Wednesday, June 8, 2016

கரம் - 22

கோவையின் டிராபிக்...
இப்போது சென்னை போல் மாறிக்கொண்டிருக்கிறது கோவை.கோவையின் அனைத்து ரோடுகளிலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒன்வே ஆக்கி வைத்து இருக்கின்றனர்.மேம்பால பணிகளும், மின்கம்பி பதிப்பு வேலைகளும் நடப்பதால் நிறைய இடங்களில் பள்ளங்கள் தோண்டி வைத்து இருக்கின்றனர். எல்லா ரோடுகளிலும் மிகுந்த ட்ராபிக் ஏற்படுகிறது.வாகனப்பெருக்கம் வேறு அதிகமாகி விட்டதால் ஒவ்வொரு சிக்னலிலும் பல நிமிட நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.அதுவும் மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம்.ரோடே வெள்ளக்காடாக ஆகி வாகனங்கள் மிதந்தபடியே செல்லும்.இப்போது மழைக்காலம் வேறு ஆரம்பித்து இருப்பதால் கோவை நகரம் வாகன நெரிசலால் ஸ்தம்பிக்க போவது உறுதி.

தள்ளுவண்டிக்கடை:
கவுண்டம்பாளையம் சிக்னல்
மாலை நேரத்தில் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருக்கிற இந்த சிக்னல்ல, கொஞ்ச நஞ்ச நேரத்தில் நிற்கிற வாகன ஓட்டிகளின் நாசியானது நிச்சயம் ஒரு சுவையான, வாசனை மிகுந்த மணத்தினை உணர்வார்கள் கூடவே பசியையும்.. அதுவும் மழைக்காலத்தில் வாசனை ஊரைக்கூட்டும்.
காரணம் சிக்னலின் இருபுறமும் தள்ளுவண்டிக்கடை இருக்கிறது.சுடச்சுட போண்டா, பஜ்ஜி, வடை முட்டைப்போண்டா, பக்கோடா ன்னு விதவிதமா போட்டுத்தள்ளுவாங்க.
கடலை எண்ணையின் வாசத்துடன் மாவு எண்ணையில் பொரிகிற வாசமும் ஊரைக்கூட்டும்.
அதுவும் வெங்காய பக்கோடா செம வாசமா இருக்கும்.சாப்பிட்டா அப்படியே நாக்கு நரம்புகளை உசுப்பேத்தும்.அவ்ளோ டேஸ்டா இருக்கும்..

விலையும் கம்மிதான்..
சிக்னல் அருகே எதிர் எதிர் இரண்டு கடைகள் இருக்கின்றன. காந்திபுரம் செல்லும் வழியில் சிக்னல் அருகே இருக்கும் கடை செம டேஸ்ட்..

பார்த்த படம்

இப்போதெல்லாம் தியேட்டருக்கு போய் நிறைய நாட்கள் ஆகிவிட்டன.ஆனாலும் மொபைலில், டிவிடியில் படங்களை பார்த்து கொண்டிருக்கிறேன்.எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கிறேன்.

சமீபத்தில் மருது பார்த்தேன்.பழைய கதை..ஒன்றும் சுவாரஸ்யமில்லை. இந்தப்படத்தையே  முழுதாய் பார்க்க மூன்று நாட்கள் ஆனது.

மலையாளத்தில் மகேஷிண்ட பிரதிகாரம், டார்விண்டே பரிணாமம்,ஆக்சன் ஹீரோ பிஜி பார்த்தேன்.இதுல ஆக்சன் ஹீரோ பிஜி தான் நல்லா இருந்தது.
நிவின்பாலி செம...படமும் பிடிச்சது.

பு(து)த்தகம்:

சமீபத்தில் இடக்கை, வலம் வாசித்தேன்.இரண்டும் வரலாற்று நாவல்கள்.இதில் இடக்கையை விட வலம் மிக நன்றாகவே இருக்கிறது.நரிவேட்டை பற்றின குறிப்புகள் மிகுந்த ஆர்வத்தையும், ஆச்சர்யத்தையும் தருகின்றன.படிக்க சுவராஸ்யமான நாவல் வலம். இதன் எழுத்தாளர் விநாயக முருகன்.
 
இடக்கையை பொறுத்த வரை ஒளரங்கசீப் வரலாற்று கதை.மன்னர் இறந்ததுக்கு அப்புறம் ஏற்படும் பிரச்சினைகள், குருட்டுத்தனமான அதிகாரம் கொண்ட மன்னனின் ஆட்சியின் அவலங்கள்,சாதாரண குடிமகனான இடக்கை பழக்கம் கொண்ட ஒருவனின் கதையோடு வரலாற்று கதை.இதன் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

இப்போது புதிதாக ஆங்கில நாவல்களை வாசிக்கலாம் என்றிருக்கிறேன்.Dongri to Dubai, The Taj conspiracy, RIP, The page 3 murders, இப்படி நான்கு நாவல்களை வாங்கியிருக்கிறேன். எப்போது படித்து முடிப்பேன் என்று தெரியவில்லை.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....