு அரை பிளேடு ஒன்றும் தருகிறார்கள்.மொட்டை போடும் இடத்தில் வரிசையாய் அமர்ந்திருக்கின்றனர் நாவிதர்கள்.அவர்களுக்கு முன்னால் தலைகுனிந்தபடி இழந்து கொண்டிருக்கின்றனர் பக்தர்கள், தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வெங்கடாசலபதிக்காக நேர்ந்து விட்ட தத்தம் முடிகளை.... பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அறையில் பலரும் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.ஆங்காங்கே சிதறிக்கொண்டிருந்த முடிகளை வாக்குவம் கிளினர் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர் கோவில் பணியாளர்கள்.டோக்கனில் உள்ள நம்பர் படி நாங்களும் தலைகுனிந்தபடி ஆஜரானோம். கண நிமிட நேரம் தான்.வழித்து தள்ளியது நாவிதரின் கத்தி.ஏழுமலையானுக்கான மொட்டையுடன் வெளியேறினோம்.
              குளித்து முடித்து புத்தாடை அணிந்து ஏழுமலையானை தரிசிக்க கிளம்பினோம்...ஏற்கனவே ஆன்லைனில் தரிசன நேரம் புக் செய்துவிட்டபடியால் அந்த நேரத்திற்கு முன்கூட்டியே சென்றுவிட்டோம். வளைந்தும் நெளிந்துமாய் வரிசை ஓடுகிறது.வெளியே மழை பெய்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது.

தொடரும் போடனும் போல இருக்கு....போட்டுடறேன்

நேசங்களுடன்
ஜீவானந்தம்





இன்னும் கொஞ்சம்...

Monday, November 16, 2015

கோவை மெஸ் - சோற்றுக்கற்றாழை ஜூஸ் (Aloe vera Juice)

சோற்றுக்கற்றாழை ஜூஸ்
                 திருப்பத்தூர்ல இருக்கும் போது காலங்காத்தால கொஞ்சதூரம் பைக்கிங் போய்ட்டு வருவேன்.எல்லாரும் வேர்க்க விறுவிறுக்க வாக்கிங்க் போய்ட்டு இருப்பாங்க..அவங்களை வேடிக்கை பார்த்துகிட்டே நான் மட்டும் பைக்கிங்க் போவேன்.அப்படி போறபோது தான் இந்த ஜூஸ் கடை அறிமுகமாச்சு.மூணு வேளையும் நல்லா பிரியாணியா கட்டுறது, அப்பப்ப நம்ம பகார்டியையும் டேஸ்ட் பார்க்கிறது என திருப்பத்தூர்ல வாழ்ந்துட்டு இருந்ததால், உடம்பையும் கொஞ்சம் கவனிக்கனுமே அப்படிங்கிற நல்லெண்ணத்துல இந்த கடைக்கு போனேன்.
              சிறுவயதில் வீட்டுல தொங்க விடுவதற்காக கத்தாழை செடியை பிடிங்கிட்டு வருவதோட சரி.அதன் பலன் என்ன.... பயன் என்ன என்பதெல்லாம் தெரியாது.ஆனா சாப்பிட்டா செம கசப்பு கசக்கும் என்பது மட்டும் தெரியும்.அதுக்கப்புறம் ஒரு தடவை எதுக்கோ பந்தயம் கட்டி டேஸ்ட் பார்த்துட்டு, கத்தாழை செடி இருந்தபக்கம் கூட போனதில்ல.அப்புறம் மிஷ்கின் படத்துல கத்தாழ கண்ணால பாட்டுல மட்டும் இந்த கத்தாழைங்கிற வார்த்தையை கேள்வி பட்டு இருக்கேன் அவ்வளவு தான் நமக்கும் இதற்கும் சம்பந்தம்.
                 திருப்பத்தூர்ல அடிக்கிற வெயிலுக்கு இதை சாப்பிட்டா உடம்புக்கு நல்ல குளிர்ச்சியாகும் என ஒருத்தர் நம்ம சைட்ல சொல்லவும், அதுக்கப்புறம் தான் இந்த கடைக்கு வர ஆரம்பிச்சேன்.கத்தாழையை சீவி அப்படியே நுங்கு போல வைத்து இருப்பாங்க.அதை மோர்ல போட்டு கை மிக்ஸியில் கொஞ்ச நேரம் சுத்தவிட்டு ஜூஸா குடுப்பாங்க.பாயசத்துல மிதக்கிற ஜவ்வரிசி மாதிரியே இந்த மோர்ல கத்தாழை துண்டுகள் மிதக்கும் பாருங்க....ஆகா...ஆவ்சம்....



பார்க்கிறதுக்கு தான் நல்லாயிருக்கும்..கொஞ்சம் வாயில பட்டா கசப்பு தெரிய ஆரம்பிக்கும் பாருங்க...அப்படியே மூஞ்சி அஷ்டகோணலா  மாறும்...கண்ணை மூடிகிட்டு, வாயை திறந்து ஒரே மடக்கா குடிச்சிட்டு படக்குன்னு டம்ளரை கசக்கி போட்டுடுவேன்..கொஞ்ச நேரம் செம கசப்பு கசக்கும்...அப்புறம் பழைய நிலைமைக்கு வந்துடுவேன்.அவ்ளோ தான் ஒரு ரவுண்ட் தான்...
                                 சரக்கடிக்கும் போது கூட இந்த மாதிரி கசப்பு தெரியமாட்டேங்குது..ஆனா நல்லது பண்ற இந்த கத்தாழை ஜூஸ் குடிச்சா மட்டும் கசப்பு தெரியுது...இவ்ளோ கசப்பு இருந்தாலும் நம் உடலுக்கு தருகிற இதன் பயன் மிக அதிகம்.வயிற்றுபுண், சர்க்கரை நோய், மூலம், அல்சர், சிறுநீரக கோளாறு, பெண்களுக்கு வெள்ளைப்படுதல், முக பொலிவு,கூந்தல் வளர்ச்சி, தோல் நோய், மலச்சிக்கல், கல்லீரல் நோய் குணம் என ஏகத்துக்கும் இதன் பயன்பாடு அதிகம்.இந்த ஜூஸை அங்க போய் தான் குடிக்கணும்னு இல்ல, உங்க வீட்டுலயே தயாரிக்கலாம்.மோர்ல கலந்து குடிக்க விருப்பமில்லாதவங்க, அப்படியே வெறும் வாயில் இரு துண்டுகளை போட்டு முழுங்கி கொள்ளலாம்.உடம்புல இருக்கிற வியாதிகள் குறைவதற்கு இது ரொம்ப பயன்படுகிறது.வீட்டுல கொஞ்சம் இடம் இருந்தால் இதனை நட்டு வையுங்கள்.பாம்பு போன்ற ஜீவராசிகள் வராது என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Saturday, November 7, 2015

