Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Friday, September 19, 2014

கரம் - 15 (19.9.2014)

மேயர் தேர்தல் 


நேற்று கோவையில் மேயருக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.நாம தான் ஜனநாயக கடமையை செவ்வனே செய்வதில் வல்லவர்கள் ஆயிற்றே..அதனால் ரொம்ப சீக்கிரமா பத்து மணிக்கு போனா ஓட்டுச்சாவடி இப்ப இருக்கிற தியேட்டர்கள் போல காத்து வாங்கிட்டு இருக்கு...மக்கள் யாருக்கும் இண்ட்ரஸ்ட் இல்ல போல...சீக்கிரம் ஓட்டு போட்டுட்டு வந்துட்டேன்...போன தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியும் திருவிழா போல இருந்துச்சு..ஆனா நேற்று சுத்தம்...கட்சிக்காரங்களே ஒரு ஈடுபாடு இல்லாம தான் இருந்தாங்க....ஆளுங்கட்சியில் பணப்பட்டுவாடா பக்காவா நடத்திட்டதா ஒரு நியூஸ் வேற....இந்த மாதிரி இடைத்தேர்தல் நடத்தி ஏன் மக்கள் வரிப்பணத்தினை வீணாக்கணும்....பேசாமா ஆளுங்கட்சியே அன்னபோஸ்டா வந்திடலாமே.....கோவையில் இருக்கிற வாக்காளர் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் வாக்களிக்க செல்லவில்லையாம்...அப்புறம் எதுக்கு எலக்சன்..?

***********************************

சமீபத்தில் பார்த்த படங்கள்:
God's Own Country - மலையாளம்.
ரொம்ப நாளைக்கப்புறம் மலையாளத்தில் வந்த நல்ல படம்.ஒரு நாளில் மூன்று பேர் வாழ்வில் நடக்கும் சம்பவம் தான் கதை.பகத், சீனிவாசன், லால் இவங்க மூணு பேரை சுற்றியே படம்.ரொம்ப உணர்வுபூர்வமான கதை.படம் பார்க்கும் போது காட்சிகள் நம்மையறியாமல் நெகிழ வைக்கிறது.அடுத்தடுத்த திருப்பங்கள் என கதை நம்மை படத்தோடு ஒன்றச்செய்கிறது.பகத்பாசில் எப்பவும் போல அட்டகாசம் தான்.எந்தவித கேரக்டர்னாலும் அசத்தலாய் செய்கிற நடிகன்..கண்டிப்பாய் பார்க்கவேண்டிய படம்..

*****************************************

சலீம் - தமிழ்
”நான்” படத்தின் தொடர்ச்சியாய் வந்திருக்கும் இந்தப்படமும் கொஞ்சம் இண்ட்ரஸ்டாக இருக்கிறது.விஜய் ஆண்டனி இரண்டாவது ஹிட் அடித்திருக்கிறார்.மஸ்காரா பாடலும், உன்னைக்கண்ட நாள் முதல் பாடலும் நன்றாக இருக்கிறது.கொஞ்சம் திரில்லர்.இரண்டாவது பாதி விறுவிறுப்பாக செல்கிறது.படம் பார்க்கலாம்.

பதிவர் சந்திப்பு
உலக தமிழ்ப்பதிவர்களின் மூன்றாம் ஆண்டு சந்திப்பு மதுரையில் வருகிற அக்டோபர் மாதம் 26ம் தேதி நடைபெற உள்ளது.வர விருப்பம் உள்ள பதிவர்கள் இந்த இணைப்புக்கு போய் பேரைப்பதிவு செய்துக்குங்க...ஜிகர்தண்டா தருவாங்களாம்...(டிவிடி இல்ல...ட்ரிங்க்...)



பதிவர் சந்திப்பு - மதுரை


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, August 31, 2013

பதிவர் சந்திப்பு - கிளம்பிட்டோம் சென்னைக்கு

கிளம்பிட்டோம்...கட்டுச்சோறு கட்டிகிட்டு....
கரெக்டா வண்டி எடுத்தாச்சு..9.45க்கு....

