Thursday, January 31, 2013

கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை

சென்னையில் இருக்கிற மிகப்பெருமை வாய்ந்த கோவில் கபாலீஸ்வரர் கோவில்.சென்னையின் மையப்பகுதியான மயிலாப்பூரில் அமைந்துள்ளது. சென்னை வந்த போது இந்த கோவிலுக்கு தரிசனம் பெற சென்றேன்.சின்ன தெரு போல இருக்கிறது கோவிலுக்கு செல்லும் வழி.செல்லும்போதே கோபுரம் ஒன்று நம்மை வரவேற்கிறது.கோவிலை சுற்றி நடைபாதை கடைகள் நிறைய இருக்கின்றன.
 
 
 
கிழக்கு நோக்கி இருக்கும் அந்த கோபுரத்தின் வாசல் வழியாக உள் நுழைந்ததில் மிக விசாலமாக இருக்கிறது கோவில் பிரகாரம்.விநாயகர், அண்ணாமலையார், நவக்கிரகங்கள், சிங்காரவேலர் போன்ற சன்னதிகள் இருக்கின்றன.தெற்கு நோக்கி கற்பகாம்பாள் சன்னதியும் இருக்கிறது.

கபாலீஸ்வரர் எதிரில் கொடிமரம், நந்தி, பலிபீடம் போன்றவை இருக்கின்றன.
இந்த தலத்தில் இறைவன் மேற்கினை நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தரித்து அவதரிக்கிறார்.கடவுளின் கருவறையைச் சுற்றி நாயன்மார்களின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.தோத்திரங்கள் போர்டு வைக்கப்பட்டு இருக்கின்றன.இந்த தலத்தின் தல விருட்சமாக புன்னை மரம் இருக்கிறது.இதன் அருகிலேயே புன்னை வனநாதர் இருக்கிறார்.சனிபகவான் தனித்து அருள் புரிகிறார்.
 
 
 
இக்கோவிலின் மேற்குப்பகுதியில் நீராழி மண்டபத்தோடு கூடிய பெரிய கபாலி தீர்த்தம் எனப்படும் திருக்குளம் இருக்கிறது. கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், ராம தீர்த்தம் என்றும் இதற்கு பெயர் உண்டு. 
(இக்குளத்தினுள் ஏகப்பட்ட தேளி மீன்கள் பெரும் சைஸ் வாரியாக இருக்கிறது.வேடந்தாங்கலில் இருக்கிற ஒரு சில பறவைகள் இங்கும் இருப்பதைக் காணலாம்) 
இக்கோவிலில் வருடம் முழுவதும் விழாக் கோலம்தான். பங்குனி மாதத்தின் பங்குனிப் பெருவிழா மிக முக்கியமானது. இதில் தேர் உற்சவம். அறுபத்து மூவர் வீதி உலா போன்றவை விஷேசமானவை. இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படும் மற்றொரு விழா சிவராத்திரி. பூலோகக் கயிலாயம் என்று புகழப்படும் இந்த ஆலயத்தின் மற்றொரு முக்கிய விசேஷம் பிரதோஷம். பிரதோஷப் பொழுதில் சிவனை வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும், வேண்டுவது அத்தனையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவில் திறந்திருக்கும் நேரம் : தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
இந்த கோவிலுக்கு செல்ல அனைத்து இடங்களில் இருந்தும் பேருந்து வசதி இருக்கிறது.2 கி.மீ தொலைவில் மெரினா பீச்  இருக்கிறது.
சென்னையின் புராதன சின்னமாக இருக்கிற இந்த கபாலீஸ்வரர் கோவில் செல்வோம்..அருள் பெறுவோம்...

கிசுகிசு : கோவிலுக்குள் நுழைந்தவுடன் ஏகப்பட்ட பேர் கேமராவுடன் சுற்றிக்கொண்டு இருந்தனர்.அனைவரும் கோபுரம், சிற்பம், கொடிமரம் போன்றவற்றினை வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர்.என்ன விசயம் என்று கேட்டதற்கு விசுவல் கம்யூனிகேசன் ஸ்டூடண்ஸ் என்றனர்...அந்த கேப்புல நானும் கெடா வெட்டிட்டேன்...ஹிஹிஹி...போட்டோ எடுத்துட்டேன்...

