Tuesday, March 26, 2013

கோவையின் பெருமை - வெள்ளிங்கிரி மலை, தென் கயிலாயம், பூண்டி, கோவை - 2

வெள்ளிங்கிரி மலை, தென் கயிலாயம், பூண்டி, கோவை. - 2
கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் மலை ஏற ஆரம்பித்தோம்...கரடு முரடாய் இருந்த பாதை இப்போது வழுக்குப் பாதையாய் ஆனது.பாறைகளில் படி போன்று வெட்டி வைத்திருக்கின்றனர்.இருபுறும் மூங்கில் காடுகள் இருக்கின்றன.அந்த இருட்டிலும் கண்கள் பழகி இருந்தன நடப்பதற்கு...கொண்டு வந்த சோடாவினை மூடி அளவில் குடித்து தாகத்தை தணித்துக்கொண்டோம்....
                இரண்டாவது மலையில் ஒரு இடத்தில் சுனை இருக்கிறது.அதில் குளிர்ச்சியாய் தண்ணீர் மெல்லியதாக ஒழுகிறது.உள்ளங்கையில் பிடித்து குடிக்க குடிக்க மிகுந்த சுவையுடன் இருக்கிறது.கொஞ்சம் வாட்டர் பாட்டிலிலும் நிரப்பிக்கொண்டு பயணித்தோம்...ஒரு அரை மணி நேரம் கழித்து அடுத்த மலையின் ஆரம்பத்தை அடைந்தோம்...அங்கே இன்னொரு சுனை இருக்கிறது..அருகிலேயே சங்கினால் செய்யப்பட்ட சிவன் சிலை இருக்கிறது.பாறைகளுக்கு இடையில் வரும் நீரினை ஒரு மூங்கில் தப்பையில் வரும்படி உள்ளே சொருகி இருக்கின்றனர்.இங்கேயும் நாவினை கொஞ்சம் நனைத்துவிட்டு ரெஸ்ட் எடுத்தோம்...
 
மீண்டும் பொறுமையாய் மலை ஏற ஆரம்பித்தோம்...மூன்றாவது மலை தாண்டவும் குளிர் எடுக்க ஆரம்பித்தது.மீண்டும் உடைகளை போட்டுக்கொண்டு அங்கே இருந்த பாறைகளில் ஓய்வெடுத்தோம்... அருகிலேயே இருந்த கடையில் சூடாய் சுக்கு காபி குடிக்கவும் கொஞ்சம் குளிருக்கு இதமாக இருந்தது....அரைமணி நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்...இப்போது கொஞ்சம் சமதளம் போன்று இருந்தது....போகிற வழியில் இருந்த பீமன் களி உருண்டை பிரமாண்டமாய் பயமுறுத்தியது....
போகிற வழியில் ஆங்காங்கே சிறு சிறு காவல் தெய்வங்கள்.....அனைவருக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்....மெல்ல மெல்ல நடந்து விபூதி மலை எனப்படும் மலை அடைந்தோம்...இந்திபி மை வியின் இருமங்ிலும்ிபிக்காகுடந்து வத்ு இருக்கின்றர்.
ந்த மலை வழியே செல்லும்போது கால்கள் மிகவும் களைப்படைந்து போயின.ஆயினும் வெகு தூரத்தில் நமக்கு முன்னே வெளிச்ச புள்ளி இட்டு செல்லும் பக்தர்களின் பயணம் நம்மை இன்னும் முன்னேற தூண்டியது....
ந்தாண்டியும் ஆண்டி ுனை என்னும் காட்டாறு இருக்கிறு.மிக ுறாகீர்வத்ு இரந்தாலும் குளிர் மிகிகாக இருக்கிறு. கைகால்கை கஞ்சம் நத்ுவிட்டு மேலேறஆரம்பித்ோம்....
கடைசி மலையை ஏற ஆரம்பிக்கும்போது அதிக பாறைகள்..தத்தியும் தவழ்ந்தும் ஏறினோம்.அவ்வப்போது இளைப்பாறிக்கொண்டோம் முடிவில் அதிகாலை 3.55 மணிக்கு மலையை அடைந்து விட்டோம்..
அங்கே இருந்து பார்க்கையில் நம்மை நோக்கி வெளிச்சப்புள்ளிகளுடன் பக்தர்கள் வந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது நாம் மலையை அடைந்து விட்டோம் என்கிற ெருமஎங்களின் வலியை போக்கியிருந்த்து.
உடனடியாக தரிசனம் பெற உள்நுழைந்தோம்.முதலில் ஒரு பாறை சந்தினுள் எழுந்தருளியுள்ள அம்மனை தரிசனம் செய்து விட்டு பின்னர் சிவபெருமானின் உருவத்தினை தேடி சென்றோம்...இரு பாறைகளுக்கு இடையே எழுந்தருளியுள்ள சிவபெருமானின் வடிவமான லிங்கத்தினை மனமுருக வேண்டிவிட்டு பின்னர் ஓய்வெடுக்க இடம் தேடினோம்..
 
