Showing posts with label கரூர். Show all posts
Showing posts with label கரூர். Show all posts

Monday, May 6, 2019

கரம்- 35


கரம் - 35
JUNE - மலையாளம்
இளம்பிராயத்தில் பள்ளியில் ஏற்படும் காதலை, நட்பை மிக அழகாய் சொல்லி இருக்கும் திரைப்படம்.செம இண்ட்ரஸ்டிங்.ஒவ்வொரு காட்சியும் நம்மை ரசிக்கவைக்கிறது.
பள்ளியில் ஆரம்பித்து, கல்லூரியிலும் தொடங்கி. பின் வேலைக்கு வந்த பின்னும் தொடரும் காதல் என மூன்று காலகட்டத்தையும் கவிதையாய் காட்சிப்படுத்தி இருக்கிறது.இறுதியில் கண்கலங்க வைக்கிறது.ஜூன் ஆக நடித்த பெண் காட்சிகளில் மிளிர்கிறார்.
நடித்த அனைவருமே சிறப்பாய் நடித்திருக்கின்றனர்.ஒவ்வொரு கேரக்டரும் படம் முழுவதும் ரசிக்க வைத்திருக்கின்றனர்.பள்ளியில் பிரிந்த அனைவரும் இறுதியில் ஒன்று சேரும் போது நம்மை கண்கலங்க வைக்கின்றனர்.இந்தப் படம் மலரும் நினைவுகளை கொண்டு வரும்.
பார்க்க வேண்டிய படம்.


கரூர் ஸ்பெசல்:
திருவிழா, கிடாவெட்டு மற்றும் இன்னபிற நிகழ்வுகளில் ஆட்டுக் கறிக்குழம்பு வைப்பாங்களே தண்ணி மாதிரி...சாதக்குவியலில் குழம்பை ஊத்தினா அப்படியே ஓடும் பாருங்க சாதத்துல ஒட்டாம அந்த மாதிரி..குழம்புல தேங்காய் துருவல்கள் மிதந்தும், சுத்துக் கொழுப்பும் மிதந்தும் இருக்குமே..அந்த மாதிரி....எலும்பு குழம்பு ரசம் மாதிரி..
நல்ல காரசாரமா மிகுந்த சுவையோடு இருக்கிறது இங்கே ஒரு ஹோட்டலில்.சாப்பாட்டை போட்டு குழம்பை ஊத்தி பிசைஞ்சு அடிச்சா அது பாட்டுக்கு போய்ட்டே இருக்கு..
தொண்டைக் குழி வரைக்கும் தின்னு முடிச்சப்புறம் தான் தெரியுது, அய்யயோ..பேண்ட் பட்டன், சட்டை பட்டன்லாம் தெறிச்சிடும் போல..
குழம்பு அவ்வளவு டேஸ்ட்.இலையில் தெறித்து ஓடினாலும் சோற்றில் பாத்திகட்டி பிசைந்து அள்ளி சாப்பிடும் போது கைவிரல்களில் ஒழுகுமே..வாவ் வாட் ஏ ருசி...
ரொம்ப சின்ன கடைதான்.அடிக்கிற வெயிலில் அனல் காத்து தான்.ஆனாலும் அங்க காரசாரமா சாப்பிட்டா வேர்த்து ஒழுகும் பாருங்க...


அம்மன் மெஸ், சிக்னல் ரவுண்டானா டெல்லி ஸ்வீட்ஸ் அருகில் கரூர்


ஸ்வீட்ஸ்டால்:
ஒரு போர்டு இல்ல.ஒரு விளம்பரம் இல்ல..ஏன் ஒரு ஷோகேஷ் கூட இல்ல..ஆனாலும் இங்க தயாரிக்கிற இனிப்புகளுக்கு மவுசே தனி.ஒரு சின்ன டீக்கடை தான்.ஆனால் ஜிலேபி, மைசூர்பா, பால்கோவா, மிக்சர் என அனைத்து வகைகளும் சுவைபட கிடைக்கும்.ஜிலேபி இருக்கே..அப்படியே பிய்ச்சி வாயில் வைத்தால் போதும்.
ஜீராவோடு வாயில் கரையும்.மைசூர்பா இருக்கே..பொன்னிறமா இருக்கும்.
மொறுமொறுவென இருப்பதை கடித்தால் சுவைபட கரையும்..

போலீஸ் ஸ்டேசன் அருகில், சிஎஸ்ஐ பள்ளி எதிரில்.. கரூர்



கரூர் பக்கம் போனீங்கன்னா ஒரு எட்டு போய்ட்டு வாங்க...

