இன்னொரு தள்ளுவண்டி கடையை பார்க்கலாம்..
சூலூர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு தள்ளுவண்டி கடை இருக்கு.கரூர் போறப்ப எதேச்சையாய் ஆவி பறக்கும் இட்லி குண்டாவினை பார்க்கும் போது அப்படியே வண்டியை ஓரங்கட்டினேன்.
சுடச்சுட இட்லி, அதுக்கு சிக்கன் சேர்வா..செம காம்பினேஷன்...இட்லி போட்டு சேர்வாவை ஊற்றி இட்லியை மூழ்கடிக்கிறாங்க..சூடான இட்லி சேர்வாவில் ஊறி அப்படியே பஞ்சு மாதிரி ஆயிருது.அப்படியே வழுக்கிகிட்டு உள்ள போகுது..அப்பவே இந்த கடையைப்பத்தி எழுதலாம்னு நினைச்சேன்..டைம் இல்ல..இப்ப இன்னிக்கு வர்ற வழியில் சாப்பிடலாம்னு நினைக்க, சூலூர் வந்திருந்தது..அந்த கடைய பார்க்கும் போது அப்பதான் முதல் ஈடு எடுத்துட்டு இருந்தாங்க..ஏழு ஏழரை இருக்கும் மணி...சுடச்சுட இட்லியை பார்த்ததுமே பசி எடுக்க ஆரம்பித்தது..மூணு இட்லி வச்சி சேர்வையை ஊற்றி சட்னியை ஊற்றி தர, இட்லி மிதக்குது சேர்வா கூட்டணியில்..இட்லி நனைந்து நன்கு ஊறி பிய்த்து சாப்பிட கொழ கொழன்னு வருது..சுடச்சுட வாயில போட, இட்லியில் இருக்கும் ஆவி வாயில் வர ஆரம்பிக்குது...நல்ல டேஸ்ட்..அன்னிக்கு சாப்பிட்ட அதே டேஸ்ட் தான்...மூணு இட்லி, நிறைய சிக்கன் சேர்வை, வயிறு புல் ஆகிடுது..கடைசியா டச்சப்புக்கு ஒரு ஆஃபாயில் உள்ள தள்ளிட்டு வண்டியை எடுத்தா இரண்டு மணி நேரத்துல கரூர் வந்திருச்சு...
அந்தப்பக்கமா இரவு நேரம் வந்தீங்கன்னா இட்லி சேர்வையை டேஸ்ட் பண்ணி பாருங்க...டேஸ்ட் நல்லாவே இருக்கும்.என் வாரிசுவுக்கும் இட்லி ரொம்ப பிடிச்சது. அதுவும் தண்ணி மாதிரியான சிக்கன் சேர்வாவை ரொம்ப விரும்பி சாப்பிட்டான்..
சூலூருல இருந்து திருச்சி ரோட்டில் கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் பூர்விகா மொபைல் கடைக்கு எதிரில் ஒரு மஞ்சள் கலர் தள்ளுவண்டி...
#இட்லி
கடை #தள்ளுவண்டி #idli #sulur #கோவைநேரம் #kovaineram
No comments:
Post a Comment
வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....