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வணக்கம்...
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
புத்தாடை அணிந்து விபத்தில்லாமல் மிக பாதுகாப்பாக இந்த தீபாவளியை கொண்டாடுங்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, October 12, 2015

குறும்படம் - சரக்கு என்னுது சைடிஷ் எமனுது

வணக்கம்...
                            ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி...
                    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நம்ம வேலை நடப்பதால் அங்கதான் அதிகம் முகாமிட்டு இருக்கிறேன்.திருப்பத்தூரில் உள்ள முக்கிய அனைத்து உணவகங்களிலும் ஒரு கை பார்த்து இருக்கிறேன்.
                அவ்வப்போது ஓரிரு நாட்கள் கோவையில் தலைகாட்டுவதோடு சரி....சமீபத்தில் ஏற்காடு வேறு சென்றிருந்தேன்..கொஞ்சம் இளைப்பாறுதல் வேண்டி..அங்கேயும் ஒரு வேலை நிமித்தமாகத்தான் சென்றிருந்தேன்..டூ இன் ஒன் புரோகிராம்..
              இதற்கிடையில் இடைவிடாத பணிகளுக்கு இடையிலேயும் ஒரு குறும்படத்தில் குடிக்க...சாரி நடிக்க வாய்ப்பு வந்தது.நண்பர் கோவை சதிஸ் அவர்கள் ஒரு விழிப்புணர்வு குறும்படம் எடுப்பதாகவும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ஒண்டிப்புதூர் அகிம்சா அறக்கட்டளை சார்பாக பொது திடலில் திரையிடப்போவதாகவும் சொன்னார்.அந்த குறும்படத்தில் எனக்கேற்ற ஒரு கேரக்டர் இருப்பதால் அதை செய்ய முடியுமா என கேட்க அந்த பிஸியான வேளையிலும் ஓகே சொல்லிவிட்டு குறும்படத்தில் நடிக்க ஆரம்பித்தேன்..


             கோவையின் இருகூர் பகுதிகளில் எனது பகுதிகள் படமாக்கப்பட்டவுடன் நான் திரும்பவும் திருப்பத்தூருக்கே சென்று விட்டேன்.அதற்கப்புறம் குறும்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ஆகஸ்ட் 15 அன்று திரையிடப்பட்டது.இது வரைக்கும் நான் பார்க்கவில்லை.போன வாரம் தான் குறும்பட சிடியினை எனது ஆபிஸில் தந்து விட்டு போனார் சதிஸ்..
         என்ன ஆச்சர்யம்….மிக நன்றாக வந்திருக்கிறது.நண்பர்கள் அனைவரும் நடித்து (?) இருக்கின்றோம்.நம்மூரு கவிதாயினி கோவை மு சரளா கூட ஒரு காட்சியில் தலைகாட்டி இருக்கிறார்கள்.பேராசிரியர் அன்பு சிவா, நண்பர் கார்த்திக், பஷீர், சக்திவேல், கேமரா மேன் மது, டைரக்டர் சதிஸ் இவர்களது ஒத்துழைப்பால் நன்றாக வந்திருக்கிறது.
டைட்டில் தான் ரொம்ப பெருசு...

குறும்படம் காண


என்ன....குறும்படத்தில் பகார்டி தராம லா மார்டின் கொடுத்துட்டாப்புல டைரக்டரு......அதுதான் கொஞ்சம் வருத்தம்....


பாருங்க….உங்களுக்கு பிடிச்சா ஒரு லைக் மட்டும்…..


நேசங்களுடன்
ஜீவானந்தம்
         





இன்னும் கொஞ்சம்...

Sunday, September 13, 2015

கரம் – 19 ( 13.9.2015)

கரம் - பல்சுவை செய்திகளின் தொகுப்பு
பார்த்த படம்:
ரகஸ்யா.ஹிந்தி திரைப்படம்.
செம திரில்லர்.படம் ஆரம்பித்ததில் இருந்து கடைசி வரை நம்மால் யூகிக்க முடியாதபடி செம திரில்லர் மூவி.ஒரு டாக்டர் தம்பதிகளின் ஒரே மகள் ஆயிஷா.அவர்களின் வீட்டில் ஒரு இரவில் கொலையுண்டு கிடக்கிறாள்.சாட்சிகள் அடிப்படையில் அவளது தந்தையை கைது செய்கின்றனர்.சிபிஐ அதிகாரி வசம் இந்த வழக்கு வர, இந்த கொலையை  செய்தவர் யார், எதற்காக, ஏன் என்பதை மிக விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் படம்.டாக்டராக ஆசிஷ் வித்யார்த்தி, சிபிஐ அதிகாரியாக கே.கே மேனன், ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.சூப்பர் படம்..கண்டிப்பா பாருங்க..உங்களுக்கும் பிடிக்கும்....
************************
படித்த பு(து)த்தகம்:
குற்றப்பரம்பரை.
நமக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கிறதால் படிக்க அதிகம் நேரம் கிடைப்பதில்லை.இருந்தாலும் ஒரு நாவலை எடுத்தால் குறைந்தபட்சம் அது படித்து முடிக்க ஒரு மாதம் மேல் ஆகிவிடும்.ஒரு சில நாவல்கள் மட்டுமே விதிவிலக்கு.அப்படித்தான் இந்த குற்றப்பரம்பரை நாவலை வாசிக்க ஆரம்பித்தேன்.நாவலின் விறுவிறுப்பு காரணமாக சென்னை டூ திருப்பத்தூர் பயணத்தில், அந்த நேரத்தில் அதை முடித்து விட்டேன். அதற்கு காரணம் நாவலின் விறுவிறுப்புதான்.காதல் அன்பு, வீரம், துரோகம் என எல்லாமுமாக இருந்தது தான் நாவலின் சுவாரஸ்யமே.
அவ்வப்போது காவல் கோட்டம் நாவலை ஞாபகப்படுத்தினாலும், நாவலின் தனித்தன்மையால் வேறுபட்ட அனுபவத்தினை தருகிறது. நாவலில் அயர்ச்சியைத் தரக்கூடிய பகுதியான ஹசார்தினார், நாகமுனி, வஜ்ராயினி, மான், வைரம் என்கிற அமானுஷ்ய பகுதியை தூக்கியிருந்தால் அசைக்க இயலாத இடத்தினை பெற்றிருக்கும்.அந்த பகுதிக்குப் பதில் கொம்பூதிகளின் இன்னுமொரு களவுத்திறமையை சொல்லியிருக்கலாம்.அல்லது வேயன்னாவின் திறமைகளில், நற்குணங்களில், வீர தீரங்களில் ஏதாவது சொல்லியிருக்கலாம்.சேது மற்றும் ஆங்கிலேய பெற்றோர்களும் மனதில் ஒட்டவில்லை.மற்றபடி நாவலின் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை.
ஆசிரியர் – வேல ராமமூர்த்தி, விலை – ரூ.400 பக்கம் - 448 பதிப்பகம் – டிஸ்கவரி புக் பேலஸ்
******************************
காட்சி:

