Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

Friday, May 29, 2020

ஊரடங்கு - மது (சுய) புராணம்

ஊரடங்கு - மது (சுய) புராணம்

தமிழக மதுபானங்களை அடியோடு நிறுத்தி ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.அதற்காக குடியை விட்டுவிட்டேன் என்பது அர்த்தமல்ல.தமிழகத்தினை தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் வெளிநாட்டு மதுவகைகளையே உண்டு வருகிறேன்.காரணம் கல்லீரல் மேல் கொண்ட அதீத பற்று தான்.

ஏர்போர்ட்டில் நண்பர் ஒருவர் இருக்கிறார்.அவரின் தயவின் காரணமாக மாதம் எனது கோட்டாவினை பெற்று கொள்கிறேன்.கடந்த முறை கர்நாடகா சென்றிருந்த போது நிறைய மதுவகைகளை அள்ளிப் போட்டு கொண்டு வந்தேன்.அங்கே யுனைட்டடு டிஸ்டில்லரீஸ் தான் உற்பத்தி.பெங்களூரிலேயே உற்பத்தி மையம் இருப்பதால் விலையும் குறைவு.அதே போல் ஆரோக்கியமான மதுவாகவும் இருக்கிறது.அதே போல் கோவையிலிருந்து பாலக்காடு செல்வதும் பக்கம் என்பதால் கஞ்சிக்கோட்டில் உள்ள பெவரேஜ் கடையில் வேண்டிய மது வகைகளை வாங்கி வர முடிகிறது.நம் நண்பர் பாண்டியில் இருந்து வந்த போது அவரும் தன் பங்கிற்கு தானமளித்து விட்டு போனார்.மேலும் எனது மைத்துனர் மனைவி பாண்டியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரிவதால் அவரும் தன் பங்கிற்கு இந்த அண்ணனிற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்.

எமது பணியாட்கள் வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களுக்கு சென்று வரும் போது எனக்காக மது வகைகளை வாங்கி வருவது என்பது எழுதப்படாத ஒப்பந்தம்.அதே போல் பேஸ்புக் நண்பர்களும், தொழில் முறை நண்பர்களும் அவ்வப்போது மது பாட்டில்களை அன்பளிப்பர்.வெளிநாட்டு நண்பர்களும் இதில் அடக்கம்.

அதனால் தான் இந்த பாழாய் போன தமிழகத்தில் மட்டும் எதையும் வாங்குவதில்லை.ஒரு காலத்தில் தமிழகத்தில் அளவான மது உற்பத்தி மையங்கள் இருந்தபோது நல்ல தரமும் ஆரோக்கியமும் இருந்தது.ஆனால் இப்போது போட்டி போட்டுக்கொண்டு ஆளாளுக்கு தயாரிக்கின்றனர்.அதனால் தரமும் இல்லை உறுதியும் இல்லை.மேலும் இந்த தமிழகம் மட்டும்தான் குடிகாரனை மிகவும் கேவலமாக நடத்தி வருகிறது.ஆனால் தமிழகத்தில் பெரும் விற்பனை வருவாயை இந்த கேவலமான குடிகாரர்கள் தான் அளித்து வருகின்றனர்.அந்த மனசாட்சி இன்றி டாஸ்மாக் பாரில் இருந்து, கேவலமான பூச்சி கொல்லி மதுவகைகளை உற்பத்தி செய்வதில் வரை இந்த தமிழகம் மிகவும் நாசமாய் போய் விட்டது.அதனாலாயே தமிழக மதுவகைகளை தொடுவதில்லை.

பக்கத்து மாநிலங்களோடு நட்புறவு பேணுவதால் எப்போதும்
மது பிரச்சினை இல்லை.மதுவை அருந்துவதும் அளவாகத்தான். அதனால் கையிருப்பு எப்பவும் இருக்கிறது.இந்த லாக்டவுன் என்னை பொருளாதார ரீதியாக மட்டும் தான் பாதிக்க வைத்துள்ளது.மது ரீதியாக இல்லை.