அப்புறம் அம்மணிகள் பத்தி சொல்லவே வேணாம்...அம்புட்டு பேரு..செம தரிசனம் கிடைக்கிறது.

காலை வேளை....
கன்னியர்கள்
ஈரக்கூந்தலுடன் 
சொட்ட சொட்ட 
நடந்து வந்ததில்
ஈரமாகிப் போனது மனசு..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

வரும் ஞாயிறு 3 ம் தேதி   கோவை பதிவர்களின் புத்தக வெளியீடு அனைவரும் வருகை புரிய வேண்டுகிறேன்.
இன்னும் கொஞ்சம்...

Tuesday, January 29, 2013

கோவை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா

கோவை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா

வருகிற ஞாயிறு 03.02.2013 அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை காந்திபுரத்தில் அமைந்துள்ள ஹோட்டல் மங்களா இண்டர்நேஷனலில், எங்களது புத்தகங்கள் ஆன்றோர், சான்றோர், பெருமக்கள் முன்னிலையில் வெளியிடப்படுகிறது.
அனைவரும் தவறாது கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன்.

வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


இன்னும் கொஞ்சம்...

Saturday, January 26, 2013

சேராப்பட்டு, கல்வராயன் மலைத்தொடர், விழுப்புரம்

சேராப்பட்டு, விழுப்புரம்
கள்ளக்குறிச்சி சென்ற போது அருகில் ஒரு மலையில் சிறு அருவி இருக்கிறது என்ற விவரம் தெரியவரவே அந்த இடத்தைக் காண சென்றோம்.
கள்ளக்குறிச்சி டு திருவண்ணாமலை ரோட்டில் புதூர்பிரிவு என்கிற இடத்தில் சேராபட்டு என்கிற மலை கிராமத்திற்கு செல்ல வழி பிரிகிறது..
இருமருங்கிலும் பசுமை....கல்வராயன் மலைத் தொடர் முழுவதும் இயற்கை அன்னை பரந்து விரிந்து கிடக்கிறாள்.மலை அடிவாரம் செல்லும் வரை கிராமங்கள் நிறைய இருக்கின்றன.விவசாயம் செழிப்புடன் இருக்கிறது.மலைப்பாதை ஆரம்பித்தவுடன் பசுமை சாலைக்குள் செல்வது போன்ற உணர்வு.இன்னும் செப்பனிடப்படாத பாதைகள் இருக்கின்றன.

