Showing posts with label கரம். Show all posts
Showing posts with label கரம். Show all posts

Monday, January 4, 2021

கரம் – 40

ஆச்சரியம்:

        சமீபத்தில் நாமக்கல்லில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தபோது வரும் வழியில் திருச்செங்கோட்டில் நம்ம வண்டி மக்கர் செய்ய ஆரம்பித்து விட்டது.பேட்டரிக்கு திடீரென்று பவர் செல்லாததால் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டது.கரெக்டாக திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் பேட்டரி கடைக்கு அருகிலேயே நின்றுவிட்டது.நல்லவேளை.பக்கத்திலேயே இருந்ததால் கவனிக்க வசதியாக இருந்தது.மெக்கானிக்கிடம் சொல்லி பேட்டரியை சரி பண்ண சொல்லி விட்டு அருகில் இருந்த கார் பட்டறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.அப்பொழுது டாடா நானோ கார் ஒன்று சர்வீஸுக்காக நின்று கொண்டிருந்தது.எதேச்சையாய் பார்த்ததில் அதன் பின்பக்க கதவில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.பார்த்ததில் ஆச்சர்யமும் கொஞ்சம் அதிர்ச்சியும் ஆனோம்.வீட்டு கதவுக்கு தாழ்ப்பாள் மாட்டி பார்த்திருப்போம்.ஆனா காருக்கு தாழ்ப்பாள் போட்டதை இப்போதான் பார்க்கிறோம்.நல்லவேளை டாடா ஓனர் பார்க்கல…பார்த்து இருந்தா இந்நேரம் இந்த கார் தயாரிக்கிற பிசினஸையே விட்டுட்டு ஓடி இருப்பார்.


         நம்மூர்ல தான் இப்படி பட்ட அறிவாளிங்க இருக்காங்க.எதையாவது எடக்கு மடக்கா செய்யுறது, ஒரு பொருளோட மதிப்பு தெரியாம அதை சேதாரம் பண்றது இப்படி….இப்படி பட்ட ஆளுங்க இருக்கிறதால தான் நமக்கும் நல்ல கண்டெண்ட் கிடைக்குது.

வாவ்…..வாட் எ ஐடியா சேட்ஜி…..

அதிசயம் :

கோவை  கவுண்டம்பாளையத்தில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது.ஹவுசிங் யூனிட்டில் ஆரம்பித்து கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வரைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் பாலம் பணி கொஞ்சம் ஆமை வேகத்தில் நடந்தது.இப்பொழுது மிகவும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தூண்கள் அமைக்கும்  பணி அனைத்தும் முடிந்து இப்பொழுது இரு தூண்களுக்கு இடையில் செண்ட்ரிங்க் அடித்து உத்திரம் (BEAM ) அமைப்பதற்காக கான்கீரீட் வேலை நடக்கிறது.இப்பொழுது வரை 6 பில்லர்கள் வரை பீம் வேலை முடிந்து விட்டது.மற்றவை ஒவ்வொன்றாக போய்க்கொண்டிருக்கிறது.பாலம் கட்டுமான பணி முடிய எப்படியும் இன்னும் ஆறு மாதங்கள் ஆகிவிடும்.அதற்குள் ஏதாவது ஒரு கட்சி ஆட்சியில் அமர்ந்து விடும்.அதனால் தான் என்னவோ சீக்கிரம் பில் பாசாக வேண்டி கட்டிக்கொண்டிருக்கும் பாலத்திற்கு அம்மா பெயிண்ட் ...சாரி...பச்சை கலர் பெயிண்ட் அடித்து கொண்டிருக்கின்றனர்.




பாலமே இன்னும் முடியாத நிலையில் அவசர அவசரமாக பெயிண்ட் அடித்து அரசாங்கத்திடம் பணம் பெறும் முயற்சியில் இருக்கின்றனர் காண்ட்டிராக்ட் காரர்கள்.பாலம் கான்கிரீட் போட்டு சரியான நாட்கள் வரை கியூரிங் விடுகிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.அதற்குள் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர்

நடப்பு ஆட்சி முடிய இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் உடனடியாக காந்திபுரம் முதல் ஏர்போர்ட் வரை மேம்பாலம் கட்ட அனுமதி அளித்து இப்பொழுது அங்கும் வேலை பிசியாக போய்க்கொண்டிருக்கிறது.

கோவையில் ஏகப்பட்ட பாலங்கள் முடிவுறாமல் இன்னமும் இழுத்துகொண்டிருக்கிறது.கவுண்டர்மில்ஸ் பாலம் இன்னும் தொடங்காமல் இருக்கிறது.இத்தனைக்கும் கவுண்டம்பாளையம், கவுண்டர்மில்ஸ் இரண்டும் ஒரே சமயத்தில் ஆரம்பித்தனர்.கவுண்டம்பாளையம் பகுதியில் 30% பணிகள் முடித்து விட்டனர்.ஆனால் அங்கோ போட்டது போட்டபடி இருக்கின்றது.உக்கடம் மற்றும் ராமநாதபுரம் பாலமும் இன்னமும் முடிவுறாமல் இருக்கிறது.

முழுதாய் ஒவ்வொரு பாலத்தையும் முடித்துவிட்டு பின் புதிய பாலங்களை ஆரம்பிக்கலாம்.ஆனால் எதையும் முடிக்காமல் கோவை முழுவதும் தோண்டி வைத்து நகருக்குள் மாபெரும் வாகன நெரிசலை உருவாக்கிவிட்டிருக்கின்றனர்.

அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக மக்களை வாட்டி வதைக்கின்றனர்.இன்னும் மெட்ரோ ஆரம்பிக்க வில்லை.அது வந்தால் இன்னும் கந்தரகோலம் தான் கோவை....

சீக்கிரம் அனைத்து பாலங்களும் முடிந்து அழகான கோவையை பார்க்க வேண்டும்.

அனுபவம் :

                      கரூர் செல்லும் போது வெள்ளக்கோவில் பகுதியில் ஒரு டீக்கடையில் டீ குடிக்க வண்டியை நிறுத்தினோம்.கடைக்காரரிடம் டீ சொல்லிவிட்டு திரும்பி பார்த்தால் கோலி சோடா..உடனே டீ யை கேன்சல் செய்து விட்டு கோலி சோடாவினை எடுத்து பெருவிரலை உள்ளே விட்டு ஒரு அழுத்து அழுத்தினால் கேஸ் பீச்சி அடிக்க,கோலி குண்டு உள்ளே போக, பாட்டிலில் இருந்த கலரின் வாசம் வெளிவந்து மூக்கை துளைக்க, எடுத்து வாயில் வைத்து குடிக்க, சிறுவயதில் கோலி சோடா குடித்த ஞாபகங்கள் வந்து போனது.கலரின் இனிப்பும், கேஸ் நிறைந்த தண்ணீரும் நாவினை நனைத்து சுவை நரம்புகளை நடனமாட வைத்து தொண்டைக்குள் இறங்கி வயிற்றினை நிரப்பியது.சிறிது நேரத்திலேயே கலரின் வாசத்தோடு பெரிய ஏப்பத்தினை கொடுக்க மனம் ஆனந்தமானது.கோலி சோடா குடிக்கும் போது சீக்கிரம் தீராமல் இருக்க பாட்டிலை திருப்பி, கோலிக்குண்டினை பாட்டிலில் உள்ள அந்த அடைப்பினில் குண்டினை வைக்காது, குண்டுடன் கலரை உறிஞ்சி குடிக்கும் போது இருக்கிற ஆனந்தம் இருக்கே  அதை அனுபவித்தால் தான் தெரியும்.அவ்வப்போது கோலி குண்டு பாட்டிலில் உரசி உரசி ஒரு சத்தம் வரும் பாருங்க...கேட்க அது அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.