திருப்பத்தூர் பஸ்ஸ்டாண்டு பக்கத்துல நின்னுகிட்டு இருக்கும் போது ஒருவர் தன் தலையில் அவரைவிட உயரமான அளவிற்கு காலி பிளாஸ்டிக் பாக்ஸ்களை அடுக்கி சுமந்து கொண்டதைப் பார்க்கும் போது எப்படி அதை இறக்கி வைப்பார் என்கிற ஆச்சர்யம் வந்து செல்கிறது.
*****************************
நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, August 31, 2015

கரம் - 18 - விருந்தினர் பக்கம் - 3 - YUMMY DRIVES

கரம் -  விருந்தினர் பக்கம் - 3  -  YUMMY DRIVES 
                                                    www.yummydrives.com
              சிறப்பு விருந்தினர்களில் மூன்றாவதாக யாரை வர வைக்கலாம் என எங்கள் வட்டம் ஆலோசித்த போது, திரு கேபிள் சங்கர் அவர்கள், என் பட நாயகனை வரவைப்போம் என சொல்ல, அதுவே மிக முக்கிய முடிவாக அமைந்தது.

தமன்குமார்.
இவரைப்பற்றி அதிகம் தெரியாது.ஆனால் நம் கேபிள் சார் படமான தொட்டால் தொடரும் பட நாயகன் என்பதினால் மட்டுமே தெரியும்.விழா அன்று தான் இவரை நேரில் பார்த்தேன்.ஆள் செம ஸ்மார்ட்டாக இருக்கிறார்.சின்ன புன்னகை ஒன்றை மட்டுமே நேரில் பார்க்கும் போது உதிக்கிறார்.
இவரின் படமான தொட்டால் தொடரும் படத்தினை இன்று வரை பார்க்கவில்லை.காரணம் கோவையில் ரிலீஸ் ஆனதே தெரியாது. அதுமட்டுமல்ல இன்று வரை இதன் டிவிடி கூட வரவில்லை.

                       விழாவில் மிகச்சிறப்பாய் பேசினார் தமன்குமார்.அவரது சொந்த ஊர் மதுரை என்பதால் நிறைய உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட்ட அனுபவம் இருக்கிறது என்றார்.தொட்டால் தொடரும் படப்பிடிப்பின் போது இயக்குனருடன் பெரும்பாலும் ஹோட்டலைத்தேடி அலைந்த விதத்தினையும், விதவிதமாய் சாப்பிட்ட அனுபவத்தினையும் பகிர்ந்து கொண்டார்.ஒரு உணவுக்கான தேடல் என்பது இதுதான் என எங்களை வாழ்த்திப்பேசி இனிதே விடைபெற்றார்....
மிக்க நன்றி தமன்குமார்...

 ஜாக்கி சேகர்...
அறிமுக உரை ஆற்ற யாரை அழைக்கலாம் என்று யோசித்தபோது முதலில் வந்த பெயர் ஜாக்கி....
எனக்கு பிடித்த மிகவும் பிரபலமான பதிவர்.நான் பதிவுலகத்திற்கு வந்ததில் இருந்து இன்று வரை அதிகம் விரும்பிப் படிப்பது இவரது  பதிவுகள் தான்.எப்பொழுது பேசினாலும் தல என்று தான் சொல்லுவேன்...இவரின் எளிமையான தோற்றம், வெளிப்படையான பேச்சு எல்லாம் பிடிக்கும்.நான் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்ட படியால் வருகை தர சம்மதித்து, விழாவிற்கு குடும்பத்துடன் லேட்டாக வந்து, நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து தன் எளிய , எதார்த்தமான பேச்சால் அனைவரையும் கட்டிப்போட்டார்.பின் விழாவின் அனைத்து நிகழ்வுகளும் முடித்துவிட்டு  மிக லேட்டாக போனார்.

இப்போது ஜாக்கி அவர்கள் ஜாக்கி சினிமாஸ் என்று ஒரு யூ ட்யூப் சேனலை நடத்தி வருகிறார்.வாழ்த்துக்கள் ஜாக்கி...
மிக்க நன்றி ஜாக்கி..குடும்பத்தோடு வந்திருந்து வாழ்த்தியமைக்கு....

 சுரேகா...
விழாவின் நிகழ்வுகளை தொகுத்து வழங்க யாரையும் யோசிக்கவில்லை..காரணம் எப்போதும் நெஞ்சில் நிலைத்து இருப்பவர் சுரேகாதான்.அவரை சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பின் போது இவரின் தொகுப்பு உரையை கேட்டு இருக்கிறேன்.சுவாரஸ்யம்...அத்துணை சுவாரஸ்யம்...அவரே இந்த விழாவிற்கு தொகுத்து வழங்க வருகிறார் என்றவுடன் மிக்க மகிழ்ச்சியானோம்...

நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் இவரின் பேச்சாற்றலை..ஜெயா டிவியில் இவரை அதிகம் விவாத மேடைகளில் கண்டிருக்கிறேன்.அதில் எல்லாம் இவரின் தொகுப்பாற்றல் தெரியவில்லை...விழா மேடைகளில் மிக சுவாரஸ்யமாக பேசுவதில் இவருக்கு நிகர் இவரே....
மிக்க நன்றி சுரேகா சார்.
வந்திருந்தும் தொகுத்தும் வாழ்த்தும் தந்தமைக்கும்.....

அடுத்து நம்ம குழு உறுப்பினர்கள்...
கேபிள் சங்கர்....
மிக பிரபலமான பதிவர்..இயக்குனர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகங்களுக்கு சொந்தக்காரர்.இவரின் பதிவுகளையும் விடாமல் படித்துக்கொண்டிருக்கிறேன்.அதிகம் பழக்கம் இல்லை..ஆனால் இப்போது மிக நெருங்கிவிட்டோம்.சென்னையில் உள்ள அத்தனை சந்து பொந்துகளும் அத்துபடியாக இருக்கிறது இவருக்கு...அப்படித்தான் அன்று எங்களை சைதாப்பேட்டைக்குள் கூட்டிக்கொண்டு சென்றார்.பின் நாங்கள் கூகுள் மேப் மூலம் மெயின் ரோட்டுக்கு வந்தது வேறு விஷயம்....