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Thursday, October 25, 2018

கோவை மெஸ் - சஃபா பிரியாணி, பள்ளப்பட்டி, PALLAPATTI, KARUR


                                   இரண்டு நாட்களுக்கு முன்பு பழனி சென்றுவிட்டு கரூர் வந்தேன்.வரும் வழியில் பள்ளபட்டியில் பிரியாணி சாப்பிடலாம் என்று அங்கு வண்டியை திருப்பினேன்.முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஊர் என்பதால் பிரியாணியும் சுவைமிக்கதாக இருக்கும் என்று நம்பி(?)ப் போனேன்.பள்ளபட்டியில் ஒருவர்க்கு இரண்டு பேராய் விசாரித்தேன்.பிரியாணி எங்கு நன்றாக இருக்கும் என்று.இருவரும் சொல்லி வைத்தது போல ஒரே கடையை சொன்னனர்.அந்த ஊரில் இருப்பதே மொத்தம் மூன்றுகடைகள் தான் போல.மூன்றில் இது நன்றாக இருக்கும் என்று சொல்லியதால் அங்கு போனேன்.
                                             கடை நல்ல கூட்டமாகத்தான் இருந்தது.குல்லா போட்டா பாய்களில் ஒருவர் கல்லாவிலும், ஒருவர் சப்ளையிலும் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தனர்.(முஸ்லீம் கடையாமாம்..)கடை முன்பே தோசைக்கல்லில் புரோட்டா வெந்து கொண்டிருந்தது.காடை, சிக்கன் எல்லாம் மசாலாவில் ஊறி எண்ணையில் பொறிவதற்கு காத்துக் கொண்டிருந்தன. சின்ன கடைதான்.பதினைந்து பேர் அமரக்கூடிய இடவசதி.அனைத்து டேபிள்களும் நிரம்பியிருந்தன.அப்போது காலியான ஒரு சேரில் அமர, பிரியாணியை ஆர்டரிட்டேன்.
                                                   பெரும்பாலோனோர் புரோட்டா சிக்கன் குருமாவை காலி செய்து கொண்டிருந்தனர்.பிரியாணி வந்தது.சம்பா அரிசிதான் அரைகுறை வேக்காட்டில்.
பிரியாணிக்குண்டான மணமும் குறைவுதான்.சிக்கன் துண்டும் மிருதுவற்று இருந்தது.அதற்கு கொடுத்த சிக்கன் குருமாவும் சரியில்லை.கொஞ்சம் வரைக்கும் சாப்பிட்டேன்.முடியவில்லை.அப்புறம் கடைக்காரை கூப்பிட்டு அரிசியின் பதத்தை காட்டிவிட்டு, நம்பி வந்தேன் நல்லாவே இல்லீங்களே என சொல்லி விட்டு பணம் தந்து விட்டு கிளம்பினேன்.


                           அறுபது ரூபாய்க்கு என்ன ஹைதராபாத் பாரடைஸ் பிரியாணியா தரமுடியும்.விலை குறைச்சலா இருந்தாலும் சுவையை தூக்கலா தரமுடியும்.ஆனா விலையும் குறைவு டேஸ்டும் சுத்தமும் இல்லாம இருக்கு.மற்ற இரு கடைகளை முயற்சிக்கலாமா என யோசித்தேன்.முன்பே இந்த கடை நன்றாக இருக்கும் என்று சொன்னதை நம்பி வந்ததால் இந்த நிலைமை.அந்த கடைகள் எப்டியிருக்குமோ..எதற்கு ரிஸ்க்..பேசாமல் கரூர் போய் கரம் சாப்பிட்டுக் கொள்ளலாம் என நினைத்து வண்டியை கிளப்பினேன்.முஸ்லீம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதி..ஒரு பிரியாணி கூட டேஸ்டா கிடைக்க மாட்டிக்குதே...பீஃப் கூட கிடைக்கல அங்கு...தள்ளுவண்டில ஜம்ஜம் பிரியாணின்னு ஒன்ணு நின்னுச்சு..பீஃப் வறுவல் கிடைக்கும் போட்டிருந்தது. பேசாம அங்கயும் ஒரு கை பார்த்திருக்கலாம்...
கடைசியா கரூர் வந்து முட்டை கரம் டேஸ்ட் பார்த்ததில் தான் மனமும் வயிறும் கொஞ்சம் ஆசுவாசமடைந்தது.



நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, September 5, 2018

கோவை மெஸ் - சண்முகா மெஸ் - மார்க்கெட், கரூர்


சண்முகா மெஸ், கரூர்.
                மார்க்கெட் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் இந்த உணவகம் இருக்கிறது.பழைமை வாய்ந்த கட்டிடம்.அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் நுழைந்தது போல அமைப்பு.சுவரெங்கும் பக்தி மணம் கமழும் சாமி புகைப்படங்கள்.கடவுளின் வாகனங்களாக அறியப்படும் உயிரனங்கள் இங்கே சுவையாக கிடைக்கின்றன.அலுமினிய தகரம் பதித்த டேபிள்கள்.அதற்கு தோதாய் ஸ்டூல்கள்.




                    இலை போட்டவுடன் மெனுக்கள் வரிசையாய் உச்சரித்தபடி சர்வர் வர, சிக்கன் பிரியாணியும், சாப்பாடும், மட்டன் வறுவலும் நாட்டுக்கோழி குழம்பும் ஆர்டர் செய்தோம் குழம்பு வகைகள் அத்தனையும் நல்ல சுவை.பிரியாணிக்கு கொடுத்த குழம்பாகட்டும், சாதத்திற்கு கொடுத்த கறிக் குழம்பாகட்டும் மிக நன்றாகவே இருந்தது.பிரியாணியில் கறி தனியாகவும், பிரியாணி தனியாகவும் தருகின்றனர்.