                    இப்பொழுது விலையும் ரூ 10. என இருக்கிறது.ஒரு ரூபாய் இருந்த போது குடித்தது.பன்னீர் சோடா மற்றும் ஜிஞ்சர் என வெரைட்டியாக இருந்தது.வயிற்று வலியா...ஜிஞ்சரை குடித்தால் போதும் .விருந்தாளிகள் வருகிறார்களா, கலர் இருந்தால் போதும்.இப்படித்தான் ஒருகாலத்தில் கோலோச்சியது கோலி சோடா.பன்னாட்டு கம்பெனிகளின் வருகையில் இப்போது தொலைந்து விட்டது.ஆனாலும் ஒரு சில பேர் இன்னும் இதை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

நேசங்களுடன்

ஜீவானந்தம்

 


இன்னும் கொஞ்சம்...

Friday, September 11, 2020

கரம் - 39 - ஆன்லைன் கிளாஸ் பரிதாபங்கள்

"வீடியோ ஆஃப் பண்ணுங்க "

"ஓகே மிஸ்"

"எல்லாரும் ஒரே டைம்ல பேசாதீங்க "

"பவன்..லைன்ல இருக்கியா "

"எஸ்.மிஸ்"

"ஹலோ "

" லைன்ல இருக்கீங்களா "

"எஸ் மிஸ் "

"இப்ப வேற யாரு ஜாய்ன் பண்ணது"

"சந்தோஷ் மிஸ்"

"வேற யாரு இருக்கா "

"மனிஷா இருக்கீங்களா."

"வீடியோ எல்லாம் கட் பண்ணிக்கோங்க "

"லிசன்..லிசன்..யாரும் பேச வேணாம்"

                    இப்படித்தான் ஆன்லைன் கிளாஸ் இன்று ஆரம்பமாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்பு படிக்கும் என மகனுக்கு இன்று தான் ஆரம்பம். அனைத்து குழந்தைகளையும் ஒருங்குபடுத்தவே அரைமணி நேரம் ஆகிறது.

                        வீடியோவை ஒரு சில குழந்தைகள் ஆன் பண்ணுவதால் அவர்கள் அங்கே வளைந்தும் நெளிந்தும் அமர்ந்து கொண்டிருக்கின்றனர்.கூடவே பெற்றோர்கள்...

                                    என் பையனோ வீடியோவை ஆஃப் பண்ணிவிட்டு ஓடி ஆடி கொண்டிருக்கிறான்.இடையிலேயே இரண்டு மூன்று தோசையை சாப்பிட்டு விட்டு தெம்பாக உலாவிக் கொண்டிருக்கிறான்.போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டு அங்குமிங்கும் திரிகிறான்.ஒரு சில குழந்தைகள் மட்டும் கண்ணும் கருத்துமாய் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இடையிடையே வீட்டில் ஏதாவது ஒரு சத்தம்.மிஸ் சொல்லுவதும் குழந்தைகள் சொல்லுவதும் இடையிடையே கிராஸ் ஆகி மாறி மாறி பேசிக் கொண்டே இருக்கின்றனர்.

கோரஸாய் ஒலிக்கிறது.

இப்படித்தான் போகிறது..

ஆன்லைன் அலப்பறைகள்
இன்னும் கொஞ்சம்...

கரம் - 38 கொரோனோ பாதிப்புகள்

இப்ப இருக்கின்ற வேலை இல்லாத நிலைமையில், தத்தம் பொருளாதார பாதிப்பின் சுமையினை ஈடுகட்ட நிறைய பேர் உணவுத்தொழிலாக திடீர் ஹோட்டல்கள், வீட்டு சமையல்கள், ஹோம்மேட் டெலிவரி என ஆரம்பித்திருக்கின்றனர்.நல்ல விசயம் தான்.ஆனால் எதை செய்து கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்று நினைத்து விட்டார்கள் போல..

நம் ஆபீசுக்கு பக்கத்து தெருவில் ஒரு கடைக்காரர் பிட் நோட்டிஸ் கொடுத்து ஆரம்ப சலுகை விலையாக சிக்கன் பிரியாணி, பெப்பர் சிக்கன், சில்லி சிக்கன் என எது வாங்கினாலும் ரூ.50 என விளம்பர படுத்தினார். முக்கியமாய் முஸ்லீம் அன்பரோட கடை அது.கொரோனோ பரவல் காரணமாக இப்பொழுது நான் எங்கும் வெளியே செல்வதில்லை. வீட்டிலிருந்தே மதிய உணவையும் கொண்டு வந்து விடுகிறேன்.அந்த நாளன்று அந்த பக்கமாய் போன நம் சூப்பர்வைசர் இந்த பிட் நோட்டிசை கண்டதும் போன் அடிக்க, சரி டேஸ்ட் பார்க்கலாம், நாமும் எவ்வளவு நாள்தான் வீட்டுச்சோறையே சாப்பிடுவது கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பார்ககலாமே என பெப்பர் சிக்கன் வாங்கி வா என சொல்ல, பையனும் வாங்கி வந்தான்.

                        பிளாஸ்டிக் டப்பாவில் பேக் பண்ணி கொடுத்திருந்தார்கள்.ஓபன் பண்ணி பார்த்தால் எந்த வித மணமும் இல்லை.சிக்கனை வேக வைத்து மிளகு பொடி என்கிற பெயரில் காரமில்லாத ஏதோ ஒரு தூளில் பிரட்டி வைத்திருக்கின்றனர்.சிக்கனும் ஏதோ கடமைக்கு வெந்திருக்கும் போல.

                                    உப்பு உரைப்பு இல்லை.மசாலா வாசனை இல்லை.மிளகுப்பொடியும் மரத்தூளை போல இருக்க, வாயில் வைத்தவுடன் துப்பத்தான் தோன்றியது.அப்படியே எடுத்து வெளியே கொட்டிவிடு தம்பி என்று சொல்ல அது உடனே குப்பைக்கு தான் போனது.பாய் வீட்டு கடை சரி டேஸ்ட் நல்லா இருக்கும்னு வாங்கியது தப்பாக போய்விட்டது.நல்லவேளை பிரியாணி, இன்னும் மற்ற அயிட்டங்கள் எதுவும் வாங்க வில்லை.இந்த மகா மோசமான உணவுக்கு பிட் நோட்டிஸ் வேறு.அதிலும் வீட்டு விசேசங்களுக்கு ஆர்டரின் பேரில் சமைத்து தரப்படுமாம்...

பிட் நோட்டிசை பார்த்து எத்தனை பேர் வாங்கி இருப்பார்கள்..முதலில் நன்கு சுவையாக சமைக்க கற்றுக் கொண்டு இந்த மாதிரி கடைகளை ஆரம்பியுங்கள்.சமைக்கும் போதாவது கொஞ்சம் டேஸ்ட் பாருங்கள்.ஏனோ தானோ என்று சமைத்து வாடிக்கையாளர்களின் உடலை கெடுக்காதீர்கள்.காசையும் கொடுத்து வியாதியையும் வாங்க வேண்டியிருக்கிறது.நம்ம சூப்பரிடமும் சொன்னேன்.. போய் கடைக்காரரிடமே சொல்..மிக மட்டமான சுவை என்று.. அவனும் போய் சொல்லிவிட்டு வந்திருக்கிறான்...ரெடிமேட் பதில் ஒன்றை சொல்லியிருக்கிறார்கள்.

            இந்த கொரோனோவை விட இவர்கள் தயாரிக்கும் உணவு மிக மோசமாக இருக்கிறது..

இன்னும் கொஞ்சம்...