மிக அருமையாய் விழாவில் பங்கெடுத்து உற்ற துணையாய் நிகழ்ச்சிகளை கலகலப்பூட்டி இனிமையாய் நடத்தி சென்றார்.
மிக்க நன்றி தலைவரே...

சுரேஷ்குமார்..
எங்களை ஒருங்கிணைத்த நண்பர்.உணவுகள் மீதான தீராத காதலை கொண்டிருப்பவர்.உணவுகள் பற்றின தேடலை ஒன்று படுத்த இவர் எடுத்த முயற்சிதான் இந்த YUMMY DRIVES.ஒவ்வொரு நாளும் வெப்சைட் பத்தின விவரங்களை தகவல்களை சலிக்காது சொல்லி எப்படி மேம்படுத்தலாம் என்கிற ஆலோசனைகளை கேட்பார்.விழாவை மிகச்சிறப்பாய் நடத்தி வெற்றிகரமாய் ஆக்கியதில் இவருக்கு பெரும்பங்கே உண்டு...


நண்பர்கள்:
இந்த இணைய திறப்பினை விழாவிற்கு பங்கேற்று அலங்கரித்த பெரும் பங்கு நண்பர்களை சார்ந்தது.இணைய நண்பர்கள், பேஸ்புக் பிரபலங்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் வந்திருந்து வாழ்த்தியதற்கு நன்றி..


திரு கோவை ஆவி, திரு பாலகணேஷ்,திரு ஆரூர்மூனா செந்தில், திரு ஷைனிங் ஸ்டார் சீனு, திரு ஸ்கூல் பையன் கார்த்திக் மற்றும் குடும்பத்தினர், திரு மணிஜி, திரு.பட்டாபட்டி ஜெய்,, திரு கவியாழி, திரு.வெங்கட், விழாவிற்கு வராமல் வெளியே வாழ்த்து சொன்ன விக்கியுலகம் வெங்கட் அவர்கள்திரு.ராஜ்குமார், திரு.பிரசாந்த், திரு.கார்த்திக், திரு.செல்வா, மற்றும் முகம் தெரிந்த, தெரியாத நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...

மிக முக்கியமாய் இந்த விழாவிற்கு அரங்கு தந்து சிறப்பித்த திரு வேடியப்பன் அவர்களுக்கும் நன்றி....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Saturday, August 29, 2015

கரம் - 17 - விருந்தினர் பக்கம் - 2 - YUMMY DRIVES

கரம் -  விருந்தினர் பக்கம் - 2  -  YUMMY DRIVES 
                                         www.yummydrives.com

              இந்த இணையத் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்து மிகச்சிறப்பாய் பேருரையும் சிற்றுரையும் ஆற்றிய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் மிக்க நன்றி...ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்களும் ஒவ்வொரு தனித்தன்மை உடையவர்கள்.
இவர்களில் வெங்கடேஷ் ஆறுமுகத்தினை தொடர்ந்து
மசாலா எஃப் எம் ரொஃபினா ( Masala FM - ROFINA).                   
                      வெங்கடேஷ் ஆறுமுகத்தினை தொடர்ந்து அடுத்து யாரை அழைக்கலாம் என்று முடிவு செய்த போது, கொஞ்சம் பிரபலமாக இருக்க வேண்டும், அதே சமயம் கொஞ்சம் கலர்புல்லாகவும் வேண்டும் என நினைத்த போது, ஃபேஸ்புக்கில் அதிகம் போட்டோ போட்டு கொன்னெடுத்துக் கொண்டிருந்த அழகான ராட்சசி என்கிற புரோபைல் ஞாபகம் வந்தது.
               இவரைப்பற்றி அதிகம் தெரியாததால் இவரது தகவல்களை குடைந்தபோது, ஒரு தனியார் ரேடியோ ஒளிபரப்பின் நிறுவனர் எனத்தெரிந்தது.அதுவும் ரேடியோ ஜாக்கியாக இருப்பவர் எனவும் தெரிந்து ஆச்சர்யப்பட்டபடி இவரது மசாலா எஃப் எம் வெப்சைட்டுக்கு போன போது இவரது காந்தக்குரல் நம்மை இழுக்கிறது.இவரது வசியக்குரல் நம்மை வசியப்படுத்துகிறது.தேன் தடவிய வார்த்தைகளை கோர்த்து நிகழ்வுகளை சொல்லும் போது இவரின் குரலால் அந்த காட்சிகள் விரிவடைகின்றன... நம்மையும் வியக்க வைக்கின்றன....
                      அவரது கேலரியில் சென்று போட்டோக்களை பார்த்த போது ஒரே ஆச்சர்யம்...ஒட்டு மொத்த கோலிவுட் சினிமா இண்ட்ஸ்ட்ரி கூடயும் போட்டோ எடுத்து இருக்கிறார்.இவரை சிறப்பு விருந்தினராக ஆக்கிட வேண்டியதுதான் என முடிவு செய்து மசாலா எஃப் எம் நிறுவன உரிமையாளரான ரொஃபினா அவர்களை கமெண்டில் தொடர்பு கொண்டேன்...
                பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள்.அப்படி பேசுவதையே சாதகமாக்கி உலகத்திலேயே தொடர்ந்து 50 மணி நேரத்திற்கும் மேலாக நான்ஸ்டாப்பாக பேசி விருது வாங்கியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்...விழாவுக்கு வருகை தர அழைப்பு விடுத்தபோது மிக சந்தோசமாய் வருவதாக சொன்னார்...அதே மாதிரி விழா தொடங்குவதற்கு டைம் ஆனபோதும் வந்து சேராமல் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார்.ஒருவழியாய் வந்து சேர்ந்தபோது விழாவினை ஆரம்பித்தோம்....

           இருண்டு கிடந்த வானில் ஒரு நட்சத்திரம் எப்படி மிக பிரகாசமாய் மின்னுகிறதோ அது மாதிரி களையிழந்து பொலிவிழந்த எங்கள் விழாக்கூட்டத்தில் ஒரு நட்சத்திரமாய் மின்னினார்...
                   ஏற்கனவே ரொம்ப நேரம் பேசி விருது வாங்கிய ஆளாச்சே....இன்று நம்மை விடப்போவதில்லை என நினைத்தோம்...ஆனால் தன் குயிலினும் மென்மையான குரலில் மிக அழகாய் பேசி எல்லாரையும் மெய் மறக்க வைத்தார்...தன் குடும்ப சூழல் காரணமாக தன் அம்மா ஹோட்டல் தான் முதலில் ஆரம்பித்து தங்களை வளர்த்தினார் என்று சொல்லும் போது அவருக்குள் இருந்த சோகமும், ஹோட்டல் பத்தின ஆர்வமும் வெளியேறியது.என்னால் வெறும் பேச்சு மட்டும் தான் பேசமுடியும் அப்படின்னு இல்லாம நான் நல்லா சமைப்பேன் என்கிற அரிய தகவலை சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்...மிக எளிமையாய் அனைவரிடமும் பழகி விழா முடியும் வரை இருந்து, எல்லோருடனும் போட்டோ எடுத்துக்கொண்டு, மிகக்கலகலப்பாய் விழாவினை மிகச்சிறப்பாய் நடத்திக் கொடுத்து விட்டு அந்த நட்சத்திரம் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டு சென்றது...