 ஒரு சிலஹேர்பின் வளைவுகள் இருக்கின்றன.கிட்டதட்ட 39 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சேராபட்டு என்கிற ஊர்.குளிர் இல்லாமல் சமதளத்தில் இருக்கிற உணர்வே இருக்கிறது.சேராபட்டு ஊருக்கு முன்பே மான்கொம்பு என்கிற ஊரில் தான் அந்த அருவிக்கு செல்லும் வழி இருக்கிறது என்று ஒரு வழிப்போக்கன் தகவல் தரவே மான்கொம்பு அடைந்தோம்...
அந்த ஊரிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் பள்ளத்தாக்கு போன்ற இடம் வருகிறது.அங்கிருந்து அருவியை காண கீழிறங்கினோம்..இன்னும் பாதைகள் அமைக்கப்படவில்லை...சறுக்கிக்கொண்டே இறங்கினோம்200அடி ஆழத்தில் பசுமை நிறைந்த மரங்கள் ..சலசலக்கும் அருவியின் சத்தம் கேட்டு சிலிர்த்துப்போனோம்..தண்ணீர் வரத்து குறைவாக இருக்கிறது.ஆனால் பயங்கர ஜில்லென்று இருக்கிறது.பாறைகள் இடையே நீர் கொஞ்சமாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது.ஆள் அரவமற்ற இடம் என்பது பார்த்தாலே தெரிகிறது.அங்கிருந்து பார்த்தால் கல்வராயன் மலை மிக பசுமையாக இருக்கிறது.அருவியின் மேற்பரப்பில் இருந்து 100 அடி பள்ளத்தில் நீர் விழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.தண்ணீர் வரத்து அதிகம் இருக்கிற நாட்களில் சென்றால் மிக அருமையாக இருக்கும்...ஆனால் அருவி கொட்டுகின்ற இடத்தினை பார்க்க முடியாது.
அங்கு உலாவிக்கொண்டிருந்த ஒரு மனிதரிடம் கேட்டு பொங்கலம்மன் அருவி என்று தெரிந்துகொண்டோம்..அருவியை ஆசை தீர பார்த்துவிட்டு வெள்ளிமலை வழியாக அயோத்தியாபட்டணம் வந்து சேலம் அடைந்தோம்..
கல்வராயன் மலையானது 3 மாவட்டங்களான சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை சேர்ந்து அமைந்துள்ளது.கள்ளக்குறிச்சி சங்கராபுரம் வழியாக மலைப்பாதை மூலம் சேராபட்டு அடையலாம்.சேலம் அயோத்தியாபட்டினம் வழியாகவும் இந்த சேராபட்டு அடையலாம்.மலைப்பாதை வழியாக செல்லும் போது ஏற்படுகிற அனுபவம் அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
சேராபட்டு இடத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் வெள்ளிமலை என்கிற ஊர் இருக்கிறது.அங்கும் ஒரு அருவி இருக்கிறது.கரியாலூர், கோமுகி அணை போன்ற இடங்கள் காணக்கூடியவையாக இருக்கின்றன.
நாங்கள் மான்கொம்பு அருகில் உள்ள அருவிக்கு மட்டும் சென்று வந்தோம்.இன்னொரு முறை இந்த ஏழைகளின் மலைவாசஸ்தலம் செல்ல வேண்டும் என்கிற ஆவலை தூண்டி இருக்கிறது.
இயற்கையை ரசிப்பவர்கள், தனிமையை விரும்புகிறவர்கள் தாராளமாக செல்லலாம்...ஒவ்வொரு வருடமும் ஜூன் ஜூலை மாதங்களில் கோடைவிழா நடைபெறுகிறது கல்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள கரியாலூரில்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Saturday, January 19, 2013

கோவை மெஸ் - ராஜகணபதி ஹோட்டல், சேலம்

ஒரு மத்தியான நேரம் சேலம் வந்த போது பசி கிள்ளி எடுக்க, நம்ம சிங்கத்தை பஸ் ஸ்டாண்ட் அருகில் நிறுத்திவிட்டு பக்கத்துல இருந்த ஆட்டோ டிரைவர்கிட்ட தெளிவா(..?) கேட்டேன்.செல்வி மெஸ் தவிர வேற எந்த ஹோட்டல் நல்லா இருக்கும் அப்படின்னு...அவரு உடனே சொன்னது ராஜகணபதி ஹோட்டல்...
பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஆலுக்காஸ் இருக்கிறது அதன் அருகில் இருக்கிற ஒரு சந்தில் இந்த ஹோட்டல் இருக்கிறது..
 
 
 
 
 
