Showing posts with label ஃபேஸ்புக். Show all posts
Showing posts with label ஃபேஸ்புக். Show all posts

Monday, June 16, 2014

ஃபேஸ்புக் துளிகள் - 3 - கோவை நேரம். இன்

வணக்கம்
நம்ம கோவை நேரம்.காம் இப்போது கோவை நேரம் .இன் ஆகி விட்டது.
.காம் எக்ஸ்பைரி ஆகிவிட்டதால் எவ்ளோ முயன்றும் வாங்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம்....வேலைப்பளுவினாலும், தளம் இல்லாததாலும் எழுத இயலவில்லை.இனி ஆரம்பிக்கவேண்டும்.
கோவை நேரம்.காம் தளத்தினை எப்படியும் வாங்கிடவேண்டும் என்கிற முடிவில் தீயாய் வேலை செஞ்சு கடைசியில் அது முடியாமல் போகவே கோவை நேரம்.இன் வாங்கி அதை செயல்பட வைத்து திறம்பட உதவிய நண்பர் பிரபுகிருஷ்ணாவிற்கு நன்றி.....இனி சென்னை வந்தால் முதல்வேளையாக சந்திக்க விரும்புகிறேன்.

ஃபேஸ்புக் துளிகள் :

சமீபத்தில் சென்னை சென்றிருந்தேன்.கடும் வெயிலில் ஏகப்பட்ட ட்ராபிக்கில் சிக்கி நொந்து நூடுல்ஸ் ஆகி வந்தேன்.மெட்ரோ திட்டத்தால் நிறைய ஒன்வேக்கள்...நிறைய கால தாமதம் ஆகிவிட்டது.புதன்கிழமை என்பதால் ஆம்னி பேருந்தில் ஈஸியாக டிக்கட் என்று எண்ணியது தப்பாகிவிட்டது.பத்து மணி அளவில் கோயம்பேடு போனால் கோவைக்கு ஸ்லீப்பர் பெர்த் பஸ்கள் எதுவுமில்லை. எப்படியோ10.30க்கு கிளம்பும் ஒரு டப்பா பஸ்ஸில் இடம் கிடைத்தது.அடுத்தநாள் ரொம்ப்பப்ப்ப........சீக்கிரமாக காலை 9.30 மணிக்கு கோவை காந்திபுரத்தில் கொண்டு வந்து சேர்க்கவும், அன்றைய பகல்பொழுதும் வீணாகிவிட்டது.

முந்தைய இரவு கோவையிலிருந்து சென்னை பயணமானது திடீர் முடிவில்தான்.ஒரு நாள் தான் புரோகிராம்...அதனால் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யவில்லை.இரவு கிளம்பும் போது கூட எங்கும் ரிசர்வ் செய்திடவில்லை.கோவை ஆம்னி பேருந்து நிலையம் சென்று கிடைத்த பஸ்ஸில் ஸ்லீப்பர் பெர்த் டிக்கட் வாங்கி தூங்க ஆரம்பித்துவிட்டேன்..
அடுத்தநாள் காலைதான்..ஃபேஸ்புக்கில் மட்டுமே அப்டேட் செய்திருந்தேன்.அதைக்கண்டு தத்தம் வேலைப்பளுவினூடே என்னை அழைத்து நலம் விசாரித்த பிலாசபி பிரபாகரனுக்கும், சரிதா ஊட்டுக்காரரான பாலகணேஷ் அவர்களுக்கும் நன்றி....சந்திக்க முடியவில்லை நண்பர்களே....அடுத்தமுறை கண்டிப்பாக ...

இருள் விலக ஆரம்பித்த சென்னைப்பொழுதில் தான் கண்விழிக்க ஆரம்பித்தேன்.அப்போது என் பக்கத்து சீட்டு தேவதையின் நடவடிக்கைகளே எனது முதல் ஸ்டேட்டஸாக இருந்தது...

