Friday, May 29, 2020

ஊரடங்கு - மது (சுய) புராணம்

ஊரடங்கு - மது (சுய) புராணம்

தமிழக மதுபானங்களை அடியோடு நிறுத்தி ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.அதற்காக குடியை விட்டுவிட்டேன் என்பது அர்த்தமல்ல.தமிழகத்தினை தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் வெளிநாட்டு மதுவகைகளையே உண்டு வருகிறேன்.காரணம் கல்லீரல் மேல் கொண்ட அதீத பற்று தான்.

ஏர்போர்ட்டில் நண்பர் ஒருவர் இருக்கிறார்.அவரின் தயவின் காரணமாக மாதம் எனது கோட்டாவினை பெற்று கொள்கிறேன்.கடந்த முறை கர்நாடகா சென்றிருந்த போது நிறைய மதுவகைகளை அள்ளிப் போட்டு கொண்டு வந்தேன்.அங்கே யுனைட்டடு டிஸ்டில்லரீஸ் தான் உற்பத்தி.பெங்களூரிலேயே உற்பத்தி மையம் இருப்பதால் விலையும் குறைவு.அதே போல் ஆரோக்கியமான மதுவாகவும் இருக்கிறது.அதே போல் கோவையிலிருந்து பாலக்காடு செல்வதும் பக்கம் என்பதால் கஞ்சிக்கோட்டில் உள்ள பெவரேஜ் கடையில் வேண்டிய மது வகைகளை வாங்கி வர முடிகிறது.நம் நண்பர் பாண்டியில் இருந்து வந்த போது அவரும் தன் பங்கிற்கு தானமளித்து விட்டு போனார்.மேலும் எனது மைத்துனர் மனைவி பாண்டியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரிவதால் அவரும் தன் பங்கிற்கு இந்த அண்ணனிற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்.

எமது பணியாட்கள் வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களுக்கு சென்று வரும் போது எனக்காக மது வகைகளை வாங்கி வருவது என்பது எழுதப்படாத ஒப்பந்தம்.அதே போல் பேஸ்புக் நண்பர்களும், தொழில் முறை நண்பர்களும் அவ்வப்போது மது பாட்டில்களை அன்பளிப்பர்.வெளிநாட்டு நண்பர்களும் இதில் அடக்கம்.

அதனால் தான் இந்த பாழாய் போன தமிழகத்தில் மட்டும் எதையும் வாங்குவதில்லை.ஒரு காலத்தில் தமிழகத்தில் அளவான மது உற்பத்தி மையங்கள் இருந்தபோது நல்ல தரமும் ஆரோக்கியமும் இருந்தது.ஆனால் இப்போது போட்டி போட்டுக்கொண்டு ஆளாளுக்கு தயாரிக்கின்றனர்.அதனால் தரமும் இல்லை உறுதியும் இல்லை.மேலும் இந்த தமிழகம் மட்டும்தான் குடிகாரனை மிகவும் கேவலமாக நடத்தி வருகிறது.ஆனால் தமிழகத்தில் பெரும் விற்பனை வருவாயை இந்த கேவலமான குடிகாரர்கள் தான் அளித்து வருகின்றனர்.அந்த மனசாட்சி இன்றி டாஸ்மாக் பாரில் இருந்து, கேவலமான பூச்சி கொல்லி மதுவகைகளை உற்பத்தி செய்வதில் வரை இந்த தமிழகம் மிகவும் நாசமாய் போய் விட்டது.அதனாலாயே தமிழக மதுவகைகளை தொடுவதில்லை.

பக்கத்து மாநிலங்களோடு நட்புறவு பேணுவதால் எப்போதும்
மது பிரச்சினை இல்லை.மதுவை அருந்துவதும் அளவாகத்தான். அதனால் கையிருப்பு எப்பவும் இருக்கிறது.இந்த லாக்டவுன் என்னை பொருளாதார ரீதியாக மட்டும் தான் பாதிக்க வைத்துள்ளது.மது ரீதியாக இல்லை.

மேலும் இதைப் படித்து விட்டு என்னிடம் ஏதாவது தேற்றலாம் என்றால் அதற்கு மிகப்பெரிய வருத்தங்களுடன் கூடிய வணக்கங்கள்..
இந்த கொரோனோ முடிந்தவுடன் தாரளமாய் தங்களோடு மதுவருந்த வருகிறேன்.செலவுகளிலும் பங்கெடுத்து கொள்கிறேன்...