 போர்டு மிக அதிகமாக வைத்து இருக்கிறார்கள்..உள்ளே நுழைந்ததும் ஒரு சில பேர் போராடிகொண்டிருந்தனர் நாட்டுக்கோழி வறுவலோடு..இலையில் சாப்பாட்டினை விட அதிகம் இடம் பிடித்துக்கொண்டு இருந்தது கோழியின் எலும்புகளே...
நாமும் ஒரு தோதான இடத்தினை தேர்வு செய்து அமர்ந்தோம்...உட்கார்ந்து சுத்தி முத்தி பார்த்ததில் ஒரு விலைப்பட்டியல் போர்டு பார்த்ததும் இருந்த பசி எல்லாம் பறந்து போயிற்று...அவ்ளோ விலை...மட்டன் பிரியாணி 170, நாட்டுக்கோழி பிரியாணி 180 என எல்லா அயிட்டமும் நூறுக்கு மேல் தான்...சாப்பாட்டினை தவிர....ஆகா...யானை விலை குதிரை விலை இருக்கும் போல..என்றெண்ணி சர்வரிடம் கேட்டேன்...என்னங்க...இவ்ளோ ரேட் இருக்கு..கோவைல எல்லாம் கம்மியா இருக்கு...அதை விட பெரிய சிட்டியா இந்த சேலம்...என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்தபோது அசராமல் பதில் வந்தது....கிட்டதட்ட இரண்டு கிளைகள் இருக்கு...மேட்டூரிலும் சேலத்திலும்...பிராய்லர் கோழி உபயோகிப்பதில்லை என்றும், 1975 இல் இருந்து செயல்பட்டு வருகிறது என்றும் சொல்லி நம்ம வாயை அடைத்தார்...சரி..வந்தது வந்தோம்...ஒரு கை பார்ப்போம் என்று முடிவு பண்ணி...சாப்பாடு மற்றும் நாட்டுக்கோழி சுக்கா, நாட்டுக்கோழி ஃபிரை இரண்டும் ஆர்டர் பண்ணினோம்...
இலையை போட்டு வெங்காய பச்சடி வைத்தனர்....பொரியல் இல்லாமல் வெறும் பச்சடி மட்டும் வைக்கின்றனர்...
சாப்பாடு சுட சுட ஆவி பறக்க வைத்தனர்...முதலில் சிக்கன் குழம்பு...செம கெட்டியாக...நல்ல சுவையுடன் இருக்கிறது...அடுத்து சிக்கன் சுக்கா...இதுவும் நன்றாக இருந்தது...அடுத்து வந்த மட்டன் குழம்பு, அதுவும் கெட்டியாக இருக்கிறது..மிக நல்ல டேஸ்ட்...
நாட்டுக்கோழி பிரை.....கொண்டு வருகையிலே சுவை மூக்கைத்துளைக்கிறது...ஒரு தட்டு முழுக்க கோழியை பிச்சி பிச்சி போட்டு கறிவேப்பிலை தூவி மிக அழகாக கொண்டு வைத்தனர்...அதிக கேள்வி கேட்டதினால் என்னவோ மிக சிரத்தை எடுத்து செய்து இருப்பார் போல...... ஆகா...என்னா டேஸ்ட்.. நாங்களும் கொஞ்ச நேரம் கோழியோடு போராடிக்கொண்டு இருந்தோம்...மிக சுவையோடு...
கடைசியில் ரசம்...இது நல்ல சுவை..டம்ளரில் கேட்டு வாங்கி குடித்தேன்..தயிரும் கெட்டி தயிர்...குழம்பு முதல் தயிர் வரை அனைத்தும் கெட்டியாகவே இருக்கிறது ரசத்தை தவிர....
 
விலை இப்போது பெரிதாக தெரியவில்லை..சுவை அதிகம் இருப்பதால்...கூட்டமும் அதிகம் வந்து கொண்டிருக்கிறது..நிறைய சினிமா ஆட்கள் இந்த கடைக்கு வாடிக்கையாளர்களாம்...கடைசியாக வந்து சென்றவர் டிரம்ஸ் சிவமணி என்றும் கொசுறு தகவல் சொன்னார்...
 
எல்லாம் முடித்து வெளியில் வந்து நின்றபோது அருகிலேயே இன்னொரு கடை இதே பெயரில்...அந்த கடைக்கு வெளியில் நின்ற ஒருவர்...இது தான் ஒரிஜினல் கடை...அது டுப்ளிகேட் என்று சொல்ல  ஒரு டவுட்டில் சர்வரிடம் கேட்க...இருவரும் அண்ணன் தம்பிகள் தான்...இருவரும் பிரிந்து விட்டனர் என்று ஒரு கிளைக்கதையை சொல்ல ஆரம்பிக்க ....விடு....ஜூட்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, January 15, 2013

