Wednesday, October 31, 2012

வெளிநாட்டு அனுபவம் - பத்துமலை,கோலாலம்பூர், மலேசியா

கோலாலம்பூரில் இருந்து முதலில் சுற்றிப் பார்க்கப் போன இடம் பத்துமலை என்கிற பட்டு கேவ்ஸ் (Batu Caves )..அப்பா அம்மா கிட்டே கோவிச்சுகிட்டு மலை ஏறின நம்ம ஊரு முருகன் இருக்கிற இடம்..ஜக ஜக என தங்க கலரில் மிக உயரமாக ஜொலிக்கும் முருகன்.வெளிநாட்டிலும் நம்ம ஊர் கடவுளுக்கு இவ்வளவு வரவேற்பா என ஆச்சரிய பட வைக்கிறது இந்த கோவில். உள்ளே நுழையும் போதே பெரிய வேல் ஒன்று நம்மை வரவேற்கிறது.கோவிலை சுற்றி இடம் நல்ல விஸ்தாரமாக  இருக்கிறது.முறையாய் பராமரிக்கப்பட்டு இருக்கிறது.(நம்ம ஊர் மாதிரி குப்பை கூளங்கள் காணோம்).மலையின் அருகே ஓடுகிற பத்து என்கிற ஆறின் பெயரால் இந்த குகை அழைக்கப்படுகிறது.இந்த முருகன் கோவிலை நிர்மாணித்தது ஒரு தமிழர் என்பது இன்னும் ஆச்சரியமே...
அடிவாரத்தில் இருந்து குகைக்கு செல்ல படிகள் இருக்கின்றன.நமக்கு படியில் செல்ல தெம்பு இல்லாத காரணத்தினால் கீழேயே இருந்து முருகனை தரிசித்தோம்.கூடவே வெளி நாட்டு அம்மணிகளையும்...
மேலே இருக்கிற குகைக் கோவிலில்  சுண்ணாம்புக் குன்றுகளிலான பல குகைகள் இருக்கின்றன.அரிய வகை விலங்கினங்களும் தாவரங்களும் இருக்கின்றனவாம்..இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.சரி..சரி..நமக்கு எதுக்கு வரலாறு எல்லாம்...
சும்மா ஜக ஜகன்னு ஜொலிக்கிறாரு முருகன்..அவர மாதிரியே ஒரு சில அம்மணிகளும் ஜொலிக்குதுங்க...என்ன பண்றது..நம்ம முருகனுக்கு வந்த வாய்ப்ப பாருங்க...வெளிநாட்டுல சும்மா ஜெக ஜோதியா.....
 
 
 
 
 
 
 அடிவாரத்தில் நிறைய புறாக்களின் கூட்டம் இருக்கிறது.அவை பறப்பதும் அமர்வதும் என அழகாய் இருக்கிறது....அதை சுற்றி ஒரே கூட்டம்....புறாவை பார்க்கவா இல்ல அம்மணிகளை பார்க்கவான்னு தெரியல...
தமிழக கோவில்களில் இருப்பது போலவே இங்கும் ஒரு சில பிளாட்பார கடைகள்.தமிழ் பெயர்ப்பலகை தாங்கிய ஹோட்டல், என சிறப்பாய் இருக்கிறது.
 
 
 
 
இந்த பத்துமலை கோவில் அருகிலேயே ராமாயண குகை என சொல்லப்படுகிற குகைக்கு செல்லும் வழியில் ஆஞ்சனேயர் சிலை ஒன்றும் இருக்கிறது.அப்புறம்...இங்க தைப்பூசத் திருவிழா தமிழகத்தை விடவும் வெகுசிறப்பாகக் கொண்டாடப் படுமாம். நேர்த்திக் கடன்களுக்காக  பால் காவடி, மச்சக் காவடி, பன்னீர்க் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என பல காவடிகள் எடுப்பார்களாம் இந்து,  சீன, மலாய் மக்கள்...

