Monday, January 25, 2016

கரம் - 20

கரம்
படித்தது :பு(து)த்தகம்
மெளனத்தின் சாட்சியங்கள் :
கோவையில் இரு அமைப்புகளுக்கு  ஏற்பட்ட மோதலே கொலை, குண்டுவெடிப்பு, கலவரம் என நீண்டு கோவையை சின்னா பின்னமாக்கிவிட்டது.இந்த குண்டுவெடிப்பு நிகழ்வினை நாவலாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.சிறையிலிருந்து விடுதலையாகும் ஒரு அப்பாவி முஸ்லீம் இளைஞனின் பார்வையில் கதை விரிகிறது.இரு மதங்களின் போர்வையில் நடத்திய ஒரு பயங்கர நிகழ்வு இந்த கோவை குண்டுவெடிப்பு.இதற்கு பலியானது அப்பாவிகள்தான்.கோவைக்கு ஏற்பட்ட தீராத களங்கமும் இந்த குண்டு வெடிப்பினால்தான்.
கோவை பெரிய கடை வீதி, டவுன்ஹால், கோட்டைமேடு, உக்கடம் பகுதிகளில் உள்ள இந்து முஸ்லீம் வியாபாரிகளின் தொழில் போட்டியே இந்த கலவரத்திற்கு காரணம் என்றும் அறியப்படுகிறது..
இந்த கலவரக்காட்சிகளை கண்முன்னே நிறுத்துகிறார் எழுத்தின் வடிவில்..பதபதைக்கிறது படிக்க படிக்க....
பார்த்தது :
2015 இறுதியில் தியேட்டருக்கு சென்று பார்த்த படம் பூலோகம்...
படம் மிக அருமை..ஒரு சேனலின் அதிபருக்கும், குத்துச்சண்டை வீரருக்கும் நடக்கும் யுத்தமே இந்த பூலோகம்...படம் மிக நன்றாக இருக்கிறது...

2016 இல் தியேட்டருக்கு சென்று பார்த்த முதல் திரைப்படம்
தாரை தப்பட்டை...
பாலாவின் அதே டிரேட் மார்க் படம்..செம...சின்ன சின்ன ஹாஸ்யங்களுடன் நன்றாகவே இருக்கிறது.நிறைய விமர்சனங்களை படித்து தொலைத்ததினால் என்னவோ ஹீரோ எப்போ வில்லனின் குரல்வளையை கடிப்பான்......கொல்வான் என்கிற எதிர்பார்ப்பு வந்து தொலைக்கிறது.இனி சத்தியமாய் விமர்சனம் படிக்கவே கூடாது.ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கிறது.எந்த மாதிரி மனநிலையில் அவன் படம் பார்க்கிறான் என்பதை பொறுத்து படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.என்னைப் பொறுத்த வரையில் படம் நன்றாகவே இருக்கிறது.அதிக வன்முறை, ஆபாசம் என்பதெல்லாம் இல்லை.எங்கள் ஊரில் குறவன் குறத்தி ஆட்டம் ஆடுவார்கள்.அது இன்னும் மோசமாக இருக்கும்.இந்தப்படத்தில் அப்படி ஒன்றும் ஆபாசம் இல்லை.

பாலாவின் ட்ரேட்மார்க் சோடை போகவில்லை.

ருசித்தது:
பனங்கிழங்கு:
நம்ம தோட்டத்துல விளைஞ்சது....

இப்போது பனங்கிழங்கு அரிய பொருள் ஆகிக்கொண்டு வருகிறது.பனைமரம் அழிப்பு காரணமாக இது அதிகம் கிடைப்பது இல்லை...தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இது கிடைக்கிறது.
பனஞ்சீம்பு..
கிழங்கை தோண்டி எடுக்கும் போது அதனுடன் உள்ள கொட்டையை இரண்டாக வெட்டினால் அதில் சீம்பு கிடைக்கும்.சாப்பிட சுவையாக இருக்கும்.இதுவும் மிக அரிதான மருத்துவ குணம் வாய்ந்த பொருள்...சாப்பிட்டுப்பார்த்தால் கொஞ்சம் இனிப்பும், உப்பும் கலந்த மாதிரி இருக்கும்.ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பெயரை சொல்கிறார்கள் இதற்கு.


