Wednesday, February 20, 2019

கோவை மெஸ் - HSR, ஹோட்டல் சத்தார் ராவுத்தர் பிரியாணி, காந்திபுரம், கோவை


HSR
ஹோட்டல் சத்தார் ராவுத்தர் பிரியாணி.


            புதிதாக காந்திபுரம் ஏழாவது வீதி தொடர்ச்சியில் இந்த ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.ஏற்கனவே துடியலூரில் உள்ள கடையின் கிளையாக இது ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.(தீபாவளிக்கே ஓபனாம்...நம்ம கண்ணுக்குத்தான் சிக்காம போயிருக்கு...).இன்னிக்கு நம்ம பையன் ஒருத்தர் சொல்லவும் ஓடோடி(டூ வீலர்ல தான்) போனோம் ஹோட்டலுக்கு.
                ஹோட்டல் நல்ல பளிச்சென்று மிக சுத்தமாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் பிரியாணியின் வாசனை நம் மூக்கைத் துளைக்கிறது.டேபிளில் வாழை இலை போட்டு, தண்ணீர் தெளித்தவுடன், சுடச்சுட பிரியாணி ..ஆம்...பீஃப் பிரியாணி தான்…சூடாய் வைக்க, பிரியாணியானது பொலபொலவென உதிர்ந்து உள்ளே இருக்கும் பீஃப் துண்டுகள் வெளியே வர, அந்த கணத்தில் பிரியாணியின் மணத்தில் கை அனிச்சையாக ஒரு விள்ளலை எடுத்து வாயில் இட, நாவின் ருசி நரம்புகள் நடனமாட தொடங்கின.பிரியாணியின் சுவை சூப்பராக இருக்கிறது.சீரக சம்பா அரிசியின் சுவையில், பிரியாணி மசாலாவின் மணத்தில் பீஃப் இறைச்சி இணைந்து நாடாளுமன்ற எடப்பாடி கூட்டணி போல சூப்பரான சுவையைத் தருகிறது.



அளவான காரத்தில், சூப்பரான சுவையில் பிரியாணி இருக்கிறது.அந்த பிரியாணியின் நிறமும் செம தான்.பீஃப் இறைச்சித் துண்டுகள் நன்றாகவே வெந்து சுவையாக இருக்கிறது.பிரியாணிக்கு கொடுக்கப்படும் சிக்கன் குழம்பு .ஒன்.அதே போல் பச்சடியும்...
சீப் அண்ட் பெஸ்ட் ஹோட்டலில் உள்ள சுவையை விட இங்கு நன்றாகவே இருக்கிறது.ரொம்ப நேரம் காத்திருந்து சாப்பிட்டுவிட்டு வருவதற்கு பதில், இங்கு அதே விலையில் ஆற அமர உட்கார்ந்து நன்கு சுவை பட சாப்பிட்டு வரலாம்.
பீஃப் சுக்காவும் செம.கறி நன்றாக வெந்தும், அதனோடு கூடிய மசாலா கிரேவியும் செமயாக இருக்கிறது.


காந்திபுரம் ஏரியாவில் உள்ள பீஃப் கிடைக்க கூடிய ஹோட்டல்களில் இது நல்ல பெட்டர்.
சீப் அண்ட் பெஸ்ட் விட இதன் சுவை சூப்பர்...விரைவில் சாப்பிட்டு விட்டும் வரலாம்.சாப்பிடுபவர் எப்பொழுது எந்திரிப்பார், என காத்திருக்க தேவையில்லை.
காந்திபுரம் ஏழாவது வீதியின் தொடர்ச்சியில் இந்த ஹோட்டல் இருக்கிறது.விலையும் குறைவு தான்.மற்ற ஹோட்டல்களின் விலையை ஒத்திருக்கிறது.சுவையும் கூடுதலாக இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....