                  பிரியாணியில் கறியை பொதிந்து தருவதில்லை.சாதம் நன்கு மென்மையாக வெந்திருக்கிறது.உதிரி உதிரியாக இல்லை. பிரியாணிக்குண்டான வாசம் கொஞ்சம் குறைவுதான்.குழம்போடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கிறது.தயிர்பச்சடி நீராகாரமாய் இருக்கிறது வெங்காயம் சேர்த்ததோடு.கோழிக்கறி சக்கை சக்கையாய் இருக்கிறது.பிரியாணியில் வெந்த மென்மை தன்மை இல்லை.கடினமாக இருக்கிறது.சுவையும் இல்லை கறியில்.நாட்டுக்கோழி வறுவல் குழம்பு நல்லசுவை.ஆனால் கறியை பார்த்தால் மென்மையாக இருக்கிறது பிராய்லர் போல.கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டுவோம்.மீன் குழம்பு சுவை இல்லை.ரசமும் சுமார்தான்.இரண்டு சாப்பாடு, ஒரு பிரியாணி, மட்டன், நா.கோழி அனைத்தும் சேர்த்து ரூ.460 ஆனது.
                                  சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது எதிரில் இதே போல ஒரு சண்முகா மெஸ் இருக்கிறது.சுவை நன்றாக இருந்தால் தானே டூப்ளிகேட் போடனும்..சுமாரான சுவைக்கெல்லாம் எதுக்கு டூப்ளிகேட்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, June 4, 2015

கோவை மெஸ் – அருள் வாத்துகடை & ஹோட்டல், வேலாயுதம்பாளையம், கரூர்

வாத்து...
     சிறுவயதில் இருந்தே வாத்துக்கும் நமக்கும் நிறைய பொருத்தம் இருக்கிறது.எனது பாட்டன் முப்பாட்டன் காலத்தில் வாத்து வளர்ப்பதுதான் குலத்தொழிலாக இருந்திருக்கிறது.எனது தந்தையும் சிறு வயதில் இருந்து அவர் ஆசிரியப்பணிக்கு சென்று சேர்வது வரைக்கும் இந்த தொழிலில் இருந்திருக்கிறார்.குலத்தொழில் அல்லவா....ஆனால் இப்போது இல்லை. எங்கள் ஊர்ப்பகுதியில் விவசாயம் செழித்து இருப்பதால் வாத்துக்கள் வளர்ப்பதும் அதிகமாக இருக்கும்.நீர் நிலைகள் வேறு இருக்கிற ஊர்.காவிரி கரையோரத்தில் வாழ்கின்ற மக்கள் மட்டும் அதுவும் குறிப்பிட்ட ஒரு இனத்தவர் மட்டும் இந்த வாத்து வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
               தற்போது எங்கள் ஊரில் ஒரே ஒரு குடும்பம் மட்டும் வாத்து வளர்க்கும் தொழிலில் இன்னமும் ஈடுபட்டிருக்கிறது. ஊருக்குள் வந்து வாத்துக்காரங்க வீடு எது என்று கேட்டால் உடனே சொல்லி விடுவார்கள்....கிராமங்களில் இப்படித்தான் செய்கின்ற தொழிலை வைத்துத்தான் முகவரியே கேட்பார்கள்...ஊரில் நெல் அறுவடை முடிந்த வயற்காட்டில் தண்ணீர் பாய்ச்சப்பட்டு இருக்கும் அதில் வாத்துக்களை மேயவிடுவர்.வாத்துக்களுக்கென்று பண்ணை எதுவும் இருக்காது. ஒவ்வொரு வயற்காடாக, ஆறு குளம் குட்டைகளில் மேய விடுவர்.நன்கு மேய்ந்தவுடன் பட்டியில் போட்டு அடைத்து விடுவர்...பட்டி என்று பார்த்தால் கெட்டியான நாணல் புல்லில் வரிசையாக கட்டி ஒரு தடுப்பு போல மூன்றடி உயரத்திற்கு நட்டு வைத்து அதில் வாத்துக்களை அடைத்து விடுவார்கள்..
          வாத்துக்கள் மேயும் விதம் பார்க்க மிக பரவசமாக இருக்கும்.நீருக்குள் மூழ்கி அவ்வப்போது தலையை வெளியே நீட்டியும், உள்ளே முழுகியும், தலையைச் சிலுப்பிக்கொண்டு, அவ்வப்போது மண்ணைக்கிளறி புழு பூச்சிகளை கொத்தி திங்கிற காட்சி நன்றாக இருக்கும். நத்தை, தவளை முதல் சிறு பாம்புகள் வரை கொத்தித்திங்கும்.வாத்துக்கள் நடக்கும் விதம் பார்க்க சுவாராஸ்யமாக இருக்கும்.தனியாய் பிரிந்து செல்லாது...கூட்டமாகத்தான் மேயும், இரண்டு இரண்டு வாத்துகளாக வரிசை கட்டி விட்டால் அப்படியே செல்லும் நீண்ட தூரத்துக்கு....அதன் நடக்கும் விதம் பார்த்தால் லேசாய் இடுப்பை ஆட்டி ஆட்டி செல்லும்.ஓடும் போது இன்னும் வேகமாக ஆட்டிச்செல்லும்.குவாக்...குவாக்...குவாக்...என கத்தும் விதமும் கேட்க பரவசமூட்டும்...
                      சிறுவயதில் வயற்காட்டில் மேய்கின்ற வாத்துக்கள் மேயும் போதே முட்டையை போட்டுவிடும்..அதை எடுத்து வந்து பொரியல் செய்தும், வேக வைத்தும் சாப்பிடுவோம்.வாத்துமுட்டை உடலுக்கு நல்லது.சளிக்கு நல்ல மருந்து.என்ன...கொஞ்சம் கவிச்சி அதிகமாக அடிக்கும்.வெறும் புழு பூச்சிகளையே தின்பதால் முட்டையில் அந்த அளவுக்கு கவிச்சி அடிக்கும்.ஆனால் உடம்புக்கு நல்லது.இரண்டு கோழி முட்டைகளின் அளவில் வாத்துமுட்டை ஒன்று இருக்கும் அவ்ளோ பெரிதாக இருக்கும்.பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் முட்டையிடும்.ஆனால் அடை காக்காது.