நிகழ்காலம் எழில் அவர்களின் கைமணத்தில் தக்காளி சாதமும் கூடவே அவிச்ச முட்டையும் ,  கலாகுமரன் அவர்கள் வீட்டு அம்மணி கைமணத்தில் மஸ்ரூம் பிரியாணியும், நம்ம கை வண்ணத்தில் சிக்கன் வறுவலும் சாதமும் செஞ்சு கொண்டு வரோம்...இதப்பத்தி நம்ம ஆவிகிட்ட சொல்லவும், அதுவும் ரொம்ப ஆவலா கொஞ்சநேரம் யோசிச்சு என்ன கொண்டு வரட்டும் அப்படின்னு கேட்டுட்டு கடைசியா ஒரு பிட்டைப்போட்டான் பாருங்க...அப்படியே மெர்சலாயிட்டேன்......என்ன சொன்னான் இந்த ஆவிப்பயல் தெரியுமா...நான் வேணா வெறும் வாயை மட்டும் கொண்டு வர்றேனே.....

ஏ......நியாயமாரே....இது அடுக்குமா....?



      
சென்னை வந்தவுடன் முதல் வேலை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சமாதிக்கு போய் ஒரு கும்பிடு போட்டுட்டு வரணும்...( வந்தவங்களுக்கு மெட்ராசை சுத்திக்காட்டணும்....ஒரு வரலாறு வேணும்ல...) அப்புறம் அப்படியே மெரினா பீச்சுல காத்து வாங்கிட்டு தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் சாப்பிட்டுகிட்டு காலாற நடந்துகிட்டே அங்க இருக்கிற அம்மணிகளை தரிசனம் பண்ணிட்டுத்தான் பதிவர் சந்திப்பு விழா மண்டபத்திலயே கால் வைப்பேன்....ஹிஹிஹி

நாங்க வந்துட்டோம்...மறக்காம நீங்களும் விழாவிற்கு வந்துடுங்க...அங்க சந்திப்போம்...வணக்கமுங்க...

கிசு கிசு : ஏ.சி வண்டி வேற.....கை வேற நடுங்குது...சிக்கன் வாசம் மூக்கைத்துளைக்குது...கார சாரமா அவிச்ச முட்டை வேற ....என்ன பண்றது.....? சரோஜா...சாமான் நிகாலோ.......ஹிஹிஹிஹி


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Wednesday, August 28, 2013

பதிவர் சந்திப்பு - நான் வெஜ் 18+++

சென்னையில் துவங்கவிருக்கிற இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு விழா வெற்றிகரமா கோலாகலமா நடக்கப்போகுது.இன்னும் ஒரிரு நாட்களே இருக்கு.எல்லாரும் தீயா வேலை செஞ்சிட்டு இருக்காங்க.அதிலும் முக்கியமான தலக்கட்டுகள்  பெரியவர் முதல் சிறியவர் அனைவரும் முன்னின்று ஏற்பாட்டை செஞ்சிட்டு இருக்காங்க.காலையில இருந்து மாலை வரைக்கும் நல்ல நல்ல நிகழ்ச்சிகள் இருக்கு.கோவையின் பிரபல எழுத்தாளர் பாமரன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.பிரபல பதிவர்களோட புத்தகம்லாம் ரிலீஸ் ஆகப்போகுது.அதில்லாம பதிவர்களோட தனித்திறன் நிகழ்வாக பாட்டு, டான்ஸ், கவிதை, நாடகம் இதெல்லாம் இருக்காம். (அப்படியே பக்கத்துல கேண்டீன் ஒண்ணு வச்சிருங்க சாமியோவ்...செமையா கல்லா கட்டிறலாம்..ஹிஹிஹி ) பயங்கரமா கச்சேரி களை கட்டப்போகுது.



சரி..சரி அதை விடுங்க.நம்ம மேட்டருக்கு வாங்க..மத்தியான விருந்துக்கு நான்வெஜ் அயிட்டமெல்லாம் போடறாங்களாம்.அதிலும் நமக்கு பிடிச்ச ஏகப்பட்ட வெரைட்டிகள் இருக்காம்.கடல்ல நீந்தறதுல கப்பலைத் தவிர, ஆகாசத்துல பறக்குறதுல விமானத்தைத் தவிர, ஓடறதுல பஸ் லாரி கார் தவிர, இப்படி எல்லா வகை உயிரினமும் இருக்காம்.ஓடறது போடறது கூட இருக்காம்...ஒரு புடி புடிச்சிட வேண்டியது தான் ஏன்னா இது நம்ம வீட்டு கல்யாணம்...(சாரி..ஒரு ஃப்ளோவுல வந்திடுச்சு... ) இது நம்ம வீட்டு விசேசம்... பூந்து விளையாடலாம்... இந்த சாப்பாட்டு விருந்துல என்னென்ன மெனு இருக்குன்னு தெரியல..எதுவா இருந்தாலும் சாப்பிடுவோம்...ஒரு வேளை கீழே இருக்கிறது எல்லாம் இருக்குமோ...

