                விழா முடிந்த அதற்கடுத்த நாளில் இருந்து தன் வேலையை ஆரம்பித்து விட்டார் பேஸ்புக்கில்.....பார்த்தும் ரசித்தும் அவர்களது போட்டோக்களுக்கு  லைக்கிட்டு கொண்டிருக்கிறேன்....
இவரின் masala FM கேட்க

மிக்க நன்றி ரொஃபினா....வந்திருந்து விழாவை சிறப்பித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்.....

கரம் -  விருந்தினர் பக்கம் - 1  -  YUMMY DRIVES

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, August 27, 2015

கரம் - 16 - விருந்தினர் பக்கம் - 1 - YUMMY DRIVES

                   நல்ல உணவுகளுக்கான தேடலை வைத்து ஒரு வெப்சைட் ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்கிற வினாவோடு சுரேஷ்குமார் பேச ஆரம்பிக்க, அது பற்றின விடாமுயற்சிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச்சிறப்பாய் இந்த வெப்சைட் ஆரம்பித்து வெற்றிகரமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
                                                   www.yummydrives.com

              இந்த இணையத் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்து மிகச்சிறப்பாய் பேருரையும் சிற்றுரையும் ஆற்றிய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் மிக்க நன்றி...ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்களும் ஒவ்வொரு தனித்தன்மை உடையவர்கள்.
முதலில் திரு வெங்கடேஷ் ஆறுமுகம்.
                இவரைப்பற்றி கொஞ்சம்...இவரை நான் கலக்கப்போவது யாரு என்கிற நிகழ்ச்சியில் டீவியில் கண்டு மகிழ்ந்ததோடு சரி..பின் இவர் கருப்பசாமி குத்தகைக்காரர் என்கிற திரைப்படத்தில் இவரின் நடிப்பை கண்டிருக்கிறேன்.பேஸ்புக்லாம் அப்போது வந்திராத காலம் என்று நினைக்கிறேன்.மதுரை ராஜ்மஹால் துணிக்கடைக்கு போடப்பட்ட பிரமாண்ட செட் உருவாக்கத்தில் எனது நண்பருக்கு உதவியாக இருந்தபோது நான் அவரை சந்தித்து இருக்கிறேன்.அதற்கப்புறம் அவரது ஆபிஸ் இண்டீரியர் பணிக்காக அவரை மதுரையில் சந்தித்து இருக்கிறேன்.(ப்ளான் மற்றும் கொட்டேசன் கொடுத்தோடு சரி...).ஓரிரு வார்த்தைகள் பேசி இருப்போம் பார்மலாக அவ்ளோ தான்..பின் கோவையில் அவரது நிறுவனத்திற்கு கிளை ஆரம்பித்த போது அப்போதும் அவரை சந்தித்து இருக்கிறேன்..(அப்போதும் வேலை கொடுத்த பாடில்லை).ரயில்வே ஸ்டேசன் அருகில் ஒரு லாட்ஜில் கனத்த புகை மண்டலத்தின் நடுவே ஒரு தேவதூதராய் காட்சியளித்த ஞாபகம் இன்னும் இருக்கிறது.
                பின் கோவையில் போத்திஸ் ஆரம்பித்த போது அந்தவிழாவிற்கு சென்ற போது வெங்கி அவர்களுடன் கை குலுக்கி ஒரிரு வார்த்தைகள் பேசி இருக்கிறேன்.அதற்கப்புறம் பேஸ்புக்கில் அவரது பாலோயர் ஆகி அவரின் நகைச்சுவை கலந்த பதிவுகளை கண்டு அவ்வப்போது லைக்கிட்டு இருக்கிறேன்..அவரின் மீது எனக்கு மிகக்கடும் பொறாமை இருக்கிறது.. ஏகப்பட்ட அம்மணிகள் அவர்க்கு லைக்கிடுவது தான்...அது மட்டுமல்ல ஆதித்யா டீவியில் ஆரம்பித்த வலைச்சிரிப்பு நிகழ்ச்சியிலும் அவர் கிருஷ்ணராக காட்சியளிப்பதும் மிகுந்த பொறாமைக்குள்ளாக்கியது.... அவருக்கு மச்சம் உடம்பில் இல்லை...அவரது உடம்பே மச்சத்தில் தான் இருக்கிறது எனவும் தெரிந்து கொண்டேன்...எனினும்  நமக்கு விதித்த்து அவ்வளவுதான் என நொந்து கொண்டு என்னை நானே தேற்றிக்கொண்டேன்...

                    இந்த வெப்சைட் துவக்கத்திற்கு யாரை அழைக்க போகிறீர்கள் என சுரேஷ் கேட்டபோது முதலில் ஞாபகத்திற்கு வந்தவர் தாமு அவர்கள் தான்..அவரை பலவிதங்களிலும் தொடர்பு கொண்டபோது அவரை பிடிக்க முடியவில்லை...அடுத்து உடனடியாய் ஞாபகம் வந்தவர் நம்ம வெங்கடேஷ் தான்...தாமுவை போன்ற உடலமைப்பு கொண்டவர், நல்ல சாப்பாட்டு பிரியர், மதுரைக்காரர் வேறு, அவரின் உணவுப்பதிவுகளில் உள்ள எதார்த்தமான நகைச்சுவை தொனி நம்மை சிரிக்க, வியக்க வைக்கும்.சரி...அவரை வரவேற்கலாமா என சுரேஷிடம் கேட்டபோது அவரும் வியந்து சரியான ஆள் தான் என சொல்ல, அவரை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்னை சேர்ந்து விட்டது.அவரின் நம்பர் முன்பு ஒரு காலத்தில் வைத்து இருந்தேன்.இப்போது இல்லை...முதலில் பேஸ்புக் சாட் செய்தேன்..கண்டுக்கவில்லை...(ஒருவேளை பெண் பெயரில் ஃபேக் ஐடியாக இருந்தால் ரிப்ளை வந்து இருக்குமோ..).உடனே என் நண்பருக்கு போன் போட்டு வெங்கடேஷ் கிட்ட பேசு, அவரு சீஃப் கெஸ்டா வேணும்னு சொன்னேன்...உடனே பர்மிசன் வந்தது...அவரின் நம்பருக்கு பேசினேன்...மதுரைக்காரர்களுக்கே உரித்தான குரல்.....என்னால் மறக்க முடியவில்லை....மிகப்பணிவாய் குரல்.... வந்துடறேன் என சொல்லி , பங்சனுக்கு மிகச்சரியாய் ஒரு நிமிடம் முன்னதாக வந்து ஆச்சர்யத்தினை தந்தார்....மிகச்சிறப்பாய் பேசி எங்கள் வெப்சைட்டுக்கு நல்ல அறிமுகத்தினை தந்தார்...அவரின் மனைவி சென்னையில் ஒரு மாலில் ஹோட்டல் ஆரம்பித்து இருப்பதாக சொல்லியிருக்கிறார்...யம்மி ட்ரைவ்ஸ் க்காக அங்கு சென்று சாப்பிட வேண்டும்....
                      ஒரே ஒரு வருத்தம் தான் அவரிடம்.....என் கூட நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள் என்று சொல்லவில்லை... அவசரவேலை காரணமாக அப்படியே சென்று விட்டார்...