கொஞ்சம் தாமதமாகவே பஸ் ஏறினேன்.
குளிரூட்டப்பட்ட படுக்கை வசதி கொண்ட பேருந்து அது..
அப்பர் பெர்த்தும் லோயர் பெர்த்தும் திரைமூடி கிடந்தன..
எனக்கான பெர்த்தில் அடங்க ஆரம்பித்தேன்..
உறக்கம் விழித்து எழுகையில் சென்னைக்கு அருகில்...
ஜன்னலோரம் வேடிக்கை பார்ப்பது அலாதியான விசயம்....
நகர்ந்து செல்லும் 
மரங்கள் கட்டிடங்கள் மனிதர்கள் 
என மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுக்கும்...
அப்படி மெய்மறந்த நேரத்தில் ......
எனக்கு எதிரான அப்பர் பெர்த்தில் கொலுசொலி சத்தத்துடன் ஒரு பாதம் எட்டிப்பார்க்க 
வெளியே கவனம் சிதறி உள்ளே உற்றுப்பார்க்க ஆரம்பித்தேன்..

தங்கக்கொலுசுடன் அவளது சந்தன பாதம்...
கணுக்கால் வரையே..
மெதுவாய் தரையை முத்தமிட
முயன்று கொண்டிருந்தது கால்கள்...
கொடுத்து வைத்திருந்தது உடை...ஒட்டி உறவாடுவதில்....
பேருந்தின் கம்பியை இறுகப்பற்றிருந்தது
அவளது கைகள்...
வழுவழுப்பாய்...சந்தன பேழை....
மென்மையாய் விரல்கள்...
அணிந்திருந்தன அழகான மோதிரங்கள்....
மேகக்கூட்டங்களில் ஒளிந்திருந்த
வெண்ணிலா வெளியேறியது போல்....
திரை மெதுவாய் விலக ....
அவளின் பளிங்கு முகம் பளிச்சிட ஆரம்பித்தது..

இறுக்கி அணிந்த உடையுடன் 60 கிலோ அப்சரஸ் மெதுவாய் இறங்க... 
நானோ மயங்க ஆரம்பித்தேன்..
செதுக்கி வைத்த செப்புச்சிலையாய் அவள்..
அளவுகள் அம்சமாய் இருக்க....
முழு உருவமும் மொத்தமாய் ....
முன்னே நிற்க எடைகுறைந்து போனேன்..
கலைந்த கேசத்தினை சரி செய்ய கை உயர்த்திய போது
அவளின் தாராள மனதினால் கேரளாவென தெரிந்து கொண்டேன்..
முன்னும் பின்னும் திரும்பியதில்...
குனிந்தும் நிமிர்ந்தும் எழுந்ததில்....
செழிப்புகள் செவ்வனே இருந்தன....

ரசித்து கொண்டிருந்த அந்த நொடிப்பொழுதை
கர்ண கொடூரமாய் ஒரு குரல் சிதைத்தது...
அவளாயிருக்குமோ என்ற அச்சத்திலே உற்றுப்பார்க்க....
நல்லவேளை.....
பேருந்தின் கிளீனர் பையன் கோயம்பேடு..கோயம்பேடு என கத்தித் தொலைத்துக்கொண்டிருந்தான்..
அவன் முடித்ததும் மெல்லிய சங்கீதம் ஒலித்தது.
சத்தியமாய் மொபைல் ரிங்டோன் இல்லை என்பது புரிந்தது..
ஆம்......தேவதை உச்சரித்தாள்..
உதிர்ந்தது முத்துக்கள் சொற்களாய்....
இதழ்கள்....
இசைத்தன வார்த்தைகளை......
”கிண்டி க்கு எந்த பஸ் செல்லும் “... என வினவினாள்..
அடடே.....
அவளிட்ட வினாவிற்கு விடை தெரியாத பாவியாகி விட்டேனே 
என்று மனம் வலித்தது...
இருந்தாலும் சொல்லிவிட்டேன்
தெரியாதுங்க......
என்று...
அவளின் புன்முறுவல்..
மன்னித்தது என் அறியாமையை.....
பார்வைப் பரிமாறல்கள்
பயணப்பட்டுக்கொண்டிருந்தன
அந்த கொஞ்ச நேரத்திலும்....

வெகு சீக்கிரமே 
வந்து சேர்ந்தது
பேருந்து நிலையம்....

ஒன்றாய் வந்தவர்கள்
ஒரு சேர கோயம்பேட்டில்
இருவரும் இறங்கி 
இருவேறு திசைகளில் 
பயணிக்க ஆரம்பித்தோம்.......