புத்தக அறிமுகம் - கோவை பதிவர்கள் கவிதை தொகுப்பு


பு(து)த்தக அறிமுகம்:1
நம்ம கோவையை சேர்ந்த பெண் கவிஞர் அகிலா அவர்களால் எழுதப்பட்ட ஒரு கவிதை தொகுப்பு...
இவரின் கவிதையை படிக்கும் போது ஒரு வித இனம் புரியாத தாக்கம் ஏற்படுகிறது.வலி மிகுந்த உணர்ச்சியினை தாங்கி வெளி வந்து இருக்கும் இவரது கவிதைகள் நமக்கு புது வித அனுபவமே...
எனக்கு 82 உனக்கு 76 என்கிற தலைப்பில் இவர் படைத்து இருக்கிற வார்த்தைகளின் வீரியம் இன்னும் நெஞ்சுக்குள் நிழலாடுகிறது. இணைபிரியாத தம்பதிகளின் வாழ்க்கையின் கடைசி அத்தியாயம்.....
நான் மரித்து நீ உலகில்...
நீ மரித்து நான் உலகில்
யோசித்துப்பார்க்கிறேன்..
இரண்டில் எது சரியென்று...
இரண்டுமே சரியில்லை
இருவரும் மரித்து
நம் உலகில்
நாம் எப்போதும் போல்
ஒன்றாகவே....
என்னை கண்கலங்க வைத்த கவிதை...இந்த தொகுப்பிற்கு ஒரு மணி மகுடமாய் இந்த கவிதை ஒன்றே போதும்...
புத்தகத்தின் விலை - ரூ 70
இவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல...ஒரு சிறந்த ஓவியரும் கூட...இவரின் படைப்புக்கள் இவரை உயர்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை...

பு(து)த்தக அறிமுகம்:2
இவரும் நம்ம கோவையை சேர்ந்தவரே..இவரின் வார்த்தை பிரயோகத்தினை  எழுத்தில் பார்த்தால் இவர் ஒரு பெண் கவிஞர் என்பதே தெரியாது.முதிர்ச்சியடைந்த வார்த்தைகளின் தெரிவுகள் புதிதாக இருக்கிறது.
பெண் கவிஞர் என்றால் காதல் ரசம்  சொட்டும் என்று நினைத்திருக்கிறேன்.இந்த தொகுப்பில் மெளனத்தின் இரைச்சலாக காதலை கொஞ்சம் ஊறுகாயாக தொட்டு விட்டு சமூகத்தின் அவலங்களை சாடி இருக்கிறார்.
சாதி எனப்படும் உயிர்க்கொல்லியை சாடி இருக்கிறார் கனமான வார்த்தைகளால்..
பட்டம் என்கிற தலைப்பில் பெண்கள் இன்னும் சிறைக்கைதிகள்தான் என்பதை உணர்த்தியிருக்கிறார்..
சுதந்திரம் என்பது இன்னும் பெறவில்லை....சாதி மதம் இனம் என்ற அடிமை சங்கிலியை அறுக்காமல் அது இல்லவே இல்லை என்பதை சொல்லியிருக்கிறார்..
புத்தகத்தின் விலை - ரூ 70 
இவர் ஒரு கல்லூரியில் பணிபுரிகிறார்.முனைவர் பட்டம் மேற்கொண்டும் வருகிறார்.இவரின் அடுத்த கவிதை தொகுப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்த இரண்டு கவிதை தொகுப்புக்களும் சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் கிடைக்கும்.
கோவையில் கிடைக்குமிடம்:
155, முதல் தளம், ஹரி பவன் அருகில், 4வது வீதி, காந்திபுரம், கோவை,  தொடர்புக்கு 98944 01474

கிசுகிசு : நானும் தான் புத்தகம் போட்டு இருக்கேன்...நானே எனக்கு விமர்சனம் பண்ணினா நல்லாவே இருக்காது.அதனால....யாராவது ...?
( அதுக்கு அமெளண்ட் தனியா வந்திடும்..) ஹி ஹி ஹி ..

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

Friday, January 11, 2013

கோவை பதிவர்களின் புத்தகம் வெளியீடு

வணக்கம் நண்பர்களே...
சென்னையில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் நம்ம கோவை பதிவர்களின் புத்தகங்கள் வெளியிடப் படுகிறது.டிஸ்கவரி புக் பேலஸில் (அரங்கு எண் 43, 44 ) அனைவரது புத்தகங்களும் கிடைக்கும்.ஆதரவு தர வேண்டுகிறோம்...


எப்படியோ ஊர் ஊராய் சுத்தியதில் கொஞ்சம் உருப்படியா பண்ணியிருக்கேன் போல.... எல்லாத்தையும் தொகுத்து ஒரு புத்தகம் மாதிரி போட்டாச்சு... இனி படிச்சிட்டு உங்க அபிப்ராயம் சொல்லுங்க...இரண்டாம் பாகம் வெளியிடனும்....


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...