உஸ்ஸ்...அப்பாடா...
இப்பவே கண்ணைக்கட்டுதே....
படங்களைப் பார்க்கையிலே
பசி நரம்புகள் சத்தமிடுதே...

சைவப் பிரியர்களே கவலைப்படாதீங்க எங்களைப் பார்த்து கண்ணு வைக்காதீங்க..உங்களுக்கும் வகை வகையாய் நிறைய இருக்கு, தயிர் சாதம், ஊறுகாய்ன்னு (அதுவும் பாண்டியன் மட்டை ஊறுகாய்) ஏற்பாடு செஞ்சி இருக்காங்களாம்..ஹிஹிஹி .....ஒரு பிடி பிடிச்சுகுங்க.


எல்லாரும் கண்டிப்பா வந்திடுங்க...ஒரு கை பார்த்திடலாம்..

கிசு கிசு : மத்தியான நேரத்துல என்னை எங்கயும் தேடாதீங்க கண்டிப்பா முத பந்தியில நான் இருப்பேன் ஹிஹிஹி...


பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Wednesday, July 31, 2013

ரெடியாகிட்டோம்....பதிவர் சந்திப்பு சென்னைக்கு

ரெடியாகிட்டோம்...இன்ப சுற்றுலாவிற்கு நாங்க....அப்ப நீங்க.....
சென்னையில் நடக்கிற பதிவர் சந்திப்புக்கு வேன் சகிதம் எல்லாம் ரெடி..

காலையில கிளம்பினா சாயந்திரம் போயிடலாம்..
(மறக்காம மத்தியான சாப்பாட்டுக்கு கட்டுச்சோறு கட்டிட்டு வந்திடுங்க...எங்காவது வண்டிய நிறுத்தி சாப்பிட்டுவிட்டு போனா தெம்பா இருக்கும்.)
அப்படியே மெரினா பீச்சுல காத்து வாங்கிட்டு அப்படியே மாங்காய் பட்டாணி சுண்டல் சாப்பிட்டுவிட்டு
அங்க இருக்கிற அம்மணிகளை நோட்டம் விட்டுட்டு
கிளம்பி வந்து ரூமில தூக்கம் போட்டுட்டு 
ஞாயிற்றுக்கிழமை காலைல நல்ல ஒரு ஹோட்டலில சாப்பிட்டுட்டு (கோவை மெஸ்ஸுக்கு பதிவு தேத்தனும் வேற )


பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு ஒரு அட்டணன்ஸ் போட்டுட்டு
அங்க போடற மத்தியான சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிட்டு (பார்சல் இல்ல...)
இருக்கிற மிச்ச சொச்ச நிகழ்ச்சிகளையும் பார்த்துட்டு
சாயங்காலம் கிளம்பினா அடுத்த நாள் காலை 5 மணிக்கு கோவை வந்திடலாம்
அப்புறம் வழக்கம் போல வேலைக்கு போக வேண்டியது தான்...
வேலைக்கு போன இடத்துல பதிவர் சந்திப்பு சுவாரசியங்களை இணையத்துல போட்டு
ஒரு மாசம் பதிவர்களை கொன்னெடுக்கலாம்...

யாரெல்லாம் வரீங்க....

கை தூக்குங்க....

கோவை மு சரளா -  உள்ளேன் ஐயா...
அகிலா -  உள்ளேன் ஐயா.
நிகழ்காலம் எழில் -  உள்ளேன் ஐயா...
கலாகுமரன் -  உள்ளேன் ஐயா...
ஆவி -  உள்ளேன் ஐயா...
உலக சினிமா ரசிகன் -  உள்ளேன் ஐயா...
கோவை சதிஸ் -  உள்ளேன் ஐயா...
நிர்மல் குமார் - உள்ளேன் ஐயா...
சுட்டி மலர்  - உள்ளேன் ஐயா...
அப்புறம்
நானும் இருக்கேனுங்க....