மிக்க நன்றி வெங்கடேஷ்.....வந்திருந்து வாழ்த்தியமைக்கு.....


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, August 25, 2015

கோவை மெஸ் - பலகாரக்கடை, தள்ளுவண்டிக்கடை, காந்திபுரம், கோவை

             காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டுல இருந்து 100 அடி ரோட்டுக்கு செல்ல ஒன்றிலிருந்து 12 வரைக்கும் பல வீதிகள் இருக்கு.இதுல முதல் 7 வீதிகளில் செல்போன் கடைகளும், பிரிண்ட் பிரஸ்களும் இருக்கு.இந்த வீதிகளில் எண்ணிப்பார்த்தா ஐநூறுக்கும் மேற்பட்ட மொபைல் ஷாப்கள், பிரிண்ட் பிரஸ்கள் தான் இருக்கும்.பேக்கரி மொத்தம் பத்துலிருந்து 15க்குள்ள தான் இருக்கும்.ஒரு மாலை நேரத்தில் ஸ்னேக்ஸ் மாதிரி சாப்பிடனும்னா ஒண்ணும் இருக்காது.பேக்கரியில் தேங்காய்ப்பன்னும், எப்பவோ போட்ட முட்டை பப்ஸ்தான் இருக்கும்.அது நல்லாவே இருக்காது வேற....
                சாயங்கால நேரத்தில் மழை மெலிதா தூறும் போது சூடாய் ஏதாவது பலகாரம் சாப்பிட்டால் எப்படி இருக்கும்.அந்த மெல்லிய மண் வாசனையில், பலகாரங்களின் வாசனை மூக்கைத்துளைத்தால் எப்படி இருக்கும்...எண்ணெயில் பொரியும் கடலை மாவின் வாசனை, அதன் கூட வேகும் வெங்காயமோ, வாழைக்காயோ, அதன் சுவை எட்டுத்திக்கும் பரவி நம் மூக்கினை அடைந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட சுகானுபவத்தினை தருவது தான் இந்த தள்ளுவண்டிக்கடை... 



              காந்திபுரம் இரண்டாவது வீதிக்கும் மூணாவது வீதிக்கும் நடுவுல ஒரு ஜங்சன் இருக்கு.அந்த ஜங்சன் ரோட்டுல ஒரு வயதான பெண்மணி வடை போண்டா, பஜ்ஜி, முட்டைப்போண்டா என பலவித பலகாரங்கள் போட்டு விற்கின்றார்.நான் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக அங்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்...எனக்கு அங்கு அதிகம் பிடித்த பலகாரம் என்னவெனில் முட்டை போண்டாதான்.வெந்த அரைமுட்டையை பஜ்ஜி மாவில் நன்கு தோய்த்து எண்ணையில் பொரித்து சுடச்சுட ஆவி பறக்க தட்டில் வைக்கும் போது அந்த போண்டாவின் கடலைமாவு சுவை நம் நாசியில் பரவும் பாருங்கள்.....அது சொர்க்கம்...
                             அந்த முட்டைப்போண்டாவை இரண்டாக பிளந்து சட்னி ஊற்றி தருவார்கள்...அந்த முட்டைப் போண்டாவை சுடச்சுட பிய்த்து அவர்கள் தரும் சட்னியில் தொட்டு சாப்பிட... ஆஹா....ஆஹா... அற்புதம்.ஒட்டுமொத்த நரம்புகளும் சுவை அரும்புகளை இன்னும் முளைக்கவிடும்..மீண்டும் இன்னொரு துண்டை சட்னியில் தொட்டு சாப்பிட இன்னும் கொஞ்சம் வளர ஆரம்பிக்கும் சுவை அரும்புகள்....
அப்புறம், வடை, போண்டா, பஜ்ஜி என ஒவ்வொரு அயிட்ட்த்திலும் ஒவ்வொன்றாய் டேஸ்ட் பண்ணி சாப்பிட்டுவிட்டு கை கழுவினால் மனமும் வயிறும் நிறைந்திருக்கும்...
                 அங்கு சாப்பிடும் நேரத்தில் பேச்சு கொடுப்பேன் அந்த பெண்மணியிடம்...கிட்டத்தட்ட 33 வருடங்கள் ஆகிவிட்டதாம் இந்தக்கடை போட்டு.....ஒரே இடத்தில் இன்று வரை தள்ளுவண்டிக்கடை தான் நடத்தி வருகிறார்கள்..சொந்த ஊர் மதுரையாம்..வேலை பிழைப்புக்காக இங்கு வந்தபோது கணவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடை போட ஆரம்பித்தவர், இன்று தன் மூன்று மகள்களுக்கு நல்ல இடத்தில் நகை நட்டு போட்டு கல்யாணம் செய்து வைத்து இருக்கிறாராம். இப்பொழுது தன் மகனுக்கு ஒரு பிரான்ச் ஒன்றை போட்டு கொடுத்து இருக்கிறார் கல்யாண் சில்க்ஸ் பின்புறம் கார்ப்பரேசன் கடைகள் உள்ள சந்தில்...
             விலை குறைவாகத்தான் இருக்கும் எப்பவும் அவரிடம்.இரண்டு வடை/ போண்டா ஐந்து ரூபாய்.டேஸ்ட் மிக நன்றாக இருக்கும்...
அந்தப்பக்கம் போனாலோ வந்தாலோ சாப்பிட்டு பாருங்கள்...

