Tuesday, February 18, 2025

கோவை மெஸ் - EMBIRE BIRIYANI, R.S.PURAM, COIMBATORE

 EMPIRE BIRIYANI - R.S.PURAM


பாசுமதி அரிசி பிரியாணி தேடலில் இந்த ஹோட்டல் அகப்பட்டது... பர்த்டே கொண்டாட்டங்கள் இன்னும் தொடர்வதால் நண்பரின் அழைப்பிற்கேற்ப இங்கே நுழைந்தோம்.

ஹோட்டல் அட்மாஸ்பியர் பெயருக்கேற்றவாரே நல்ல இண்டீரியர் அமைப்புடன், ஏசியின் மென் குளிருடன் அழகாய் இருக்கிறது. அதிக பட்சம் 35 - 40 பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் படி டேபிள்கள் நல்ல இட வசதியுடன் போட்டு இருக்கின்றனர்.வாஷ் ஏரியாதான் மிக சிறிது..

அந்தளவுக்கு கூட்டம் இல்லாததால் ஓகே தான்...  உணவுக்கு வருவோம்..

மெனு கார்டில் வெரைட்டிகள் பலதும் கண்ணை உறுத்த, நாம் எதிர்பார்த்த, மிகவும் விரும்பும் பாசுமதி பிரியாணியை ஆர்டர் செய்தோம்...அதற்கு துணையாய் இறால் சில்லி, அல்பஹாம் சிக்கன், லாலி பாப் போன்றவையும் ஆர்டரிட்டோம்.

முதலில் வந்தது இறால் சில்லி... அளவான காரம்.. குறைவான உப்பு.. குழந்தைகளுக்கு ஏற்றதாய் இருந்தது.

அளவு தான் குறைவு..

அடுத்து லாலிபாப்..

அது எப்பவும் போல ஓகே ரகம் தான்..

தொட்டுக் கொள்ள கொடுத்த சில்லி சாஸ் உடன் லாலிபாப் சுவையும் ஓகே..

அடுத்து வந்தது அல்ஃபகாம் சிக்கன். இதுவும் நன்றாகவே இருந்தது.சிக்கன் நன்கு மென்மையுடன் அளவான காரத்துடன் நல்ல டேஸ்டுடன் இருந்தது..அடுத்து நம் ஆவலை தூண்டிய பாசுமதி பிரியாணி...

ஒரு பாத்திரத்தில் பொன்னிறமாய் பிரியாணி வர, எடுத்து கொட்டியதும் உதிரி உதிரியாய் சிதறியது..நீளமான பிரியாணி அரிசி யின் நிறமும் திடமும் ஓகே.. சுவை கொஞ்சம் குறைவுதான்.அளவும் குறைவுதான் ஆனாலும் சாப்பிட நன்றாகவே இருக்கிறது.சிக்கன் துண்டுகள் நன்கு மென்மையுடன் இளம் பஞ்சு கணக்காய் வெந்திருந்தது.பாத்திரத்தில் இரண்டு பெரும் சிக்கன் துண்டுகளும், முட்டையும் இடத்தை ஆக்ரமித்துக் கொள்ள பாசுமதி பிரியாணி அளவு குறைவாக இருக்கிறது.ஒரு ஆள் நன்றாக சாப்பிடக்கூடிய அளவிற்கு இருக்கிறது.ஆனால் மற்ற பிரியாணி ஹோட்டல்களில் இரண்டு பேர் தாராளமாய் சாப்பிடக்கூடிய வகையில் வைக்கிறார்கள்.விலையும் அதே தான்.இங்கு குறைவே.. இதனோடு வந்த கத்தரி கட்டா செம அல்டிமேட்..நல்ல சுவை..பிரியாணிக்கு ஏற்ற செம காம்பினேசன்..ரொம்பவும் குழைந்து போகாத கத்தரியுடன் சிறிது புளிப்பும், காரமும் நல்ல சுவையை தந்தது. பைனல் டச்சாய் பிரட் அல்வா..இதுவும் நல்ல டேஸ்ட்..நன்றாக இருக்கிறது திகட்டாமல்...


நிறைய மெனுக்கள் இருக்கிறது.நமது ஒரே மோட்டிவ் பாசுமதி பிரியாணிதான்..இதை ருசிக்கதான் ஒவ்வொரு ஹோட்டல்களாக தேடிப் போவது..இந்த எம்பையர் ஹோட்டல் பிரியாணி ஓகே ரகம் தான்..விலை கொஞ்சம் அதிகம் தான் ஆனாலும் ஓகே தான்.

அந்தப்பக்கம் போனீங்கன்னா சாப்பிட்டுப் பாருங்க.

உங்களை ருசிக்க வைக்கும்..