Monday, May 6, 2019

கரம்- 35


கரம் - 35
JUNE - மலையாளம்
இளம்பிராயத்தில் பள்ளியில் ஏற்படும் காதலை, நட்பை மிக அழகாய் சொல்லி இருக்கும் திரைப்படம்.செம இண்ட்ரஸ்டிங்.ஒவ்வொரு காட்சியும் நம்மை ரசிக்கவைக்கிறது.
பள்ளியில் ஆரம்பித்து, கல்லூரியிலும் தொடங்கி. பின் வேலைக்கு வந்த பின்னும் தொடரும் காதல் என மூன்று காலகட்டத்தையும் கவிதையாய் காட்சிப்படுத்தி இருக்கிறது.இறுதியில் கண்கலங்க வைக்கிறது.ஜூன் ஆக நடித்த பெண் காட்சிகளில் மிளிர்கிறார்.
நடித்த அனைவருமே சிறப்பாய் நடித்திருக்கின்றனர்.ஒவ்வொரு கேரக்டரும் படம் முழுவதும் ரசிக்க வைத்திருக்கின்றனர்.பள்ளியில் பிரிந்த அனைவரும் இறுதியில் ஒன்று சேரும் போது நம்மை கண்கலங்க வைக்கின்றனர்.இந்தப் படம் மலரும் நினைவுகளை கொண்டு வரும்.
பார்க்க வேண்டிய படம்.


கரூர் ஸ்பெசல்:
திருவிழா, கிடாவெட்டு மற்றும் இன்னபிற நிகழ்வுகளில் ஆட்டுக் கறிக்குழம்பு வைப்பாங்களே தண்ணி மாதிரி...சாதக்குவியலில் குழம்பை ஊத்தினா அப்படியே ஓடும் பாருங்க சாதத்துல ஒட்டாம அந்த மாதிரி..குழம்புல தேங்காய் துருவல்கள் மிதந்தும், சுத்துக் கொழுப்பும் மிதந்தும் இருக்குமே..அந்த மாதிரி....எலும்பு குழம்பு ரசம் மாதிரி..
நல்ல காரசாரமா மிகுந்த சுவையோடு இருக்கிறது இங்கே ஒரு ஹோட்டலில்.சாப்பாட்டை போட்டு குழம்பை ஊத்தி பிசைஞ்சு அடிச்சா அது பாட்டுக்கு போய்ட்டே இருக்கு..
தொண்டைக் குழி வரைக்கும் தின்னு முடிச்சப்புறம் தான் தெரியுது, அய்யயோ..பேண்ட் பட்டன், சட்டை பட்டன்லாம் தெறிச்சிடும் போல..
குழம்பு அவ்வளவு டேஸ்ட்.இலையில் தெறித்து ஓடினாலும் சோற்றில் பாத்திகட்டி பிசைந்து அள்ளி சாப்பிடும் போது கைவிரல்களில் ஒழுகுமே..வாவ் வாட் ஏ ருசி...
ரொம்ப சின்ன கடைதான்.அடிக்கிற வெயிலில் அனல் காத்து தான்.ஆனாலும் அங்க காரசாரமா சாப்பிட்டா வேர்த்து ஒழுகும் பாருங்க...


அம்மன் மெஸ், சிக்னல் ரவுண்டானா டெல்லி ஸ்வீட்ஸ் அருகில் கரூர்


ஸ்வீட்ஸ்டால்:
ஒரு போர்டு இல்ல.ஒரு விளம்பரம் இல்ல..ஏன் ஒரு ஷோகேஷ் கூட இல்ல..ஆனாலும் இங்க தயாரிக்கிற இனிப்புகளுக்கு மவுசே தனி.ஒரு சின்ன டீக்கடை தான்.ஆனால் ஜிலேபி, மைசூர்பா, பால்கோவா, மிக்சர் என அனைத்து வகைகளும் சுவைபட கிடைக்கும்.ஜிலேபி இருக்கே..அப்படியே பிய்ச்சி வாயில் வைத்தால் போதும்.
ஜீராவோடு வாயில் கரையும்.மைசூர்பா இருக்கே..பொன்னிறமா இருக்கும்.
மொறுமொறுவென இருப்பதை கடித்தால் சுவைபட கரையும்..

போலீஸ் ஸ்டேசன் அருகில், சிஎஸ்ஐ பள்ளி எதிரில்.. கரூர்



கரூர் பக்கம் போனீங்கன்னா ஒரு எட்டு போய்ட்டு வாங்க...

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Monday, February 4, 2019

கரம் - 34 - கேரள ஸ்பெஷல் - கண்ணூர் - முட்டைமாலை - MUTTAMALA, கல்லுமக்காயா - MUSSELS

கேரளத்தின் ஸ்பெஷல்:

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பையனூர் சென்றிருந்த போது வித்தியாசமாக இருந்த இந்த உணவுப்பண்டத்தினை ருசித்ததில் மிக நன்றாகவே இருந்தது.பெயரும் அதே போல...

முட்டமால.. முட்டை மாலை.
முட்டையின் மஞ்சள் கருவினை நூடுல்ஸ் மாதிரி செய்து, வெள்ளைக் கருவினை பனீர் மாதிரி செய்து தரப்படும் ஒரு இனிப்பு பண்டம். நன்கு சுவையாகவே இருக்கிறது.முட்டையின் மணம் கொஞ்சம் கூட இல்லை.ஆனால் இனிப்போடு நன்றாக இருக்கிறது.இது ஒரு ஹோம் மேட் தயாரிப்பாகும்.ஸ்வீட் ஸ்டால்களில் கிடைக்கிறது.




யூ டுயூப் களில் இதன் செய்முறை கிடைக்கிறது.

கல்லுமக்காய் - (MUSSIL)
தலச்சேரியின் பிரபலமான கடல் உணவு கல்லுமக்காய்.பாறை இடுக்குகளில் கிடைக்கும் இந்த கல்லுமக்காய்களை கிளிஞ்சல்கள், சிப்பிகள் என்றும் சொல்லலாம்.கால்சியம் சத்து நிறைந்த இந்த கல்லுமக்காய் சாப்பிடுவதற்கு மிக சுவையாக இருக்கும்.கிலோ ரூ 100 டூ 150 வரை விற்கின்றனர்.இந்த கல்லுமக்காயை எண்ணையில் பொரித்தும் அல்லது நன்கு வறுவல் செய்தும் சாப்பிடலாம்...எந்த முறையில் செய்தாலும் சுவை அள்ளுகிறது.






செய்முறை :
கல்லுமக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்க வேண்டும்.பாத்திரத்தில் நீர் ஊற்றக்கூடாது.வேக வைக்கும் போது கல்லுமக்காயில் உள்ள நீர் வெளியேறும்.ஒரு ஐந்து நிமிடம் அடுப்பில் இருந்தால் போதும்.பின் எடுத்து அதை இரண்டாக பிளந்து உள்ளே இருக்கும் சதைப்பகுதியை எடுத்து சுத்தம் செய்து, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் போடு பிரட்டி, பின் பொடியாக நறுக்கின வெங்காயம், தக்காளியோடு வதக்கி, காரத்திற்கு கொஞ்சம் மிளகாய் இட்டால் போதும்.உப்பு தேவைப்படின் சேர்த்துக்கொள்ளலாம்.தேங்காய் எண்ணையில் வதக்கும் போது அதன் வாசம் இருக்கிறதே....ஆஹா...சுவையான கல்லுமக்காய் ரெடி.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, October 25, 2018