              வாத்துக்கறி....வெறும் எலும்பும் சதையுமாகத்தான் இருக்கும்.ஆனால் டேஸ்ட்டில் இதை அடித்துக்கொள்ள முடியாது.நன்கு வறுக்கப்பட்ட வாத்துக்கறி செம டேஸ்டாக இருக்கும்.இட்லிக்கு செம காம்பினேசன்.இட்லியை பிய்த்து கொஞ்சம் குழம்பில் தொட்டு சாப்பிட்டால் தேவாமிர்தம் தான்...
                   கரூர் மாவட்டம், திருச்சி மாவட்டத்தில் பாய்கின்ற காவிரி கரையோரம் உள்ள இடங்களில் வாத்து விற்பனை அமோகமாக நடக்கிறது.அதில் முக்கிய இடம் வேலாயுதம் பாளையம்.கரூரில் இருந்து வேலூர் செல்லும் வழியில் இருக்கிறது இந்த ஊர்.ஆற்றங்கரை ஓரமாக இருக்கிற ஊர் இது.வாய்க்காலும் ஆறும் பாய்ந்து வயல்வெளிகளை பாசனப் பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறது இன்னமும்.அதனால் என்னவோ இங்கு வாத்துக்கறி பேமஸ்...பைபாஸ் ரோட்டு ஓரங்களில் இருபுறமும் நிறைய கடைகள் இருக்கின்றன.அங்கு இருக்கிற அத்தனை கடைகளிலும் சாப்பிட்டு இருக்கின்றேன்.ஆரம்பத்தில் கதிர்வேலு கடை ருசியில் நன்றாக இருந்தது.இப்போது சரியில்லை.வெறும் மல்லித்தூள் போட்டு கெட்டியாய் வைத்து வாத்துக் குழம்பிற்கு உண்டான டேஸ்ட்டை கெடுத்து விட்டனர்..
               இப்போது அதிகம் விரும்பி சாப்பிடும் கடையாய் மாறியிருக்கிறது அருள் வாத்துக்கறி உணவகம்.
                 கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் போதெல்லாம் இங்கு இரண்டு இட்லியும் அரைபிளேட் வாத்துக்கறியும் சாப்பிட்டு விட்டு செல்வது வாடிக்கையாய் இருக்கிறது.பஞ்சு போன்ற இட்லியை பிய்த்து கெட்டியான வறுவலில் தோய்த்து சாப்பிட செம டேஸ்ட்....
கறித்துண்டுகளை வாயில் போட்டு எலும்போடு மென்று சாறையும் சதையும் மட்டும் சாப்பிட என்னவொரு டேஸ்ட்....இந்த டேஸ்ட் அப்படியே இன்னும் ஆளை அமுக்கும்...இன்னும் இரண்டு இட்லி ஆட்டோமேட்டிக்காய் உள்ளே இறங்கும்...சாப்பிட சாப்பிட சொர்க்கமே பக்கத்தில் வந்தது போல் இருக்கும்..அவ்வளவு சுவை வாத்துக்கறியுடன் கூடிய இட்லியில்....
அது போலவே ஆம்லெட்...செமயாக இருக்கும்.....
அந்தப்பக்கம் வந்தீங்கன்னா கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க....செமயா இருக்கும்....
              பைபாஸ் ரோட்டில் இந்தப்பக்கம் கதிர்வேலு கடை...அந்தப்பக்கம் அருள் கடை...எல்லாம் சொந்தக்காரங்க தான்......

