Thursday, September 28, 2017

கரம் - 30

உப்புக்கண்டம் எனப்படும் உலர்கறி.

                   கிடா வெட்டும் போது பின்னாட்களில் உபயோகப்படுத்துவதற்காக பச்சைக்கறியில் கொஞ்சம் எடுத்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கயிற்றில் கோர்த்து வெயிலில் காயவைத்து விடுவர்.


                பதினைந்து நாள் வெயிலிலும் நிழலிலும் காய்ந்த பின்னர் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்வர்.தேவையான நாட்களில் சிறிது எடுத்து வெந்நீரில் அலசி ஊறவைத்து அம்மிக்கல்லால் தட்டி குழம்புக்கு பயன்படுத்துவர்.இதன் குழம்பின் சுவையே தனிச்சுவையாக தெரியும்.இந்த குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து வைத்தால் இன்னும் டேஸ்ட் மிக நன்றாக இருக்கும்.நன்கு வெந்த இந்த உப்புக்கண்ட கறியும் சுவையில் தனியாய் தெரியும்.பல்லில் அரைபடும் போது கறியின் மணமும் சுவையும் செமயாக இருக்கும்.ஆதிகால மனிதன் வேட்டையாடிய மிருகங்களை உப்பிட்டு பதப்படுத்தி வைப்பான்.அந்த முறைதான் இதுவும்.நகர்ப்புறங்களில் இந்த உப்புக்கண்டம் எங்குமே கிடைக்காது.கிராமங்களில் மட்டும் தான் கிடைக்கும்.அதுவும் விற்பனைக்கு இருக்காது.காது குத்து, கிடா வெட்டு, திருவிழா மற்றும் முக்கிய விசேஷங்களில் வெட்டப்படும் ஆடுகளின் கறியை தேவைக்கேற்ப எடுத்து உப்புக்கண்டம் போட்டு வைப்பர்.ஒரு வருடம் வரைக்கும் கூட தாக்கு பிடிக்கும் இந்த உப்புக்கண்டம்.பின்னாட்களில் என்றாவது ஒருநாள் தேவைக்கேற்ப காரசாரமாக குழம்பு வைத்து உண்பது வழக்கம்.


திருப்பதி லட்டு :
                திருப்பதி என்றாலே பாலாஜிதான் ஞாபகம் வரும் என்று சொல்பவர்கள் கொஞ்சம் குறைவுதான்.முதலில் லட்டும் அடுத்து மொட்டையும் தான் உடனடி ஞாபகம் வரும்.திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் பிரசாதம் லட்டு உலகப்பிரசித்தம்.கோவிலில் தரப்படும் லட்டு மிகுந்த சுவை (?) உடையதாக இருக்கிறது.பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டின் எடை 180 கிராம் இருக்கும்.இது புரோக்தம் லட்டு என்று அழைப்பார்கள்.

                 முந்திரி ஏலக்காய் திராட்சை மற்றும் நெய்யின் மணம் தூக்கலாக இருக்கும்.லட்டு கவுண்டரின் வரிசையில் லட்டினை வாங்க வரிசையில் நிற்கும் போது லட்டின் மணம் நம் நாசியெங்கும் பரவி, சுவை நரம்புகளை தட்டி எழுப்பி உமிழ் நீரை சுரக்க ஆரம்பித்து வைத்துவிடும்.கவுண்டரை நெருங்க நெருங்க மணம் நம் சுவாசத்தை ஆட்கொண்டுவிடும்.வாங்கி ஒரு விள்ளல் பிய்த்து வாயில் போட்டால், திருப்பதி வெங்கடாசலபதியை நேரில் கண்ட பரவசம் நம்முள் ஏற்படும்.லட்டின் சுவை நாம் நாவில் நாட்டியமாடும்.எடுத்த கைகளில் மணம் தாண்டவமாடும்.. அந்தளவுக்கு சுவை கொண்டது இந்த திருப்பதி பிரசாதம்.


சிக்கன் வறுவல்:
                        வாணலியில் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு போட்டு வெங்காயத்தை வதக்கி, இஞ்சி பூண்டு அரைச்சு போட்டு நன்கு வதக்கி, பின் கழுவின சிக்கனை போட்டு வதக்கி, பின் கொஞ்சம் உப்பு போட்டு சில்லி பிளேக்ஸ் போட்டு கொஞ்ச வேக விட்டு, அப்புறம் கொஞ்சம் தக்காளி, மஞ்சள், மல்லித்தூள். சிக்கன் மசாலாத்தூள்( தேவைப்படின் ) போட்டு நன்கு வேகவிடனும்.தேவையான உப்பை சேர்த்துக்கனும்.எண்ணையில் கறி சுருண்ட பதத்திற்கு வந்த பின் மிளகுத் தூளை சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் பிரட்டி, ட்ரையா எடுத்து புதினா கொத்தமல்லி தூவி இறக்கினா சுவையான சிக்கன் வறுவல் ரெடி..தேங்காயை கீத்து கீத்தா மெலிசா அறிஞ்சி போட்டாலும் இன்னும் சுவை தூக்கும்.வெறும் மிளகு மட்டும் போட்டாலும் செம டேஸ்டா இருக்கும்...இந்த மழைக்கு செம காரத்துடன் சிக்கனோட  பகார்டி ஒரு பெக் போட்டா ஆஹா...சொர்க்கம்...பக்கத்துல தான்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Monday, September 18, 2017

