Saturday, December 29, 2012

கோவை வலைப்பதிவர்கள் சங்கம் - கோவை

 கோவை வலைப்பதிவர்கள் சங்கம்



இனிதாய் கோவை வலைப்பதிவர்கள் சங்கம் துவக்கப்பட்டு விட்டது.

கோவை வலைப்பதிவர்கள் சங்கம் - 370/2012

எப்பவும் போல அனைவரும் இணைந்து செயலாற்றிடுவோம்.

முக்கிய நோக்கம் :
கணிணி பயன்பாட்டாளர்களையும், வலைப்பதிவர்களையும் ஒருங்கிணைத்து சமூக சேவையும்,  கணிணி மற்றும் வலை இணையம் தொழில் செய்வோரை பாதுகாக்கவும், ஏழை எளியவர்களுக்கு இலவச கல்வி மற்றும் கணிணி கல்வி வழங்குதல் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்,

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, December 26, 2012

கோவை மெஸ் - ஹோட்டல் அப்பன்ஸ், சிவகாசி

 ஹோட்டல் அப்பன்ஸ், சிவகாசி
சிவகாசி....பேரை சொன்னாலே பக்குனு பட்டாசு ஞாபகம் தான் வரும்..குட்டி ஜப்பான் என்று அழைக்ககூடிய ஒரு சிறு நகரம்.கந்தக பூமியில் ஒரு நாள் இருந்த போது சாப்பிட எங்கு போலாம் என்று அருகில் கேட்டபோது அப்பன்ஸ் போங்க..கொஞ்சம் நல்லா இருக்கும் என்று சொன்னதால் அங்கு சென்றோம்.
 
போர்டு மட்டும் ரொம்ப சின்னதாக இருக்கிறது..ஆனால் கடை கொஞ்சம் விசாலமாகவே இருக்கிறது.ஏசி வசதியுடன் இருக்கிறது.அதுக்கும் காசு என்பது பில் வரும் போது தான் தெரிகிறது.
உள்ளே நுழைந்தவுடன் சுடச்சுட புரோட்டா ரெடியாகி கொண்டு இருக்கிறது. பார்சல் ஏரியா தனியாக இருக்கிறது.முதலில் ஒரு ஹால்..ஏசி இல்லாத இடம்.உள்ளே இன்னும் செல்ல இரண்டு பெரிய ரூம்கள்....ஏசி வசதியுடன்... சுவரெங்கும் வால் பேப்பர் ஒட்டப்பட்டு நவீனபடுத்தப்பட்டு கொஞ்சம் மங்கிய வெளிச்சமுடன் இருக்கிறது (5 ஸ்டார் ரேஞ்சாம்...).
இந்த ஹோட்டல் ஸ்பெசல் என்ன என்று கேட்க, சிக்கன் அம்பரலா...சொல்ல சரி ஏதோ புது அயிட்டம் போல என்று அதை ஆர்டர் பண்ணினேன்.கூடவே மட்டன் பிரியாணி, ஆம்லெட்....
பிரியாணிக்கு அப்புறம் அந்த அம்பரலா வந்தது..... குடை வடிவில் சிக்கன் லெக் பீஸ்...அட....(புதுசு புதுசாத்தான் கண்டுபிடிக்கிறாங்கய்யா......)
ஒரு பிளேட்டில் இரண்டு குடை...கூடவே குடையின் நிழலில் எலுமிச்சை, மற்றும் கொஞ்சம் வெங்காயம்..
 ( குடை சிக்கன்.பிளாஷ் அடித்து போட்டோ )

பிரியாணி சுவை நன்றாக இருக்கிறது.சாப்பிட்டு கொஞ்சம் சாதம் வாங்கி ரசம் ஊற்றி சாப்பிட்டோம்..ரசம் நன்றாக இருக்கிறது.சிவகாசி மக்கள் விரும்பி செல்லும் இடம் என்பது வரும் நபர்களை பார்த்தாலே தெரிகிறது...
எல்லாம் சாப்பிட்டவுடன் பில் வர, கூடவே ஏசிக்கும் சார்ஜ் செய்து இருந்தனர்.(இப்படி வாங்கலாமா....ASK ). (சென்னையில் விருகம் பாக்கம், சாலி கிராமம்,வடபழனி டாஸ்மாக்கில் ஏசிக்கு என்று தனியாக சார்ஜ் செய்வார்கள்..)
எப்படியோ...அடிக்கிற வெய்யிலுக்கு இங்க போனா இளைப்பாறலாம்...காசு கொடுத்து...
விலை அந்த ஊருக்கு ஏற்றபடி தான் இருக்கிறது.
இந்த ஹோட்டல் சிவகாசியில் மூன்று இடங்களில் கிளை பரப்பி இருக்காம்.கொஞ்சம் ஃபேமஸான ஹோட்டல்  என்பது கூட்டம் வருவதை பார்த்தால் தெரிகிறது.