நம்ம குறிப்பு :
ஊருக்கு வந்தால் இங்கு நண்பர்களோடு மற்றும் நம்ம சொந்தங்களோடு வரும்போது ஒரு கிலோ வாத்தும் பத்து பதினைந்து இட்லியும் பார்சல் வாங்கிக்கொண்டு (கூடவே பகார்டியையும்) காவிரி ஆற்றுக்கு சென்று விடுவோம்..நடு ஆற்றில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஆஹா....என்ன சுவை....சாப்பிட்டு முடித்தவுடன் ஆற்றில் ஒரு குளியலைப்போட்டு விட்டு வர....

” சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்





இன்னும் கொஞ்சம்...

Friday, June 8, 2012

கோவை டு சென்னை டு கோவை – பயணம் ஒரு பார்வை



சென்னையில் ஒரு வேலை விஷயம் காரணமாக கடந்த ஞாயிறு அன்று அவசரமா இரவோட இரவா கிளம்பி சென்னைக்கு போனேன். கோவையில் இருந்து கரூர் போய் அங்க என் வீட்டுக்கு போய்ட்டு அப்புறம் நாமக்கல், ராசிபுரம், ஆத்தூர் வழியா கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை வந்து பைபாஸ் பிடிச்சு காலையில் 9 மணிக்கு லாம் கோயம்பேடு வந்துட்டேன்.
    பூந்த மல்லி பைபாஸ் ரோட்டில் உள்ள எந்த பங்கிலும் பெட்ரோல் இல்லவே இல்லை.காத்து வாங்குது.டீசல் மட்டும் தான். நிலைமை சீராக ஓரிரு நாட்கள் பிடிக்கும்ன்னு சொன்னது நம்ம பம்ப் பையன்.

 அப்புறம் மெட்ரோ ரயில் திட்டம் வேலை ஜரூராய் நடை பெற்று கொண்டு இருக்கிறது. ரோட்டுக்கு நடுவுல பிரமாண்டமாய் புது புது பில்லர்கள்....எப்போ முடியும்னு தெரியல.


கோயம்பேடு பாலத்துல இருந்து இறங்கும் போது நம்ம கேப்டன் மண்டபம் கண்ணுக்கு தெரிஞ்சது.எல்லாரும் புதுக்கோட்டைக்கு போய் இருப்பாங்க போல..இங்கும் காத்து வாங்கிட்டு இருக்கு யாருமே இல்லை போல..இவர் மட்டும் ரொம்ப பேனர்களில் சிரித்துக் கொண்டு இருந்தார்.

அப்புறம் கொஞ்ச தூரம் தள்ளி எதுத்தாப்ல இருக்கிற தெரு விளக்குகள் இன்னும் எரிஞ்சிட்டு இருந்துச்சு. அப்புறம் எப்படி தீரும் இந்த மின் வெட்டு பிரச்சினை.(அப்பாடா...அரசியலை கலந்திட்டோம்...)

அப்புறம் வளைஞ்சு நெளிஞ்சு கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வழியா செல்லும்போது தலைக்கு மேல மெட்ரோ பாலம். இதை எப்ப கட்டினாங்க அப்படின்னு யோசிக்கும்போதே கடந்து விட்டோம். நம்ம பயணம் கோயம்பேடு, வளசரவாக்கம், மீனாட்சி காலேஜ் இப்படி இந்த ஏரியா விலேயே முடிஞ்சதினால் வெளிய எங்கும் போக முடியல. அப்புறம் எப்பவும் போல செம வெயில் காலையிலேயே கொன்னு எடுக்கிறது. இதை தணிக்கவே அப்பப்ப கண்ணுக்கு குளிர்ச்சியா நம்ம அம்மணிகள். நம்ம அண்ணார் வீடு வளசரவாக்கத்தில் இருக்கு. அங்க போய் ரெஸ்ட் எடுத்துட்டு பார்க்க வேண்டிய வேலையை எல்லாம் சீக்கிரம் முடித்து விட்டு சாயந்திரம் மீண்டும் ஒரு விசிட் மீனாட்சி காலேஜ் பக்கம்.... அப்பத்தான் நம்ம அம்மணிகள்லாம்  வெளிய வாராங்க. (சரியான நேரத்துக்கு தான் வந்திருக்கோம்..ஹி ஹி ).....கொஞ்ச நேரம் அம்மணிகளை தரிசித்து விட்டு, அப்படியே வீட்டுக்கு வந்தோம்.
வர்ற வழியில தேவி கருமாரியம்மன் தியேட்டர் பக்கத்துல ஏதோ ஒரு கோவில் விசேசம் போல...அய்யர்லாம் ரேடியோ வுல மந்திரம் சொல்லிட்டு இருந்தாங்க.சாமி கட் அவுட் லாம் வச்சி இருந்தாங்க.

