Friday, October 10, 2014

தானம்

சமீபத்தில் ஜோலார்பேட்டை வரை  செல்லவேண்டியிருந்ததால் நடுநிசியில் பயணப்பட்டு காலை வேளையில் ஜோலார்ப்பேட்டை ஜங்சனில் கால் பதித்தேன்.எப்பவும் போல அந்த காலை வேளையில் ரயில் நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்தது.ஏறுவதும் இறங்குவதுமாக பயணிகள்... தூக்க கலக்கத்துடனும் எந்த ஸ்டேசன் என்று எட்டிப்பார்த்து மீண்டும் தன் தூக்கத்தினை தொடர்கின்ற பயணிகள், இருக்கின்ற மிச்ச மீதி தூக்கத்தினையும் கலைக்கும் விதமாக காபி....டீ....காபி...டீ  என ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக சூடான டீ காபி வாளியினை தூக்கிக்கொண்டு சேவலுக்குப்பதிலாய் கூவி கூவி எழுப்பி தங்கள் விற்பனையை ஆரம்பித்துக்கொண்டிருந்தனர்...
வழி அனுப்புவர்களும், வரவேற்க வந்தவர்களுமாய் ஒரு கூட்டம் அலைந்து திரிந்து கொண்டிருந்தது.எனக்கான பிளாட்பார்மில் இறங்கி ஸ்டேசனை விட்டு வெளியேற ஆரம்பித்தேன்.காலைப்பொழுது நல்ல இதமானதாக இருக்கவே நடந்து சென்றால் ஒரு சில கலோரிகளை இழந்து கொஞ்சம் அழகுறலாமே என்ற எண்ணத்தில் நடை போட ஆரம்பித்தேன்...இழுத்துப்போர்த்தியபடி கடைகளும், கடை ஓரங்களில் ஆதரவற்றவர்களும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

சிறிது தூரம் சென்றவுடன் கிளைமேட் கொஞ்சம் மங்கலாக இருக்க, குளிர் காற்று வீசத்தொடங்கியது.குளிருக்கு இதமாக இருக்குமே என்று அருகிலிருந்த ஒரு ஹோட்டலோடு இணைந்த டீக்கடை கண்ணுக்கு தெரிய ஒதுங்கினேன்.நம்பார்வையை படித்த டீமாஸ்டர், காபியா டீயா ? என கேட்க, டீதான் என சொல்ல சூடாய் டீ வந்தது.கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருந்த ஏலகிரி மலையில் தவழ்ந்து சென்ற மேகங்களை ரசித்தபடி சுற்றிலும் திரும்ப, டீக்கடையில் ஏகப்பட்ட பிளக்ஸ் போர்டுகள், சிலேட்டு அறிவுப்புகள் என என் கவனத்தினை ஈர்த்தது...




ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தன.கடை ஓனரை கண்டிப்பாக பாராட்ட வேண்டுமே என்று டீ மாஸ்டரை கேட்டதில் அருகில் காலை விற்பனைக்காக மும்முரத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது மனிதரை  கை காட்டினார்.முண்டாசு பனியனுடன் தீவிரமாக இருந்த அவரை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு குடித்த டீக்காக பணத்தினை கொடுத்துவிட்டு மனநிறைவோடு கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்தேன்...சில அடி தூரம் தான்..மெல்லமாய் தூறல்கள் எட்டிப்பார்த்தன...பிறகு கொட்டென கொட்டித் தீர்த்தது மழை....

நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

நேசங்களுடன்
ஜீவானந்தம்

1 comment:

  1. நல்ல பதிவு நண்பரே

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....