சாப்பிட்டு விட்டு வெளியில் வர 
கண்களில் ஒரு மத்தாப்பு வெளிச்சம்...
பட்டாசு நகரில் பாவைகள்... 
அய்யன் நாடார் ஜானகி அம்மாள் 
கல்லூரி அம்மணிகள்....
பார்த்தவுடன் பற்றிக்கொண்டது..
அணுகுண்டாய் அம்மணிகள்
ஆகிவிட்டால்  என்செய்வது
என்றெண்ணி  புஸ்வானமாய்
புன்னகைத்து புறப்பட்டோம்....

இந்த ஹோட்டல் சிவகாசி காவல் நிலையம் அருகில் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்.

 
இன்னும் கொஞ்சம்...

Friday, December 21, 2012

கரம் - 5 - 21.12.12


21.12.2012 - உலக அழிவு தினம் அப்படின்னு சொல்லி சொல்லியே நிறைய பேரு உலகெங்கும் வதந்திகளை பரப்பிகிட்டு இருந்தாங்க..
மெக்சிகோ நாட்டை பூர்வீகமாக கொண்ட "மாயன்' இனத்தினர், 5,126 ஆண்டுகளை கொண்ட காலண்டரை தயாரித்து பயன்படுத்தி வந்தனர். இந்த காலண்டர், கி.மு.3114ல் துவங்கி, இன்றுடன் முடிகிறது.மாயன் காலண்டர், ஒரு லட்சத்து, 44 ஆயிரம் நாட்களை கொண்டது. அதன் பின், இந்த காலண்டர் மறு சுழற்சிக்கு உட்பட்டது. இன்றுடன் இந்த காலண்டர் முடிவடைவதால், உலகம் இன்று அழிந்து விடும் என வதந்தி இருந்தது..
பார்த்தா...இப்போ  வரைக்கும் உலகம் அழியல...இன்னிக்கு இரவு 12 மணிக்குள்ளே உலகம் அழிஞ்சுடுமா...
--------------------------------------------------------------
இன்னிக்கு உலகம் அழிஞ்சு இருக்குமா அப்படின்னு காலையில் 5 மணிக்கு டிவி பார்த்தா....கே டிவியில் இளையவன் அப்படின்னு ஒரு படம்...சத்யன் ஹீரோவா நடிச்ச(..?) படம்....முடியல....

வானத்துல எத்தனையோ நட்சத்திரம் இருந்தாலும் எனக்கு பிடிச்சது நிலா தான்....இந்த உலகத்துல எத்தனையோ பெண்கள் இருந்தாலும் எனக்கு பிடிச்சது நீதான்....

 நீங்க..பத்து மாசம் தான் ஜனனியை (ஹீரோயின் ) சுமந்தீங்க...நான் அவங்களை பார்த்ததில் இருந்து நெஞ்சில சுமந்திட்டு இருக்கேன்....

சத்யன் காதல் டயலாக்...
இதை விட கொடுமை.. இவங்க ரெண்டு பேருக்கும் டுயட்....வேற..

பேசாம இதுக்கு உலகம் அழிஞ்சு இருக்கலாம்..
---------------------------------------------------------
கோலி சோடா - கலர்
சிறுவயதில் விரும்பி குடித்த பானம்.வெளிநாட்டு பானங்கள் வரும் வரை தமிழகத்தில் கோலோச்சிய குளிர்பானங்கள்...இப்போது காணக்கிடைக்காத அதிசயபொருளாய்....எங்காவது ஒரிரு கிராமங்களில் மட்டும் இது கிடைக்கிறது...கோலா என்று கருப்பு கலரில் இருக்கும் இது நல்ல சுவையுடன் இருக்கும்...ஜிஞ்சர் எனப்படும் இன்னொரு கலர் வயிற்று வலிக்கு நல்ல மருந்தாக இருக்கும்...