சரி அடுத்து என்ன பண்ணலாம்...அரசு கடைக்கு போலாம்... வளசரவாக்கம் மனோ ஷூட்டிங் ஹவுஸ் பக்கத்து தெருவான ஸ்ரீதேவி குப்பம்ல ஒரு புழுக்கமான டாஸ்மாக் இருக்கு.உள்ளே போனா எல்லாம் வேர்த்து விறுவிறுத்து குடிச்சிட்டு இருக்காங்க. வேற வழி....நாங்களும் அப்படியே அந்த ஜோதியில் ஐக்கியம் ஆகி கொஞ்ச நேரம் கழிச்சு வேர்த்து விறுவிறுத்து வெளில வந்தோம்.(கவர்மென்ட் ரொம்ப மோசமா பார் நடத்துறத இங்க மட்டுமல்ல தமிழகத்தின் எல்லா பக்கமும் பார்க்கலாம். என்ன பண்றது.தமிழகத்தின் குடிமகனா போய்ட்டோம் அரசுக்கு வருமானம் வரணும் இல்லியா...)
அடுத்த நாள் செவ்வாய் காலை செங்கல்பட்டுல ஒரு ஜோலி.அங்க போற வழியில வண்டலூர் ஜூ பார்த்தேன்.கட்டிட வேலைலாம் நடந்திட்டு இருக்கு. திறப்பு விழாவிற்கு யாரோ ஒரு அரசியல்வாதி வருகைக்கு காத்திருக்குது போல....

அப்புறம் திருச்சி வழியா கரூர் போலாம்னு முடிவு பண்ணி வண்டிய கிளப்பினோம். போற வழியெங்கும் ஏகப்பட்ட ரியல் எஸ்டேட் இடங்கள். கலர் கலராய் கொடிகள், காம்பவுண்ட் ஆடம்பர வளைவு, என என்னென்ன செய்து எப்படியெல்லாம் ஏமாத்தலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்களின் இடங்கள் நிறைய.......டிவியில் அடிக்கடி வர்ற மெகா சீரியல் நடிகர் நடிகைகளின் விளம்பர யுக்தியோட நம்மள நிலத்தை வாங்க சொல்லி இம்சையை கூட்டுவாங்களே அந்த மாதிரி இடங்கள் நிறைய... ஒரு வசதியும் கிடையாது ஆனாலும் சென்னையில் இருந்து ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம், நிறைய காலேஜ், மருத்துவமனை, பள்ளிக்கூடம் அப்புறம் அது இருக்கு, இது இருக்கு என அளந்து விடும் சீரியல் நடிகர்களின் போலி நடிப்பினை கண்டு ஏமாறுகிற மக்களுக்கு விற்க முயற்சி செய்யும் இடங்கள் என நிறைய... என்ன பண்றது...இப்ப இந்த தொழில் தான் இப்போ உச்சத்தில் இருக்கு.ஏழை மற்றும் நடுத்தர மக்களின் இல்லக் கனவை செல்லாக் கனவாக மாற்றும் யுக்தி இந்த ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு இருக்கிறது. அதுவும் டிவியில் இந்த நடிகர்கள் சொல்லுவாங்க.........."நீங்க போன் பண்ணினா உங்க இடத்தில இருந்து பிக்கப் செய்து சைட்டை சுற்றி காட்டி விட்டு வருவோம் என்று....கோவையில் இருந்து கூப்பிட்டா இங்க வந்து என்னை பிக்கப் பண்ணுவாங்களா..? ஒரு டவுட்டு///....எப்படியோ மக்கள் ஏமாறாமல் இருந்தால் சரி.


அப்புறம் வேப்பூர் என்கிற ஊரில் மதிய உணவை முடித்து கொண்டு மறுபடியும் பயணம்....அப்புறம் பெரம்பலூர் வந்து அங்க இருந்து துறையூர், முசிறி, குளித்தலை வழியாய் கரூர் சென்று வீட்டில் தஞ்சம் அடைந்தேன். (என்னா ஒரு நிம்மதி ...கோவையில் இருந்து கரூர் ..அப்புறம் சென்னை...வழில நிறைய விபத்துக்குண்டான வண்டிகள்...அதே மாதிரி வரும்போதும் அப்படியே....நம்ம டிரைவருக்கு நன்றி..........உசிருக்கும் வண்டிக்கும் சேதாரம் இல்லாமல் கொண்டு வந்து சேர்த்தமைக்கு.).அன்னிக்கு நைட் நம்ம அரசுக்கு கொஞ்சம் வருமானம் தந்துவிட்டு  அப்புறம் வாத்து கறி  சாப்பிட்டு விட்டு படுக்கையை போட்டேன். நல்ல உறக்கம்.இரண்டு நாளாய் வண்டியில் அலைந்து திரிந்ததினால்...
அடுத்த நாள் நம்ம கோவை நோக்கி பயணம்...அவ்ளோதான் நம்ம பயண கட்டுரை
கிசுகிசு:
பெரம்பலூர்ல இருந்து துறையூர் செல்லும் வழியில் ஒரு ஊர் பேரை பார்த்தேன்.அதை பார்த்து விட்டு சிரித்த சிரிப்பு இருக்கே....முடியல...அதுவும் நம்ம டிரைவர் அடிச்ச கமென்ட் என்னன்னா...பஸ்ல ஏறி கண்டக்டர் கிட்ட எப்படி டிக்கெட் வாங்குறது.(..........ஒண்ணு கொடுங்க? இதுக்கு எதுக்குடா அங்க போகணும்).......எவனாவது எங்க போறன்னு கேட்டா என்ன சொல்லுவாங்க....அப்படின்னு..... ஹி ஹி ஹி ஹி 

அந்த பெருமை மிக்க ஊர் இது தாங்க....

