Saturday, June 28, 2014

கரம் - 14 ( 28.6.2014)

கரம்:
மலரும் நினைவுகள்
போன வாரம் எங்க கிராமத்துக்கு போயிருந்தேன்.வேறென்ன ...கிடாவெட்டு தான்.மாரியம்மன் திருவிழா.ரெண்டு கிராமங்களுக்கு இடையில் இருந்த தகராறினால் இந்த வருடம் ரொம்பத்தள்ளி திருவிழா கொண்டாடினார்கள். சிறுவயதில் கொண்டாடிய திருவிழா போல் இல்லை.கோவில் பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை.வீடே கதியென்று ஆகிவிட்டது.அதனால் நம்ம வீட்டு வாண்டுகளுக்கு ஏதாவது செஞ்சு தரணுமே அப்படின்னு ஒரு கிலுகிலுப்பை செஞ்சேன்.சின்ன வயதில் செய்து பார்த்தது.ஆனாலும் மறக்கவில்லை. சரியாய் செய்துவிட்டேன்.

தேங்காய் குரும்பியில் ஈர்க்குச்சியை சொருகி அதைச் சுத்தும் போது ஒருவித சத்தம் வரும்.அது கேட்க மிக இனிமையாய் இருக்கும்.அழுகிற குழந்தை கூட தன் அழுகையை நிறுத்தி விடும்.வேக வேகமாக சுத்தும் போது இன்னும் சத்தம் நன்றாக வரும்.நம்ம வாண்டுகளுக்கு ஒரே ஆச்சர்யம்..எங்க இருந்து சத்தம் வருதுன்னு...அதை விட ஆச்சர்யம்..நம்ம அம்மணி கூட அதை இன்னும் ஆச்சர்யமா பார்த்தது தான்..
கிராமங்களில் இது போன்ற சிறு சிறு விளையாட்டுகள் எப்பவும் இருப்பதுதான்.ஆனால் அது இப்போது மாறிக்கொண்டு வருகிறது என்பது வருத்தமே.

நுங்கு வண்டி, கிலுகிலுப்பை, சைக்கிள் ரிம் வண்டி, கில்லி, கோலிக்குண்டு, பனை காத்தாடி, பொன்வண்டு, வெட்டுக்கிளி ஜோஸ்யம் இப்படி எல்லாம் போய்விட்டது. சமீபத்தில் வந்த பூவரசம் பீப்பி படத்தில் கூட பொன்வண்டு காட்டியிருப்பார்கள்.அதைப்பார்த்ததும் இன்னும் ஞாபகம் அதிகமாகவிட்டது.
பொன்வண்டினை பிடித்து அதற்கு கோணக்கா இலையை தருவது, அது போட்ட முட்டையை பத்திரமாய் வைப்பது, கயிற்றில் கட்டி சுத்தும் போது அது பறப்பது, பொன்வண்டு தலைக்கு இடையில் கை நுழைத்து வெட்டுப்பட வைப்பது என எல்லாம் சிறு வயது ஞாபகங்கள்...

கிராமங்களில் இது போன்ற சிறு சிறு சந்தோசங்கள் குழந்தைகளை மகிழ்வித்தன.இப்போதெல்லாம் கிராமங்களில் கூட தொலைந்து விட்டன பால்ய கால விளையாட்டுகள்.நகரத்துக்குழந்தைகள் போல கிராமங்களிலும் வளர்வதுதான் இன்றைய ஆச்சர்யம்.

**********************************

சமீபத்தில் பார்த்த படம்:

ஒரு சில காட்சிகள் நெகிழ வைக்கின்றன
ஒரு சில காட்சிகள் நெளிய வைக்கின்றன..
தாத்தா ராஜ்கிரணின் நடிப்பில் நாம் கண்களை குளமாக்குகிறோம்.
கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் பிடிக்கும்.
”பாத்து பாத்து ” இந்தப்பாடல் மிகவும் பிடித்திருக்கிறது.அதிகம் கேட்கக்கூடிய பாடல்களில் இது இடம் பிடித்துவிட்டிருக்கிறது.
போன வாரம் கரூர் சென்றிருந்த போது திண்ணப்பா தியேட்டரில் ரொம்ப நாளைக்கப்புறம் செம க்யூ பார்த்தேன்...
நல்ல வசூலைத்தந்திருக்கிறது படம்..