மேலும் இதைப் படித்து விட்டு என்னிடம் ஏதாவது தேற்றலாம் என்றால் அதற்கு மிகப்பெரிய வருத்தங்களுடன் கூடிய வணக்கங்கள்..
இந்த கொரோனோ முடிந்தவுடன் தாரளமாய் தங்களோடு மதுவருந்த வருகிறேன்.செலவுகளிலும் பங்கெடுத்து கொள்கிறேன்...

எச்சரிக்கை : மது உடலுக்கு தீது


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, October 12, 2015

குறும்படம் - சரக்கு என்னுது சைடிஷ் எமனுது

வணக்கம்...
                            ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி...
                    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நம்ம வேலை நடப்பதால் அங்கதான் அதிகம் முகாமிட்டு இருக்கிறேன்.திருப்பத்தூரில் உள்ள முக்கிய அனைத்து உணவகங்களிலும் ஒரு கை பார்த்து இருக்கிறேன்.
                அவ்வப்போது ஓரிரு நாட்கள் கோவையில் தலைகாட்டுவதோடு சரி....சமீபத்தில் ஏற்காடு வேறு சென்றிருந்தேன்..கொஞ்சம் இளைப்பாறுதல் வேண்டி..அங்கேயும் ஒரு வேலை நிமித்தமாகத்தான் சென்றிருந்தேன்..டூ இன் ஒன் புரோகிராம்..
              இதற்கிடையில் இடைவிடாத பணிகளுக்கு இடையிலேயும் ஒரு குறும்படத்தில் குடிக்க...சாரி நடிக்க வாய்ப்பு வந்தது.நண்பர் கோவை சதிஸ் அவர்கள் ஒரு விழிப்புணர்வு குறும்படம் எடுப்பதாகவும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ஒண்டிப்புதூர் அகிம்சா அறக்கட்டளை சார்பாக பொது திடலில் திரையிடப்போவதாகவும் சொன்னார்.அந்த குறும்படத்தில் எனக்கேற்ற ஒரு கேரக்டர் இருப்பதால் அதை செய்ய முடியுமா என கேட்க அந்த பிஸியான வேளையிலும் ஓகே சொல்லிவிட்டு குறும்படத்தில் நடிக்க ஆரம்பித்தேன்..


             கோவையின் இருகூர் பகுதிகளில் எனது பகுதிகள் படமாக்கப்பட்டவுடன் நான் திரும்பவும் திருப்பத்தூருக்கே சென்று விட்டேன்.அதற்கப்புறம் குறும்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ஆகஸ்ட் 15 அன்று திரையிடப்பட்டது.இது வரைக்கும் நான் பார்க்கவில்லை.போன வாரம் தான் குறும்பட சிடியினை எனது ஆபிஸில் தந்து விட்டு போனார் சதிஸ்..
         என்ன ஆச்சர்யம்….மிக நன்றாக வந்திருக்கிறது.நண்பர்கள் அனைவரும் நடித்து (?) இருக்கின்றோம்.நம்மூரு கவிதாயினி கோவை மு சரளா கூட ஒரு காட்சியில் தலைகாட்டி இருக்கிறார்கள்.பேராசிரியர் அன்பு சிவா, நண்பர் கார்த்திக், பஷீர், சக்திவேல், கேமரா மேன் மது, டைரக்டர் சதிஸ் இவர்களது ஒத்துழைப்பால் நன்றாக வந்திருக்கிறது.
டைட்டில் தான் ரொம்ப பெருசு...

குறும்படம் காண


என்ன....குறும்படத்தில் பகார்டி தராம லா மார்டின் கொடுத்துட்டாப்புல டைரக்டரு......அதுதான் கொஞ்சம் வருத்தம்....


