Tuesday, April 18, 2017

கரம் - 28

பார்த்தது:
யு டர்ன்( U TURN) - கன்னடம்



ரொம்ப சிம்பிளான கதை.ஆனா படம் பார்க்க பார்க்க விறுவிறுப்பு. திரில்லர் வகையை சேர்ந்த ரகம்.எதார்த்தமான நடிப்பு, இயல்பான காட்சிகள் என ரசிக்க வைக்கிறது.திரைக்கதை சலிக்க வைக்காமல் அடுத்தடுத்து திருப்பங்களை தருகிறது.சாலை விதிமுறைகளை மீறும் நபரால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் பழிவாங்கல் கதை.கதாநாயகியை பார்த்தால் ஒரு சாயல்ல திவ்யா மாதிரி இருக்காங்க.பாடல்கள் இல்லாத படம்.


KILLING VEERAPPAN - கன்னடம்.

                       செம மொக்கையான படம்.படத்துல ஆனா ஊனா மியூசிக் பேக்ரவுண்ட்ல ம்யூட் ஆயிடறாங்க.சிவராஜ்குமார் எப்பபாரு ஏதோ ஒண்ணை குடிச்சிட்டே இருக்காரு.
ஸ்டைலாமாம்...விறுவிறுப்புன்னு மருந்துக்கு கூட இல்ல.வில்லனை பிடிக்கனும்னா ஹீரோ நல்ல வியூகத்தை காட்டி நம்மளை பரபரபாக்கனும்.ஆனா இதுல எல்லாமே செம மொக்கை.காட்டுல கதை நடக்குறதால் அப்பப்ப ரெண்டு மூணு யானை, ரெண்டு பாம்பை காட்டறாங்க அவ்ளோதான்.கொஞ்சம் கூட இன்ட்ரஸ்டிங்ஐ ஏற்படுத்தாத படம்.இதுல இயக்கம் ராம்கோபால்வர்மா..வாம்...நாசமா போச்சி..

பத்து வருசம் முன்னாடி அதர்மம் அப்படின்னு முரளி நடிச்ச படம் வந்தது.அப்பவே அந்த படம் பார்க்க செமயா இருக்கும்.அது எவ்ளோ மேல்.

நடந்தவை :
                              கோவை அண்ணாசிலை கொடிசியாவில் இருந்து காந்திபுரம் செல்ல ஓலா புக் பண்ணினேன்.கரெக்டா மூணு நிமிசத்துல என்னோட லொகேஷனுக்கு வண்டி வந்திடுச்சு.ட்ரைவர் கூப்பிடறதுக்கு முன்னாடியே நான் அவரோட நம்பர்க்கு ட்ரை பண்ணேன்.லைன் கிடைக்கல.ஆனா அவரு ஓலா நம்பரான சென்னை கோடுடன் கூடிய நம்பர்ல இருந்து கூப்பிட்டாங்க.நானும் பக்கத்தில தான் இருந்ததால் இருக்குற இடத்தை சொல்லி, வண்டியை கண்டுபிடிச்சு ஏறிட்டேன்.
OTP பாஸ்வேர்டு சொல்லவும் வண்டி கிளம்பியது.ஏறின இடத்தில் இருந்து காந்திபுரம் வரைக்கும் என்னோட போன்லயும், இன்னொரு ஜியோ போன்லயும் பேசிகிட்டே வந்தேன்.ஊர்ல இருந்து வந்திருக்கிற என் அம்மாவை ரிசீவ் பண்றதுக்காக, அவங்க இறங்க வேண்டிய இடம், மற்றும் அட்ரஸ் சொல்லிட்டு வந்தேன்.