எச்சரிக்கை : மது உடலுக்கு தீது


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, May 26, 2020

TIKTOK பரிதாபங்கள்

TIKTOK பரிதாபங்கள்

Blog எழுதின காலங்கள் போய் அப்புறம் பேஸ்புக் கில் எழுதிக் கொண்டிருக்கும் காலங்கள் தவிர இப்பொழுது அதிகம் விரும்பி பார்ப்பது டிக்டாக் தான்.பேஸ்புக் கில் ஒரு காலத்தில் முகம் தெரியாத பெண்களுடன் சேட் செய்வது, அவர்களை நட்பு பட்டியலில் சேர்த்துவது என ரொம்ப கடினமாக இருந்தது.அப்படியே முகம் தெரிந்த அம்மணியாக இருந்தால் போதும் அங்கே ஏற்கனவே துண்டு போட்டு கொண்டு நிறைய இருப்பர்.நாமும் பத்தோடு பதினொன்றாக இருக்க வேண்டி இருக்கிறது.அவர்கள் எழுதும் பதிவுக்கு லைக்கிட்டு கமெண்ட் இட்டாலும் நம்மை திரும்பி பார்ப்பது இல்லை.அப்படியே நம்ம ப்ரோபைலுக்கு வந்தாலும் மூஞ்சியை சுளிக்கும் படியான மதுவகைகள், அசைவ உணவு போட்டோக்கள், என எங்கும் நிரம்பி இருக்கும்.இதைப் பார்த்தாலும் இவன் செம மொடா குடிகாரன் போல என்று ஒதுங்கி விடுகின்றனர்.
அதனாலாயே நமக்கு அம்மணிகள் வட்டம் குறைவு.எனவே பிளாக் காலத்தில் எழுதிய அம்மணிகள் மட்டுமே நமது பிரண்ட் லிஸ்டில் இருக்கின்றனர்.ஆனால் டிக்டாக் அப்படி இல்லை.யாரை வேண்டுமானாலும் பிரண்டாக பாலோ செய்யலாம்.ஆடல் பாடல் நடிப்பு கவர்ச்சி திறமை, உணவு, பயணம் என அனைத்தும் இங்கே கொட்டி கிடக்கிறது.
அழகழகான அம்மணிகளின் திறமை வியக்க வைக்கிறது.எவ்வளவு பெண்கள்......நாடு வாரியாக, மாநில வாரியாக, மாவட்ட வாரியாக வயது வித்தியாசமின்றி அனைவரையும் ரசிக்க முடிகிறது.அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் அவர்களை பாலோ செய்து கொண்டு அவர்களின் திறமையினை அழகினை ரசிக்க முடிகிறது.ஆடல், பாடல் நளினங்களோடு ஒரு பெண் ஆடுவதை கண்டால் எவ்வளவு ஈர்ப்பு ஏற்படுகின்றது.விதவிதமாய், வித்தியமாசமாய் பெண்களை காண.......

பெண்கள் அழகாய் இருக்கிறாரோ இல்லையோ ஆனால் அந்த டிக்டாக் கேமரா மட்டும் அவர்களை இன்னும் அழகழகாய் காட்டி விடுகிறது.அழகாய் இருந்தால் இன்னும் அழகாக, சுமாராக இருந்தால் கொஞ்சம் அழகாக என காட்டிவிடுகிறது.நேரில் பார்க்கும் மிக சப்பையான பிகர்கள் கூட இந்த டிக்டாக் வீடியோவில் மிக அழகாய் இருக்கின்றனர்.வீடியோ பில்டர், எபக்ட்ஸ் உடன் இந்த பெண்களும் பார்க்க மிக அழகாய் தோன்றுகின்றனர்.அனைத்து பெண்களையும் அழகாக காட்டிவிடுவதில்லை..சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்..ஆனாலும் அப்படிப்பட்ட பெண்களும் அழகை புறந்தள்ளி திறமையினால் வெளியே தெரிகின்றனர்.அவர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அழகழகான அம்மணிகளை அவர்களின் நடிப்போடு இசையோடு பாடலோடு கூடவே திறமையோடு பார்க்க நன்றாகவே இருக்கிறது.ஒரு அம்மணி டிக்டாக் வீடியோவில் மிக அழகாய் தோன்றுவார்.விதவிதமான காஸ்ட்யூம்களில் கலக்குவார்.அவரின் ஹேர்ஸ்டைல், மூக்கு கண்கள் எப்போதும் ஒரு வித போதையை தரும்.வீடியோவில் எபக்ட்ஸோடு பார்க்கையில் தேவதை மாதிரி ஒரு சினிமா ஸ்டார் மாதிரி மின்னுவார்.அவளின் அழகில் மயங்கி அவளது வீடியோவிற்கு தினமும் கமெண்ட், லைக் குகளை அள்ளி வீசினேன்.
கமெண்டில் பேசுவதோடு சரி.என்னைப் போலவே என் நண்பணும் அதே பெண்ணின் வீடியோவிற்கு லைக் இடுவதும், கமெண்டுவதுமாக இருந்தான்.ஒரு நாள் இருவரும் சந்தித்து இந்த பெண்ணின் வீடியோக்களை ரசித்த நிலவரங்களை பேசிக் கொண்டிருந்தோம்.