    அப்போது அடித்த பனியில் பற்கள் அனத்ும் தப்பாட்டம் போட்டன.இருக்கிற அனைத்து உடைகளையும் எடுத்தி உடுத்திக்கொண்டோம் ஒதுங்க இடம் தேடியதில் அனைத்து பாறை சந்து பொந்துகளும் பக்தர்களின் பெட்ரூமாய் மாறி இருந்தது.எங்களுக்கென்று ஒரு இடத்தினை தேர்வு செய்து விடிய காத்திருந்தோம்...அதிகாலை சூரியனின் உதயத்தை காண காத்திருந்தோம்...அதிகாலை பூஜை 6 மணிக்கு ஆரம்பிக்க மீண்டும் மனமுருக வேண்டிக்கொண்டோம்....பக்தர்களின் வேண்டுதலாய் அந்த பாறை எங்கும் வேல்களால் நிரம்பி இருந்தது.
மெல்ல மெல்ல இருள் விலக....... மேகங்களால் போர்த்தி இருந்த இயற்கையை  காண ஆரம்பித்தோம்...நந்தி போன்ற வடிவில் ஒரு பாறையைப் பார்க்க அதிசயத்துப்போனோம்..பனி மேகம் வெள்ளையாய் நம்மை தொட்டு விட்டு செல்ல...சூரியன் தெரிய ஆரம்பித்தான்..இளம் சிவப்பாய் ஒரு புள்ளியாய் மேல் எழும்பிய சூரியன் மேக கூட்ட்த்திற்குள் அழகாய் தெரிய ஆரம்பித்தான்.. இந்த காட்சியைக் காண கண்டிப்பாய் ஆயிரம் கண் வேண்டும்... 
 அந்த மலையைச்சுற்றிலும் பாறைகள்...பசுமை மரங்கள் என இரண்டும் பின்னி பிணைந்திருப்பதைக்கண்டு அதிசயத்து போனோம்.6400 அடி உயரத்தில் இருக்கிற ஏழாவது மலையில் மேகம் தவழ்ந்து நம்மை உராய்ந்து தொட்டுச்செல்லும் அனுபவம் இனி வாய்ப்பது என்பது அபூர்வம் தான்...மிக ரம்மியமான காட்சி....மலை முழுவதும் இயற்கை அன்னை பசுமையை போர்த்தி இருப்பது கண் கொள்ளாக்காட்சியாகும்...
இரவு நேரத்தில் எதுவும் தெரியவில்லை.ஆனால் பகலில் திரும்பிவரும்போது தான் ஏகப்பட்ட ஆச்சரியங்கள்....திரும்பி வருகையில் தெரிந்த மலைகளை பார்த்தபோது வியப்பும் அதிசயமும் ஒரு சேர தோன்றுகிறது. மேலும் பகலில் நாங்கள் வந்த பாதைகளை பார்க்கும் போது இன்னும் அதிசயத்திற்கு ஆளானோம்..எவ்ளோ கரடு முரடான பாதை, செங்குத்தாக இருக்கிற பாறைகளின் ஊடே பாதைகள், முட்கள் போன்ற பாறைகளின் படிகள்...இவைகளை எல்லாம் பார்க்கும்போது இன்னும் மலைப்பு அதிகமானது... எப்படி இவ்ளோ தூரம் பயணித்தோம் என்பதை நினைக்கையில் இன்னும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இத்தனை கஷ்டங்களுக்கும் மத்தியில் இறைவனை தரிசனம் கண்டது மிகுந்த அதிசயமே...
ண்டிப்பாய் காணேண்டிய ிசம்..இயற்கின் வியே இறைவை காணல்லய்ப்ு....