பாருங்க….உங்களுக்கு பிடிச்சா ஒரு லைக் மட்டும்…..


நேசங்களுடன்
ஜீவானந்தம்
         





இன்னும் கொஞ்சம்...

Thursday, March 7, 2013

கள்ளுக்கடை ஓரத்திலே....திருச்சூர், கேரளா

 கடவுளின் தேசம் - சாரி குடிமகன்களின் தேசம் - கேரளா
கள்ளுக்கடை ஓரத்திலே...திருச்சூர், கேரளா....
 
எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.

ம்ம்ம்...இப்படிலாம் சிலைடு எல்லாம் போடற அளவுக்கு என் நிலைமை ஆயிடுச்சே.....இதை நினைச்சாத்தான் ரொம்ப வருத்தமா இருக்கு....இதுக்கே இன்னொரு வாட்டி கேரளா போகனும் போல......
 
போன மாசம் கோவிலுக்கு போலாம்னு கேரளா திருச்சூர் போய்ட்டு அப்படியே என்னோட பக்தி பயணத்தை முடித்துவிட்டு நம்ம பயணத்தை எங்காவது ஆரம்பிக்கலாம் அப்படின்னு நம்மள கூட்டிட்டு போன சேட்டன் கிட்டே அடிபொளி கள்ளும் , பீஃப்மும் எவிட கிட்டும் என்று மலையாளத்தில் கேட்க (ஏதோ கொஞ்சம் கொஞ்சம் மலையாளம் அறியும் ஞான் ..ஹி ஹிஹி ) .....வண்டி போய் நின்ன இடம் கள்ளுக்கடை..
 
 
 
அந்த காலை வேளையிலும் நம்மோடு போட்டி போட ஒரிரு பங்காளிகள்...அந்த இடத்தின் சூழ்நிலை மிக ரம்மியமாக இருந்தது..ரோட்டோரத்தில் கடை...கடைக்கு பின்புறம் வாழை மற்றும் தென்னந்தோப்பு...
தகரக்கொட்டாயில் நம்ம கடையும் கள்ளுக்கடைக்கே உண்டான மணத்துடன் இடமும் , ஆங்காங்கே இப்பவோ அப்பவோ என தள்ளாடிக்கொண்டிருக்கிற மர பெஞ்ச்சும் போடப்பட்டிருக்கிறது...... 
இன்னும் கூட்டம் கூடவில்லை...ஒருவேளை நம்ம பங்காளிக ரொம்ப லேட்டாத்தான் வருவாங்களோ....(இதே நம்ம ஊருல ஷட்டர் முன்னாடி தவமாய் தவம் கிடப்போம்....)ஒரு சில பேர் மட்டுமே மலையாளத்தில் தீவிர ஆலோசனையில்...
 விலைப்பட்டியல் பார்த்தேன்..ரொம்ப கம்மிதான்..கிங் ஃபிஷர் பீர் பாட்டிலில் நிரப்பப்பட்டு இருக்கிறது கள்ளு.அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிற பாட்டில்களை பார்க்க பார்க்க மனம் குதூகலித்தது...நமக்கு போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து என்பதால்....ஒரே ஒரு கள்ளு பாட்டில் வாங்கி ஆரம்பித்தேன் கச்சேரியை...கூட துணைக்கு பீஃப் கறியும்....
ஏகப்பட்ட சைட் டிஷ்கள்..கள்ளுக்கடையில் மட்டுமே கிடைக்கும்..மத்தி, பொரிச்ச மீன், கப்பா, போர்க், பீஃப், ஊறுகாய் என பல்வேறு வெரைட்டிகள்..நமக்கு ரொம்ப பிடிச்சது மீனும் பீஃப் தான்..மீன் சூடாக வேறு இல்லை..அதனால் மீன் சாப்பிடவில்லை..அதனால் பீஃப் மட்டுமே...இரண்டும் செம டேஸ்ட்...கொஞ்சம் கொஞ்சமாய் கள்ளு காலியாக மிதமான நிலைக்கு மனம் நிறைந்து போனது....
விலையும் கம்மிதான் ..650 மிலி 40 ரூபாய் தான்...இன்னும் அதிகம் சாப்பிட ஆசைதான்...அதிகமாய் சாப்பிட்டால் அடிக்கிற வெயிலில் வயிற்றுக்கு உபாதை ஏற்படுத்திவிடும் என்ற அபாய காரணத்தால் ஒரு பாட்டிலோடு நிறுத்திவிட்டேன்..(இல்லேனா எப்போ திரும்பி வர்றது கோவைக்கு...அப்புறம் அங்கேயே ரூம் போட்டு ஆரம்பிக்கனும் மீண்டும்...)