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, May 19, 2014

ஃபேஸ்புக் துளிகள் - 2

கோவை R.Sபுரத்தில் இருக்கிற பிரபல மருத்துவமனை.சளித்தொல்லை காரணமாக  ஒரு விசிட் போட்டேன்.ரிசப்சன் அம்மணி டாக்டரை விட அதிகமாய் கேள்வி கேட்டு பார்மை பூர்த்தி செய்து அமரச்சொன்னது..சும்மா இருந்த கண்கள் சுத்தியும் முத்தியும் மேய ஆரம்பித்தது.....பளிச்சிடும் மார்பிள்....கண்ணாடிகள் பொருத்தப்பட்ட சுவர்....கண் கவரும் இண்டீரியர்..எப்பவும் போலவே தனியார் மருத்துவமனை என்கிற பிரமிப்பை ஊட்டி பயங்காட்டியது.
எங்கே ரமணாவாகி விடுவோமோ என்கிற அச்சத்துடனே அமர்ந்திருந்தேன்.காத்திருப்பின் சுகம் அங்கு நடமாடும் கேரள நர்ஸ்களால் புண்ணியமாகிறது.அதுமட்டுமின்றி வந்து செல்லும் அம்மணிகளாலும்...ஒரு மணி நேரம்...ஒரு சில நிமிடங்களாகிப் போனது..அதற்குள் ஒரு நர்ஸ் சேச்சி என் பெயரினை ஏலமிட...கேரள கடற்கரையோரம் ஒய்யாரமாய் இருந்த நான் உடனடி நிகழ்வுக்கு வர டாக்டரின் கேபினுக்குள் நுழைந்தேன்....நம்ம ராசி கன்னி ராசி போல...உள்ளே டாக்டர் அம்மணி...மத்திம வயதில் சுடிதார் போட்ட கடவுளாய்....


எதுவும் கேட்கவில்லை...அமரச்சொன்னது ஒரு நர்ஸ், டாக்டரோ ஒரு குச்சி போன்ற சாதனத்தை காதிலும் மூக்கிலும் விட்டு லைட் அடித்துப் பார்த்த பின் அவரின் பச்சை நிற வாய்க்கவசம் மெதுவாய் அசைந்து வார்த்தைகள் விழுந்தன ஓரிரண்டு...அப்போதுதான் தெரிந்தது ஏன் ரிசப்சனில் அத்தனை கேள்வி கேட்டார்கள் என்று..ஆனால் ரிசப்னிஸ்ட் சொல்லாத அந்த ரெண்டு வார்த்தையை இவர் சொன்னார்....
எக்ஸ்ரே, பிளட் டெஸ்ட் யூரின் டெஸ்ட்.எடுக்கனும் என்று..

அவ்வளவுதான்..மீண்டும் அதே காத்திருப்பு..கேரள கரையோரம் எல்லாம்...கொஞ்ச நேரம் தான்..அதற்குள் ஏலம்விட ஆரம்பித்தது நம்ம பெயரை ரிசப்சன் அம்மணி...
டாக்டர் பீஸ், யூரின் டெஸ்ட் பிளட் டெஸ்ட் என எல்லாம் சேர்த்து 1050 க்கு நம் பீஸை உருவியது...உள்ளே போய் ரைட் திரும்பி 3ம் நம்பர் ரூம் .....எக்ஸ்ரே எடுத்துட்டு பக்கத்துல பிளட் குடுத்திட்டு வாங்க என்று சொல்லி அடுத்த அம்மணியிடம் தள்ளியது..

எக்ஸ்ரே ரூம்...சசிகுமார் படங்களில் குத்துப்பாட்டு ஆடும் ஆண்ட்டி கணக்கில் ஒரு அம்மணி....எதுவுமே பேசவில்லை...காரியத்திலேயே கண்ணாய் இருந்தது....குப்புற படுக்கவைத்து கபாலத்தை அமுக்கி எக்ஸ்ரே எடுத்து துரத்திவிட்டனர் அடுத்த ரூமுக்கு....கேரள அம்மணிக்கு போட்டியாய் வனப்பிலும் அழகிலும் இருந்த நம்மூர் அம்மணியிடம் சாதுவாய் கை நீட்ட, பஞ்சை டெட்டாலில் முக்கி மணிக்கட்டு பச்சை நரம்பை தேட , நமக்கோ சுகமாய் இருக்க, அதற்குள் இரக்கமே இன்றி சிரிஞ்ச் ஊசியை எடுத்து ஒரு குத்து குத்தி..ரத்தம் வரலையே என்று அப்படி இப்படி ஒரு ஆட்டு ஆட்டி ரத்தத்தை எடுக்க உற்றுப்பார்த்ததில் காளியின் மறு உருவம் தெரிந்தது..