கோவை மெஸ் - சஃபா பிரியாணி, பள்ளப்பட்டி, PALLAPATTI, KARUR


                                   இரண்டு நாட்களுக்கு முன்பு பழனி சென்றுவிட்டு கரூர் வந்தேன்.வரும் வழியில் பள்ளபட்டியில் பிரியாணி சாப்பிடலாம் என்று அங்கு வண்டியை திருப்பினேன்.முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஊர் என்பதால் பிரியாணியும் சுவைமிக்கதாக இருக்கும் என்று நம்பி(?)ப் போனேன்.பள்ளபட்டியில் ஒருவர்க்கு இரண்டு பேராய் விசாரித்தேன்.பிரியாணி எங்கு நன்றாக இருக்கும் என்று.இருவரும் சொல்லி வைத்தது போல ஒரே கடையை சொன்னனர்.அந்த ஊரில் இருப்பதே மொத்தம் மூன்றுகடைகள் தான் போல.மூன்றில் இது நன்றாக இருக்கும் என்று சொல்லியதால் அங்கு போனேன்.
                                             கடை நல்ல கூட்டமாகத்தான் இருந்தது.குல்லா போட்டா பாய்களில் ஒருவர் கல்லாவிலும், ஒருவர் சப்ளையிலும் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தனர்.(முஸ்லீம் கடையாமாம்..)கடை முன்பே தோசைக்கல்லில் புரோட்டா வெந்து கொண்டிருந்தது.காடை, சிக்கன் எல்லாம் மசாலாவில் ஊறி எண்ணையில் பொறிவதற்கு காத்துக் கொண்டிருந்தன. சின்ன கடைதான்.பதினைந்து பேர் அமரக்கூடிய இடவசதி.அனைத்து டேபிள்களும் நிரம்பியிருந்தன.அப்போது காலியான ஒரு சேரில் அமர, பிரியாணியை ஆர்டரிட்டேன்.
                                                   பெரும்பாலோனோர் புரோட்டா சிக்கன் குருமாவை காலி செய்து கொண்டிருந்தனர்.பிரியாணி வந்தது.சம்பா அரிசிதான் அரைகுறை வேக்காட்டில்.
பிரியாணிக்குண்டான மணமும் குறைவுதான்.சிக்கன் துண்டும் மிருதுவற்று இருந்தது.அதற்கு கொடுத்த சிக்கன் குருமாவும் சரியில்லை.கொஞ்சம் வரைக்கும் சாப்பிட்டேன்.முடியவில்லை.அப்புறம் கடைக்காரை கூப்பிட்டு அரிசியின் பதத்தை காட்டிவிட்டு, நம்பி வந்தேன் நல்லாவே இல்லீங்களே என சொல்லி விட்டு பணம் தந்து விட்டு கிளம்பினேன்.


                           அறுபது ரூபாய்க்கு என்ன ஹைதராபாத் பாரடைஸ் பிரியாணியா தரமுடியும்.விலை குறைச்சலா இருந்தாலும் சுவையை தூக்கலா தரமுடியும்.ஆனா விலையும் குறைவு டேஸ்டும் சுத்தமும் இல்லாம இருக்கு.மற்ற இரு கடைகளை முயற்சிக்கலாமா என யோசித்தேன்.முன்பே இந்த கடை நன்றாக இருக்கும் என்று சொன்னதை நம்பி வந்ததால் இந்த நிலைமை.அந்த கடைகள் எப்டியிருக்குமோ..எதற்கு ரிஸ்க்..பேசாமல் கரூர் போய் கரம் சாப்பிட்டுக் கொள்ளலாம் என நினைத்து வண்டியை கிளப்பினேன்.முஸ்லீம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதி..ஒரு பிரியாணி கூட டேஸ்டா கிடைக்க மாட்டிக்குதே...பீஃப் கூட கிடைக்கல அங்கு...தள்ளுவண்டில ஜம்ஜம் பிரியாணின்னு ஒன்ணு நின்னுச்சு..பீஃப் வறுவல் கிடைக்கும் போட்டிருந்தது. பேசாம அங்கயும் ஒரு கை பார்த்திருக்கலாம்...
கடைசியா கரூர் வந்து முட்டை கரம் டேஸ்ட் பார்த்ததில் தான் மனமும் வயிறும் கொஞ்சம் ஆசுவாசமடைந்தது.



நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, September 5, 2018

கரம் - 33

                        சமீபத்தில் கரூர் சென்றிருந்தேன்.முன்பெல்லாம் குறிப்பிட்ட ஏரியாக்களில் மட்டும் தான் கரம் கடை இருக்கும்.ஆனால் இப்பொழுதோ எல்லா சந்து பொந்துகளிலும் ஆரம்பித்து இருக்கின்றனர்.ஒரு தெருவை எடுத்துக்கொண்டால் குறைந்த பட்சம் மூன்று நான்கு கடைகள் இருக்கின்றன.எந்தக் கடையில் சாப்பிடுவது, எந்த கடையை விடுவது என்கிற குழப்பம் ஏற்படுகிறது.அப்படியே தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் சுவை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.ஐந்து ரோடு மக்கள் கரம் கடையில் சட்னி வகைகள் மட்டும் நான்கு வெரைட்டிக்கும் மேல் வைத்திருப்பார்.வித விதமாய் செட் கரம் சாப்பிடலாம்.மற்ற பக்கம் ஒரே ஒரு சட்னியை வைத்துக் கொண்டு கரம் கடையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
                                    கரம் என்பது பொரி, கேரட் பீட்ரூட், கொஞ்சம் முறுக்கு, கடலைப் பருப்பு,சட்னி சேர்ந்தது தான்.இதனுடன் முட்டை, சமோசா, குடல் அப்பளம் சேர்த்தால் தனித்தனி கரம் வகைகள்.
முட்டை கரம் எப்பவும் ஸ்பெஷல் தான் எனக்கு.சாப்பிட சுவையாக இருக்கும்.இதை சாப்பிட்டு விட்டு ஒரு செட்டு ஒன்று சாப்பிட வேண்டும்.தட்டுவடையோடு கேரட் பீட்ரூட் கலந்து சட்னியும் சேர்த்து நம் பல்லில் அரைபடும் போது ஏற்படும் சுவை இருக்கிறதே ஆஹா....செம...



நான் சாப்பிட்ட கரம் கடையில் உருண்டை வகைகள் வைத்திருந்தனர்.கம்பு, கொள்ளு, ராகி, எள், கோதுமை, பாசிப்பருப்பு என பலவகைகள்.ஒவ்வொன்றும் செம டேஸ்ட்.விலை ரூ 7.

ஜிலேபி மீன்: 
காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்திருப்பதால் மீன்கள் அதிகம் கிடைக்கும் என்று பார்த்தால் மீன் வரத்தே இல்லை.ஒரு சில பேர் தான் ஆற்றில்  மீன் பிடிக்கின்றனர்.அப்படித்தான் கடந்த வெள்ளியன்று எங்கள் ஊரில் மீன் பிடித்து கொண்டு வந்திருந்தனர்.அனைத்தும் ஜிலேபி மீன்.வாங்கி நன்கு சுத்தம் செய்து மசாலாவில் ஊறவைத்து தோசைக்கல்லில் சுட்டு சாப்பிட்டால் செம டேஸ்ட்.