கிசுகிசு : ரொம்ப நீளமான பதிவுன்னு நினைக்கிறேன் ........ஸ்ஸ்ஸ்  முடியல.....ஒரு பதிவ தேத்த.....நம்ம தாவு தீர்ந்து போகுது...

நேசங்களுடன்
ஜீவானந்தம் 


இன்னும் கொஞ்சம்...

Monday, May 28, 2012

முக்கொம்பு - சுற்றுலா தளம் - திருச்சி


முக்கொம்பு

திருச்சி அருகில் இருக்கிற ஒரு சுற்றுலா தளம் தான் இது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறாக இங்கு பிரிந்து செல்வதால் முக்கொம்பு என்று பெயர்.காவிரி ஆற்றின் குறுக்கே மேலணை என்ற அணை கட்டப்பட்டு இருக்கிறது. நீர் நிலையுடன் கூடிய ஒரு பொழுது போக்கு இடம்.காசு செலவில்லாமல் பொழுது போக்க கூடிய இடம்.அதனால தான் என்னவோ அதிக காதலர்கள் (இவங்க மட்டுமா...) கூடும் இடமா இருக்கு போல.சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பும் இடமாக இது இருக்கிறது.இரண்டு ஆறுகளுக்கு இடையில் பூங்கா வேற இருக்கிறது. இந்த பூங்காவில் இளவட்ட கல் ஒன்று இருக்கின்றது என நினைக்கிறேன். சிறுவயதில் கண்டு இருக்கிறேன்.இப்போ எங்கேனு தெரியல.அணையின் மறுபக்கம் வாத்தலை என்ற ஊர் இருக்கிறது. ஓடும் ஆற்றின் அழகை அணையில் நடந்து செல்லும் போது ரசிக்கலாம்.

நிறைய மரங்கள் பசுமையுடன் ..அதுவும் நம்ம முன்னோர்களுடன்.நம்மள விட இவங்க தான் அதிகமா இருக்காங்க.அப்புறம் கட்டுசோறு கட்டி இங்க வந்து சாப்பிடற ஆளுகளை இம்சை பண்றதே இவங்களுக்கு வேலையா போச்சு..ஆனாலும் இதுவும் ஒரு அனுபவமே..



திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் முக்கொம்பு இருக்கிறது இருபது கிலோமீட்டர் இருக்கும்.நல்ல அருமையான சுற்றுலா தளம்..

கிசுகிசு: எங்க குலதெய்வ கோவில் முக்கொம்பு பக்கத்துல தான் இருக்கு.எப்போலாம் கோவிலுக்கு போறோமோ அப்போலாம் கண்டிப்பா போய்ட்டு வருவோம்.அப்புறம் திருச்சில இருந்த போது நண்பர்களுடன் வந்து சென்றது எல்லாம் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.போன வாரம் திருச்சி செல்லுபோது ஒரு விசிட் விட்டேன் எதுக்குன்னா...ஒரு பதிவு தேத்த...
ஏன்னா.....இன்னிக்கு நான் ஒரு பதிவர் (.....?) ஹி..ஹி ஹி ......அதான் ஒரு பதிவ போட்டுட்டேன்...

நேசங்களுடன்
ஜீவானந்தம் 







இன்னும் கொஞ்சம்...

Friday, May 25, 2012

ஆல் இந்தியா கூடைப்பந்து போட்டி- கரூர்



       கரூர்ல இப்போ ஆல் இந்தியா கூடைப்பந்து போட்டி நடை பெற்று கொண்டு இருக்கு.நான் எதேச்சையா அந்த பக்கம் போனவன் எப்படி ஆடுறாங்க அப்படின்னு பார்க்கலாம்னு உள்ளே நுழைந்தேன்.இரவு நேரத்தில் விளக்கொளியில் பளபள வென்று மின்னி கொண்டு இருந்தது அரங்கம்.கொஞ்ச நேரத்தில் எந்தெந்த டீம் ஆடப் போகுதுன்னு அறிவிச்சாங்க. பார்த்தா நம்ம அம்மணிகள் ஆடுற ஆட்டம் .செகந்திராபாத் அணியும் நம்ம தமிழ்நாடு ரயில்வே அணியும் மோதுச்சு...அட...இருந்து பார்த்துட்டு தான் போகணும் அப்படிங்கிற அளவுக்கு அம்மணிகள்..எல்லாம் உயரமான அம்மணிகளா இருக்காங்க.அதுவும் செகந்திராபாத் அம்மணிகள் இருக்கே .ம்ம்ம்ம் .நல்லா செம கலர்ல இருக்காங்க..செம..செம...மேட்ச் ஆரம்பிச்சதும் இவங்களோட அதிரடி ஆட்டமும் தொடங்குச்சு..அவங்க ஆடின ஆட்டம் இருக்கே.
         ஆரம்பத்துல அம்மணிகள ரசிச்ச பார்வை இப்போ ஆட்டத்தை ரசிக்க ஆரம்பிச்சது.அவ்ளோ விறுவிறுப்பு.எப்படி புள்ளிகளை கொடுக்கிறாங்க அப்படின்னு தெரியல.ஒவ்வொரு தடவையும் பாயிண்ட் வேறுபடுது.ஆனா ரொம்ப நல்லா ஆடுறாங்க.





