Thursday, May 4, 2017

அனுபவம் - விபத்து

                 விடுமுறையை கழி(ளி)ப்பதற்காகவும் முருகனின் அருள் பெறுவதற்காகவும் கரூரில் இருந்து திருச்செந்தூர் கிளம்பினோம்.குட்டி சுட்டீஸ்களுடன் பெற்றோருடன் உடன்பிறந்தோர் உறவுகளுடன் சுவராஸ்யமாய் ஆரம்பித்தது எங்கள் பயணம்.எப்பவும் போல ஸ்கார்பியோவை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டு இன்றைய வருடத்தின் இனிய பாடல்களை கேட்டபடியே மதுரையை நோக்கி நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தோம்.
                மதுரைக்கு அருகில் வந்த போது வண்டியில் இருந்து ஒரு சத்தம் கேட்டபடி இருக்க, ஓரிடத்தில் நிறுத்தி வண்டியை சுற்றும் முற்றும் பார்த்து எங்கிருந்து வருகிறது என்று பார்த்ததில் எதுவும் புலப்படவில்லை.மீண்டும் வண்டியை ஸ்டார்ட் பண்ணி அங்கிருந்து கிளம்பினோம்.
                வண்டி எப்பவும் போல 110 / 120 கிமீ வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.மீண்டும் அதே சத்தம் வேகமாய் கேட்கிறது.டயரில் தான் ஏதாவது பிரச்சினையோ, இல்லை அருகில் உள்ள டயர் மேட் உரசுகிறதா என்றும் பேசிக்கொண்டு விரைந்து கொண்டிருக்கிறோம்.இருள் சூழ ஆரம்பித்து விட்டது.
            மென் விளக்கை போட்டு விட்டு விரைந்து கொண்டிருக்கிறோம், சப்தம் மட்டும் நின்றிருக்க வில்லை.மதுரை தாண்டி விருது நகர் அருகே ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தி காரின் டயரினை செக் செய்கிறேன்.டயர் மேட் தான் பிரச்சினை போல என்று நினைத்து டயல் மேட்டை பார்த்தால் அது தான் பிராபளம் போல தெரிகிறது.அதனை ஒழுங்கு படுத்தி விட்டு திருப்தியாய் கிளம்புகிறோம்.
                கொஞ்ச தூரம் தான் மீண்டும் அதே சப்தம்.
சரி..ஊருக்கு சென்று விட்டு அங்கு பார்த்து கொள்ளலாம் என்ற படி வண்டியை செலுத்திக் கொண்டிருக்கிறேன்.சாத்தூர், கோவில் பட்டி தாண்டி வந்து கொண்டிருக்கிறோம் கூடவே சத்தத்துடனும்.
            நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மோட்டலில் டீ சாப்பிடுவதற்காக வண்டியை ஓரங்கட்டுகிறோம்.அப்பொழுதும் சந்தேகத்திற்காக ஒரு முறை டயரினை செக் செய்கிறேன்.அப்பொழுதும் புலப்படவில்லை.டீ சாப்பிட்டு விட்டு கிளம்புகிறோம் அங்கிருந்து.மீண்டும் அதே சத்தம்.இனி காலையில்தான் செக் பண்ண முடியும் முதலில் ஊர் போய் சேருவோம் என்றபடி அங்கிருந்து கிளம்புகிறோம்.
                 வண்டி எப்பவும் போல 120 ல் செல்கிறது.திருநெல்வேலி க்கு இன்னும் 30 கிலோமீட்டர் என அறிவிப்பு போர்டு காட்டுகிறது.அருகில் இன்னும் சில கிலோமீட்டர்களில் கயத்தாறு எனும் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடம் வரப்போகிறது..அதைப்பற்றி பேசிக்கொண்டு வருகிறோம்.டோல்கேட் வருகிறது.அதில் பணத்தை செலுத்தி விட்டு ஒரு சில மீட்டர்கள் நகர்ந்திருப்போம்.வண்டி 20 கிமீ வேகத்தில் இரண்டு வேகத்தடை தாண்டி நகர்ந்த பொழுது டொம் என சத்தம்.
                வண்டி அப்படியே ஒரு பக்கமாய் சாய்ந்து டயர் கழண்டு வண்டியின் ஆங்கிள் தார்ரோட்டில் இழுத்தபடி செல்கிறது.வண்டிக்குள் இருந்தவர்கள் அனைவரும் ஒரு சேர கத்துகிறார்கள்.வண்டியை உடனே நிறுத்தி இறங்கி பார்த்தால் டயர் தனியாய் கிடக்கிறது.நவீன வண்டி குடை சாய்ந்து கிடக்கிறது..
             வண்டியிலிருந்து அனைவரும் இறங்கி நின்று வேடிக்கை பார்க்கிறோம், கூடவே டோல்கேட்டில் உள்ளவர்கள், அருகில் உள்ள கடையில் இருந்தவர்கள் என அனைவரும் வேடிக்கை பார்க்கிறோம்.
கரகாட்டக்காரன் படத்திற்கு அப்புறம் நம்ம வண்டிதான் டயர் கழண்டு ஓடியிருக்கிறது என்று சொல்லிவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஆயத்தமானோம்.டயரில் உள்ள அத்தனை நட்டுகளும் கழண்டு வருகிற வழியிலே விழுந்து விட்டிருக்கிறது.இப்பொழுது நட்டுகள் கூட இல்லை.முதலில் வண்டியை ஜாக்கி வைத்து தூக்குவோம் என்று சொல்லிவிட்டு ஜாக்கி வைக்கிறோம்.அதற்குள் ஒருவர் உதவிக்கு வந்தார்.இன்னொருவர் டோல்கேட் தாண்டி சென்றவர் தனது காரினை நிறுத்திவிட்டு அவரும் உதவிக்கு வந்தார்.மூவரும் சேர்ந்து வண்டியை தூக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