மஞ்சப்பை ...கொஞ்சம் சாயம் போனாலும் உறுதியான தரமான பை......

பார்க்கலாம்....

******************************


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, June 16, 2014

ஃபேஸ்புக் துளிகள் - 3 - கோவை நேரம். இன்

வணக்கம்
நம்ம கோவை நேரம்.காம் இப்போது கோவை நேரம் .இன் ஆகி விட்டது.
.காம் எக்ஸ்பைரி ஆகிவிட்டதால் எவ்ளோ முயன்றும் வாங்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம்....வேலைப்பளுவினாலும், தளம் இல்லாததாலும் எழுத இயலவில்லை.இனி ஆரம்பிக்கவேண்டும்.
கோவை நேரம்.காம் தளத்தினை எப்படியும் வாங்கிடவேண்டும் என்கிற முடிவில் தீயாய் வேலை செஞ்சு கடைசியில் அது முடியாமல் போகவே கோவை நேரம்.இன் வாங்கி அதை செயல்பட வைத்து திறம்பட உதவிய நண்பர் பிரபுகிருஷ்ணாவிற்கு நன்றி.....இனி சென்னை வந்தால் முதல்வேளையாக சந்திக்க விரும்புகிறேன்.

ஃபேஸ்புக் துளிகள் :

சமீபத்தில் சென்னை சென்றிருந்தேன்.கடும் வெயிலில் ஏகப்பட்ட ட்ராபிக்கில் சிக்கி நொந்து நூடுல்ஸ் ஆகி வந்தேன்.மெட்ரோ திட்டத்தால் நிறைய ஒன்வேக்கள்...நிறைய கால தாமதம் ஆகிவிட்டது.புதன்கிழமை என்பதால் ஆம்னி பேருந்தில் ஈஸியாக டிக்கட் என்று எண்ணியது தப்பாகிவிட்டது.பத்து மணி அளவில் கோயம்பேடு போனால் கோவைக்கு ஸ்லீப்பர் பெர்த் பஸ்கள் எதுவுமில்லை. எப்படியோ10.30க்கு கிளம்பும் ஒரு டப்பா பஸ்ஸில் இடம் கிடைத்தது.அடுத்தநாள் ரொம்ப்பப்ப்ப........சீக்கிரமாக காலை 9.30 மணிக்கு கோவை காந்திபுரத்தில் கொண்டு வந்து சேர்க்கவும், அன்றைய பகல்பொழுதும் வீணாகிவிட்டது.

முந்தைய இரவு கோவையிலிருந்து சென்னை பயணமானது திடீர் முடிவில்தான்.ஒரு நாள் தான் புரோகிராம்...அதனால் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யவில்லை.இரவு கிளம்பும் போது கூட எங்கும் ரிசர்வ் செய்திடவில்லை.கோவை ஆம்னி பேருந்து நிலையம் சென்று கிடைத்த பஸ்ஸில் ஸ்லீப்பர் பெர்த் டிக்கட் வாங்கி தூங்க ஆரம்பித்துவிட்டேன்..
அடுத்தநாள் காலைதான்..ஃபேஸ்புக்கில் மட்டுமே அப்டேட் செய்திருந்தேன்.அதைக்கண்டு தத்தம் வேலைப்பளுவினூடே என்னை அழைத்து நலம் விசாரித்த பிலாசபி பிரபாகரனுக்கும், சரிதா ஊட்டுக்காரரான பாலகணேஷ் அவர்களுக்கும் நன்றி....சந்திக்க முடியவில்லை நண்பர்களே....அடுத்தமுறை கண்டிப்பாக ...

இருள் விலக ஆரம்பித்த சென்னைப்பொழுதில் தான் கண்விழிக்க ஆரம்பித்தேன்.அப்போது என் பக்கத்து சீட்டு தேவதையின் நடவடிக்கைகளே எனது முதல் ஸ்டேட்டஸாக இருந்தது...