முதல் பயணம் - வெள்ளியங்கிரி 

ேசங்குடன்
ீவானந்தம்..
   

இன்னும் கொஞ்சம்...

Friday, March 22, 2013

கோவையின் பெருமை - வெள்ளிங்கிரி மலை, தென் கயிலாயம், பூண்டி, கோவை. - 1

வெள்ளிங்கிரி மலை, தென் கயிலாயம், பூண்டி, கோவை.
ரொம்ப நாளா இந்த மலைக்கு போகனும்னு நினைச்சிட்டு இருந்தேன்.எதேச்சையா நம்ம நண்பர் தீடீர்னு அழைப்பு விடவும், ராவோடு ராவா கிளம்பினோம்.....
கோவையில் இருந்து பூண்டி 35 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.காருண்யா செல்லும் வழியில் வலது புறம் இருட்டுப்பள்ளம் என்கிற ஊருக்கு ரோடு பிரிகிறது.செம்மேடு , ஈஷா யோகமையம் தாண்டி பூண்டி மலை அடிவாரம் வரவேற்கிறது...
அந்த இருட்டு வேளையில் மலை ஏறுவதற்கு ஆயத்தமானோம்..டார்ச் லைட், தேவையான உணவு, கொறிப்பதற்கு தின்பண்டங்கள், குடிதண்ணீர், மேலே குளிரினை தடுக்க போர்வைகள் என அனைத்தும்.....மேலும் அதிக எடை இல்லாத படியும் பார்த்துக் கொண்டோம்..கிட்டத்தட்ட ஏழு மலை பயணிக்கவேண்டிருப்பதால் குறைவான பொருட்களையே எடுத்துக் கொண்டோம்...
மலையில் ஊன்றிச்செல்லவும் எதிரே எதாவது விலங்கினங்கள் வந்தால் அவைகளிடமிருந்து தப்பிப்பதற்கும் ஏதுவாக தடி தேவைப்படுவதால் அடிவாரத்தில் நல்ல தடியினை வாங்கிக்கொண்டோம்...
இரவு 9 .45 க்கு அடிவாரத்தில் இருக்கிற கோவிலில் சாமியைக் கும்பிட்டுவிட்டு படியேற ஆரம்பித்தோம்...
முதல் மலையைக் கடக்கவே கிட்டத்தட்ட இரண்டுமணி நேரங்கள் ஆகிவிட்டிருந்தது.... முதல் முறையாய் காட்டுப்பகுதியில் பயணம்...இருட்டுவேளை...சுற்றிலும் காடு..எதுவும் தெரியவில்லை...இரவு பூச்சிகளின் ரீங்காரம்....செங்குத்தாக ஏறும் படிகள்...பாறைகள்..என கவனமாக அடி எடுத்து வைத்தோம்....
குளிர்ந்து இருந்த எங்களது உடம்பு மேலேறுவதால் வியர்க்க ஆரம்பித்தது.அவ்வப்போது ஈரம் உலர்ந்த நாக்கினை தண்ணீர் கொண்டு நனைக்க ஆரம்பித்தோம்....கொண்டு வந்த தண்ணீர் குறைய ஆரம்பித்தது...
தண்ணீர் குறைவதைப் பார்த்த நண்பர் இன்னும் பல மலைகள் கடக்க இருப்பதால் தண்ணீர் அதிகம் சாப்பிட வேண்டாம் என்றும் மேலே தண்ணீர் இருக்காது என்றும் , மூன்றாவது மலையில் தான் தண்ணீர் கிடைக்கும் என்று சொல்லவும்....இன்னும் வறண்டு போனது உள்ளம்....இனி நாவை மட்டுமே நனைக்கவேண்டும் என்று உறுதி பூண்டு பயணத்தினை தொடர்ந்தோம்... வியர்க்க ஆரம்பித்ததால்.....உடைகளை களைந்து வெற்றுடம்புடன் பயணித்தோம்... எங்களைப்போலவே இன்னும் சில பேர் தங்கள் பயணத்தை தொடங்கிவிட்டிருந்தனர்...