கொஞ்சம் மஞ்சள் தூள். மிளகாய்த்தூள், கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட், கொஞ்சம் உப்பு சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் கழித்து தோசைக்கல்லில் போட்டு பொரித்து சாப்பிட்டால் சுவையான மீன் வறுவல் ரெடி...கடையில் விற்கிற மசாலாக்களை ஊருக்கு போனால் மட்டும் உபயோகிக்கவே மாட்டோம்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Tuesday, April 17, 2018

கரம் - 31

இனிய வணக்கங்கள்
இந்த வார நிகழ்வுகளின் தொகுப்புகள் :

டக்கரு டக்கரு : வீடியோ 
விளம்பர விமர்சனம் :
                      சரவணா ஸ்டோர் சூப்பர் ஸ்டாரான அண்ணாச்சியின் சமீபத்திய விளம்பர வீடியோ கொஞ்சம் கலர்புல்லாகவே இருக்கிறது.டக்கரு டக்கரு எனத் தொடங்கும் பாடல் கொஞ்சம் வசீகரிக்கிறது.குழந்தைகள் மற்றும் ஃபாரின் அம்மணிகளுடன் இவர் ஆடும் ஆட்டம் ( நடை ) நம்மை ஈர்க்கிறது.ஒரு பள்ளி டீச்சர் குழந்தைகள் உயிர் மெய் எழுத்துக்களை எளிதில் புரிந்து கொள்ள கண்டறிந்த ஒரு ட்யூனை இதில் அழகாய் பொருத்தி இருப்பது நன்றாக இருக்கிறது.
              குழந்தைகள் இதை அதிகம் உச்சரிப்பார்கள் என்பது நிச்சயம்.அந்த வரிகள் வரும் இடத்தில் அழகான வயது முதிர்ந்த குழந்தைகளை கொண்டு காட்சி அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
                        அதுமட்டுமின்றி அண்ணாச்சி இரண்டு எளிய ஸ்டெப் களை போட்டு அசத்தியிருக்கிறார்..
                   வெளிநாட்டு கவர்ச்சிக்கன்னிகள் சுற்றிலும் நடனமாட இவர் தல நடை நடப்பது சிறப்பு...அதிலும் மெயின் ஸ்டெப் ஆனது போட்டிருக்கும் உடையினை பிடித்து கொண்டு கைகளை அசைப்பது ஆண்களின் பேச்சுலர் வாழ்வில் அரங்கேறி கைரேகை அழிந்து போன ஒரு சிறப்பான மூவ்மென்டை காப்பி அடித்திருப்பதும் தெரிகிறது.. மொத்தத்தில் இந்த விளம்பர உலகில் அண்ணாச்சியின் இடத்தை யாராலும் அசைக்க முடியாது.பார்க்க நன்றாகவே இருக்கிறது..எனிவே இந்த கோடை விடுமுறையை சரவணா ஸ்டோரில் கொண்டாடுவோம்.. வெயிலில் இருந்து நம்மை காப்போம்..


ஆசிஃபா :
மனித மிருகங்கள் உலாவும் காட்டில் பெண்ணாய் பிறந்து விட்டாயே.உன் ஆத்மா சாந்தியடையட்டும்..
கோவையில் பலவருடங்களுக்கு முன்னர் பள்ளிக்குழந்தைகளை கடத்தி கற்பழித்து கொலை செய்தவர்களில் ஒருவரை சைலேந்திரபாபு என்கவுண்டர் செய்ததை போல் இந்த மாதிரி குழந்தைகளை பாலியல் குற்றத்திற்கு ஆளாக்கும் நபர்களை உடனடியாக என்கவுண்டர் செய்தால் மீண்டும் தலையெடுக்க மாட்டார்கள்.குழந்தைக்கெதிரான குற்றச்செயல்களும் குறையும்.

விமர்சனம்: 
பத்மாவத் - தமிழ் டப்பிங்
இப்பதான் பார்க்க முடிந்தது.வரலாற்று காவியம்.அப்படி ஒண்ணும் பெரிதாய் ஈர்க்கவில்லை.தமிழ் டப்பிங்கில் பார்க்கும் போது பொறுமையை பெரிதும் சோதிக்கிறார்கள்.ஒவ்வொரு டயலாக்கையும்இ...ழு...த்..து...இ...ழு...த்...து பேசும் போது எரிச்சல் தான் வருகிறது.தீபிகா படுகோன் செம அழகு..படம் முழுக்க போர்த்திக் கொண்டே வருவது போரடிக்கிறது.கில்ஜி யாய் ரண்வீர் சிங்..மிரட்டல்..
பத்மாவதியின் அழகை கேள்விப்பட்டு கில்ஜி அவளை கைப்பற்ற நடக்கும் யுத்தக்கதை தான் இந்தப்படம்..
ஒளிப்பதிவு சூப்பர்..படத்தில் வரும் போர்க்காட்சிகள் பாகுபலியில் பிரமாண்டத்தை பார்த்துவிட்டபடியால் இங்கே செல்ப் எடுக்கவில்லை.
பார்க்கலாம் ரகமே.

உணவகம் : 
வெகுவிரைவில் கவுண்டம்பாளையத்தில் உதயமாக இருக்கிறது கொக்கரக்கோ உணவகம்.கவுண்டம்பாளையத்தில் பல வருடங்களுக்கு முன்னால் கொக்கரக்கோ உணவகம் இருந்தது.
இடையில் பங்குதாரர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையில் கொக்கரக்கோ இடம் மாறியது.அந்த இடத்தில் வினோத் சிக்கன் ஸ்பாட் என ஆரம்பித்தனர்.கொக்கரக்கோவின் பழைய செட்டப்பில் புது ஆட்களுடன் இயங்க ஆரம்பித்தது.கவுண்டம்பாளையத்தில் இருக்கும் ஒரே தந்தூரி, கிரில் சிக்கன் உணவகம் இது தான்.விலையும் தாறுமாறாய் இருந்தாலும் கூட்டம் அங்கு கும்மும்.
காரணம் கொக்கரக்கோ வின் பழைய வாடிக்கையாளர்கள்.
இப்போது கொக்கரக்கோ புதிய கிளையினை கவுண்டம்பாளையத்தில் பஸ் ஸ்டாப் அருகில் ஆரம்பிக்கவிருக்கிறது.ஓரிரு தினங்களில் வெற்றி நடை போடும் என எதிர்பார்க்கலாம்..



நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, September 28, 2017

கரம் - 30

உப்புக்கண்டம் எனப்படும் உலர்கறி.

                   கிடா வெட்டும் போது பின்னாட்களில் உபயோகப்படுத்துவதற்காக பச்சைக்கறியில் கொஞ்சம் எடுத்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கயிற்றில் கோர்த்து வெயிலில் காயவைத்து விடுவர்.


                பதினைந்து நாள் வெயிலிலும் நிழலிலும் காய்ந்த பின்னர் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்வர்.தேவையான நாட்களில் சிறிது எடுத்து வெந்நீரில் அலசி ஊறவைத்து அம்மிக்கல்லால் தட்டி குழம்புக்கு பயன்படுத்துவர்.இதன் குழம்பின் சுவையே தனிச்சுவையாக தெரியும்.இந்த குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து வைத்தால் இன்னும் டேஸ்ட் மிக நன்றாக இருக்கும்.நன்கு வெந்த இந்த உப்புக்கண்ட கறியும் சுவையில் தனியாய் தெரியும்.பல்லில் அரைபடும் போது கறியின் மணமும் சுவையும் செமயாக இருக்கும்.ஆதிகால மனிதன் வேட்டையாடிய மிருகங்களை உப்பிட்டு பதப்படுத்தி வைப்பான்.அந்த முறைதான் இதுவும்.நகர்ப்புறங்களில் இந்த உப்புக்கண்டம் எங்குமே கிடைக்காது.கிராமங்களில் மட்டும் தான் கிடைக்கும்.அதுவும் விற்பனைக்கு இருக்காது.காது குத்து, கிடா வெட்டு, திருவிழா மற்றும் முக்கிய விசேஷங்களில் வெட்டப்படும் ஆடுகளின் கறியை தேவைக்கேற்ப எடுத்து உப்புக்கண்டம் போட்டு வைப்பர்.ஒரு வருடம் வரைக்கும் கூட தாக்கு பிடிக்கும் இந்த உப்புக்கண்டம்.பின்னாட்களில் என்றாவது ஒருநாள் தேவைக்கேற்ப காரசாரமாக குழம்பு வைத்து உண்பது வழக்கம்.