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Saturday, August 22, 2015

கோவை மெஸ் – குலோப் ஜாமூன், நக்படியான் பாவாஜான் ஸ்வீட்ஸ், ஜின்னா ரோடு, திருப்பத்தூர்

               சும்மா இருக்கும் போது திருப்பத்தூர்ல இருக்கிற சந்து பொந்தெல்லாம் வண்டியை எடுத்துக்கொண்டு சுத்துவது வாடிக்கை. அப்படித்தான் ஒரு சில வாரங்களுக்கு முன் இந்த ஜின்னா ரோடு வழியாக சென்றபோது ஒரு கடையில் செம கூட்டம்.டாஸ்மாக்ல எப்படி நம்மாளுங்க சுத்தி நின்னு பரபரப்பா இருப்பாங்களோ, அதுமாதிரி இந்தக்கடையிலும் அவ்ளோ கூட்டம்.எட்டிப்பார்த்தா ஸ்வீட் கடை...ஹோட்டலைப்பத்தி தானே எழுதறோம், இந்தக்கடையை பத்தி எழுதனுமான்னு யோசிச்சிட்டு போயிட்டேன்.
                     மீண்டும் இரண்டு நாளைக்கு முன்னாடி அந்தப்பக்கம் போனபோது அதே மாதிரி கூட்டம்.ஓகே..ட்ரை பண்ணிட வேண்டியது தான் என்று வண்டியை ஓரங்கட்டி கூட்டத்தோடு கூட்டமா ஐக்கியமாகிட்டேன்.கடையோ ஒரு பழங்கால தோற்றத்தில் உட்புறமும் வெளிப்புறமும் இருக்க, கடையினுள் உள்ளே எந்தவித அலங்கார ஷோகேஸ்களும் இல்லாமல் லட்டு, மிக்சர், ஜாமுன், பால்கோவா, அல்வா என அனைத்தும் நம் முன்னாடியே இருக்கிறது. ஒவ்வொருத்தரும் பூந்தி கால் கிலோ, மிக்சர் கால் கிலோ, ஜாமுன் என்று அவரவர் இஷ்டத்துக்கு வாங்கிக் கொண்டிருக்க, ஒரு சிலபேர் ஜாமூன் வாங்கி ருசித்துக் கொண்டிருந்தனர்.நானும் ஜாமுன் என கேட்க, ஒரு பேப்பர் கப்பில் ஜீரா ஊத்தி ஒரு நீள் வடிவ உருண்டையை போட்டார் கடைக்கார சிப்பந்தி.. 
                      


           அந்தப் பேப்பர் கப் அதிசயத்திலும் அதிசயம்.தள்ளுவண்டியில் கடலையோ சுண்டலோ வாங்கும் போது கூம்பு வடிவில் பேப்பரை சுத்தி தருவாங்களே அந்த மாதிரி ஒரு தடித்த பேப்பரை சுத்தி அதில் ஊற்றி தருகின்றனர்.ஜீரா ஒழுக வில்லை.நம் வாயில் இருந்து எச்சில் ஊறுகிறது அதைப்பார்த்தவுடன்.
                     ஒரு சின்ன வில்லையை பிய்த்து வாயில் போட்டால் ஆஹா....அபார ருசி...ஜீராவில் நன்கு ஊறி இருக்கிறது ஜாமுன்.நல்ல இதமாய் பதமாய் வாய்க்கு ருசியாக இருக்கிறது.கொஞ்சம் பிய்த்து கொஞ்சம் ஜீராவில் நனைத்தும் சாப்பிட இன்னும் செம டேஸ்ட்..அந்த ஜீரா வேறு நல்ல சுவை.ஜாமுன் காலியாகிவிட அதை அப்படியே குடிக்க, ஆஹா சூப்பரோ சூப்பர்.....

              லட்டு .....நெய் சேர்த்து மிக டேஸ்ட்.கொஞ்சம் கூட கடிது இல்லாமல் மிக மென்மையாய் இறங்குகிறது லட்டு.ஜாமுன் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் மிக்சர் சாப்பிட்டால் அந்த காம்பினேசன் செம....
                  ஒரு லட்டும் ஒரு ஜாமூன் சேர்த்து சாப்பிட்டு விட்டு எவ்வளவு பில் என்று கேட்டு இருவது ரூபாய் கொடுக்க, பத்து ரூபாய் மீதி தந்துவிட்டு, சில்லரை இல்லை, அதற்கு மிக்சர் தந்து விடுகிறேன் என ஐம்பது கிராமுக்கும் அதிகமாக மிக்சர் தந்து சரிக்கட்ட, ஆச்சர்யத்துடன், எவ்ளோங்க என்று கேட்க, எட்டு ரூபாய் தான் என்றார். ஜாமூன் வெறும் மூன்று ரூபாய் தான்.நல்ல சுவையாக இருக்கிறது ஆனால் விலை மிகக்குறைவாக இருக்கிறது. அந்தக்கடையின் மிக முக்கியமான பிரபலமான சுவையான இனிப்பு எதுவென்றால் பூந்திதானாம்.அடுத்தமுறை கண்டிப்பாக அதுதான்....
இந்தக்கடைக்கு ஒரு போர்டு கூட இல்லை.ஒரே ஒரு சின்ன போர்டு அதுவும் பூந்தி 60 ரூபாய் என்கிற விலைப்பட்டியலில் சின்ன அளவில் பெயர் மட்டுமே...திருப்பத்தூரில் நக்படியான் ஸ்வீட்ஸ் என்றால் மிகப்பிரபலம் என்பது உண்மைதான்.....ஒரு மாலை நேரம் அந்தக்கடைக்கு போய் பாருங்கள்..இன்னும் கூட்டம் அள்ளும்...

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Tuesday, August 11, 2015

கோவை மெஸ் - நியூ ஷோபா ஹோட்டல், மடவாளம், திருப்பத்தூர்

                            திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் என்கிற ஊருக்கு செல்கின்ற வழியில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் மடவாளம் என்கிற ஊர் இருக்கிறது.ஒரு வேலை விசயமாக அந்த ஊர் வழியே சென்ற போது கூட வந்த நண்பர் இந்த ஊரில் ஒரு ஹோட்டல் இருக்கிறது.நான்வெஜ் ரொம்ப நல்லாயிருக்கும் என்றும், திருப்பத்தூரில் இருந்து வந்து  இங்கு சாப்பிட்டுவிட்டு செல்வோம் என சொல்லவும், அடுத்த நிமிடத்தில் அந்த ஹோட்டலில் ஆஜரானோம்.
                      ரோட்டு ஓரத்திலேயே இருக்கிறது இந்த நியூ ஷோபா ஹோட்டல்.சின்ன கடைதான்.பத்துக்கு பத்து ரூம் அளவு கொண்ட இரு கடைகள் ஒன்று சேர்ந்து ஒரு ஹோட்டலாக இருக்கிறது.ஒரு ரூம் சமையல் அறையாக இருக்கிறது.ஹோட்டல் வெளியே கூண்டுக்குள் அடைபட்ட காடைகள், என்னிக்கு ரோஸ்ட் ஆவோம் என்று தெரியாமலே கீச் கீச் என கத்திக்கொண்டிருந்தன.ஹோட்டலுக்குள்ளே நுழையும் முன்பே வரவேற்கிறது, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த மட்டன் குழம்பின் வாசனையும்,  அடுத்து அந்த ஹோட்டல் உரிமையாளரும்....கடைக்கு வெளியே தயாரான குஸ்கா பெரிய பாத்திரத்தில் இருக்கிறது.அதன் வாசம் நம்மை உள்ளிழுக்கிறது.... 