       வண்டியின் டயர் பஞ்சர் ஆகியிருந்தால் ஜாக்கி வைக்க ஏதுவாக இருக்கும்.ஆனால் டயர் கழண்டு வெளியே வந்து விட்டதால் தரையை தொட்டுவிட்ட ஆங்கிளை தூக்க ஜாக்கி வைக்க முடியவில்லை.காரில் வந்தவர் அவருடைய ஜாக்கியை கொண்டு வந்தார்.இன்னொருவர் அவருடைய லாரியில் இருந்து பலகை கொண்டு வந்தார்.நான் வேலையினூடே அவரிடம் கேட்கிறேன்.எங்க இருந்து வருகிறீர் கன்னடமா என்று?, ஏனெனில் தமிழை கொஞ்சம் கொஞ்சமாய் உச்சரிக்கிறார்.இல்லை கன்னியாகுமரி என்று.அப்பொழுது தான் ஞாபகம் வந்தது.மலையாளம் கலந்த தமிழை அப்படித்தானே பேசுவார்கள் என்று.வண்டி எங்கே என்று கேட்டதற்கு, அதோ டோல்கேட்ல நிற்குது பாருங்க, வேகத்தடை ஏறும் போது ஸ்பிரிங் கட்டாகி விட்டது.அதனால் அங்கேயே நிறுத்தி விட்டேன்.ஒரு லேனை குளோஸ் பண்ணி வைத்து இருக்கிறார்கள்.இனி ரெடியானதுக்கு அப்புறம் தான் கிளம்பனும் என்று சொல்லியபடி எங்கள் வண்டியின் ஜாக்கி வைப்பதற்கு ஆயத்தமாகினார்.
                 நட்டுகள் இல்லாததால் மற்ற டயர்களில் இருந்து ஒவ்வொரு நட்டை மட்டும் கழட்டி இந்த டயருக்கு மாட்டினோம்.
மொத்தம் மூன்று நட்டுகளில் டயரை மாட்டிவிட்டு, ஒரு வழியாய் வண்டியை சரி செய்து விட்டோம்.டயர் மாட்டி விட்டு, உதவி செய்தவரின் பெயரை கேட்க, மோஷாக் என்று சொல்ல, நாங்கள் அனைவரும் ஒருமித்த நன்றியை சொல்ல, புன்னகையுடன் அவரும் பதில் சொல்லி விட்டு கிளம்பினார்.பிறகு லாரி ட்ரைவர் அவரிடமும் நன்றி உரைத்து விட்டு கிளம்பினோம்.
                 எப்பவும் வெகு வேகமாய் செல்லும் எங்கள் சிங்கம் முதல் முறையாய் பாதுகாப்பிற்காய் 60 கி மி வேகத்தில் கிளம்பினோம்.வண்டியில் இருந்து சத்தம் வருவது நின்று இருந்தது, ஆனால எங்களிடம் இருந்து பயமும் படபடப்பும் இன்னமும் இருந்து கொண்டிருந்தது.ஒரு மணி நேரத்தில் அடைய வேண்டிய தூரத்தை இருமடங்கின் நேரத்தில் அடைந்தோம்.வரும் வழியில் இரவு இன்னும் முழுமையாகிருந்தது.திருச்செந்தூர் தமிழ்நாடு ஓட்டலை அடைந்து ரூமில் அடைய மணி 12.20 ஆகியிருந்தது.முருகனின் அருள் பெற காலை வரை நேரம் இருப்பதால் வந்த அலுப்பிற்கு வெகு வேகமாய் உறங்க ஆரம்பித்தோம்…



நேசங்களுடன்
ஜீவானந்தம்.

4 comments:

  1. ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பியது தெய்வாதீனம் தான்.

    ReplyDelete
  2. "மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டு" 120 is overspeed for Indian roads. At 120 kms speed without seat belts if any tyre blasts all passengers will be thrown out.

    1. Speeding is the biggest killer on Indian roads

    Speeding is the single factor responsible for the maximum number of deaths on Indian roads.

    During 2014, 57,844 deaths – 41% of the total – were due to accidents caused by speeding.

    Speeding has accounted for a similar share in the earlier years as well and has consistently accounted for over 50,000 deaths on roads for the past several years

    ReplyDelete
    Replies
    1. http://www.team-bhp.com/safety/seat-belts-saved-my-life-stories-pictures

      Delete
  3. நண்பரே நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் முன் வண்டியை ஒரு முறை மெக்கானிக்கிடம் சரிபார்த்துக்கொள்வது நல்லது. டோல் கேட்டில் டயர் கழண்டதால் பிரச்சனையில்லை இல்லையேல்?முருகனின் அருளால் தப்பித்தீர்....

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....