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Thursday, January 21, 2016

கோவை மெஸ் - போஸ்ட் ஆபிஸ் கேண்டீன் (சைவம்), R.S.புரம், கோவை

ஒரு வேலை விஷயமா R.S புரத்துக்கு காலையில் கொஞ்சம் நேரத்திலேயே கிளம்பிட்டேன்.மணி 9 ஆகவும் லேசா பசிக்க ஆரம்பித்தது.இந்நேரத்துக்கு எங்கயும் நான்வெஜ் கிடைக்காது.சைவம் தான் எங்க போனாலும் கிடைக்கும்.ரொம்ப சிம்பிளா சாப்பிடலாமே அப்படின்னு நினைக்கையில் உடனடி ஞாபகம் வந்தது போஸ்ட் ஆபிஸ் கேண்டீன் தான்.பத்து வருசம் முன்னாடி சாப்பிட்டது.ஒரு கையேந்திபவனா ஆரம்பிச்ச கேண்டீன் இன்னிக்கு செல்ப் சர்வீஸ் அளவுக்கு வளர்ந்து நிக்குது...
ரொம்ப இடவசதியோட, நல்லா வச்சி இருக்காங்க....பில் போட்டவுடன் வேணுங்கிறத சூடா சாப்பிட்டுக்கலாம்...எல்லாம் சுடச்சுட கிடைக்கும்...வாளி நிறைய சாம்பார், சட்னின்னு நிறைச்சு வச்சிருக்காங்க...
விலையும் ரொம்ப குறைவாகத்தான் இருக்கு.அளவும் அதிகமாகத்தான் இருக்கு...டேஸ்ட்டும் நன்றாக இருக்கு..
நான் காலையில் ராகி தோசையும், ஒரு பொங்கலும் வாங்கிச்சாப்பிட்டேன்...சாம்பாரும், சட்னியும், கார சட்னியும் செம காம்பினேசன்.இரண்டையும் குழைச்சு அடிக்க ஆரம்பிச்சது...வயிறு நிறைந்தபோது தான் தெரிகிறது அதிகமா சாப்பிட்டு விட்டோனோ என்று....
வடை, போண்டா, தயிர்வடை, டீ, காபி, என எல்லாம் இருக்கிறது.மதியம் மினி மீல்ஸ் முதல் வெரைட்டி ரைஸ் வரை அனைத்தும் கிடைக்கிறது...





விலை மிக குறைவுதான்.ஒரு ராகி தோசை 12 மட்டுமே, பொங்கல் 20 மட்டுமே.சப்பாத்தி 5 ரூபாய்..டேஸ்ட் நன்றாக இருக்கிறது.
R.S.புரத்தில் போஸ்ட் ஆபிஸ் காம்பவுண்ட் உள்ளே இருக்கிறது.அந்தப்பக்கம் போனா சாப்பிட்டு பாருங்க....
மாலை நேரம் போனிங்கன்னாஅம்மணிகள் புடைசூழ சாப்பிடலாம்


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Saturday, January 9, 2016

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

வணக்கம்....
ரொம்ப நாளாகவே இந்த பக்கம் வரமுடிவதில்லை.ஓயாத வேலைப்பளு வேறு.நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்று நினைப்பதோடு சரி.கால நேரம் ஒத்துழைப்பதில்லை.மற்றவர்களின் பதிவுகளையும் படிப்பது அரிதாகிவிட்டது.இனி தொடர்ந்து வாசிப்பை, எழுதுவதை அதிகரிக்க வேண்டும்.
கடந்த வருட தவறுகள் இந்த வருடத்தில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.இந்த வருடத்தை அணு அணுவாய் ரசித்து இன்புறவேண்டும் என்கிற ஒரே ஆவல் தான் இருக்கிறது.
இந்த வருடத்தில் முதல் தொடக்கமே ஒரு சோக நிகழ்வு தான்.மிக நெருங்கிய நண்பரின் தாயார் திடீரென்று காலமாகிவிட்டார்.தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள கள்ளக்குறிச்சி வரை பயணமானேன்.இந்த வருடத்தின் முதல் பயணம் சோகத்துடனே ஆரம்பித்து இருக்கிறது...இனி வருபவை அனைத்தும் நல்லவையாக இருக்கட்டும் என நம்புவோம்....



அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.அப்புறம் தாமதமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

தை பிறந்தால் வழி பிறக்கும்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...