அப்போது தான் நினைவுக்கு வந்தது...அய்யயோ அடுத்து யூரின் டெஸ்ட் மாட்டிக்கிட்டோமே...இதற்கு சான்ஸ் தரக்கூடாது என்றெண்ணி டெஸ்ட் பாட்டிலை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தேன் டாய்லட்டுக்கு....ஹிஹிஹி

அப்புறமென்ன..ரிசல்ட் வாங்கியவுடன் மீண்டும் டாக்டருடன் சிட்டிங்.இந்த முறை அம்மணியில்லை...நம்ம ஜாதிக்காரர்....பொசுக்கென்று போய்விட்டது...ஆனாலும் அவரைச்சுற்றி வட்டமிட்டு இருந்த அம்மணிகளால் ஏதோ மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது.அதுவும் அதிக நேரம் நீடிக்கவில்லை...
எக்ஸ்ரே வைத்து படம் காட்டினர்....லேசர் சிகிச்சை பண்ணணுமாம்.. அரைலட்சத்தோடு ஏழாயிரமாம்...
இருங்க வரேன்னு வந்துவிட்டேன்...

கிராமத்து நினைவுகள்

நம்ம தோட்டத்துல இருக்கிற பனைமரத்துல நுங்கு குலைகள் இருக்குறத பார்த்தவுடனே மரம் ஏற ஆள் புடிச்சி ரெண்டு குலையை வெட்டி குடும்பமே சாப்பிட்டோம்..காலியான நொங்கு குடுக்கைல வாரிசுகளுக்கு வண்டி செஞ்சி கொடுக்க...சந்தோசமா ஊருக்குள்ள ஓட்டிக்கிட்டு இருக்குதுங்க...நம் பால்ய காலத்தில் இது போல எவ்ளோ விளையாண்டிருப்போம்...நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு இது போன்ற சந்தோசங்கள் கிட்டுமா என்பது சந்தேகமே....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Saturday, January 4, 2014

ஃபேஸ்புக் துளிகள் - 1

ஃபேஸ்புக் துளிகள்
              இன்று கொஞ்சம் அதிகாலையிலேயே எழுந்து விட்ட படியால் சும்மா இருக்க வேண்டாமே என்றெண்ணத்தில் வரும் வாரத்திற்க்கான காய்கறி தேவையைப் பூர்த்தி செய்யலாமே என்று சாய்பாபா கோவில் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் சென்றிருந்தேன்.உள் நுழையும் போது ஃப்ரஷ் ஆன காலைப் பொழுதைப்போலவே மிகவும் ஃப்ரஷ்  ஆக வரவேற்றன நுழைவாயிலில் இருந்த புதினா, கொத்தமல்லி கறிவேப்பிலைகள் கொத்துகள்...
                    அந்த காலைவேளையிலும் ஏகப்பட்ட கடைகளில் காய்கறிகளும், அண்ணாச்சிகளும், வீட்டில் மனைவி பிக்கல் தாங்காமல் ஒரு சேஞ்சுக்கு காய்கறி வாங்க வந்த ஒரு சில குடும்பத்தலைவர்களும், ஓய்வு பெற்ற பெரியவர்களும் தத்தம் நேரங்களை கழித்துக்கொண்டிருந்தனர் காய்கறிகளை வாங்கிக்கொண்டு.....
            ஏகப்பட்ட சந்து பொந்துகளை உள்ளடக்கி நீண்டு பரந்து விரிந்து இருந்தது மார்க்கெட்.ஒரு ஆள் மட்டுமே செல்லக்கூடிய இடைவெளியில் இருபுறமும் கடை கண்ணிகள்(கன்னிகள் என்பது சுத்தமாய் இல்லை...).
           வந்திருந்த வாடிக்கையாளர்களை வரவேற்று ஒவ்வொரு கடைக்காரரும் பேரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.பேரத்தில் முடிந்த வியாபாரம் காய்கறிகளாய் கைப்பைகளில் முடங்கியது.
           நானும் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி ( படிக்கட்டுகள் இல்லாமலே ) எனது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தேன் .கடைசியாய் உருளைக்கிழங்கு மட்டும் பாக்கியிருந்தது. வாங்க சென்ற கடையில் கொஞ்சம் கூடியிருந்த நால்வர் கூட்டத்தில் நானும் ஐக்கியமானேன். அக்கூட்டத்தில் ஒரு பெண்மணியும் ஒரு திருநங்கையும் அடக்கம்...அப்போது கடைக்காரருடன் உரையாடிய திருநங்கையின் பேச்சில் இரட்டை அர்த்தம் தொனிக்கவே, கடைக்காரரின் முட்டுச்சிரிப்பில் கள்ளப்பார்வையும் சேர்ந்து கொள்ள, முகம் சுளித்த பெண்மணி அடுத்த கடை நோக்கி நகர ஆரம்பித்தார்...பொது இடங்களில் பேசித்திரியும் திருநங்கைகள் சமூகத்தில் தன் மதிப்பை இழந்து கொண்டிருப்பது இந்த மாதிரி செய்கைகளில்தான்.என்ன தான் தங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று சொன்னாலும் இம்மாதிரி பேசித்திரியும் ஒரு சில வர்க்கங்களால் எப்போதும் சமூகத்தில் ஒன்று பட முடியாது.