இன்னும் யாராவது வரணும்னு நினைச்சீங்கன்னா சீக்கிரம் அட்டனன்ஸ் போட்டுடுங்க...அப்புறம் வேன்ல தொங்கிட்டு தான் வரணும்..இல்லே டாப்ல தான் உட்கோரணும்..
அப்புறம் முக்கிய விசயமுங்க...எல்லாரும் சேர்ந்து தாங்க செலவை பிரிச்சுக்கணும்..இல்லேனா வண்டி ஓடாதுங் சாமியோவ்......

கூப்பிடுங்க எங்களை ( கோவையில இருந்து பதிவு எழுதறவங்க, பிளாக் ஆரம்பிக்கணும்னு நினைக்கிறவங்க  )

அகிலா - 94431 95561
கலாகுமரன் - 88700 25552
சரளா - 97891 89444


கிசுகிசு : 
கவிஞர்கள் நிறைய பேர் இருக்கிறதால் வண்டியில் போகும் போது யாரும் கவிதை சொல்லக்கூடாது...மீறி சொன்னா நான் வண்டியில இருந்து குதிச்சிடுவேன்..ஹிஹிஹி


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, July 22, 2013

கரம் - 8 - 22.7.2013 - ஆ(வி)பத்து - மினி பதிவர் சந்திப்பு

          எனது கல்லூரி நண்பனும், ஆவிப்பா எழுதி நம்மை கதிகலங்க வைக்கும் நண்பரும், பதிவுலகில் பேய், பிசாசு என அழைக்கும் கோவை ஆவியுமான, கோவை மாவட்ட நஸ்ரியா ரசிகர் மன்ற தலைவரும், உடல் பொருள் ஆவி என அனைத்தும் நஸ்ரியாவிற்கே என எழுதிக்கொடுத்திருக்கும் கோவை ஆவிஎன்கிற ஆனந்த் போன சனிக்கிழமை அன்னிக்கு பொள்ளாச்சி போகும் போது ஏதோ காத்து கருப்பு (ஆவிக்கேவா....) அடிச்சிருக்கும் போல....(அனேகமா மரியான் ன்னு நினைக்கிறேன் ) திடீர்னு பிரேக் பிடிச்சதால் வண்டியில இருந்து பறந்து போய் கீழே விழுந்து தன் இரண்டு கைகளிலும் விழுப்புண்ணை (விழுந்து + புண்ணை ) ஏந்தியிருக்கிறார்.நல்லவேளை ஹெல்மெட் அணிந்திருக்கிறார் இல்லை எனில்  மொட்டைத்தலை சிதறு(தலை)தேங்காய் ஆகிருக்கும்.(தயவு செய்து வண்டியில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியுங்கள்).அதனால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உடல் நலமின்றி இருக்கிறார்.
அவர் உடல் நலம் தேறி மீண்டும் ஆவிப்பா எழுத வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.மச்சி சீக்கிரம் வா ...உனக்கு சத்ரியன், பரதன், குமரன் S/o மஹாலட்சுமி, விஜய் நடிச்ச பத்ரி, இந்த படங்களில் இருந்து ஒரு பாட்டு அனுப்பறேன். அதை கேட்டு சீக்கிரம் குணமாகு..

மச்சி...ஆப்ரேஷன் லாம் பண்ற...எப்போ ட்ரீட்...ஹிஹிஹி  

*********************************
மினி பதிவர் சந்திப்பு..

நெல்லையின் ஆபிசர் என அழைக்கப்படும் நண்பர் சங்கரலிங்கம் அவர்கள் போன மாதம் கோவைக்கு வந்திருந்தார்.அவரின் உடன்பிறப்புகளும் வந்திருந்தனர். ஆபிசர் பார்க்க இளைஞனாக இருக்கிறார்.(ஹேர்டை, டீ ஷர்ட் போட்டு ஒரு யூத்தாகவே இருக்கிறார் இன்னும் )அவரை அழைத்துக்கொண்டு ப்ரூக் பீல்ட்ஸ் மால் சென்றேன். அம்மணிகளின் வருகை குறைவாக இருந்தாலும் அவர் மிக மகிழ்ச்சியாக இருந்ததை கண்டு கொண்டேன்...அதற்குள் நண்பர் உலக சினிமா ரசிகனுக்கு ஒரு போன் போட அவரும்.ஜோதியில் ஐக்கியமானார். இந்த சந்திப்பில் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.நன்றி பதிவுலகம்..