திருப்பதி லட்டு :
                திருப்பதி என்றாலே பாலாஜிதான் ஞாபகம் வரும் என்று சொல்பவர்கள் கொஞ்சம் குறைவுதான்.முதலில் லட்டும் அடுத்து மொட்டையும் தான் உடனடி ஞாபகம் வரும்.திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் பிரசாதம் லட்டு உலகப்பிரசித்தம்.கோவிலில் தரப்படும் லட்டு மிகுந்த சுவை (?) உடையதாக இருக்கிறது.பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டின் எடை 180 கிராம் இருக்கும்.இது புரோக்தம் லட்டு என்று அழைப்பார்கள்.

                 முந்திரி ஏலக்காய் திராட்சை மற்றும் நெய்யின் மணம் தூக்கலாக இருக்கும்.லட்டு கவுண்டரின் வரிசையில் லட்டினை வாங்க வரிசையில் நிற்கும் போது லட்டின் மணம் நம் நாசியெங்கும் பரவி, சுவை நரம்புகளை தட்டி எழுப்பி உமிழ் நீரை சுரக்க ஆரம்பித்து வைத்துவிடும்.கவுண்டரை நெருங்க நெருங்க மணம் நம் சுவாசத்தை ஆட்கொண்டுவிடும்.வாங்கி ஒரு விள்ளல் பிய்த்து வாயில் போட்டால், திருப்பதி வெங்கடாசலபதியை நேரில் கண்ட பரவசம் நம்முள் ஏற்படும்.லட்டின் சுவை நாம் நாவில் நாட்டியமாடும்.எடுத்த கைகளில் மணம் தாண்டவமாடும்.. அந்தளவுக்கு சுவை கொண்டது இந்த திருப்பதி பிரசாதம்.


சிக்கன் வறுவல்:
                        வாணலியில் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு போட்டு வெங்காயத்தை வதக்கி, இஞ்சி பூண்டு அரைச்சு போட்டு நன்கு வதக்கி, பின் கழுவின சிக்கனை போட்டு வதக்கி, பின் கொஞ்சம் உப்பு போட்டு சில்லி பிளேக்ஸ் போட்டு கொஞ்ச வேக விட்டு, அப்புறம் கொஞ்சம் தக்காளி, மஞ்சள், மல்லித்தூள். சிக்கன் மசாலாத்தூள்( தேவைப்படின் ) போட்டு நன்கு வேகவிடனும்.தேவையான உப்பை சேர்த்துக்கனும்.எண்ணையில் கறி சுருண்ட பதத்திற்கு வந்த பின் மிளகுத் தூளை சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் பிரட்டி, ட்ரையா எடுத்து புதினா கொத்தமல்லி தூவி இறக்கினா சுவையான சிக்கன் வறுவல் ரெடி..தேங்காயை கீத்து கீத்தா மெலிசா அறிஞ்சி போட்டாலும் இன்னும் சுவை தூக்கும்.வெறும் மிளகு மட்டும் போட்டாலும் செம டேஸ்டா இருக்கும்...இந்த மழைக்கு செம காரத்துடன் சிக்கனோட  பகார்டி ஒரு பெக் போட்டா ஆஹா...சொர்க்கம்...பக்கத்துல தான்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Friday, August 18, 2017

கரம் - 29

படித்தது :
இப்போதெல்லாம் கவிதை, இலக்கியம் நாவல், வரலாறு இப்படி இருக்கிற புத்தகங்களை படிச்சா செம போர் அடிக்குது.ரசனை மாறி விட்டது என்று நினைக்கிறேன்.சமீபத்தில் கோவை புத்தக கண்காட்சியில் வாங்கின கொலை, கொள்ளை, மனதை பதைபதைக்க செய்யும் கொடூர செயல்கள் நிறைந்த வழக்குகளின் புத்தகம் படிச்சேன். செம விறுவிறுப்பு, திரில்லிங், ஆச்சர்யம், வியப்பு, பயம், கொஞ்சம் அசூயை  என எல்லா உணர்வுகளும் கலந்து கட்டி நாடி நரம்புகளை அசைக்கின்றன.கிரைம் மன்னன் ராஜேஷ்குமார் நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்ததைப் போல் இருக்கிறது இந்த புத்தகம்.வைதேகி பாலாஜி எழுதின கொடூரக் கொலை வழக்குகள்.

பிடித்தது:
அதிகம் அசைவம் சாப்பிட்டாலும் அவ்வப்போது ஏதோ ஒரு இனிப்பு நம்மை ஆட்கொண்டுவிடும்.ஆனால் எப்போதும் என்னை வசீகரிக்க கூடிய இனிப்பு என்றால் அது ரவா கேசரி தான்.மாதத்திற்கு இரு தடவை வீட்டில் இடம் பெற்று விடும்.செய்வதும் எளிது என்பதால் உடனடி இனிப்பு பலகாரம் அதுதான்.கேசரியில் தூவப்பட்டிருக்கும் நெய்யில் வறுத்த முந்திரிகள் வாயில் கடிபடும் போது அதன் சுவை இருக்கிறதே.ஆஹா ..அற்புதம்
தித்திப்பு...கேசரியின் நிறமும், நெய்யின் மணமும் நிச்சயம் மனதை உருக்கும்.வாயில் உமிழ்நீரை சுரக்கும்.கேசரியின் ஒவ்வொரு ரவையும் உதிரி உதிரியாக சாப்பிட சாப்பிட சுவையாக இருக்கும்.ஏர்செல் ஆபிஸ் பக்கத்தில் இருக்கிற சாய்ராம் பவனில் கேசரியின் சுவை மிக டேஸ்டாக இருக்கும்.

சமோசா :
மாலை வேளைகளில் சுடச்சுட சமோசா சாப்பிட எப்பொழுதும் பிடிக்கும்.மெலிதான் மைதா பேப்பரை முக்கோண வடிவில் மடித்து அதில்
காரமிட்டு வதக்கிய வெங்காயம் மட்டும் வைத்து எண்ணையில் பொறித்து தரப்படும் சமோசாதான் எங்கள் ஏரியாவில் கிடைக்கும்.நன்கு பொறிந்தவுடன்
மொறுமொறுப்பாலும் வெங்காயம் வெந்ததினாலும்  ஏற்படும் மணத்திலேயே நம்முடைய பசியை அதிகரிக்க செய்யும்.வாங்கி ஒரு கடி கடித்தால் போதும்
ஆவியுடன் மணமும் சுவையும் வெளிவரும்.ஒரு காலத்தில் கல்பனா தியேட்டர் இடைவேளையின் போது வாங்கி சாப்பிடுவோம்.இப்போது ஞாயிறு தோறும் கூடும் சந்தையில் சுடச் சுடச் சமோசா சுட்டுக்கொண்டிருப்பார்கள் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகும் போது மூக்கை துளைக்கும்.எப்பவாது ஒரு முறை வாங்கி சாப்பிடுவோம்.இப்பொழுது கவுண்டம்பாளையத்தில் டிவிஎஸ் நகர் செல்லும் வழியில் பாலம் தாண்டி இடது புறம் ஒருவர் சின்னதாய் கடை ஆரம்பித்து இருக்கிறார்.மாலை வேளைகளில் சுடச்சுட சமோசா போட்டுக்கொண்டிருப்பார்.உருளைக்கிழங்கு மசாலா, வெஜிடபிள் சமோசா மற்றும் மட்டன் கைமா சமோசா என மூன்று வெரைட்டிகளில் போட்டுக்கொண்டிருப்பார்.எப்பவும் போல சமோசாவிற்கென்று உள்ள சுவை இங்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.அளவும் பெரிதாகவே இருக்கிறது.சாப்பிடவும் நன்றாக இருக்கிறது,விலை 7 ரூபாய் மட்டன் 10 ரூபாய்.பீஃப் இறைச்சி இல்லை.


