இன்னிக்கி நான் இந்த திருவிழாவிற்கு போனேன்.அப்படி ஒண்ணும் கூட்டம் வரல .
ரொம்ப டல்.ஈரோடு போல கூட்டம் இல்லை .அப்புறம் நம்ம உலக சினிமா ரசிகன் வைத்திருக்கிற ஸ்டால் போனேன்.
(ஸ்டால் 69 )அவரையும் மீட் பண்ணினேன்.அவருகிட்ட சில பல கருத்துகளை பகிர்ந்து கொண்டோம்.நிறைய கலக்சன்ஸ் வைத்து இருக்கிறார் அவரிடமிருந்து காட் பாதர் படம் வாங்கினேன்.அப்புறம் எனது மகளுக்கு சின்ன பிரசன்ட் ஆக ஒரு டிவிடி தந்தார்.அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.ரொம்ப சந்தோசமா இருந்தது. நிறைய ஸ்டால்கள் உள்ளன.
நானும் எனக்கு பிடித்த சுஜாதா நாவல் கள் வாங்கி கொண்டேன்.அப்புறம் ரொம்ப வெய்யில் ஆதலால் உள்ளே ஒரே புழுக்கம் ..வேர்வை....மக்கள் அனைவரும் புழுங்கி கொண்டே புத்தகம் பார்க்கின்றனர்.ஆதலால் புத்தக பிரியர்களே சாயங்காலம் சென்று வாங்குங்கள்.