Monday, May 6, 2019

கரம்- 35


கரம் - 35
JUNE - மலையாளம்
இளம்பிராயத்தில் பள்ளியில் ஏற்படும் காதலை, நட்பை மிக அழகாய் சொல்லி இருக்கும் திரைப்படம்.செம இண்ட்ரஸ்டிங்.ஒவ்வொரு காட்சியும் நம்மை ரசிக்கவைக்கிறது.
பள்ளியில் ஆரம்பித்து, கல்லூரியிலும் தொடங்கி. பின் வேலைக்கு வந்த பின்னும் தொடரும் காதல் என மூன்று காலகட்டத்தையும் கவிதையாய் காட்சிப்படுத்தி இருக்கிறது.இறுதியில் கண்கலங்க வைக்கிறது.ஜூன் ஆக நடித்த பெண் காட்சிகளில் மிளிர்கிறார்.
நடித்த அனைவருமே சிறப்பாய் நடித்திருக்கின்றனர்.ஒவ்வொரு கேரக்டரும் படம் முழுவதும் ரசிக்க வைத்திருக்கின்றனர்.பள்ளியில் பிரிந்த அனைவரும் இறுதியில் ஒன்று சேரும் போது நம்மை கண்கலங்க வைக்கின்றனர்.இந்தப் படம் மலரும் நினைவுகளை கொண்டு வரும்.
பார்க்க வேண்டிய படம்.


கரூர் ஸ்பெசல்:
திருவிழா, கிடாவெட்டு மற்றும் இன்னபிற நிகழ்வுகளில் ஆட்டுக் கறிக்குழம்பு வைப்பாங்களே தண்ணி மாதிரி...சாதக்குவியலில் குழம்பை ஊத்தினா அப்படியே ஓடும் பாருங்க சாதத்துல ஒட்டாம அந்த மாதிரி..குழம்புல தேங்காய் துருவல்கள் மிதந்தும், சுத்துக் கொழுப்பும் மிதந்தும் இருக்குமே..அந்த மாதிரி....எலும்பு குழம்பு ரசம் மாதிரி..
நல்ல காரசாரமா மிகுந்த சுவையோடு இருக்கிறது இங்கே ஒரு ஹோட்டலில்.சாப்பாட்டை போட்டு குழம்பை ஊத்தி பிசைஞ்சு அடிச்சா அது பாட்டுக்கு போய்ட்டே இருக்கு..
தொண்டைக் குழி வரைக்கும் தின்னு முடிச்சப்புறம் தான் தெரியுது, அய்யயோ..பேண்ட் பட்டன், சட்டை பட்டன்லாம் தெறிச்சிடும் போல..
குழம்பு அவ்வளவு டேஸ்ட்.இலையில் தெறித்து ஓடினாலும் சோற்றில் பாத்திகட்டி பிசைந்து அள்ளி சாப்பிடும் போது கைவிரல்களில் ஒழுகுமே..வாவ் வாட் ஏ ருசி...
ரொம்ப சின்ன கடைதான்.அடிக்கிற வெயிலில் அனல் காத்து தான்.ஆனாலும் அங்க காரசாரமா சாப்பிட்டா வேர்த்து ஒழுகும் பாருங்க...


அம்மன் மெஸ், சிக்னல் ரவுண்டானா டெல்லி ஸ்வீட்ஸ் அருகில் கரூர்


ஸ்வீட்ஸ்டால்:
ஒரு போர்டு இல்ல.ஒரு விளம்பரம் இல்ல..ஏன் ஒரு ஷோகேஷ் கூட இல்ல..ஆனாலும் இங்க தயாரிக்கிற இனிப்புகளுக்கு மவுசே தனி.ஒரு சின்ன டீக்கடை தான்.ஆனால் ஜிலேபி, மைசூர்பா, பால்கோவா, மிக்சர் என அனைத்து வகைகளும் சுவைபட கிடைக்கும்.ஜிலேபி இருக்கே..அப்படியே பிய்ச்சி வாயில் வைத்தால் போதும்.
ஜீராவோடு வாயில் கரையும்.மைசூர்பா இருக்கே..பொன்னிறமா இருக்கும்.
மொறுமொறுவென இருப்பதை கடித்தால் சுவைபட கரையும்..

போலீஸ் ஸ்டேசன் அருகில், சிஎஸ்ஐ பள்ளி எதிரில்.. கரூர்



கரூர் பக்கம் போனீங்கன்னா ஒரு எட்டு போய்ட்டு வாங்க...

நேசங்களுடன்
ஜீவானந்தம்




No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....