*****************************

அது போலவே இன்னொரு திருநாளில் பெங்களூரில் இருந்து நண்பர் கடல்பயணங்கள் சுரேஷ் கோவை வருவதாக சொல்லி இருந்தார்.அவரை சந்திக்க ப்ளான் பண்ணியிருந்தோம்.ப்ரூக்பீல்ட்ஸ் மாலிற்கு முன்னதாகவே ஆவியும் உலக சினிமா ரசிகனும் வந்திருக்க அவர்களுடன் கலந்து கொண்டேன்.சுரேஷ் வரும்வரை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில் கேஎஃப்சி யில்  கூட்டம் பின்னி எடுக்க அங்கே நகர்ந்தோம்.கோவை ஆவியின் கைங்கர்யத்தில் சிக்கன் பீஸ்களோடு அருகே இருந்த அம்மணிகளையும் விழுங்கிகொண்டிருக்க சுரேஷ் வந்து விட்டதாக சொல்ல வாஸ்துக்காக அருகில் இருந்த இட்லி கடைக்கு ஷிஃப்ட் ஆனோம்..சுரேஷ் பைஜாமா போட்டு சிக்கென வந்திருந்தார்.அவரிடம் ஊர் ஞானம், உலக ஞானம் லாம் பேசிக்கொண்டே காபி குடித்தோம்.அதற்குள் எழில் மேடமும் வர அனைவரும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.நல்ல நண்பரை கொடுத்த பதிவுலகத்திற்கு நன்றி.


**************************


அதே மாதிரி இன்னொரு சந்திப்பு....இதை படிக்க
 உலகசினிமா ரசிகன், கவியாழி கண்ணதாசன், கோவை ஆவி மற்றும் நான்.

நிறைய நண்பர்களை கொடுக்கும் பதிவுலகிற்கு நன்றி

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Sunday, June 10, 2012

கோவை பதிவர் சந்திப்பு -10.6.2012 - பாகம் 1

 கோவை பதிவர் சந்திப்பு -10.6.2012
ஒரு வாரமா எதிர்பார்த்துட்டு இருந்த இந்த பொன்னாள் இன்னிக்கு.
கோவை மாவட்ட மற்றும் அருகிலிருக்கும் ஊர்களின் பதிவர் சந்திப்பு இனிதாய் நடைபெற்றது..
கிராஸ் கட் டில் உள்ள லால் குடி மெஸ்சின் பார்ட்டி ஹாலில் மதியம் இரண்டு மணிக்கு இனிதே துவங்கியது.
உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் அவர்கள் பிரஞ்சு மொழி திரைப்படத்தை ஒளிபரப்பி எங்களின் விழிகளுக்கு விருந்தளித்தார்.அப்புறம் நம்ம சங்கத்து கவிதாயினி கோவை மு சரளா அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி செவிகளுக்கு விருந்தளித்தார்.அதுக்கப்புறம் சங்க தலைவர் தானைத் தலைவர் தமிழன் சங்கவி அவர்கள் ஆரம்பித்து வைக்க, நேசம் விஜி ராம் அவர்கள் வாழ்த்துரை வழங்க ஒவ்வொருத்தரோட அறிமுகம்..இனிதாய் நடைபெற்றது..









மாலை ஆறு மணிக்கு இனிதாய் நிகழ்ச்சிகள் முடிவடைந்து அனைவரும் மகிழ்ச்சியுடன் இன்னொரு நாளை எதிர் நோக்கி சென்றோம்.

இன்னும்  விரிவான படங்களுடன் ...விரைவில்..