எப்பொழுது சமதளத்தினை அடைவோம் என்கிற ஏக்கம் முதல் முறையாய் துளிர்விட்டது...சமதளம் எங்குமே இல்லை....நடந்து கொண்டு இருக்கிற பாறைகளில் அவ்வ்ப்பொழுது இளைப்பாறிக்கொண்டோம்....மேலே ஏற ஏற அடிவாரத்தில் இருக்கிற வெளிச்சப்புள்ளிகள் குறைந்து கொண்டே வந்தன.முதல் மலை முடிவில் மெல்லிதாய் ஒரு வெளிச்சம் தோன்ற பார்த்தால்......அங்கே ஒரு கடை இருக்கிறது..அந்த காட்டுப்பகுதியிலும் பக்தர்களின் வசதிக்காக கடையினை ஏற்படுத்தி இருக்கின்றனர்....ஒவ்வொரு மலை முடிவிலும் எதாவது ஒரு கடை இருக்கிறது.....கோலி சோடா கடையில் சோடா வாங்கி நிரப்பிக்கொண்டோம்...உப்பும் எலுமிச்சையும் கலந்த பானமாய்...அந்த நேரத்தில் தேவாமிர்தமாய் இருந்தது...என்ன விலை கொஞ்சம் அதிகம்...20 ரூபாய்...கொஞ்ச நேரம் அங்கு நின்று ஆசுவாசுப்படுத்திக்கொண்டோம்...
(புகைப்படங்கள் அனைத்தும் பகலில் எடுத்தவை...புனிதப்பயணம் முடிந்து திரும்பி வருகையில் எடுத்தவை..)

பயணம் தொடரும்....

நேசங்களுடன் 
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, March 14, 2013

அகஸ்தியர் அருவி - பொதிகைமலை, பாபநாசம், திருநெல்வேலி

அகஸ்தியர் அருவி…
நெல்லை அம்பாசமுத்திரம் சென்றபோது பாபநாசம் அருகே இருக்கும் அகஸ்தியர் அருவியில் எப்பொழுதும் தண்ணீர் வரத்து இருக்குமாம் என்று பாசக்கார பயபுள்ளங்க சொல்லவும் அங்கே செல்ல ஆசையாய் மனம் துடித்தது.சரி...போய் ஒரு விசிட் விட்டுட்டு வரலாம் என்று கிளம்பினோம்…
பாபநாசம் என்கிற ஊர் வர...... வழியிலேயே ஒரு சிவன் கோவில் நம்மை வரவேற்றது.கோவில் கோபுரம் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.அன்று விசேச நாள் போல…..ஏகப்பட்ட பக்தர்களின் கூட்டம்..தத்தம் பாவத்தை போக்க குவிந்து இருந்தனர்…
 
அந்த கோவிலை தாண்டி செல்லவும் பசுமை நிறைந்த வயல்வெளிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாய்.....இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் அடக்க ஒடுக்கமாய் கிராமத்து அம்மணிகள் கூட்டம்.....க…க…க..க.....கல்லூரிச்சாலை ஏதோ ஒரு தமிழ்க்கல்லூரி போல….அப்படியே கொஞ்சம் நோட்டம் விட்டுவிட்டு பயணித்தோம்…..மலைப்பாதை வரவேற்கிறது…..அருகிலேயே செக்போஸ்ட் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்………நிறைய எச்சரிக்கை போர்டுகள்……நம்மை மிரட்டியபடி புலிகளின் படங்கள்….
மலைப்பாதையில் பயணிக்க ஆரம்பித்தவுடன் இருபுறமும் பசுமை அன்னை தன் இயற்கையை போர்த்தியிருக்கிறாள்…மேலே இருந்து பார்க்கும் போது அருவி அழகாய் வழிந்து ஓடுவது மிக ரம்மியமாக இருக்கிறது..மலைப்பாதையில் இருந்து இடது பக்கம் பிரியும் ரோட்டில் இறங்க அருவிக்கு செல்லும் இடத்தினை அடைந்தோம்.
 