கோலாலம்பூரில் இருந்து 15 கிலோ மீட்டருக்குள் இந்த பத்து மலை இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, October 29, 2012

கோவை மெஸ் : சில்வர் ரிவர், டேன்ஜங் பலாய், கரிமுன், இந்தோனேசியா

Silver River,TG balai, Karimun, Indonesia 
           ஸீ புட் சாப்பிடனும் அப்படின்னு சொன்னதால் நம்ம கைடு கூட்டிட்டு போன இடம் சில்வர் ரிவர் ஹோட்டல்.அந்த ஊரிலேயே கொஞ்சம் பெரிய ஹோட்டல் இது தான்.ஒரு பீச் ஓரமா இருக்கு இந்த ஹோட்டல்.கண்ணாடி தொட்டிகளில் உயிரோட லாப்ஸ்டர், இறால், மீன், நண்டு என எல்லாம் இருக்கிறது.நாம் சொல்லும் ஆர்டர்க்கு ஏற்ப இவைகள் உயிரை விடுகின்றன நமக்காக.நாங்கள் ஆர்டர் பண்ணினது மொத்தம் மூணு அயிட்டம்.மலாய் மொழியில் இதெல்லாம் நமக்கு என்ன பேருல சொல்றாங்கன்னு தெரியல.சின்ன குழந்தைங்க படம் பார்த்து சொல்லுமே அந்த மாதிரி ஒவ்வொண்ணையும் படத்த காட்டி காட்டி ஆர்டர் பண்ணினோம்.இறால், மீன், நூடுல்ஸ், இப்படி...
 
 
 
 
 
அதுக்கு முன்னாடி ஒரு ஸ்பெசல் புட் வைச்சாங்க.கொத்தா அப்படின்னு பேரு..தென்னை மட்டை கீற்று இலையில் வேக வைக்கப்பட்ட சிக்கன் மற்றும் மீன்.நெருப்பில் சுட்ட சுவையில் மிக நன்றாக இருக்கிறது.
 
பார்க்க அப்படியே உயிருடன் இருக்கிற மாதிரியே இருக்கிறது இந்த இறால்.ஆனால் நன்றாக வெந்து இருக்கிறது இந்த இறால் பிரை.ஆனால் தோல் உரிக்காத இறால். கஷ்டப்பட்டு உரித்து சாப்பிட வேண்டி இருக்கிறது.சுவையாகத் தான் இருக்கிறது
 
அடுத்து வந்த மீன் செம டேஸ்ட்.நன்றாக எண்ணையில் பொரித்து பின் மசாலா சேர்த்து ஸ்வீட் சாஸ் உடன் இருக்க சாப்பிட சாப்பிட செம டேஸ்ட்.மொறு மொறு வென்று இருக்கிறது.கொஞ்சம் காரத்துடன் அதே சமயம் இனிப்புடன் மிக நன்றாக இருக்கிறது.
அப்புறம் கொடுத்த நூடுல்ஸ் ஒரு வெஜிடபிள் தண்டு போல இருக்கிறது.செம டேஸ்ட். சாப்பிடும் போது நறுக் நறுக் என்று இருக்கிறது.கூடவே சிக்கன் துண்டுகள் நன்றாக இருக்கிறது.
பீப் நூடுல்ஸ் இதுவும் நன்றாக இருக்கிறது.பீப் கொஞ்சம் குழம்புடன் இருக்கிறது.மிக்ஸ் பண்ணி சாப்பிட நன்றாக இருக்கிறது.என்ன போர்க் ஸ்பூனால் சாப்பிடவே கஷ்டமா இருக்கு.வழுக்கி வழுக்கி விழுது.அதுவும் இல்லாமல் ரொம்ப நீள நீள மாய் இருக்கு.பக்கத்துல இருக்கிற ஒரு ஆளு சாப் ஸ்டிக் ல செம பின்னு பின்றாரு.நான் ட்ரை பண்ணி பார்த்துட்டு முடியல.எப்படியோ கஷ்ட பட்டு சாப்பிட்டோம்.
முதல் முறையா வெளிநாட்டுல பாஷை தெரியாத ஊருல ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம்.நன்றாக இருக்கு.இன்னொரு தீவுல பாம்பு, முதலை, குரங்கு கறி கிடைக்குமாம்.அதை எல்லாம் சாப்பிட முடியலயே அப்படிங்கற வருத்தம் ரொம்பவே இருக்கு. எப்படியாவது அதையும் டேஸ்ட் பண்ணிடனும் அப்படிங்கிற முடிவுல இருக்கேன். பார்ப்போம்.....சான்ஸ் கிடைக்குதான்னு....
அப்புறம் அம்மணிகள் தான் ஆர்டர் எடுக்கிறது, பரிமாறுவது எல்லாம்.செமையா இருக்கு.கண்ணுக்கு குளிர்ச்சியா சாப்பிட முடிகிறது.கூடவே நம்ம சரக்கும் தர்றாங்க.நல்லாவே இருக்கு எல்லாம்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Saturday, October 27, 2012