ஐந்து நிமிசத்துக்குள் காந்திபுரம் மேம்பாலம் வந்துட்டோம்.அன்னபூர்ணா ஹோட்டல் முன்னாடி நிற்க சொல்லியிருந்த அம்மாவும், அண்ணனும் பக்கத்துல இருந்த ஆவின் டீக்கடையில் டீ குடிச்சிட்டு இருந்தாங்க.நான் எதுக்கு வண்டியோட வெயிட் பண்ணனும்னுட்டு வண்டி ட்ரிப்ஐ குளோஸ் பண்ண சொல்லிட்டேன்.பில் தொகை ஓலா மணியில் இருந்து ஆட்டோமேடிக்கா அமெளண்ட் கழிந்திடும்.நானும் அவசர கதியில் இறங்கிட்டேன்.
                       ஆவின் கடையில் நானும் ஒரு டீ சொல்லிட்டு அவங்ககூட பேசிட்டு இருந்தேன்.டீ குடிச்சு முடிச்சதும் மீண்டும் ஓலா புக் பண்ணேன்.வண்டி வந்துச்சு.ஏறி கவுண்டம்பாளையம் போகனும்னு சொல்றோம்.சரின்னு சொல்லிட்டு வண்டியை இடது பக்கம் ஓட்டிட்டு போறாரு..காந்திபுரம் சிக்னல்ல வண்டி நிக்குது.அப்போதான் பார்க்குறேன் என்னோட ஜியோ போனை காணோம்னு.அதுவரைக்கும் போன் இல்லாமல் இருப்பதை கவனிக்கல.யோசிச்சு பார்த்ததில் முன்ன வந்த வண்டியில் விட்டுட்டேன் என்கிற எண்ணம் வரவும், என் ஜியோ நம்பருக்கு டயல் பண்றேன்.போன் சுவிட்ச் ஆப்.எவனோ அமுத்திட்டான் என்கிற எண்ணம் உடனடி வந்து போனது.உடனே முன்னே வந்த ஓலா வண்டி ட்ரைவர்க்கு போன் அடிச்சேன்.அவரு கிட்ட என் போனை உங்க வண்டில மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லவும், அவரு உடனே ஆமாங்க இங்க தான் இருக்குன்னு சொல்லிட்டாரு (ஏதோ ஒரு ஞாபகத்தில் ). உடனே நான் ஏன் போன் சுவிட்ச் ஆப்ல இருக்குன்னு கேட்கவும்,நான்தான் போன்ஐ ஆப் பண்ணிட்டேன்னு சொல்றாரு.ஏன்னு கேட்டா கால் வரும்ல அதான் அப்படின்னு சொல்றாப்ல.ஏங்க, போனைத் தொலைச்சவன் போன் பண்ணி கேட்டா, கொடுக்குறதுக்கு ஈசியா இருக்கும்ல என கேட்டதுக்கு பதிலை காணோம்.உடனே எனக்கு செம கோபம்.இப்ப எங்க இருக்கீங்கன்னு கேட்க, சரவணம்பட்டி போயிட்டு இருக்கேன்னு சொல்ல, இருங்க, நான் வரேனு சொல்ல, காரில் கஸ்டமர் இருக்காருன்னு அவர் சொல்ல, நான் ஒரு ஆளை அனுப்பறேன் அவருகிட்ட மொபைல குடுங்கன்னு சொல்லவும் சரிங்கன்னு சொல்ல, கூட நான் ஏங்க, உங்க வண்டில கஸ்டமர் ஒரு பொருளை விட்டுட்டு போனா, அதை பத்திரமா எடுத்து தருவீங்கன்னு பார்த்தா, நீங்க போனை ஆஃப் பண்ணிட்டு எடுத்துகிட்டு போறீங்களே இது நல்லாவா இருக்கு என கேட்டு விட்டு, சரவணம்பட்டி செக்போஸ்ட் பக்கத்துல நம்ம ஆளு ஒருத்தரு இருக்காப்ல.உடனடியா அவருக்கு போன் போட்டு, ட்ரைவர் நம்பரும், வண்டி நம்பரும் கொடுத்து உடனே போன் பண்ணி மொபைலை வாங்குன்னு சொல்லவும், அவரு குரு அமுதாஸ் ஹோட்டல் அருகே வண்டியை நிறுத்தி மொபைல வாங்கிட்டு எனக்கு போன் பண்ணாப்ல..அண்ணா..வாங்கிட்டேன் என சொல்லவும்.
மனம் திருப்தி அடைந்தது.
வண்டியில் தெரியாமல் விட்டுவிட்ட பொருளை திருப்பிக்கொடுப்பதை விட்டுவிட்டு, அபகரிக்க முயல்வது எவ்வகையில் நியாயம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

  1. டிரைவருக்கு என்னவொரு வில்லத்தனம்...!

    ReplyDelete
  2. இரண்டாவது வலைப்பதிவர் மாநாட்டுக்கு வரும்போது இப்படிதான் நான் என் கேமராவை விட்டுட்டு வந்தேன். திரும்ப கிடைக்கவே இல்ல ஜீவா

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....