இயற்கை அன்னையின் மடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நீர்மின்தொகுப்பு இருக்கிறது. அதைத்தாண்டி சென்று கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தினோம்…...ஒற்றை ஆலமரம்…அதில் ஏகப்பட்ட நம் முன்னோர்கள்…அதிலும் சிங்கவால் குரங்குகள் அதிகம்…
அவைகளை ரசித்தபடியே அருவிக்கு சென்றோம்..பாறை முகடுகளில் தண்ணீர் வழிந்து கொண்டுருக்கிறது.பெண்களுக்கு என்று தனியாக உடைமாற்றும் வசதிகள் இருக்கின்றன.
 
 
 
அருவியில் நீர்வரத்து எப்பொழுதும் வந்து கொண்டே இருக்கிறது.வருடம் முழுவதும் நீர் வரக்கூடிய ஒரே அருவி இந்த அகஸ்தியர் அருவி…கொஞ்ச நேரம் அருவியின் அழகை ரசித்துவிட்டு கை நனைக்க அருவியை தொட்டபோது செம குளிர்ச்சி…..சில்லென்ற சாரலில் நனைந்தபடி அருவியின் அழகைப் பருகினோம்….சூழ்நிலை மிக ரம்மியமாக இருக்கிறது…ஆங்காங்கே…எண்ணை தேய்த்து குளித்தபடி ஆண்களும் பெண்களும்…..எலே…….இங்க பாருல…..என்கிற நெல்லைத் தமிழ் கேட்க சுவையாய் இருக்கிறது…
 
ஏற்கனவே குளித்துவிட்டு வந்தபடியால் அகஸ்தியர் அருவியில் குளிக்கவில்லை…கைகால் முகம் அலம்பிவிட்டு மேலேறினோம்.
அருவிக்கு அருகிலேயே காவல் தெய்வமாய் ஒரு விநாயகப்பெருமான்....அவருக்கு ஒரு வருகைப்பதிவை உறுதி செய்துவிட்டு கிளம்பினோம்...
அங்கே இருக்கிற பாறை குழிகளில் மீன்களின் ராஜ்ஜியம் இருக்கோ இல்லையோ ஆனால் தவளையின் தலைப்பிரட்டைகள் நிறைய இருக்கிறது….
அகஸ்தியர் அருவிக்கு செல்லும் முன் வலதுபக்கம் ஒரு செங்குத்தான படிகள் இருக்கின்றன…அது கல்யாண தீர்த்தம் எனப்படும் இடமாகும்…(அதை அடுத்தபதிவில் பார்க்கலாம்...)
நல்ல ஒரு ரம்மியமான இடம்......சுற்றிலும் பசுமை .பசுமை…தாமிரபரணி தண்ணீர் உருவாகும் அகத்தியமலை அங்கிருந்து வந்து விழும் அகஸ்தியர் அருவி என அழகாய் இருக்கிறது…
நல்ல அமைதியும் இறைவன் அருளும் பெற சிறந்த இடம்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

Thursday, March 7, 2013

கள்ளுக்கடை ஓரத்திலே....திருச்சூர், கேரளா

 கடவுளின் தேசம் - சாரி குடிமகன்களின் தேசம் - கேரளா
கள்ளுக்கடை ஓரத்திலே...திருச்சூர், கேரளா....
 
எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.

ம்ம்ம்...இப்படிலாம் சிலைடு எல்லாம் போடற அளவுக்கு என் நிலைமை ஆயிடுச்சே.....இதை நினைச்சாத்தான் ரொம்ப வருத்தமா இருக்கு....இதுக்கே இன்னொரு வாட்டி கேரளா போகனும் போல......
 