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Saturday, August 5, 2017

கரம் - 29

புத்தக கண்காட்சி ஒரு பார்வை.
விசாலாமான ஹாலில் மிகுந்த இடவசதியுடன் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.நிறைய பதிப்பகங்கள் இடம் பெறவில்லை.வரலாறு, காமிக்ஸ், ஆங்கில புத்தகங்கள், குழந்தைகள் புத்தகங்கள், தமிழ் நாவல்கள் என எப்பவும் போல..கவிதைப்புத்தகங்கள் நல்லவேளை கண்ணில் படவே இல்லை.சுஜாதா பேனர்களில் இன்னமும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்..வாசகர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவே.பிரபல பதிப்பகங்களில் முக்கியமாய் கார்டு ஸ்வைப்பிங் மெசின் இல்லை.கேட்டால் சென்னை புக் ஃபேரில் இருக்காம்..வேறு என்ன பண்ணலாம் என்று கேட்டால் 2% அதிகம் கொடுத்தால் பக்கத்து ஸ்டாலில் ஸ்வைப் பண்ணிக்கொள்ளலாமாம்.
புக் வாங்கும் ஆர்வம் இதனால் கூட மங்கிப்போகலாம்.நானும் எந்த ஸ்டாலில் ஸ்வைப்பிங் மெசின் இருக்கிறதோ அங்கு மட்டுமே வாங்க முடிந்தது.ஜெயமோகனுக்கென்றே தனி ஸ்டால் ஒன்றும் போட்டிருக்கிறார்கள்.புத்தக கண்காட்சிகளில் மதம் சம்பந்தபட்ட ஸ்டால்களும் தற்போது நிறைய இடம் பெற துவங்கியுள்ளன.


கூட்டத்தை காட்டுவதற்காக கல்லூரிகளை சேர்த்திருப்பர் போல.மாணவர்கள் கூட்டம் ஜோடி ஜோடியாக செல்பி க்களில் மூழ்கியிருக்கின்றனர்.புத்தகங்களின் விலை தாறுமாறு...இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பது போல சம்பந்தமற்ற இரண்டு மூன்று ஸ்டால்கள்.
இந்த கண்காட்சியில் வரவேற்க தக்கது வாசகர் எழுத்தாளர் சந்திப்பு மையம் மற்றும் வாசகர் ஓய்வு மையம்.கால்கடுக்க சுற்றி வந்து அக்கடாவென்று உட்கார சேர்கள் போடப்பட்டிருக்கின்றன.கோவை எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு என ஒரு ஸ்டாலும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.நாடகம், கலை விழாக்களுக்கு என தனி அரங்கம் அமைத்துள்ளனர்.மாலை நேரம் நிச்சயம் அறிவுப்பசி தீரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

ஃபுட் கோர்ட் இந்த தடவை முழுதும் வட இந்திய நபர்களே ஆக்ரமிப்பில் இருக்கின்றனர்.கரும்பு ஜூஸ், பானிபூரி, ஜிகர்தண்டா, கார்ன் என ஒரு சில அயிட்டங்களே இடம் பெற்றிருக்கின்றன.
வெரைட்டி ரைஸ், பிரியாணி, காபி போன்றவைகளும் இருக்கின்றன.சுவை எப்பொழுதுமே நன்றாக இருக்காது என்பதால் ரிஸ்க் எடுப்பதில்லை.

இந்த தடவை வி.மு வின் நீர் புத்தகம், கருந்தேளின் தி.எ.வாங்க புத்தகம், சரவணன் சந்திரன் அவர்களின் ஒரு சில புத்தகங்கள், என கொஞ்சம் வாங்கியிருக்கிறேன்.
இனி அடுத்த புத்தக கண்காட்சியில் சந்திப்போம்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, April 18, 2017

கரம் - 28

பார்த்தது:
யு டர்ன்( U TURN) - கன்னடம்



ரொம்ப சிம்பிளான கதை.ஆனா படம் பார்க்க பார்க்க விறுவிறுப்பு. திரில்லர் வகையை சேர்ந்த ரகம்.எதார்த்தமான நடிப்பு, இயல்பான காட்சிகள் என ரசிக்க வைக்கிறது.திரைக்கதை சலிக்க வைக்காமல் அடுத்தடுத்து திருப்பங்களை தருகிறது.சாலை விதிமுறைகளை மீறும் நபரால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் பழிவாங்கல் கதை.கதாநாயகியை பார்த்தால் ஒரு சாயல்ல திவ்யா மாதிரி இருக்காங்க.பாடல்கள் இல்லாத படம்.


KILLING VEERAPPAN - கன்னடம்.

                       செம மொக்கையான படம்.படத்துல ஆனா ஊனா மியூசிக் பேக்ரவுண்ட்ல ம்யூட் ஆயிடறாங்க.சிவராஜ்குமார் எப்பபாரு ஏதோ ஒண்ணை குடிச்சிட்டே இருக்காரு.
ஸ்டைலாமாம்...விறுவிறுப்புன்னு மருந்துக்கு கூட இல்ல.வில்லனை பிடிக்கனும்னா ஹீரோ நல்ல வியூகத்தை காட்டி நம்மளை பரபரபாக்கனும்.ஆனா இதுல எல்லாமே செம மொக்கை.காட்டுல கதை நடக்குறதால் அப்பப்ப ரெண்டு மூணு யானை, ரெண்டு பாம்பை காட்டறாங்க அவ்ளோதான்.கொஞ்சம் கூட இன்ட்ரஸ்டிங்ஐ ஏற்படுத்தாத படம்.இதுல இயக்கம் ராம்கோபால்வர்மா..வாம்...நாசமா போச்சி..

பத்து வருசம் முன்னாடி அதர்மம் அப்படின்னு முரளி நடிச்ச படம் வந்தது.அப்பவே அந்த படம் பார்க்க செமயா இருக்கும்.அது எவ்ளோ மேல்.

நடந்தவை :
                              கோவை அண்ணாசிலை கொடிசியாவில் இருந்து காந்திபுரம் செல்ல ஓலா புக் பண்ணினேன்.கரெக்டா மூணு நிமிசத்துல என்னோட லொகேஷனுக்கு வண்டி வந்திடுச்சு.ட்ரைவர் கூப்பிடறதுக்கு முன்னாடியே நான் அவரோட நம்பர்க்கு ட்ரை பண்ணேன்.லைன் கிடைக்கல.ஆனா அவரு ஓலா நம்பரான சென்னை கோடுடன் கூடிய நம்பர்ல இருந்து கூப்பிட்டாங்க.நானும் பக்கத்தில தான் இருந்ததால் இருக்குற இடத்தை சொல்லி, வண்டியை கண்டுபிடிச்சு ஏறிட்டேன்.
OTP பாஸ்வேர்டு சொல்லவும் வண்டி கிளம்பியது.ஏறின இடத்தில் இருந்து காந்திபுரம் வரைக்கும் என்னோட போன்லயும், இன்னொரு ஜியோ போன்லயும் பேசிகிட்டே வந்தேன்.ஊர்ல இருந்து வந்திருக்கிற என் அம்மாவை ரிசீவ் பண்றதுக்காக, அவங்க இறங்க வேண்டிய இடம், மற்றும் அட்ரஸ் சொல்லிட்டு வந்தேன்.

