Friday, September 18, 2020

கோவை மெஸ் - ஹோட்டல் கர்ணா, சின்னமனூர், தேனி

 ஹோட்டல் கர்ணா, சின்னமனூர், தேனி

        ஒரு வேலை விசயமா தேனியில் இருந்து சின்னமனூர் வந்தோம்.நேரத்துலயே போனதால் காலை சாப்பாடு சாப்பிடாம போய்ட்டோம்.பத்துமணி வேற ஆயிடுச்சி.சரி. ஏதாவது இருப்பதை சாப்பிடுவோம்னு பிரபல ஹோட்டலான கர்ணா வுக்கு போய் கேட்டா, பிரியாணியே ரெடியா இருக்குண்ணே..அப்படின்னு சொல்ல, சரி மதிய சாப்பாட்டையே இப்பவே ஆரம்பிப்போம்னு கை கழுவிவிட்டு டேபிளில் அமர்ந்தோம்.


                    பளபளன்னு ஃப்ரஷான வாழை இலை போட, பிரியாணி வெண்கல சிறு குண்டாவில் கொண்டு வைத்து வைக்க, பிரியாணி அதன் நிறத்தோடு மிக்க வாசனையோடு, சீரகசம்பா அரிசியோடு மட்டன் துண்டுகளோடு, இலையில் சூடாய் வைக்க, ஆவி பறக்கும் வாசனையில் மூக்கை துளைத்தது பிரியாணியின் மணம்.ஆஹா..இதுவல்லவோ பிரியாணி...ஒரு விள்ளல் எடுத்து சுவைத்ததும் நாக்கின் நரம்பு மண்டலங்கள் இயந்திரகதியில் இயங்க ஆரம்பித்தன..
நல்ல சுவை.மணம்.நிறம் என அனைத்தும்.





மட்டன் துண்டுகள் அதன் வாசனையில் நன்கு வெந்திருக்கிறது..சாப்பிட சுவையுமாக இருக்கிறது.அரிசியும் நல்ல உதிரி உதிரியாக, பிரியாணிக்கே உண்டான நிறத்துடன் சூப்பராக இருக்கிறது.

ஆரம்ப காலத்தில் இந்த ஹோட்டல் பத்துக்கு பத்து ரூம் சைசில் இருந்ததாம்.இன்று பிரம்மிக்கத் தக்க வளர்ச்சி என்பதன் காரணம் அதன் ருசியே..

                        மட்டன் சுக்கா அடுத்த ஆர்டராய் இருக்க, அது ஏனோ என்னை கவரவில்லை.இன்னும் கொஞ்சம் பதமாக வெந்திருக்க வேண்டிய நிலையில் அது இருக்கிறது.ஒருவேளை நாங்கள் நேரத்திலேயே சென்றுவிட்டதால், வெந்து கொண்டிருக்கும் போதே எடுத்து வந்து விட்டார்களோ என நினைக்கிறேன்.



பிரியாணி நல்ல சுவை.மணம், சுவை, திடம் திரீ ரோசஸ் போல பிரியாணி சூப்பரோ சூப்பர்.

                சின்னமனூர் போனீங்கன்னா தாராளமாக சுவைக்கலாம்..பத்து மணிக்கே தயாராகிவிடுகிறது பிரியாணி..ஆற அமர ருசிக்கலாம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

  1. அருமையான சுவைமிகு பதிவு

    ReplyDelete
  2. நல்லவேளை எழுத ஆரம்பிச்சிடீங்க.... நன்றி

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....