----------------------------------------------

நூறடி ரோட்டில் ஒரு பிரபல மருத்துவமனை...நண்பரின் மனைவிக்கு பெண்குழந்தை பிறந்த சேதி கேட்டு ஆஜரானேன்...
நுழைவாயிலிலேயே ஏகப்பட்ட கூட்டம்...நிறை மாதமும் குறை மாதமுமாய் ஏகப்பட்ட பெண்டிர்கள் மருத்துவரைக்காண...உள் நுழைந்ததுமே ஆஸ்பத்திரிக்குண்டான எந்த ஒரு மணமோ சுவையோ நிறமோ குணமோ (தேங்கஸ் திரி ரோசஸ்) சுத்தமாக இல்லை...ஒவ்வொரு வார்டிலும் கர்ப்பம் தாங்கிய பெண்மணிகள், நோயாளிகள் என அவர் தம் குடும்பத்தினரோடு காத்திருக்கின்றனர்.ஒவ்வொரு முகத்திலும் விதவிதமாக கவலை படிந்த சந்தோசம் தேங்கிக்கிடக்கிறது.
         வெள்ளையுடை அணிந்த தேவதைகள் போல் நர்ஸ்கள்.... மலையாளக்கரையில் வந்தவர்கள் என அப்பட்டமாக பறை சாற்றியது அவர்களின் தாராள மனதும், நடை உடை பாவனைகளும்....கண்கள் அவர்களை நோக்கி சென்றாலும் தவிர்க்க முடியாது தத்தளித்தது மனது...சிஸ்டர் என்று அழைக்க மனம் ஒப்பாது திடப்படுத்திக்கொண்டு அவர்களை கடந்து சென்றேன்....
         முதல் புளோரில் ஐசியு அறைக்கு முன்பாக கைகளை பிசைந்தபடி நின்று கொண்டிருந்த நண்பரை சந்தித்து விவரம் கேட்டபடி அலைபாய்ந்தது மனது அறுவைச்சிகிச்சை முடிந்து வெற்றிப் பெருமிதத்துடன் வெளி வந்த இளம் டாக்டரின் ஸ்டெதஸ் கோப் செய்த புண்ணியத்தினை நினைத்தபடி....தொடர்ந்து எட்டுமாதங்களாய் ஆரம்பத்தில் இருந்து சுகப்பிரசவம் என்று நம்பிக்கை அளித்த டாக்டர் தற்போது ஏதேதோ காரணங்களைச்சொல்லி சிசேரியன் செய்துவிட்டனர்....என்று சொன்ன நண்பரை சமாதானப்படுத்திவிட்டு, நான் சொன்னது, மாசம் பொறந்து விட்டது, ஆஸ்பத்திரி வாடகை, டாக்டர்கள் சம்பளம் என ஏகப்பட்ட வேலைலாம் இருக்குல்ல அதான்...தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் அல்லவா அது போதும்....சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்கையில் சாய்வு தளத்தில் இருந்து நிறைமாதக்கர்ப்பிணியை அவசர அவசரமாக ஸ்டெச்சரில் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர் ஆஸ்பத்திரி சிப்பந்திகள்.....


நேசங்களுடன்
ஜீவானந்தம்





இன்னும் கொஞ்சம்...