ஐந்து நிமிசத்துக்குள் காந்திபுரம் மேம்பாலம் வந்துட்டோம்.அன்னபூர்ணா ஹோட்டல் முன்னாடி நிற்க சொல்லியிருந்த அம்மாவும், அண்ணனும் பக்கத்துல இருந்த ஆவின் டீக்கடையில் டீ குடிச்சிட்டு இருந்தாங்க.நான் எதுக்கு வண்டியோட வெயிட் பண்ணனும்னுட்டு வண்டி ட்ரிப்ஐ குளோஸ் பண்ண சொல்லிட்டேன்.பில் தொகை ஓலா மணியில் இருந்து ஆட்டோமேடிக்கா அமெளண்ட் கழிந்திடும்.நானும் அவசர கதியில் இறங்கிட்டேன்.
                       ஆவின் கடையில் நானும் ஒரு டீ சொல்லிட்டு அவங்ககூட பேசிட்டு இருந்தேன்.டீ குடிச்சு முடிச்சதும் மீண்டும் ஓலா புக் பண்ணேன்.வண்டி வந்துச்சு.ஏறி கவுண்டம்பாளையம் போகனும்னு சொல்றோம்.சரின்னு சொல்லிட்டு வண்டியை இடது பக்கம் ஓட்டிட்டு போறாரு..காந்திபுரம் சிக்னல்ல வண்டி நிக்குது.அப்போதான் பார்க்குறேன் என்னோட ஜியோ போனை காணோம்னு.அதுவரைக்கும் போன் இல்லாமல் இருப்பதை கவனிக்கல.யோசிச்சு பார்த்ததில் முன்ன வந்த வண்டியில் விட்டுட்டேன் என்கிற எண்ணம் வரவும், என் ஜியோ நம்பருக்கு டயல் பண்றேன்.போன் சுவிட்ச் ஆப்.எவனோ அமுத்திட்டான் என்கிற எண்ணம் உடனடி வந்து போனது.உடனே முன்னே வந்த ஓலா வண்டி ட்ரைவர்க்கு போன் அடிச்சேன்.அவரு கிட்ட என் போனை உங்க வண்டில மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லவும், அவரு உடனே ஆமாங்க இங்க தான் இருக்குன்னு சொல்லிட்டாரு (ஏதோ ஒரு ஞாபகத்தில் ). உடனே நான் ஏன் போன் சுவிட்ச் ஆப்ல இருக்குன்னு கேட்கவும்,நான்தான் போன்ஐ ஆப் பண்ணிட்டேன்னு சொல்றாரு.ஏன்னு கேட்டா கால் வரும்ல அதான் அப்படின்னு சொல்றாப்ல.ஏங்க, போனைத் தொலைச்சவன் போன் பண்ணி கேட்டா, கொடுக்குறதுக்கு ஈசியா இருக்கும்ல என கேட்டதுக்கு பதிலை காணோம்.உடனே எனக்கு செம கோபம்.இப்ப எங்க இருக்கீங்கன்னு கேட்க, சரவணம்பட்டி போயிட்டு இருக்கேன்னு சொல்ல, இருங்க, நான் வரேனு சொல்ல, காரில் கஸ்டமர் இருக்காருன்னு அவர் சொல்ல, நான் ஒரு ஆளை அனுப்பறேன் அவருகிட்ட மொபைல குடுங்கன்னு சொல்லவும் சரிங்கன்னு சொல்ல, கூட நான் ஏங்க, உங்க வண்டில கஸ்டமர் ஒரு பொருளை விட்டுட்டு போனா, அதை பத்திரமா எடுத்து தருவீங்கன்னு பார்த்தா, நீங்க போனை ஆஃப் பண்ணிட்டு எடுத்துகிட்டு போறீங்களே இது நல்லாவா இருக்கு என கேட்டு விட்டு, சரவணம்பட்டி செக்போஸ்ட் பக்கத்துல நம்ம ஆளு ஒருத்தரு இருக்காப்ல.உடனடியா அவருக்கு போன் போட்டு, ட்ரைவர் நம்பரும், வண்டி நம்பரும் கொடுத்து உடனே போன் பண்ணி மொபைலை வாங்குன்னு சொல்லவும், அவரு குரு அமுதாஸ் ஹோட்டல் அருகே வண்டியை நிறுத்தி மொபைல வாங்கிட்டு எனக்கு போன் பண்ணாப்ல..அண்ணா..வாங்கிட்டேன் என சொல்லவும்.
மனம் திருப்தி அடைந்தது.
வண்டியில் தெரியாமல் விட்டுவிட்ட பொருளை திருப்பிக்கொடுப்பதை விட்டுவிட்டு, அபகரிக்க முயல்வது எவ்வகையில் நியாயம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Tuesday, March 21, 2017

கரம் - 27

பார்த்த படங்கள்:
புலிமுருகன்: காட்டில் வாழும் மனிதர்களை கொல்லும் புலியை, மக்களுக்காக புலியை கொல்லும் ஒருவனின் கதை.இடையிடையே ஹீரோவின் கஞ்சா கடத்தல், சந்தன மரம் கடத்தல் என ஹீரோயிச காட்சிகள்.இதனிடையே கடத்தல் மாஃபியாவுடன் பகை, போலீஸ் துரத்தல், வில்லன் புலிமுருகனை தேடுவது, புலிமுருகனின் காதல், ஊடல் கூடல், செண்டிமெண்ட், என பக்கா கமர்சியல் படம்.எப்பவும் போல கம்பிளீட் ஆக்டர் மோகன்லால் ஸ்மார்ட்.புலி வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது.படம் பார்த்ததில் இருந்து புலிமுருகனின் தீம் சாங்க் முருகா...முருகா...புலிமுருகா முணுமுணுக்க வைக்கிறது.
  
அச்சமின்றி :
மிகவும் சுவாரஸ்யமான படம்.விறுவிறுப்பான காட்சிகளுடன் மிகவும் நன்றாகவே இருக்கிறது.கல்விக்கொள்ளை பற்றி பேசும் படம்.காமெடி, ஆக்சன் என நன்றாகவே இருக்கிறது.விஜய் வசந்த் பிக்பாக்கெட் காரனாக வாழ்ந்திருக்கிறார்.சமுத்திரகனி போலீஸாக வருகிறார்.படம் மிகவும் அருமை...

துருவங்கள் பதினாறு :
செம கிரைம் திரில்லர் படம்.பார்க்க பார்க்க வியப்பூட்டும் திருப்பங்களை தந்து கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு காட்சியும் அபாரம்.சலிப்பு தராத மேக்கிங்.பாடல்கள் இல்லாத மிக நேர்த்தியான விறுவிறுப்பான அற்புத படைப்பு. ரகுமானின் பெயர் பொறித்து வைக்க வேண்டிய படம்.


படித்தது :
வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்..
கொஞ்சம் கூட சுவாரஸ்யமே இல்லாத எழுத்து நடை.பழங்குடிகளை பற்றி அறிந்து கொள்ளலாம் என நினைத்தால் அது சுத்த வேஸ்ட்.கட்டுரைத் தொகுப்பு போல் இருக்கிறது.புத்தகத்தினை படிக்கவே அலுப்பாக இருக்கிறது.பத்துப்பக்கங்கள், அப்புறம் இடையிடையே கொஞ்சம் புரட்டல் அவ்வளவுதான்.எடுத்து வைத்து விட்டேன்.இந்த புத்தகத்தினை ரிட்டன் அனுப்புவது குறித்து யோசிக்கனும்.
இதை எப்படி காலச்சுவடு கிளாசிக் வாழ்க்கை வரலாறு கேட்டகிரியில் சேர்த்தது என்று தெரியவில்லை. காசுக்கு கேடு, பகார்டி வாங்கி இருக்கலாம். மனமாவது சந்தோசம் அடைந்திருக்கும்.




இன்னும் கொஞ்சம்...