கொஞ்சம் தாமதமாகவே பஸ் ஏறினேன்.
குளிரூட்டப்பட்ட படுக்கை வசதி கொண்ட பேருந்து அது..
அப்பர் பெர்த்தும் லோயர் பெர்த்தும் திரைமூடி கிடந்தன..
எனக்கான பெர்த்தில் அடங்க ஆரம்பித்தேன்..
உறக்கம் விழித்து எழுகையில் சென்னைக்கு அருகில்...
ஜன்னலோரம் வேடிக்கை பார்ப்பது அலாதியான விசயம்....
நகர்ந்து செல்லும் 
மரங்கள் கட்டிடங்கள் மனிதர்கள் 
என மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுக்கும்...
அப்படி மெய்மறந்த நேரத்தில் ......
எனக்கு எதிரான அப்பர் பெர்த்தில் கொலுசொலி சத்தத்துடன் ஒரு பாதம் எட்டிப்பார்க்க 
வெளியே கவனம் சிதறி உள்ளே உற்றுப்பார்க்க ஆரம்பித்தேன்..

தங்கக்கொலுசுடன் அவளது சந்தன பாதம்...
கணுக்கால் வரையே..
மெதுவாய் தரையை முத்தமிட
முயன்று கொண்டிருந்தது கால்கள்...
கொடுத்து வைத்திருந்தது உடை...ஒட்டி உறவாடுவதில்....
பேருந்தின் கம்பியை இறுகப்பற்றிருந்தது
அவளது கைகள்...
வழுவழுப்பாய்...சந்தன பேழை....
மென்மையாய் விரல்கள்...
அணிந்திருந்தன அழகான மோதிரங்கள்....
மேகக்கூட்டங்களில் ஒளிந்திருந்த
வெண்ணிலா வெளியேறியது போல்....
திரை மெதுவாய் விலக ....
அவளின் பளிங்கு முகம் பளிச்சிட ஆரம்பித்தது..

இறுக்கி அணிந்த உடையுடன் 60 கிலோ அப்சரஸ் மெதுவாய் இறங்க... 
நானோ மயங்க ஆரம்பித்தேன்..
செதுக்கி வைத்த செப்புச்சிலையாய் அவள்..
அளவுகள் அம்சமாய் இருக்க....
முழு உருவமும் மொத்தமாய் ....
முன்னே நிற்க எடைகுறைந்து போனேன்..
கலைந்த கேசத்தினை சரி செய்ய கை உயர்த்திய போது
அவளின் தாராள மனதினால் கேரளாவென தெரிந்து கொண்டேன்..
முன்னும் பின்னும் திரும்பியதில்...
குனிந்தும் நிமிர்ந்தும் எழுந்ததில்....
செழிப்புகள் செவ்வனே இருந்தன....

ரசித்து கொண்டிருந்த அந்த நொடிப்பொழுதை
கர்ண கொடூரமாய் ஒரு குரல் சிதைத்தது...
அவளாயிருக்குமோ என்ற அச்சத்திலே உற்றுப்பார்க்க....
நல்லவேளை.....
பேருந்தின் கிளீனர் பையன் கோயம்பேடு..கோயம்பேடு என கத்தித் தொலைத்துக்கொண்டிருந்தான்..
அவன் முடித்ததும் மெல்லிய சங்கீதம் ஒலித்தது.
சத்தியமாய் மொபைல் ரிங்டோன் இல்லை என்பது புரிந்தது..
ஆம்......தேவதை உச்சரித்தாள்..
உதிர்ந்தது முத்துக்கள் சொற்களாய்....
இதழ்கள்....
இசைத்தன வார்த்தைகளை......
”கிண்டி க்கு எந்த பஸ் செல்லும் “... என வினவினாள்..
அடடே.....
அவளிட்ட வினாவிற்கு விடை தெரியாத பாவியாகி விட்டேனே 
என்று மனம் வலித்தது...
இருந்தாலும் சொல்லிவிட்டேன்
தெரியாதுங்க......
என்று...
அவளின் புன்முறுவல்..
மன்னித்தது என் அறியாமையை.....
பார்வைப் பரிமாறல்கள்
பயணப்பட்டுக்கொண்டிருந்தன
அந்த கொஞ்ச நேரத்திலும்....

வெகு சீக்கிரமே 
வந்து சேர்ந்தது
பேருந்து நிலையம்....

ஒன்றாய் வந்தவர்கள்
ஒரு சேர கோயம்பேட்டில்
இருவரும் இறங்கி 
இருவேறு திசைகளில் 
பயணிக்க ஆரம்பித்தோம்.......

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...