------------------------------------------------------------------
புரட்டாசி மாதத்தில் வந்த ஒரு விளம்பரம்..நாமக்கல் போன போது கிளிக்கியது....கோல்டன் பேலஸ் ஹோட்டல்...
----------------------------------------------------------------
மலேசியா போய்ட்டு வந்த போது வாங்கிட்டு வந்த சரக்கு...ஜாகர்மில்டர்-
ஆன் தி ராக்ஸ் - இதை அப்படியே குடிக்கலாம்..செமையா இருக்கும்...
 அன்னிக்கு இதை சாப்பிட்டு கிட்டு இருக்கும் போது நம்ம அம்மணி சிம்பாலிக்கா கொண்டு வந்து பக்கத்துல வச்சது ஆல் அவுட்...என்னா ஒரு கொலவெறி...
---------------------------------------------------------------

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, December 19, 2012

பயணம் - நீர் காத்த அய்யனார் கோவில் , ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

ராஜபாளையத்தில் அய்யனார் கோவிலும் ஒரு அருவியும் அருகிலேயே இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னதால் சிவகாசியில் இருந்து அங்கு கிளம்பினோம்.ராஜபாளைத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் இந்த அய்யனார் கோவில் இருக்கிறது.கோவில் செல்லும் பாதையின் இருமருங்கிலும் மாமரங்கள், தேக்கு மரங்கள், புளிய மரங்கள் என இருபுறமும் பசுமையாய் இருக்கிறது.மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கையில் எங்கு பார்த்தாலும் பசுமை...சில்லிட வைக்கும் சாரல் என அற்புதமாய் இருக்கிறது.கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது.
 
கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு பார்த்தால் நிறைய எச்சரிக்கை போர்டுகள்...வனப்பகுதியில் தீ மூட்டாதீர் என்று....அருகே ஒரு பெரிய ஆலமரம் நிறைய விழுதுகளுடன்....எப்பவும் போல இங்கு நம் முன்னோர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்...
 கோவிலை அடைந்தோம்..மிக அமைதியாக இருக்கிறது.மலைகளில் இருந்து வரும் அருவி நீர் ஓடை போல் கோவில் அருகே வருகிறது.ஒரு ஓடை மிக மெல்லியதாய் சிறு சிறு பாறைகளுக்கு இடையே வந்து கொண்டு இருக்கிறது.தண்ணீரில் கால் வைத்ததும் செம குளிர்ச்சி....இந்த ஓடையை தாண்டி தான் செல்ல வேண்டும் அய்யனார் கோவிலுக்கு...அருவி தான் எங்க இருக்குனு தெரியல..காட்டுக்குள் ரொம்ப தூரம் செல்லவேண்டும் என்று சொன்னதால் போகவில்லை...
நிசப்தம்..எங்கும்..நகர வாழ்க்கையின் பரபரப்பு கொஞ்சம் கூட இல்லை இங்கு...பறவைகளின் கீச்சிடல், இயற்கையின் சப்தம் என மிக அமைதியாக அம்சமாக இருக்கிறது.
தல வரலாறு :
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில், பாலாறு, நீராறு ஒன்றாக சேரும் ஆற்றங்கரை ஓரத்தில் நீர் காத்த அய்யனார் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு வலது புறம் பூர்ணா, இடதுபுறம் புஷ்கலா தேவியார் வீற்றிருக்கின்றனர்.கிட்டதட்ட 500 - 1000 ஆண்டுகளுக்கு முன் ராஜ ராஜ சோழன் காலத்தில் இக்கோவில் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.(ஆனால் இப்பொ இருக்கிற தூண்கள் அனைத்திலும் யாராவது ஒருத்தர் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறது..நன்கொடை கொடுத்தவர்களாம்....)
 கோவிலின் உள்ளே சுற்றி வர பிரகாரம் கொஞ்சம் பெரிதாகவே இருக்கிறது.இந்த இந்தக் கோயிலில் வனலிங்கம், தலைமைசுவாமி, பெருமாள் , லட்சுமி, சின்ன ஓட்டக்காரசாமி, பெரிய ஓட்டக்காரசாமி, வனகாளி, மாடம், மாடத்தி, ரக்காச்சி அம்மன், வனப்பேச்சியம்மன், கருப்பசாமி, தர்மராஜர், சப்தகன்னிமார் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள்.
இந்தகோவில் விசேசம் என்னவெனில் குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளையும், குறைகளையும் போக்கவும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
இப்போது ஓடையில் நீர் வரத்து குறைவாக இருக்கிறது.திடீர் என்று வெள்ளப்பெருக்கும் ஏற்படும்..இந்த ஓடையை தாண்டி தான் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