                      உள்ளே ஒரு செல்ப் இருக்கிறது..அதில் ஏகப்பட்ட குண்டாக்கள்...எல்லாம் இலை போட்டு மூடப்பட்டு இருக்க அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு டேபிளில் அமர்ந்தவுடன், கடைக்காரர் வாழையிலையை போட்டுவிட்டு ஒப்பிக்க ஆரம்பித்தார்......
          சிக்கன் பிரியாணி, குஸ்கா, சிக்கன் வருவல், மட்டன் வருவல், காடை ரோஸ்ட், இரத்தப்பொரியல், தலைக்கறி, குடல்கறி, ஈரல் ஃப்ரை, மீன் ஃப்ரை, முட்டைக்குழம்பு என வரிசையாய் சொல்ல, அவரது வாயையே பார்த்துக்கொண்டிருந்தோம்... என்னது......இந்த ஊரில் இருக்கிற இந்த சின்னக்கடையில் இவ்ளோ வெரைட்டியா ...என ஆச்சர்யப்பட்டபடியே, குஸ்காவும், சைடுக்கு மீனும், குடல் கறியும் சொன்னோம்...நாமும் எவ்வளவு அயிட்டம் தான் டெய்லியும் சாப்பிடுவது....(டேஸ்ட்க்காக எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடத்தான் முடிகிறது...)
           
            நண்பர் சாதம் வாங்கிக்கொள்ள, நான் குஸ்கா வாங்கிக்கொண்டு குடல்ஃப்ரையை டேஸ்ட் பண்ண ஆரம்பித்தேன்...குடல் ஃப்ரை நன்றாகவே இருக்கிறது.சாதத்தோடு குழம்பினை பிசைந்து சாப்பிட செம டேஸ்டாக இருக்கிறது.குஸ்காவும் பிரியாணி மணத்துடன், நன்கு சுவையாக இருக்கிறது.அரிசியும் நன்கு வெந்து பொலபொலவென்று பிரியாணி போல் உதிரி உதிரியாக இருக்கிறது.தனியாய் வேகவைத்த சிக்கன் அல்லது மட்டன் இதனோடு சேர்த்தால் சுவைமிகுந்த சிக்கன்/மட்டன் பிரியாணி ரெடி....
ரத்தப்பொரியல் சின்ன வெங்காயம் சேர்த்து மிக சுவையாக இருந்தது.
                   குஸ்காவுக்கு தொட்டுக்கொள்ள அவ்வப்பொழுது சிக்கன் குழம்பும், மட்டன் குழம்பும் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன்..இரண்டும் நல்ல சுவை...குஸ்காவுக்கு செம காம்பினேசன்...
அப்புறம் மீன்...பொரித்தது....சுவை எப்பவும் போல ஓகே...
சாப்பிட்டு முடித்து வெளிவர, இன்னும் நான்கு பேர் உள்ளே நுழைந்தனர்....
விலை மிகக்குறைவாகத்தான் இருக்கிறது..
           ஒரு சின்ன ஊர் தான்..அதில் இவ்வளவு வெரைட்டி இருப்பது ஆச்சர்யம்தான்...மிலிட்டரி ஹோட்டல் போல அவ்வளவு மெனுக்கள்.....கிட்டத்தட்ட பலவருடங்களாக நல்ல சுவையுடன் இந்த ஹோட்டலை நடத்தி வருகின்றனர்......உண்ட திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினோம்.... அந்தப்பக்கம் போனிங்கன்னா ஒரு வாய் சாப்பிட்டு விட்டு வாங்க...

ஆட்டுக்கால் பாயா சாப்பிடனுமா...திருப்பத்தூரில்.....


நேசங்களுடன்
ஜீவானந்தம்





இன்னும் கொஞ்சம்...

Tuesday, August 4, 2015

புது வெப்சைட் அறிமுக விழா

புது வெப்சைட் அறிமுக விழா

                    ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது ஒரு ஸ்பெசல் இருக்கிறது.அது உணவாக இருக்கலாம் அல்லது ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாகவோ அல்லது வழிபாட்டுத் தலங்களாகவோ இருக்கலாம். அல்லது மிகப் பிரபலங்கள் வாழ்ந்த, வாழ்கின்ற இடமாக இருக்கலாம்.அல்லது நாம் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளினை  உற்பத்தி செய்கின்ற ஊராக இருக்கலாம்.இப்படி எதாவது ஒரு வகையில் பிரபலமாக இருக்கிற, இருக்கின்ற  ஒரு ஊரின் சிறப்புக்களை உங்கள் விரல் நுனியில்  அறிந்து கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது ஒரு தளம்.

மேலும் மொபைல் போனில் பார்க்க கூடியவகையில் ஒரு அப்ளிகேசனும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

www.yummydrives.com

பிரபலமான உணவு வகைகள் எங்கு கிடைக்கும், எந்த ஊரில் எந்த உணவு கிடைக்கும் , என்கிற எல்லாவித  தகவல்களையும் ஒன்று திரட்டின தளமாய் இது இருக்கும்.
முக்கியமாய் உணவுகளும்  அது சம்பந்தப்பட்ட தகவல்களும் நிறைய கிடைக்கும்.

நண்பர் சுரேஷ்குமார் முயற்சியில் இந்த தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.இதில் இயக்குநரும் பிரபல பதிவருமான கேபிள் சங்கர் அவர்களுடன்  நானும் இணைந்து பங்கெடுத்துள்ளோம்.நீங்கள் விரும்பும் பிரபல பதிவர்களும் இதில் இணைய உள்ளனர்.

வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி இந்த வலைத்தளம் முன்னணி பதிவர்கள், நண்பர்கள் இவர்கள் முன்னிலையில் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தர வேண்டுகிறேன் 

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
கே .கே நகர், சென்னை 
நேரம் - மாலை 6 மணி 

நேசங்களுடன் 
ஜீவானந்தம் 

இன்னும் கொஞ்சம்...