Monday, September 18, 2017

தகவல் - ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் - Renewal of Driving License

ஓட்டுநர் உரிமம் :
 
ரினீவல், முகவரி மாற்றம், டூப்ளிகேட் பெறுவது, பெயர் மாற்றம் செய்வது என பலதும் ஆன்லைன் மூலமே செய்ய வேண்டும்.
                     Form 9 இல் இவை அனைத்தையும் செய்ய வேண்டும்.ஒவ்வொன்றிற்கும் தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அப்டேட்டிட வேண்டும்.
ரினிவல் செய்வதால் மெடிக்கல் சர்டிபிகேட் வாங்க வேண்டும்.CMV form 1A வில் மருத்துவரின் சான்றிதழும் வேண்டும்.ரூ.20 பாண்ட் பேப்பரில் ஓட்டுநர் உரிமம் தொலைந்ததற்கான காரணம், எந்த வழக்கும் இல்லை எனவும், ஓட்டுநர் உரிமம் திரும்ப கிடைத்தால் அதை தங்களிடம் ஒப்படைக்கிறேன் எனவும் எழுதி கையொப்பமிட வேண்டும்.
                      பெயர் மாற்றத்திற்கு கெஜட் பேப்பரும், முகவரி மாற்றத்திற்கு ஆதார் கார்டும்
டூப்ளிகேட் பெற ஓட்டுநர் உரிமமும்,
தொலைந்து போனதற்கு காவல் துறையின் LDR சர்டிபிகேட்டும் ஸ்கேன் செய்து அப்டேட் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு அப்ளிகேசன் நம்பர் மற்றும் அனைத்தும் இணைத்ததற்கான சான்று வரும்.நம் மொபைல் எண்ணிற்கும் OTP பாஸ்வேர்டு வரும்.அதை பரிவாகன் வெப்சைட்டில் அப்ளிகேசன் நம்பருடன் அளித்து அதை பிரிண்ட் எடுத்து அனைத்து பார்ம்கள் மற்றும் அப்டேட் செய்த அனைத்து ஒரிஜினல்களின் காப்பியையும் இணைத்து போட்டோ ஒட்டி கையொப்பமிட்டு வட்டார அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
                    இதையெல்லாம் பொறுமையாக நாமே செய்து விடலாம்.ஆனால் விவரம் பத்தாது.ஆர்டிஓ ஆபிஸ் அருகே நிறைய சென்டர்கள் இருக்கின்றன.அவர்களிடம் கொடுத்தால் சர்வீஸ்க்கு ஏற்ப ரூ 300 வரை வாங்குகின்றனர்.
மெடிக்கல் சர்டிபிகேட் கூட அங்கேயே வாங்கி தருகிறார்கள்.
இருபது நிமிடத்தில் முடிந்துவிடும்.அதற்கு அப்புறம் ஆர்டிஓ அலுவலகத்தில் பணம் கட்டுவது, போட்டோ எடுத்து கையில் லைசென்ஸ் வாங்க மிகப் பெரிய நீண்ட க்யூவில் நிற்க வேண்டி வரும்.கட்டுச்சோறு எடுத்துச் செல்வது நலம் பயக்கும்.புரோக்கர் லைசன்ஸ் வாங்கி தருவது எல்லாம் இப்போது கடினமே..கட்டாயம் நாம் செல்லாமல் வேலை நடக்காது..
இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
காவல் துறை சான்று – LDR
ஓட்டுநர் உரிமம் நகல்
ஆதார் கார்டு
மெடிக்கல் சான்று
ரூ 20. பாண்டு பத்திரத்தில் விவரங்களுடன் கையொப்பம்
இரண்டு போட்டோக்கள்

இதை அனைத்தும் ஆன்லைனிலும் அப்டேட்டிருக்க வேண்டும்.இந்த ஆவணங்களை எடுத்துக்கொண்டு நேரிடையாக வட்டார அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது வாங்கிக் கொள்ள வேண்டும்.பின் போக்குவரத்து அலுவலரை சந்தித்து கையொப்பம் வாங்கி அங்கேயே இருக்கும் தபால் பிரிவு அலுவலகத்தில் சேர்ப்பித்து விட வேண்டும்.பதினைந்து நாட்கள் கழித்து சென்று புகைப்படம் எடுத்து லைசன்ஸ் பெற்றுக்கொள்ளலாம்.

சும்மா இருந்தா ட்ரை பண்ணிப்பாருங்க..பொழுதும் போகும்…


முந்தைய அனுபவம் லைசன்ஸ் எடுக்க...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

  1. லைசென்ஸ் எடுக்கனுமா?!

    ReplyDelete
  2. மிகவும் சரி நண்பரே ,கோவையிலிருந்து நாமக்கல்லுக்கு மாற்றி புதுப்பித்து இன்றுதான் கிடைத்தது .எவ்வளவுதான் ஆன் லைன் என்றாலும் இடைத்தரகர்கள் இல்லாமல் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இயங்க இயலாதோ என்று ஐயமாக இருக்கிறது .

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....