 குடிமகன்களின்
தேசத்தில்
நானும்
ஒரு
அரசனாகவே
இருக்க விரும்புகிறேன்.

இதுக்கு முன்னாடி போன அனுபவம் குடிமகன்களின் தேசம்

 
கிசு கிசு : மது உடலுக்கு தீது. ம்ம்ம்ம்ம்..இப்படி எல்லாம் சென்சார் போட வேண்டி  இருக்கு..அப்புறம் இதை படித்து விட்டு உங்கள் கை அரித்தால் கம்பெனி பொறுப்பாகாது....

 
நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, October 15, 2012

குடிமகன்களின் தேசம் -பாண்டிச்சேரி - ஒரு பார்வை

குடிமகன்களின் தேசம் -  பாண்டிச்சேரி ஒரு பார்வை...மறுபடியுமா....

எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.
         
        செங்கல் பட்டு போய்ட்டு ரிட்டர்ன் வரும்போது விழுப்புரம் வந்தவுடன் வண்டி கொஞ்சம் தள்ளாட ஆரம்பித்தது.சரி ஏதோ சமிக்ஙை செய்யுது அப்படின்னு பார்த்தா வண்டி பாண்டிச்சேரி போற ரோட்டுக்கு  பக்கத்துல நிக்குது..சரி வந்தது... வந்தோம்....பார்த்துட்டே போவோம் பாண்டியை அப்படின்னு கிளம்பினேன்.
விழுப்புரம் ரொம்ப டிராஃபிக்...மெதுவாகவே வண்டி ஊற மனசுக்குள் வேகம் எடுக்க ஆரம்பித்தது.செல்லும் வழியில் தென்பட்ட அம்மணிகளில் மனம் லயிக்க மறுத்தது.என் மனதை படித்தது போல பாய்ந்து சீறியது என் சிங்கம்.(அதாங்க நம்ம வண்டி...)
விழுப்புரத்தில் இருந்து இருபது இருபத்தஞ்சு கிலோ மீட்டருக்குள் பாண்டி பார்டர் வர ரொம்ப சந்தோசமாக இருந்தது....போலிஸ் செக் போஸ்ட் கள் பாண்டி பார்டர் வந்துவிட்டதை ஞாபக படுத்தின....புதுச்சேரி அரசின் முத்தமிழ் வாயில் நம்மை வரவேற்றது.
 
அப்படி ஒண்ணும் சுத்தி பார்க்க போறது கிடையாது.போறதே கொஞ்சம் நம்ம ஜாதிக்காரங்களை பார்க்கத்தான்.வழி நெடுக நமக்கான கடைகள் நிறைய இருக்க, ஆங்காங்கே பங்காளிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்க மனம் மிக மகிழ்ச்சி அடைந்தது...கொஞ்ச நேரத்தில்  சரியான இடத்தில் வண்டி நிற்கவே அங்கே  இருந்த ஒரு புதுச்சேரி அரசின் மதுபானக் கடை நம்மை வரவேற்றது.
கை பரபர வென துடிக்க கால் முன்னேறி செல்ல கடைக்குள் உள்ளே நுழையவும் நமக்கு முன்னே  ஏற்கனவே ஒரு கூட்டம்..ரொம்ப பேருக்கு இதுதான் வேலை போல...நம்மளை மாதிரியே....இந்த கடையை பத்தி சொல்லி யாகணும்..எவ்ளோ நீட்டா இருக்கு.கொஞ்சம் கூட குப்பை இல்லாமல் மிக நன்றாக வைத்து இருக்கின்றனர்.நம்ம டாஸ்மாக் நினைச்சா படு கேவலம்...சுகாதாரம் லாம் சுத்தம் நம்ம ஏரியாவுல....ஆனா இங்க பரவாயில்லை...
 
