Thursday, September 28, 2017

கரம் - 30

உப்புக்கண்டம் எனப்படும் உலர்கறி.

                   கிடா வெட்டும் போது பின்னாட்களில் உபயோகப்படுத்துவதற்காக பச்சைக்கறியில் கொஞ்சம் எடுத்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கயிற்றில் கோர்த்து வெயிலில் காயவைத்து விடுவர்.


                பதினைந்து நாள் வெயிலிலும் நிழலிலும் காய்ந்த பின்னர் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்வர்.தேவையான நாட்களில் சிறிது எடுத்து வெந்நீரில் அலசி ஊறவைத்து அம்மிக்கல்லால் தட்டி குழம்புக்கு பயன்படுத்துவர்.இதன் குழம்பின் சுவையே தனிச்சுவையாக தெரியும்.இந்த குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து வைத்தால் இன்னும் டேஸ்ட் மிக நன்றாக இருக்கும்.நன்கு வெந்த இந்த உப்புக்கண்ட கறியும் சுவையில் தனியாய் தெரியும்.பல்லில் அரைபடும் போது கறியின் மணமும் சுவையும் செமயாக இருக்கும்.ஆதிகால மனிதன் வேட்டையாடிய மிருகங்களை உப்பிட்டு பதப்படுத்தி வைப்பான்.அந்த முறைதான் இதுவும்.நகர்ப்புறங்களில் இந்த உப்புக்கண்டம் எங்குமே கிடைக்காது.கிராமங்களில் மட்டும் தான் கிடைக்கும்.அதுவும் விற்பனைக்கு இருக்காது.காது குத்து, கிடா வெட்டு, திருவிழா மற்றும் முக்கிய விசேஷங்களில் வெட்டப்படும் ஆடுகளின் கறியை தேவைக்கேற்ப எடுத்து உப்புக்கண்டம் போட்டு வைப்பர்.ஒரு வருடம் வரைக்கும் கூட தாக்கு பிடிக்கும் இந்த உப்புக்கண்டம்.பின்னாட்களில் என்றாவது ஒருநாள் தேவைக்கேற்ப காரசாரமாக குழம்பு வைத்து உண்பது வழக்கம்.


திருப்பதி லட்டு :
                திருப்பதி என்றாலே பாலாஜிதான் ஞாபகம் வரும் என்று சொல்பவர்கள் கொஞ்சம் குறைவுதான்.முதலில் லட்டும் அடுத்து மொட்டையும் தான் உடனடி ஞாபகம் வரும்.திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் பிரசாதம் லட்டு உலகப்பிரசித்தம்.கோவிலில் தரப்படும் லட்டு மிகுந்த சுவை (?) உடையதாக இருக்கிறது.பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டின் எடை 180 கிராம் இருக்கும்.இது புரோக்தம் லட்டு என்று அழைப்பார்கள்.

                 முந்திரி ஏலக்காய் திராட்சை மற்றும் நெய்யின் மணம் தூக்கலாக இருக்கும்.லட்டு கவுண்டரின் வரிசையில் லட்டினை வாங்க வரிசையில் நிற்கும் போது லட்டின் மணம் நம் நாசியெங்கும் பரவி, சுவை நரம்புகளை தட்டி எழுப்பி உமிழ் நீரை சுரக்க ஆரம்பித்து வைத்துவிடும்.கவுண்டரை நெருங்க நெருங்க மணம் நம் சுவாசத்தை ஆட்கொண்டுவிடும்.வாங்கி ஒரு விள்ளல் பிய்த்து வாயில் போட்டால், திருப்பதி வெங்கடாசலபதியை நேரில் கண்ட பரவசம் நம்முள் ஏற்படும்.லட்டின் சுவை நாம் நாவில் நாட்டியமாடும்.எடுத்த கைகளில் மணம் தாண்டவமாடும்.. அந்தளவுக்கு சுவை கொண்டது இந்த திருப்பதி பிரசாதம்.


சிக்கன் வறுவல்:
                        வாணலியில் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு போட்டு வெங்காயத்தை வதக்கி, இஞ்சி பூண்டு அரைச்சு போட்டு நன்கு வதக்கி, பின் கழுவின சிக்கனை போட்டு வதக்கி, பின் கொஞ்சம் உப்பு போட்டு சில்லி பிளேக்ஸ் போட்டு கொஞ்ச வேக விட்டு, அப்புறம் கொஞ்சம் தக்காளி, மஞ்சள், மல்லித்தூள். சிக்கன் மசாலாத்தூள்( தேவைப்படின் ) போட்டு நன்கு வேகவிடனும்.தேவையான உப்பை சேர்த்துக்கனும்.எண்ணையில் கறி சுருண்ட பதத்திற்கு வந்த பின் மிளகுத் தூளை சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் பிரட்டி, ட்ரையா எடுத்து புதினா கொத்தமல்லி தூவி இறக்கினா சுவையான சிக்கன் வறுவல் ரெடி..தேங்காயை கீத்து கீத்தா மெலிசா அறிஞ்சி போட்டாலும் இன்னும் சுவை தூக்கும்.வெறும் மிளகு மட்டும் போட்டாலும் செம டேஸ்டா இருக்கும்...இந்த மழைக்கு செம காரத்துடன் சிக்கனோட  பகார்டி ஒரு பெக் போட்டா ஆஹா...சொர்க்கம்...பக்கத்துல தான்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்



2 comments:

  1. மாணவர்களை திட்டும்போது தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டு விடுவேன் என்று சொல்வேன். ஒரு மாணவன் வருட முடிவில் வந்து " உப்பு கண்டம் '' என்றால் என்ன ?// என்று கேட்டான்.
    நான் திட்டியதெல்லாம் வீணாகி விட்டதே என்று நொந்து போய் விட்டேன்.karthik amma

    ReplyDelete
  2. அருமையான சிக்கன் வருவல்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....