Saturday, February 18, 2023

தள்ளுவண்டி பொரிகடலை

ஒரு சில நாட்களில் பூண்டி தேசம் போவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருப்பேன்.அம்மணிகள் வருகை கொஞ்சம் ஆசுவாசத்தை உண்டாக்கும்.அதனாலயே பொறுமையாக நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.பக்கத்திலேயே தள்ளுவண்டியில் வறுகடலை, வேகவைத்த கடலை, மக்காசோளம், பனங்கிழங்கு, பொரி விற்றுக் கொண்டிருப்பர்.ரிதமாய் ஒலிக்கும் வறுகடலை கரண்டியின் சத்தமும், பொரி கலக்கும் சத்தமும் வேறு நம்மை ரசிக்க வைக்கும். அவித்த கடலையின் வாசம் மூக்கை துளைக்கும்.பசியை வேறு தூண்டும்.

அம்மணிகளின் மேல் கவனம் இருந்தாலும் நாசியானது அந்த வேர்க்கடலையின் வாசத்தை நுகர்ந்து கொண்டிருக்கும்.வாங்கி சுவைக்கலாமா என்ற யோசனையிலேயே மனம் இருக்கும்.

சுகாதாரம் பற்றிய நினைப்பும் அவ்வப்போது வந்து போகும்.கடலை வண்டியையே பார்த்துக் கொண்டிருப்பேன்..அவ்வப் பொழுது அவித்த கடலை விற்பவனின் செயல்களையும் பார்த்து கொண்டிருப்பேன்.அப்படித்தான் அன்றொரு நாள், அவித்த கடலையில் இருந்த கரண்டியை எடுத்து ரிதமாய் தட்டியபடி, அப்படியே கையின் மணிக்கட்டு பகுதியில் இருந்து முழங்கை வரை கரண்டியை வைத்து மேலும் கீழும் வறட் வறட் என சொறிந்து  விட்டு, அந்த கரண்டியை அப்படியே எடுத்து அவித்த கடலையை கலக்கி விட, பகீர் என்றது  பார்த்த உடனே...

வாங்கி சுவைக்க வேண்டிய ஆசையை அப்படியே மண்ணோடு மண்ணாக புதைத்து விட்டேன்....

இனி அம்மணிகளை மட்டும் ரசிப்பது என முடிவெடுத்து விட்டேன்.


கெட்டுப்போன பனங்கிழங்கு, பல நாட்களாய் வெந்து கொண்டிருக்கும் மக்கா சோளம், கடலை மேல் தெளிக்கும் அழுக்கு தண்ணீர் என சுத்தமும் சுகாதாரமும் போட்டி போடும்.

இதை வாங்கி ருசித்தால் இலவசமாய் வியாதிகள் வர வாய்ப்பிருக்கலாம்.

#பூண்டிதேசம் 

#காந்திபுரம் #தள்ளுவண்டி #அவித்தகடலை

No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....