அங்கே இருந்த குடிமக்களில் நானும் ஒருவனாக ஆனேன்.நம்ம ஃபெவெரைட் பக்கார்டி ஆர்டர் செய்து விட்டு அப்படியே சைட் டிஷ் எல்லாம்ஆர்டர் செய்தேன்.
நமக்கு பிடித்த நெத்திலி ஃபிரை, நண்டு வறுவல், சங்கரா மீன், சுண்டல், என அனைத்தும்...
 
பாண்டியில் எப்பவும் சைட் டிஷ் மிக நன்றாக இருக்கும்.தனி கவனம் எடுத்து செய்வார்கள் போல...அவ்ளோ சுவை.
முதலில் வந்தது  நெத்தில் ஃபிரை.மிக டேஸ்ட்.மொறு மொறு வென....அருமை...அதிகமா விரும்பி சாப்பிடுவது சரக்குக்கு அப்புறமா இதுதான்...
சங்கரா மீன் ....தோசைக்கல்லில் சுட்டு கொண்டு வந்து இருந்தனர்.கொஞ்சம் கூட எண்ணை இல்லாமல் மிக சுவை உடன்.....

நண்டு....நல்ல சுவை...பொடி பொடி நண்டாய் நிறைய...ஒவ்வொன்றையும் கடித்து கடித்து இருக்கிற சாறை உறிஞ்சி  எடுத்து விட்டு  கீழே போட வெறும் ஓடு மட்டும்  ஓடியது.
அப்புறம்...ஆப்பாயில்...இதை சொல்லவே வேணாம்...அவ்ளோ பிடிக்கும்...எல்லா விலையும் ரொம்ப குறைவு தான்.சரக்கு விலையும் கம்மி தான்.அப்புறம் ஒரு ரெண்டு மணி நேரம் இந்த தேசத்தில் குடிமகனாய்  இருந்து விட்டு கிளம்பினேன்.
 
கிளம்பும் போது மனசுக்குள் ஒரு சின்ன தடுமாற்றம்...நாம பெட்ரோல் போட்டுகிட்டோம். நம்ம வண்டிக்கும் எதாவது கருணை காட்டணுமே அப்படின்னு  பக்கத்துல இருந்த பங்க்ல வண்டிக்கு டீசல்  ஃபில் பண்ண சொன்னேன்.பார்த்தா டீசல் விலையும் குறைவுதான்.48.06 பைசாதான். பரவாயில்லையே...எல்லாம் கம்மியா இருக்கே அப்படின்னு ரொம்ப சந்தோசத்துடன் கோவை திரும்பினேன்...கூட அடுத்த நாளுக்கு உண்டான சங்கதிகளுடன்...

 குடிமகன்களின்
தேசத்தில்
நானும்
ஒரு
அரசனாகவே
இருக்க விரும்புகிறேன்.

இதுக்கு முன்னாடி போன அனுபவம் குடிமகன்களின் தேசம்

கிசு கிசு : மது உடலுக்கு தீது. ம்கூம்..இப்படி எல்லாம் சென்சார் போட வேண்டி இருக்கு..அப்புறம் இதை படித்து விட்டு உங்கள் கை அரித்தால் கம்பெனி பொறுப்பாகாது....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...