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, May 31, 2012

கோவை பதிவர்கள் சந்திப்பு - 31.5.2012



இன்று ( 31.5.2012) எப்படியோ ஒருவழியாக கோவை பதிவர்களின் சிறு பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற்று விட்டது.எதிர்பார்க்கவில்லை இத்தனை பேர் வருவார்கள் என்று.( மொத்தம் 19 பேருங்க )
  கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள கார்டனில் சந்திக்க ஏற்பாடு முடிவு செய்யப்பட்டு இருந்தது.முதலில் சங்கவி வர அடுத்து நான் ஆஜரானேன்.அடுத்து எனக்கு  ஒரு போன் கால் வர அது மனசாட்சி (என்னோட மனசாட்சி இல்லீங்கோ) எந்த இடம் என்று விசாரித்து விட்டு எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டு விட்டு தானும் அங்கு தான் உள்ளதாக சொன்னது.அப்புறம் என்னை பார்த்து விட்டு, என்னை எழுந்திருக்க சொல்ல, அப்புறம் உட்கார சொல்ல, இப்படி திரும்பு,  அப்படி திரும்பு என ட்ரில் மாஸ்டர் வேலை எல்லாம் செய்ய சொல்லி விட்டு தன் முகத்தை காட்டியது மனசாட்சி. (என்னா ஒரு வில்லத்தனம்). அதன் பின் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். சந்தன சிதறல் சேகர், சாமியின் மன அலைகள் பழனி கந்தசாமி, கலா குமரன் ,மரவளம் வின்சென்ட், மூலிகை குப்புசாமி  என பழம் பெரும் பதிவர்கள் (ஹி ஹி ஹி மூத்த பதிவர்கள்) வந்தனர்.
             (சேகர், மனசாட்சி, சங்கவி, பழனி கந்தசாமி )
அடுத்து தமிழ் பேரன்ட்ஸ் சம்பத், கோவை மு சரளா (பெண் எனும் புதுமை) கோவை சக்தி, வீடு சுரேஷ் குமார், இரவு வானம் சுரேஷ் என இளம் பதிவர்கள் வருகை புரிந்தனர். விஜி ராம், உலக சினிமா ரசிகன், அகிலா, மு ராமநாதன் இவர்களும் இடையில் வந்து கலந்து கொண்டனர்.
         (கோவை சக்தி, சேகர், கலாகுமரன், பழனி கந்தசாமி )
 
     (வின்சென்ட் , குப்புசாமி, விஜி ராம் இவர்களுடன் சங்கவி )
கொஞ்ச நேரத்தில் இடம் மாற்றம் செய்து அனைவரும் உட்கார்ந்து கொள்ள கிருஷ்ணா ஸ்வீட்ஸின்  தித்திக்கும் மைசூர்பா சுவையுடன் அறிமுக படலம் இனிதே நடந்தேறியது.
ஒவ்வொருவரும் தத்தம் வலைத்தளம், பதிவு பற்றி அறிமுகம் கொடுத்தனர்.ஒரு சில ஆலோசனைகள், கருத்துக்கள், ஆக்கபூர்வ செயல்கள் பற்றி தீவிரமாக விவாதித்து கொண்டனர்.இடையில் பிஸ்கட், குளிர்பானம் வழங்கி சிறப்பித்தனர்.(அந்த மகராசன் யாருப்பா...ரொம்ப நன்றி )
(இயற்கை சரியான முறையில் ஒத்துழைக்காததால் சரியான முறையில் புகைப்படம் எடுக்க முடியவில்லை)

இனிதே இன்முகத்துடன் அடுத்த பதிவர் சந்திப்பில் சந்திப்போம் என கூறி அனைவரும் பிரிந்து சென்றோம்.

இந்த சந்திப்பு சிறப்பாக நடக்க உதவி புரிந்தவர்கள்
சங்கவி
சம்பத்
கோவைநேரம்
வீடு சுரேஷ்குமார்
மற்றும் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களும்...

இன்னிக்கு நடந்த இந்த சந்திப்பு ஒரு ட்ரைலர் தான்...ஜூன் 10 அன்று தான் மெயின் பிக்சர்....

கண்டிப்பாக கோவை பதிவர்கள் அனைவரும் கலந்து கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்ள படுகிறார்கள்.