போன மாசம் கோவிலுக்கு போலாம்னு கேரளா திருச்சூர் போய்ட்டு அப்படியே என்னோட பக்தி பயணத்தை முடித்துவிட்டு நம்ம பயணத்தை எங்காவது ஆரம்பிக்கலாம் அப்படின்னு நம்மள கூட்டிட்டு போன சேட்டன் கிட்டே அடிபொளி கள்ளும் , பீஃப்மும் எவிட கிட்டும் என்று மலையாளத்தில் கேட்க (ஏதோ கொஞ்சம் கொஞ்சம் மலையாளம் அறியும் ஞான் ..ஹி ஹிஹி ) .....வண்டி போய் நின்ன இடம் கள்ளுக்கடை..
 
 
 
அந்த காலை வேளையிலும் நம்மோடு போட்டி போட ஒரிரு பங்காளிகள்...அந்த இடத்தின் சூழ்நிலை மிக ரம்மியமாக இருந்தது..ரோட்டோரத்தில் கடை...கடைக்கு பின்புறம் வாழை மற்றும் தென்னந்தோப்பு...
தகரக்கொட்டாயில் நம்ம கடையும் கள்ளுக்கடைக்கே உண்டான மணத்துடன் இடமும் , ஆங்காங்கே இப்பவோ அப்பவோ என தள்ளாடிக்கொண்டிருக்கிற மர பெஞ்ச்சும் போடப்பட்டிருக்கிறது...... 
இன்னும் கூட்டம் கூடவில்லை...ஒருவேளை நம்ம பங்காளிக ரொம்ப லேட்டாத்தான் வருவாங்களோ....(இதே நம்ம ஊருல ஷட்டர் முன்னாடி தவமாய் தவம் கிடப்போம்....)ஒரு சில பேர் மட்டுமே மலையாளத்தில் தீவிர ஆலோசனையில்...
 விலைப்பட்டியல் பார்த்தேன்..ரொம்ப கம்மிதான்..கிங் ஃபிஷர் பீர் பாட்டிலில் நிரப்பப்பட்டு இருக்கிறது கள்ளு.அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிற பாட்டில்களை பார்க்க பார்க்க மனம் குதூகலித்தது...நமக்கு போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து என்பதால்....ஒரே ஒரு கள்ளு பாட்டில் வாங்கி ஆரம்பித்தேன் கச்சேரியை...கூட துணைக்கு பீஃப் கறியும்....
ஏகப்பட்ட சைட் டிஷ்கள்..கள்ளுக்கடையில் மட்டுமே கிடைக்கும்..மத்தி, பொரிச்ச மீன், கப்பா, போர்க், பீஃப், ஊறுகாய் என பல்வேறு வெரைட்டிகள்..நமக்கு ரொம்ப பிடிச்சது மீனும் பீஃப் தான்..மீன் சூடாக வேறு இல்லை..அதனால் மீன் சாப்பிடவில்லை..அதனால் பீஃப் மட்டுமே...இரண்டும் செம டேஸ்ட்...கொஞ்சம் கொஞ்சமாய் கள்ளு காலியாக மிதமான நிலைக்கு மனம் நிறைந்து போனது....
விலையும் கம்மிதான் ..650 மிலி 40 ரூபாய் தான்...இன்னும் அதிகம் சாப்பிட ஆசைதான்...அதிகமாய் சாப்பிட்டால் அடிக்கிற வெயிலில் வயிற்றுக்கு உபாதை ஏற்படுத்திவிடும் என்ற அபாய காரணத்தால் ஒரு பாட்டிலோடு நிறுத்திவிட்டேன்..(இல்லேனா எப்போ திரும்பி வர்றது கோவைக்கு...அப்புறம் அங்கேயே ரூம் போட்டு ஆரம்பிக்கனும் மீண்டும்...)

 குடிமகன்களின்
தேசத்தில்
நானும்
ஒரு
அரசனாகவே
இருக்க விரும்புகிறேன்.

இதுக்கு முன்னாடி போன அனுபவம் குடிமகன்களின் தேசம்

 
கிசு கிசு : மது உடலுக்கு தீது. ம்ம்ம்ம்ம்..இப்படி எல்லாம் சென்சார் போட வேண்டி  இருக்கு..அப்புறம் இதை படித்து விட்டு உங்கள் கை அரித்தால் கம்பெனி பொறுப்பாகாது....

 
நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...