தினமும் அவளின் அழகு பிரதாபங்களை பற்றி பேசிக் கொண்டிருப்போம்.நாட்கள் கடந்தன.ஒரு நாள் என் நண்பன் அழைத்தான்."மச்சி... அந்த பொண்ணு நம்ம ஏரியா தான்..கண்டு பிடிச்சிட்டேன்.ஆனா பொண்ணு சப்பை பிகரு..செம கருப்பு என்றான்" ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சி..வீடியோவில் இவ்வளவு அழகாக இருக்கிறாளே..நேரில் ஏன் இப்படி என்ற யோசனை. அதற்கப்புறம் என் நண்பன் அவளை அடிக்கடி பார்த்திருக்கிறான்.

அவளின் வீடு, வண்டி எண், கடைக்கு வரும் நேரம் வரை தெரிந்து வைத்திருக்கிறான்.எனக்கும் அவளை பார்க்க வேண்டிய ஆவல் ஏற்பட்டது.ஒரு நாள் மாலை நண்பன் திடீரென அழைத்தான்.
"மச்சி..உடனே வா..கடைக்கு வந்திருக்காங்க " என்று.

அரக்க பரக்க வீட்டிலிருந்து கடைக்கு கிளம்பி சென்றேன்.அங்கு நண்பன் காத்திருக்க, இவளோ கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தாள்.நானும் அவனும் பேசிக் கொண்டிருந்த போது வெளியில் வந்தாள்.அவளும் நோக்கினாள்..நானும் நோக்கினேன்..
பலத்த ஆச்சர்யம்..அவளா இவள் என்று..

வீடியோவில் இருந்தமைக்கும் நேரிலும் சம்பந்தமே இல்லை. மாநிறத்திற்கும் குறைவு.உயரமோ குறைவு.ஆனால் அவளது ஹேர்ஸ்டைல் மூக்கு கண் அப்படியே இருந்தது.அது மட்டும் தான் ஒற்றுமை.யோசனையோடு அவளது வண்டியில் தான் ஒரு சைடாய் உட்கார்ந்திருந்தேன்.அருகில் வந்தாள்.என்னை பார்த்ததும் அவளுக்கும் ஒரு திடுக்கிடல் இருந்தது.அவளாய் பேச ஆரம்பித்தாள்.ஏனெனில் ஏற்கனவே கமெண்ட்களில் பேசியவர்கள் தானே..அப்புறம் நாட்டு நடப்பை எல்லாம் பேசிவிட்டு வந்ததில் நண்பன் முகம் சிவக்க காத்திருந்தான்..
"என்னடா..நடக்குது இப்படி பேசிகிட்டு இருக்கே..தெரிஞ்ச மாதிரி என்றான்."
"இல்லை மச்சி..
என் வீடியோவும் பார்த்திருக்கா இல்ல.அதான்.

ஆனால் ஒரே ஏரியா தான் இருவரும்.நேரில் இதுவரைக்கும் பார்த்தது இல்லை.வீடியோவில் தான் அறிமுகம்.அதற்கப்புறம் அவளது வீடியோவிற்கு நானும் போவதில்லை.அவளும் வருவது இல்லை.ஆனால் என் பாலோயிங் லிஸ்ட் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

டிக்டாக் வீடியோவில் அழகாய் இருப்பது ஒரு சிலர் மட்டும் தான் என்பது தெரிகிறது.ஆனால் நிறைய பேர் டிக்டாக்கின் ப்யூட்டி கேமராவினாலும், எபக்ட்ஸ்னாலும் மிக அழகாய் தெரிகின்றனர்.
அவர்கள் எப்படி இருந்தாலும் ரசிப்பது நம் கடமையல்லவா..

"கோழி குருடா இருந்தா என்ன..குழம்பு ருசியா இருக்கானு பாரு.." அப்படின்னு கவுண்டமணி சொல்றது தான் நமக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...