கிசுகிசு:ரேஸ் கோர்ஸ் சாலையில் காலை மற்றும் மாலையில் வாக்கிங் செல்பவர்கள் தான் அதிகம். அதிலும் அம்மணிகள் இருக்காங்களே.ரொம்ப கண்ணுக்கு குளிர்ச்சியா இதமா...பதமா..வித விதமா....அவங்க தங்களோட உடம்பை குறைக்கிறாங்களோ இல்லையோ....பார்க்கிற நம்ம மனசை குறைச்சு விடுவாங்க...இங்க நம்ம பதிவர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும் போது அப்பப்ப கொஞ்சம் நம்மாளுங்க இளைப்பாரலுக்கு திரும்பி திரும்பி பார்த்து கொண்டே....மனசை தேத்திக் கொண்டே ......
அப்புறம் ஒரே ஒரு அம்மணி மட்டும் டவுசர் டி ஷர்ட் லாம் போட்டு காதுல ஹெட் போன் மாட்டிகிட்டு ரொம்ப தீவிரமா வாக்கிங் போய்ட்டு இருந்தாங்க..நாங்க ஆரம்பிக்கிறதில் இருந்து முடியற வரை நாலு ரவுண்டு போனாங்க. இதை இவங்க கிட்டா சொன்னா ......எல்லாரும் கரக்டா சொல்றாங்க...நாங்களும் தானே எண்ணிகிட்டு இருந்தோம் அப்படின்னு.........(கணக்குல புலி போல) அடப்பாவிகளா..... விளங்கிடும்......

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, May 16, 2012

கோவை மண்ணின் பதிவர்களே...வாருங்கள்


வணக்கம்...



      தமிழ் நாட்டுல இருக்கிற எல்லா முக்கியமான நகரங்களில் எல்லாம் பதிவர் சந்திப்பு நடத்தறாங்க.நம்ம கொங்கு நாட்டுல இதுவரைக்கும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை.நான் வேற புதுசு...நம்ம ஊருல  பழம் தின்னு கொட்டை போட்ட பதிவர்களாம் நிறைய பேரு இருக்காங்க..அவங்களோடு ஒண்ணு சேர்கிற முயற்சியாய் அப்படியே இளம் பதிவர்களையும் (அதுதாங்க யூத் பதிவர்கள்  மாதிரி ) இனம் காண்கிற முயற்சியாய் கோவையில் விரைவில் பதிவர்கள் சந்திப்பு நடத்தலாம் என்று தீர்மானித்து உள்ளோம்.

அதனால் கோவையை  சுற்றி  உள்ள  பதிவர்கள்,  முக நூல் நண்பர்கள் , ட்வீட் டர் நண்பர்கள் அனைவரும் விரைவில் ஒரு நாள் சந்திக்கலாம். ஆலோசிக்கலாம்.

பதிவர்கள் தங்கள் வலைப்பூவையும், தொடர்பு எண்ணையும் இநத் மின்மடலுக்கு kovaibloggers@gmail.com மடல் அனுப்பவும்.

கோவையில் உள்ள  பதிவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

விரைவில் சந்திப்போம்...

தொடர்புக்கு

தமிழ் பேரண்ட்ஸ் சம்பத் - 99655 77404

சங்கவி  சதீஷ் - 9843060707

கோவை நேரம் ஜீவா - 98944 01474


நன்றி
கோவை பதிவர்கள் குழுமம்..




நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Tuesday, January 24, 2012

சென்னிமலை சரித்திரம் சிபியுடன் ஒரு சந்திப்பு

கடந்த பொங்கலன்று ஊருக்கு செல்லும் போது நாம் ஏன் பதிவுலக சக்கரவர்த்தி (ஹி..ஹி..ஹி பில்டப் போதுமா சிபி )சிபியை சந்திக்க கூடாது என்று எண்ணி அவர்க்கு போன் போட்டேன்.சிங்கமும் சிங்கிள் ஆகத்தான் இருக்கிறது என்று சொல்லியது (ஹி ஹி அவரு வீட்டுல அன்னிக்கு தொரத்தி விட்டுட்டாங்க..) காங்கேயம் வந்து போன் போட்டேன்.19  கிலோமீட்டர்ல சென்னிமலை இருக்கு அங்க வாங்க அப்படின்னு சொன்னாரு.கிளம்பினோம்.இருபுறமும் புளியமரம் நிறைய இருக்கிறது.



ரோடும் சூப்பரா இருக்கு.போற வழியில சென்னி மலை அருகில் மலையை வெட்டி ரோடு போட்டு இருக்காங்க. மலை உச்சியில் ஒரு முருகன் கோவில் இருக்கிறது (கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.)