வெளிநாட்டு அனுபவம் - கரிமூன், இந்தோனேஷியா

சிங்கப்பூரில் இருந்து இரண்டு மணி நேர கடல் பயணமாக சென்ற இடம் டேன் ஜங் பலாய் கரிமூன், இந்தோனேஷியா.இது ஒரு தீவு.கடலில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் அருகில் இருக்கிற இந்த தீவு க்கு சென்றேன்.பெரி எனப்படுகிற போட்டில் பயணம் ஆரம்பிக்கிறது.நேரம் ஆக ஆக சின்னதாகிக் கொண்டே வருகிறது சிங்கப்பூரின் மிக உயர்ந்த கட்டிடங்கள்.இரண்டு மணி நேரம் கடலில் பயணிப்பது மிக சுகமாக இருக்கிறது.
 
 
 புதிய ஊர் நம்மை வரவேற்கிறது  அங்கே சென்றவுடன்  ஆன் அரைவல் விசா வாங்கி  கஸ்டம்ஸ் முடித்து கொண்டு மொழி தெரியாத ஊருக்குள் புகுந்தோம்.மிக அமைதியாக இருக்கிறது.இந்த ஊர்.நம்மை பார்த்தவுடன் வந்து குவியும் கைடுகளை ஒதுக்கிவிட்டு ஏற்கனவே எங்களுக்காக காத்திருந்த கைடான ஜான் என்பவருடன் பயணித்தோம்.
ஒரு சின்ன கிராமம் போல தான் இருக்கிறது.ஆனால் அனைத்து வசதிகளும் இருக்கிறது.ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டும் நபர்கள், டிராபிக் சிக்னலில் நின்று செல்லும் வண்டிகள் என புதிதாய் இருக்கிறது.அம்மணிகள் அனைவரும் அழ அழகாய் வாழைத்தண்டு கால்களுடன் அரை ட்ரவுசரில் இருக்கின்றனர்.(முடியல).கண்களால் பருகியபடியே கடந்து சென்றோம்.