கடைசியில் தமிழ்நாடு அணி அதிக புள்ளிகளை பெற்று இருந்தது..இன்னொரு தடவை கண்டிப்பா பார்க்கணும் அப்படிங்கிற ஆவலை தூண்டி விட்டாங்க அம்மணிகள்.. அதுக்கப்புறம் அவரச வேலை இருந்ததனால் வெளிய வந்துட்டேன்(ஹி.ஹி.ஹி..அடுத்து ஆண்களுக்கான மேட்ச்..எவன் இருப்பான்...)

கிசுகிசு: இரவு நேரம் ஆதலால் போட்டோ சரியான கிளாரிட்டி இல்ல.அம்மணிகளை ஜூம் பண்ண முடியலை.

நேசங்களுடன்
ஜீவானந்தம் 



இன்னும் கொஞ்சம்...

Friday, May 18, 2012

கரம் - பல்சுவை செய்திகள் அறிமுகம்


வணக்கம் ...
இந்த பதிவுலகில் நிறைய பேர் சிறு சிறு செய்திகளை, அனுபவங்களை தொகுத்து வழங்கி அதுக்கு ஒரு பேரும் வச்சி வாரா வாரம் பதிவா தந்துகிட்டு இருக்காங்க..
உதாரணத்துக்கு....

கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா

உண்மைத்தமிழனின் இட்லி தோசை பொங்கல் வடை சாம்பார்

ஜாக்கியின் சாண்ட்விச் அண்ட் நான்வெஜ்

அப்புறம் இன்னும்  பல பேரு....
அஞ்சறைப் பெட்டி, கதம்பம், மொறு மொறு மிக்சர்  இப்படி...
சுவையா தன்னோட பதிவுகளில் எழுதிகிட்டு வர்றாங்க.அதனால நமக்கும் ஒரு ஆசை.

கரூர்ல தான் நான் பொறந்து வளர்ந்து படிச்சது எல்லாம்.படிக்கும் போது  கரம் சாப்பிடுவேன்.இப்பவும் எனது ஊருக்கு போனால் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்.கரூர் மாவட்டத்தில் இது ரொம்ப பேமஸ். பொரி கூட பல வகை சட்னிகளுடன் வெங்காயம், பீட்ரூட், கேரட், மிக்சர், தட்டுவடை  முட்டை இதெல்லாம் போட்டு கலக்கி தருவாங்க.அவ்ளோ சுவையா இருக்கும்.கருர்ல இருக்கிற அனைத்து சந்து பொந்து களிலும் யாராவது ஒருத்தர் கரம் போட்டுக்கிட்டு இருப்பாங்க.அவ்ளோ பேமஸ்.

அதனால தான் கரம் போன்ற சுவையான விஷயங்களை உங்ககிட்ட பகிர்ந்துகிறேன்.சுவைத்து ஆதரவு தரும் படி கேட்டு கொள்கிறேன்.

முதல்  கரம் :
நம்ம ஊருல அண்ணாதுரை அப்படின்னு ஒருத்தர் இருக்காருங்க.கிராமத்துல இருக்கிற எங்க வயல்களில்   கூட மாட வேலை செய்வாருங்க. ஒருநாளு இவர்க்கு போன் வந்தபோது செல் போனை திருப்பி திருப்பி நம்பர் சொல்லிட்டு இருந்தார்.என்னன்னு இவர் கிட்ட இருக்கிற போனை பார்த்தேன்.இவரோட போன் நம்பரை எழுதி போன்ல வச்சி அதை சொல்லிட்டு இருந்தாரு.
எப்படி....


கேட்டதுக்கு நம்பரை ஞாபகம் வச்சிக்க முடியலையாம்.எப்பூடி....
------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோவை  பதிவர் சந்திப்பு :
நம்ம ஏரியா பக்கம் இருக்கிற பதிவர்களை இனம் காண்கிற முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம்.அதனால் கோவையில் உள்ள பதிவர்கள் தங்கள் வலைப்பூவையும், தொடர்பு எண்ணையும் இநத் மின்மடலுக்கு kovaibloggers@gmail.com மடல் அனுப்பவும்.

நமது பதிவர் தளமாய் கோவை பதிவர்கள் இருக்கிறது. கண்டிப்பாக வரவேற்கிறோம்..

-------------------------------------------------------------------------------------------------------------

இனி  அடுத்த கரத்துக்கு மேட்டர யோசிக்கணும்...இருங்க வாரேன்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...