சென்னி மலை வந்து பிராட்டியம்மன் கோவில் கேட்டு சிங்கத்துக்கு ஆக வெய்டிங்.(இந்த கோவில் இப்போ கும்பாபிசேகம் செய்ய தயார் ஆயிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்) அப்ப சிபி நம்ம மேதை கணக்குல ஊதா பச்சை கலர் டி ஷர்ட் போட்டு இன் பண்ணிட்டு அந்த கூலிங் கிளாஸ் (பிரிக்க முடியாதது சிபியும் கூலிங் கிளாஸ் யும் ) போட்டு  சும்மா ஹீரோ கணக்கா வந்து நிக்கிறாரு.அசந்துட்டேன்.அப்புறம் எங்களை அவரோட வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு.அண்ணன் ரொம்ப உபசரிச்சாரு.அப்போ அவர்கிட்ட இருந்த போன் பார்த்தேன்.1000 வது பதிவுல சொன்னமாதிரியே நோக்கியா மாடல் தான் வச்சிருந்தாரு.(ஒத்துகிட்டேன் ...உங்களுக்கு ஞாபக சக்தி ஜாஸ்தின்னு ..).
அவரு வச்சிருந்த போன் இதுதான்.


அப்புறம் சாப்பிட முறுக்கு,  மிக்சர், தண்ணி ( நம்ம தண்ணி இல்ல..ஆனாலும் குடுத்தது எல்லாம் அதுக்கு மாட்சிங்  ) எல்லாம் தந்து ரொம்ப அன்பா கவனிச்சாரு.அவரின் வரலாறுகள், பதிவுகள் போடும் முறை என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.என் பொண்ணும் அவரும்  ரொம்ப க்ளோஸ் ஆகிட்டாங்க .அப்புறம் நிறைய போட்டோ எடுத்துகிட்டோம்



வீட்டுல மாட்டி இருந்த ஒரு குழந்தை போட்டோ என் கவனத்தை ஈர்த்தது.யாருன்னு கேட்டா....ஹி ஹி ஹி   நான்தான் அப்படின்னு சொன்னாரு.பதிவுலகமே பார்க்காத அவரது கவர்ச்சி போட்டோ இதுதான்.(ஹி ஹி ஹி )அவரோட இளமை கால போட்டோ இதுதான்.


சென்னிமலை சிகரம், பதிவுலக சித்தர் இதுமாதிரி நிறைய அடைமொழிகளை சொல்லி இனிய சந்தோசத்துடன் அவரிடம் இருந்து பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு விடை பெற்றோம்.
முகம்தெரியாத பதிவர்களாக பழகி நண்பர்களாக எங்களை ஒன்று சேர்த்த இந்த பதிவுலகத்திற்கு நன்றி.


கிசு கிசு : ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்னிக்கு சிபியை சென்னிமலையில் பார்க்கலாம்.

நேசங்களுடன்  
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, December 27, 2011

பிரபல பதிவருடன் ( ஜாக்கி )சந்திப்பு

சனிக்கிழமை வேலை விசயமாக தமிழகத்தின் தலைநகருக்கு வந்தேன்..
சென்னையில் இருந்த காரணத்தினால் ஜாக்கி அவர்களிடம் அனுமதி பெற்று அவரை சந்திக்க கிளம்பினேன்.ஈரோடு சங்கமத்தில் கலந்து கொண்ட பல பதிவர்கள் மட்டும்தான் போட்டோ போடுவாங்களா......  நாங்களும் போடுவோம்ல .......

சிங்கத்தை அதன் குகைக்கே சென்று சந்தித்த தருணம் அற்புதம்.

ஜாக்கி மற்றும் அவங்க சம்சாரம் அப்புறம் யாழினி இவங்களை சந்தித்ததில் ரொம்ப பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.ஜாக்கி வீட்டில் அவருடன் பேசியபோது நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டோம்.

ஜாக்கி உடன் இருந்த நிமிடங்கள் மிகவும் ஒவ்வொன்றும் அருமை.ஜாக்கி எப்போதும் கேமராவும் கையும் மாக இருக்கிறார்.அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டேன்.


 ஜாக்கி என்னமா போஸ் கொடுக்கிறார் பாருங்க ...

அப்புறம் சென்னையில் எடுத்த புகைப்படங்கள் அடுத்த பதிவில்
இன்னும் கொஞ்சம்...