Friday, September 19, 2014

கரம் - 15 (19.9.2014)

மேயர் தேர்தல் 


நேற்று கோவையில் மேயருக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.நாம தான் ஜனநாயக கடமையை செவ்வனே செய்வதில் வல்லவர்கள் ஆயிற்றே..அதனால் ரொம்ப சீக்கிரமா பத்து மணிக்கு போனா ஓட்டுச்சாவடி இப்ப இருக்கிற தியேட்டர்கள் போல காத்து வாங்கிட்டு இருக்கு...மக்கள் யாருக்கும் இண்ட்ரஸ்ட் இல்ல போல...சீக்கிரம் ஓட்டு போட்டுட்டு வந்துட்டேன்...போன தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியும் திருவிழா போல இருந்துச்சு..ஆனா நேற்று சுத்தம்...கட்சிக்காரங்களே ஒரு ஈடுபாடு இல்லாம தான் இருந்தாங்க....ஆளுங்கட்சியில் பணப்பட்டுவாடா பக்காவா நடத்திட்டதா ஒரு நியூஸ் வேற....இந்த மாதிரி இடைத்தேர்தல் நடத்தி ஏன் மக்கள் வரிப்பணத்தினை வீணாக்கணும்....பேசாமா ஆளுங்கட்சியே அன்னபோஸ்டா வந்திடலாமே.....கோவையில் இருக்கிற வாக்காளர் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் வாக்களிக்க செல்லவில்லையாம்...அப்புறம் எதுக்கு எலக்சன்..?

***********************************

சமீபத்தில் பார்த்த படங்கள்:
God's Own Country - மலையாளம்.
ரொம்ப நாளைக்கப்புறம் மலையாளத்தில் வந்த நல்ல படம்.ஒரு நாளில் மூன்று பேர் வாழ்வில் நடக்கும் சம்பவம் தான் கதை.பகத், சீனிவாசன், லால் இவங்க மூணு பேரை சுற்றியே படம்.ரொம்ப உணர்வுபூர்வமான கதை.படம் பார்க்கும் போது காட்சிகள் நம்மையறியாமல் நெகிழ வைக்கிறது.அடுத்தடுத்த திருப்பங்கள் என கதை நம்மை படத்தோடு ஒன்றச்செய்கிறது.பகத்பாசில் எப்பவும் போல அட்டகாசம் தான்.எந்தவித கேரக்டர்னாலும் அசத்தலாய் செய்கிற நடிகன்..கண்டிப்பாய் பார்க்கவேண்டிய படம்..

*****************************************

சலீம் - தமிழ்
”நான்” படத்தின் தொடர்ச்சியாய் வந்திருக்கும் இந்தப்படமும் கொஞ்சம் இண்ட்ரஸ்டாக இருக்கிறது.விஜய் ஆண்டனி இரண்டாவது ஹிட் அடித்திருக்கிறார்.மஸ்காரா பாடலும், உன்னைக்கண்ட நாள் முதல் பாடலும் நன்றாக இருக்கிறது.கொஞ்சம் திரில்லர்.இரண்டாவது பாதி விறுவிறுப்பாக செல்கிறது.படம் பார்க்கலாம்.

பதிவர் சந்திப்பு
உலக தமிழ்ப்பதிவர்களின் மூன்றாம் ஆண்டு சந்திப்பு மதுரையில் வருகிற அக்டோபர் மாதம் 26ம் தேதி நடைபெற உள்ளது.வர விருப்பம் உள்ள பதிவர்கள் இந்த இணைப்புக்கு போய் பேரைப்பதிவு செய்துக்குங்க...ஜிகர்தண்டா தருவாங்களாம்...(டிவிடி இல்ல...ட்ரிங்க்...)



பதிவர் சந்திப்பு - மதுரை


நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. அன்புள்ள அய்யா திரு.ஜீவானந்தம் அவர்களுக்கு,
    வணக்கம். ஜனநாயக் கடமையாற்றியதற்க நன்றி.
    எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....