RSPURAM டிவி சாமி ரோடு முடிவில் பால்கம்பெனி ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் இருக்கிறது.









நேசங்களுடன்

ஜீவானந்தம்.

#EMBIREBIRIYANI #NONVEG #KOVAINERAM #biriyani #biriyanilovers #CHICKENBIRIYANI #NONVEG #prawns #alfaham #lollypop  #foodblogger #foodie #foodlover #food #blogger #bloggerlife #bloggerstyle #KOVAINERAM  #கோவைநேரம்

இன்னும் கொஞ்சம்...

கோவை - வெள்ளியங்கிரி மலை தரிசனம் போவோர் கவனத்திற்கு

கோவை வெள்ளியங்கிரி மலை ஈசனை தரிசிக்க பிப்ரவரி ஒன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டு பக்தர்கள் மலை ஏறிக் கொண்டு இருக்கின்றனர்.இப்பொழுது கூட்டம் குறைவாக இருப்பதால் நிறைவாக தரிசனம் காண முடியும்.மஹா சிவராத்திரி அன்று லட்சோப லட்சம் மக்கள் ஈஷா விற்கு கூடுவார்கள். அன்றிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.


வெள்ளியங்கிரி மலை ஏறுபவர்களுக்கு டிப்ஸ்.


1) மலையில் கடும் குளிர் இருக்கும்.

எனவே கம்பளி, ஜெர்கின், குல்லா, போர்வை தேவை.


2) மலையில் சுனை நீர் உண்டு.

இருந்தாலும் வாட்டர் பாட்டில் கொண்டு செல்வது நல்லது.


3) கடை கண்ணிகள் ஒவ்வொரு மலையிலும்  இருக்கும். தாகம் தணிக்க, டீ , சோடா வாங்க காசு வைத்துக் கொள்ள வேண்டும். 


4) செங்குத்தான மலைப்பாதை என்பதால் அடிவாரத்தில் மூங்கில் தடி வாங்கிக் கொள்ள வேண்டும்


5) தாகம் அடிக்கடி எடுக்கும் என்பதால் ஆரஞ்சு புளிப்பு மிட்டாய் வைத்துக் கொள்ளுங்கள்.


6) பூஜை செய்ய விருப்பப்பட்டால் தேவையான பொருட்களை அடிவாரத்தில் வாங்கிக் கொள்ளவும்.


7) கேமரா அனுமதி இல்லை.மொபைல் எடுத்து செல்லலாம்


8) கஞ்சா, பீடி, மது, மாமிசம், அனுமதி இல்லை


9) மலையேறும் பக்தர்கள் மிகவும் குறைவான எடையுள்ள பொருட்கள், பேக் எடுத்துச் செல்வது நல்லது.


10) டார்ச்லைட், பவர் பேங்க் வைத்துக் கொள்ள வேண்டும்.


11) முடிந்தவரை பாலீதீன் பைகளை தவிர்ப்பது நல்லது. 


12) மெடிக்கல் எமர்ஜென்சிக்காக ஒரு சில மருந்துகளை கைவசம் வைத்திருப்பது நல்லது.


13) செருப்பு அணியாமல் மலை ஏற வேண்டும் என்பதால் அடிவாரத்தில் விட்டுச் செல்வது / தவிர்ப்பது நல்லது.


14) மலைகளில் குப்பை போடாமல் இருப்பது நல்லது.

பழைய துணிகள், பாட்டில்கள், பாலீதீன் பைகளை மலைகளில் விட்டுச் செல்வது தவிர்க்க வேண்டும்.


15) அடிவாரத்தில் லாக்கர் வசதி உள்ளது.விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.


16) வயதானவர்கள், குழந்தைகள், இதய நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.


17) மொபைல் நெட்வொர்க் வேலை செய்யாது.


18) அட்டைப்பூச்சிகள் இருக்கும்.பாதுகாப்பாய் சுனை நீர்களில் குளிப்பது நல்லது.


எல்லாம் வல்ல வெள்ளியங்கிரி ஈசனை தரிசித்து அருள் பெற வாழ்த்துகிறேன்.

ஓம் நமசிவாய


மலை அடிவாரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுக் கொண்டு வருகிறது.

கோவிலுக்குச் செல்பவர்கள் வெள்ளியங்கிரி அடிவாரத்தில் சிவனை தரிசனம் செய்து விட்டு அன்னதானம் உண்டு விட்டு வாருங்கள்.

ஓம் நமசிவாய..


நேசங்களுடன்

ஜீவானந்தம்


#பூண்டிதேசம்

#வெள்ளியங்கிரி 

#சிவனேபோற்றி

#கோவை #ஈஷா #ishayoga #velliyangirihills #trekking #devotional

இன்னும் கொஞ்சம்...