 இங்கு அதிகம் சுற்றுலா வாசிகளை காண முடிகிறது.இது ஒரு மினி தாய்லாந்து போல இருக்கிறது.மசாஜ் சென்டர்கள், கேளிக்கை விடுதிகள் என அதிகம் இருக்கிறது.நிறைய நமீதாக்கள் ஆங்காங்கே அழகழகாய் தென்படுகின்றனர்.நாம போன நேரம் சரியில்லை என்னவோ ஒரே மழை.மழை பெய்த காரணத்தினால் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை. நம்ம ஆசைகள் அனைத்தும் நிராசைகள் ஆகி விட்டது.ஆனாலும் என்னுடைய ஒரே ஒரு ஆசை மட்டும் நிறைவேறியது.அது டாட்டு.
சும்மா ரெண்டு மணி நேரம்...மாறி மாறி ஊசிய மாத்தி மாத்தி... குத்தி குத்தி  ஒரு வழியா (வலி ) விட்டான்.அதுக்கு அப்புறம் தான் தெரியுது வலி...சும்மா பின்னுது.இன்னிக்கு வரைக்கும் வலி இருக்குது.இது எப்போ ஆறி நார்மல் ஆகி வெளிய ஆர்ம்ஸ் காட்டுறது..?
இந்தோனேசியா போய் செஞ்ச ஒரு உருப்படியான விஷயம் இதுதான்.அப்புறம் நிறைய கடல் உணவுகள் சாப்பிட்டது.(அது அடுத்த பதிவு ) நம்ம.கூட வந்த நண்பர் போய் மசாஜ் பண்ணிட்டு வந்தார்.செமையா இருக்கு மச்சி என்று.மசாஜ் செய்பவர்களின் போட்டோ ஆல்பம் இருக்கிறதாம்.அதை பார்த்து நமக்கு பிடித்தவர்களை செலக்ட் செய்து விட்டால் அவர்கள் வந்து மசாஜ் செய்வார்களாம்.நண்பன் சொல்ல சொல்ல ....அட டா வடை போச்சே....ஹி..ஹி ஹி ...( என் வயிற்றெரிச்சல் அவன சும்மா விடாது ) டாட்டு போட்டதால் அதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது. இந்த தீவுக்கு பக்கத்துல இன்னொரு தீவு இருக்கு.அங்க பாம்பு, குரங்கு, முதலை கறி கிடைக்குமாம்.எங்களுக்கு ஒரு நாள் தான் இங்க ப்ரோகிராம் என்பதால் அங்க போக முடியல.இன்னொரு முறை போகணும்.
அப்புறம் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் இதுதான்.இங்கு தங்க விலை எவ்வளவு தெரியுமா...3.60,000..ருபியா...நம்ம ஊர் மதிப்பில்  2000.



வழி: சிங்கப்பூர் ஹார்பர் பிரண்ட் இல் இருந்து கரிமுன் செல்ல பெர்ரி டிக்கெட் வாங்கி கஸ்டம்ஸ் முடித்து பெர்ரி (போட்) யில் பயணிக்க வேண்டும்.அங்கு சென்றவுடன் ஆன் அரைவல் விசா வாங்கி அந்த நாட்டுக்குள் பிரவேசிக்க வேண்டும்.ஒவ்வொரு முறையும் பாஸ்போர்ட் விசா காட்ட வேண்டி இருக்கிறது. புது வித அனுபவம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம் 

இன்னும் கொஞ்சம்...

Thursday, October 25, 2012

வெளிநாட்டு அனுபவம்..ஒரு பார்வை

ரொம்ப நாளா வெளி நாட்டுக்கு போகணும்னு ஆசை இருந்துச்சு..இப்போ அது நிறைவேறி விட்டது.இதுவரைக்கும் பிளைட்ஐ அண்ணாந்து பார்த்ததோடு சரி.அதில் இப்போ தான் முதல் முதலாய் பயணம் செய்து இருக்கிறேன். எத்தனையோ முறை வாய்ப்புகள் கிடைத்தது உள் நாட்டில் பயணம் மேற்கொள்ள...ஆனால் எனது கால் கண்டிப்பாய் வெளிநாட்டு விமானத்தில் வைத்த பின்பு தான் மற்றது எல்லாம் என முடிவாய் இருந்ததில் இப்போது வெற்றியும் பெற்று விட்டேன்.என்னை நானே கிள்ளிப் பார்க்கிறேன்.
எவ்ளோ நாள் தான் ஊர் சுற்றும் வாலிபன் (ஹி ஹி  ஹி ) என்று சொல்வது...உலகம் சுற்றும் வாலிபன் ஆக வேணாமா என தீவிர முயற்சி மேற்கொண்டதில் என் முதல் பயணம் மலேசியா, சிங்கப்பூர்,  இந்தோனேஷியா ( டேன்ஜங் பலாய் கரிமூன்)  என ஆகி விட்டது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்போதைக்கு ஒரு சில போட்டோ மட்டும் போட்டு இருக்கேன்.இன்னும் விரிவா நம்ம வெளிநாட்டு அம்மணிகளோட பார்க்கலாம்.







ஒவ்வொரு ஊரையும் விரிவா பார்க்கலாம்.நான் கண்ட இடங்கள், ருசித்த உணவுகள் என அனைத்தும்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


இன்னும் கொஞ்சம்...