இயற்கையை விரும்புகிறவர்கள், தனிமையை நாடுபவர்கள் செல்லவேண்டிய அற்புத இடம் இந்த அய்யனார் கோவில்...

ராஜபாளையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது.பஸ் போக்குவரத்து வசதி இருக்கிறது.

இன்னும் கொஞ்சம்...

Monday, December 17, 2012

கோவை மெஸ் - பால்கோவா, ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா:
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நமக்கு பால்கோவா தான் முதலில் ஞாபகம் வரும்.அந்த அளவுக்கு உலக பிரசித்தி பெற்ற சுவை வாய்ந்தது இந்த ஊரில் தயாரிக்கப்படும் பால்கோவா.சிவகாசி போயிட்டு அப்படியே இந்த ஊருக்கு போய் ஆண்டாளை தரிசித்து வரலாம் என்று போனேன்.ஊருக்குள் நுழையும் போதே ஆங்காங்கே நிறைய பால்கோவா கடைகள்.ஒரு சின்ன சந்துக்குள் நுழைந்தால் கோவில்...அண்ணாந்து பார்த்தால் கோபுரம்.... கோவில் கோபுரம் முழுக்க கீற்று மட்டையால் மூட பட்டிருக்கிறது.அடடா...இந்த கோபுரத்தை தரிசிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே....சரி வந்தது வந்தோம்... இருக்கிறதை போட்டோ எடுக்கலாம் என்று கோபுரத்தினை எடுத்தேன்.தமிழக அரசின் முத்திரையான இந்த கோபுரம் இப்போது செப்பனிடப்பட்டு கொண்டு இருக்கிறது.இன்னும் மூன்று மாதத்திற்குள் தயாராகி விடுமாம்....

 ற்பையம்
கோவிலுக்கு எதிரே உள்ள ஒரு பெட்டிக்கடையில் இந்த ஊரில் எந்த கடையில் பால்கோவா நன்றாக இருக்கும் என்று கேட்டதற்கு அருகில் உள்ள அரசு கடையை (மதுபானகடை இல்லீங்கோ...) காட்டினார்...
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பால்பண்ணை பால்கோவா கடை..
கடைக்கு சென்றவுடன் பால் கோவா கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்க்க கொடுத்தார் கடை ஓனர்..சுவை நன்றாக இருந்தது..அடுத்து பால் அல்வா கொஞ்சம் கொடுத்தார்...அதுவும் நன்றாக இருந்தது... கொஞ்சம் பார்சல் வாங்கி கொண்டு வெளியே வந்தால் ஏகப்பட்ட பால்கோவா கடைகள் ...கோவிலுக்கு அருகே இரு புறமும்....ஊரு முழுக்க இதே கடைகள் தான் இருக்கும் போல...பால் மணம் வீசிக்கொண்டே இருக்கிறது...





 கிட்டதட்ட 60 ஆண்டு காலமாக இந்த பால்கோவா தொழில் இருக்கிறதாம். நிறைய பேருக்கு குடிசைத் தொழிலாக இது இருக்கிறது.
ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் கோபுரம் இல்லாமல் இந்த பதிவை முடிப்பதா..
ு நெட்டில் சுட்டு..
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பசுமை வாய்ந்த இடமாய் இருக்கும் இந்த ஊரில் ஏகப்பட்ட பசுக்கள் இருப்பதால் பால் அதிகம் கிடைக்கிறது.பாலும் நல்ல சுவையுடன் இருப்பதால்தான் இங்கு பால்கோவா பிரசித்தி பெற்று இருக்கிறது.

இந்த கடை கோவில் கோபுரம் எதிரில் இருக்கிறது.


நேசங்களுடன்
ஜீவானந்தம்.



இன்னும் கொஞ்சம்...