தகவல் - ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் - Renewal of Driving License

ஓட்டுநர் உரிமம் :
 
ரினீவல், முகவரி மாற்றம், டூப்ளிகேட் பெறுவது, பெயர் மாற்றம் செய்வது என பலதும் ஆன்லைன் மூலமே செய்ய வேண்டும்.
                     Form 9 இல் இவை அனைத்தையும் செய்ய வேண்டும்.ஒவ்வொன்றிற்கும் தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அப்டேட்டிட வேண்டும்.
ரினிவல் செய்வதால் மெடிக்கல் சர்டிபிகேட் வாங்க வேண்டும்.CMV form 1A வில் மருத்துவரின் சான்றிதழும் வேண்டும்.ரூ.20 பாண்ட் பேப்பரில் ஓட்டுநர் உரிமம் தொலைந்ததற்கான காரணம், எந்த வழக்கும் இல்லை எனவும், ஓட்டுநர் உரிமம் திரும்ப கிடைத்தால் அதை தங்களிடம் ஒப்படைக்கிறேன் எனவும் எழுதி கையொப்பமிட வேண்டும்.
                      பெயர் மாற்றத்திற்கு கெஜட் பேப்பரும், முகவரி மாற்றத்திற்கு ஆதார் கார்டும்
டூப்ளிகேட் பெற ஓட்டுநர் உரிமமும்,
தொலைந்து போனதற்கு காவல் துறையின் LDR சர்டிபிகேட்டும் ஸ்கேன் செய்து அப்டேட் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு அப்ளிகேசன் நம்பர் மற்றும் அனைத்தும் இணைத்ததற்கான சான்று வரும்.நம் மொபைல் எண்ணிற்கும் OTP பாஸ்வேர்டு வரும்.அதை பரிவாகன் வெப்சைட்டில் அப்ளிகேசன் நம்பருடன் அளித்து அதை பிரிண்ட் எடுத்து அனைத்து பார்ம்கள் மற்றும் அப்டேட் செய்த அனைத்து ஒரிஜினல்களின் காப்பியையும் இணைத்து போட்டோ ஒட்டி கையொப்பமிட்டு வட்டார அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
                    இதையெல்லாம் பொறுமையாக நாமே செய்து விடலாம்.ஆனால் விவரம் பத்தாது.ஆர்டிஓ ஆபிஸ் அருகே நிறைய சென்டர்கள் இருக்கின்றன.அவர்களிடம் கொடுத்தால் சர்வீஸ்க்கு ஏற்ப ரூ 300 வரை வாங்குகின்றனர்.
மெடிக்கல் சர்டிபிகேட் கூட அங்கேயே வாங்கி தருகிறார்கள்.
இருபது நிமிடத்தில் முடிந்துவிடும்.அதற்கு அப்புறம் ஆர்டிஓ அலுவலகத்தில் பணம் கட்டுவது, போட்டோ எடுத்து கையில் லைசென்ஸ் வாங்க மிகப் பெரிய நீண்ட க்யூவில் நிற்க வேண்டி வரும்.கட்டுச்சோறு எடுத்துச் செல்வது நலம் பயக்கும்.புரோக்கர் லைசன்ஸ் வாங்கி தருவது எல்லாம் இப்போது கடினமே..கட்டாயம் நாம் செல்லாமல் வேலை நடக்காது..
இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
காவல் துறை சான்று – LDR
ஓட்டுநர் உரிமம் நகல்
ஆதார் கார்டு
மெடிக்கல் சான்று
ரூ 20. பாண்டு பத்திரத்தில் விவரங்களுடன் கையொப்பம்
இரண்டு போட்டோக்கள்

இதை அனைத்தும் ஆன்லைனிலும் அப்டேட்டிருக்க வேண்டும்.இந்த ஆவணங்களை எடுத்துக்கொண்டு நேரிடையாக வட்டார அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது வாங்கிக் கொள்ள வேண்டும்.பின் போக்குவரத்து அலுவலரை சந்தித்து கையொப்பம் வாங்கி அங்கேயே இருக்கும் தபால் பிரிவு அலுவலகத்தில் சேர்ப்பித்து விட வேண்டும்.பதினைந்து நாட்கள் கழித்து சென்று புகைப்படம் எடுத்து லைசன்ஸ் பெற்றுக்கொள்ளலாம்.

