Saturday, September 6, 2025

மாலை மங்கிய நேரம்...

செல்வபுரத்தில் நண்பரொருவரிடம் பேசிட்டு இருக்கும் போது அருகில் உள்ள சூப் கடையை காட்டி வாங்க சூப் குடிக்கலாம்னு கேட்ட போது அவரு வேறு ஒரு கடையை பத்தி சொன்னாரு.பேரூர் செட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே விக்கிற சூப் பத்தியும், தலைக்கறி பத்தியும் அவரு சொல்ல சொல்ல அவருக்கே உமிழ்நீர் அதிகம் சுரக்குது...அந்த கடைக்காரரை பத்தியும் அதிகம் சொல்ல சொல்ல நமக்கும் ஒரு டெம்ப்ட் ஏறியது...சரி..போற வழிதானே..ஒரு எட்டு பார்த்திடுவோம்னு சொல்லிட்டு அவர்கிட்ட விடைபெற்றுவிட்டு பூண்டி தேசத்திற்கு பயணமானேன்..பேரூரை தாண்டி அவர் சொன்ன லொகேசனில் வண்டியை ஓரங்கட்டிவிட்டு, சூப் கடையில் தஞ்சமானேன்...

அவரிடம் பேச்சுக்கொடுத்தவாறே செல்வபுரத்து நண்பர் சொன்னதை எல்லாம் அவரிடம் கேட்டபடியே சூப் சொல்ல, சுடச்சுட சூப் வந்தது.நல்ல சுவை...

அளவான சூட்டில் ஆவி பறக்க, உள்ளே ஆட்டுக்கால் மிதக்க, வெந்த வெங்காயத்தோடு ஒரு ஸ்பூன் எடுத்து வாய்க்கு கொண்டு வர சூப்பின் மணத்தினை நாசி உணர, பசி நரம்புகள் ஆட்டம்போட, மெதுவாய் ஊதி ஊதி சூப்பினை  சுவைக்க ஆரம்பிக்க,  மென் மிளகு காரத்துடன் ஜிவ்வென்று இளஞ்சூட்டில் உள்ளிறங்கியது..நாவின் மொட்டுகள் நடனமாட, கை மறுபடியும் அடுத்த ரவுண்டினை ஆரம்பித்தது.நற்

சுவை..அளவான காரம்..ஆவி பறக்கும் சூடு, நன்கு வெந்த ஆட்டுக்கால் மாவு போல் கரைய, அதன் சவ்வுகள் மென்மையாய் கடிவாங்கி உள்ளிறங்கியது..அப்பொழுது தான் செல்வபுரத்து நண்பர் சொன்ன விசயம் புரிந்தது.எந்த ஒரு கடை மசாலாவும் இல்லாமல் அவர்களே அரைத்து பயன்படுத்தும் மசாலாதான் இந்த சுவைக்கு காரணம் என சொன்னது ஞாபகம் வந்தது.

கடைக்காரர் ஒரு முதியவர் தான். அடுத்து தலைக்கறியை ஒரு துண்டு டேஸ்ட் பார்த்ததில் அது இன்னும் சுவையோ சுவை...தலையை பொசுக்கின வாடை இல்லாமல் தலைக்கறியின் சுவை இன்னும் அதீதமாக இருந்தது.








பார்சல் போடச் சொல்லி வாங்கி வந்து வீட்டில் பிரித்து உட்கார்ந்தால் நல்ல மணம் கமழ ஆரம்பித்தது.மட்டன் சுவை அதன் வாசத்தில் தெரிய, ஒரு துண்டினை எடுத்து சாப்பிட, வாவ்..கறி நன்கு மென்மையாய் வெந்திருக்க, உப்பும் காரமும் அளவாய் இருக்க சுவை அள்ளியது...எலும்புகள் அதிகம் இருக்காது என சொன்ன செல்வபுரத்துகாரருக்கு ஒரு ஓ போட்டு விட்டு அடுத்த துண்டினை பதம் பார்க்க ஆரம்பித்தேன்.நல்ல சுவை, நல்ல மணம், அளவான காரம், பஞ்சு போல் மென்மையாக வெந்து எளிதாய் மெல்ல நன்றாக இருக்கிறது...வீட்டில் தலைக்கறியே வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட டேஸ்ட் செய்து விட்டு நன்றாக இருக்கிறதே ஏன் ஒரு பார்சலோடு வந்தீர்கள் என கேட்டு விட்டு ஒவ்வொரு துண்டாய் காலி செய்தனர். நல்ல சுவை. அவர்களின் வீட்டு மசாலாவிற்கு தனி சுவை தான்.

தள்ளுவண்டி கடை கூட இல்லை. சின்ன மர பெஞ்ச். அதில் ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ்..அதில் சூப் பாத்திரம்.ஒரு சம்படத்தில் தலைக்கறி.வெளிச்சம் வேண்டி ஒரு நீண்ட குச்சியில் எல்ஈடி பல்ப்...அவ்வளவுதான் கடை..ஆனால் ஒரு பால் கேனில் 30 லிட்டர் இருக்கலாம்.

அதில் தான் வீட்டில் தயாரித்த சூப்பினை கொண்டுவருகிறார்கள்.இங்கே ஸ்டவ்வில் வைத்து சுடச்சுட தருகின்றனர்.

சூப்பின் விலை ரூ.40/  எலும்பில்லா தலைக்கறி ரூ.200/ 

விலை அதிகமாய் தோணலாம்..கால்கிலோவிற்கும் மேலே தருகிறார்கள்..நல்ல சுவை வேறு...ஒர்த் தான்..

பேரூர் செட்டிபாளையம் பஸ்நிறுத்தம் அருகில் முதல் கடை...

அங்கே இரண்டு கடைகள் இருக்கின்றன..அதில் முதலாவது கடை. மாதம்பட்டியில் இருந்து வரும் போது முதல் கடை..பேரூரில் இருந்து போகும் போது கடைசி கடை.

தெலுங்குபாளையத்து காரர் கடை.அந்த பக்கமா போனீங்கன்னா

நம்பி போங்க..

டேஸ்டுக்கு நானும் கேரண்டி..மென் மழைக்காலம் என்பதால் இதமாய் இருக்கும்.உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது இந்த ஆட்டுக்கால் சூப்.அப்படியே அந்த தலைக்கறியும் சாப்பிட்டு பாருங்க..

அட அட ன்னு சொல்வீங்க..


#ஆட்டுக்கால்சூப் #மட்டன்வறுவல் #தலைக்கறிவறுவல் #கோவைநேரம் #அசைவம் #பேரூர் #nonveg #nonvegetarian #mutton #soup #muttonlover #goats #foodie #foodblogger #foodlover #food #foodphotography

No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....