சும்மா இருந்தா ட்ரை பண்ணிப்பாருங்க..பொழுதும் போகும்…


முந்தைய அனுபவம் லைசன்ஸ் எடுக்க...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, September 1, 2017

கோவை மெஸ் - ஹோட்டல் சிந்தூரம், செராய் பீச் ஜங்சன் , கொச்சின், CHERAI BEACH, KOCHI

                  கேரளாவிற்கு எப்பொழுது சென்றாலும் கேரளாவின் பழமை மாறாத ஹோட்டல்களில்  சாப்பிடுவதுதான் பிடிக்கும்.ஆதிகாலத்து கண்ணாடி பொருத்தப்பட்ட மர ஷோகேஸில் வைக்கப்பட்டிருக்கும், புட்டு, இடியாப்பம், ஆப்பம், புரோட்டா, வடை வகைகள் போன்றவை நம்மை ஈர்க்கும்.காலையில் புட்டுக்கு காம்பினேசனாக கடலைக்கறியோ அல்லது நேந்திரன் பழமோ சேர்த்து சாப்பிடுவது கொஞ்சம் பிடிக்கும்.அதைவிட மிகவும் பிடித்தது புரோட்டாவும் பீஃப் கறியும் தான். காலையிலேயே இரண்டும் ரெடியாக இருக்கும்.சுட சுடச் சாப்பிடுவதில் அப்படி ஒரு அலாதியான இன்பம் இருக்கிறது.அதே போல் ஆப்பத்திற்கு அசைவம் என்றால் முட்டைக்கறியோ, பீஃப் கறியோ தான். அப்படித்தான் செராய் பீச்சிலேயும் ஒரு கடையை கண்டுபிடித்தோம்.செராய் பீச் ஒட்டி பல மாடர்ன் ஹோட்டல்கள் இருக்கின்றன.நம்மூர் உணவுகள் இட்லி, தோசை, பிரியாணி, சிக்கன் தந்தூரி, சிக்கன் ஷ்வர்மா போன்ற உணவு வகைகளை சாப்பிட சுத்தமாய் பிடிக்கவில்லை.எந்த ஊருக்கு போனாலும் அங்கு உள்ள மண் மணத்தோடு இருக்கும் உணவுகளை ஒரு கை பிடிப்பது தான் வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.அப்படித்தான் இந்த கேரளா பயணத்தின் போது சாப்பிட்ட உணவும்.


மதியம் என்றால் மட்டை அரிசியுடன் மீன் கறி, பொரிச்ச மீன், புளிசெரி, சம்மங்கி துவையல், ஒரு பொரியல், கூட்டு, அப்பளம் என இப்படித்தான் போகும்.இல்லை எனில் கேரளத்து பிரியாணி.சிக்கன், பீஃப், என விரும்பி சாப்பிட பிடிக்கும்.கப்பா எனப்படும் மரவள்ளி கிழங்கு மசியலுடன் பீஃப் கறி சேர்த்து சாப்பிட பிடிக்கும்.இல்லையேல் கப்பாவுடன் டபுள் ஆம்லேட் சேர்த்து சாப்பிட பிடிக்கும்.சரி..விஷயத்திற்கு வருவோம்.செராய் பீச் ஜங்க்சனில் அமைந்துள்ள ஒரு டிரெடிசனல் ஹோட்டலுக்குள் நுழைந்தோம்.அதே மர ஷோகேஸ்.வரிசையாய் வைக்கப்பட்டிருக்கும் புட்டு, ஆப்பம், புரோட்டா என உணவு வகைகள். காலை மதியம் இரவு என எல்லா வேளைகளிலும் அந்த ஹோட்டலிலேயே முடிந்தது.சுடச்சுட புரோட்டா, பீஃப் கறி, முட்டைகறி, கடலைக்கறி, கப்பா, மீன்கறி, மாந்தல், பொரிச்ச மத்தி, அயிலை என விரும்பிய நேரத்தில் எல்லாம் சாப்பிட்டோம்.போட்டி எனப்படும் குடல் கறி செம டேஸ்ட்.








கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கடலில் குளிப்பது, குடிப்பது, சாப்பிடுவது என இளைப்பாறிக் கொண்டிருந்தோம்.பீச் சென்றால் அங்கு அம்மணிகளை ரசிப்பது, இங்கே ஹோட்டல் என்றால் உணவுகளை ருசிப்பது என விரும்பியதை செய்து கொண்டிருந்தோம். கேரள உணவும் சரி, மதுவும் சரி எப்பவும் ஏமாற்றியதில்லை அந்தளவுக்கு ஒரிஜினல். கடவுளின் தேசம் சென்று வந்தாலே போதும் மனம் லேசானதாகி விடுகிறது.மனதும் உடலும் இளமையாய் இருக்க இந்த மாதிரி பயணங்கள் எப்பவும் நமக்கு தேவைப்படுகிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...