Monday, January 25, 2016

கரம் - 20

கரம்
படித்தது :பு(து)த்தகம்
மெளனத்தின் சாட்சியங்கள் :
கோவையில் இரு அமைப்புகளுக்கு  ஏற்பட்ட மோதலே கொலை, குண்டுவெடிப்பு, கலவரம் என நீண்டு கோவையை சின்னா பின்னமாக்கிவிட்டது.இந்த குண்டுவெடிப்பு நிகழ்வினை நாவலாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.சிறையிலிருந்து விடுதலையாகும் ஒரு அப்பாவி முஸ்லீம் இளைஞனின் பார்வையில் கதை விரிகிறது.இரு மதங்களின் போர்வையில் நடத்திய ஒரு பயங்கர நிகழ்வு இந்த கோவை குண்டுவெடிப்பு.இதற்கு பலியானது அப்பாவிகள்தான்.கோவைக்கு ஏற்பட்ட தீராத களங்கமும் இந்த குண்டு வெடிப்பினால்தான்.
கோவை பெரிய கடை வீதி, டவுன்ஹால், கோட்டைமேடு, உக்கடம் பகுதிகளில் உள்ள இந்து முஸ்லீம் வியாபாரிகளின் தொழில் போட்டியே இந்த கலவரத்திற்கு காரணம் என்றும் அறியப்படுகிறது..
இந்த கலவரக்காட்சிகளை கண்முன்னே நிறுத்துகிறார் எழுத்தின் வடிவில்..பதபதைக்கிறது படிக்க படிக்க....
பார்த்தது :
2015 இறுதியில் தியேட்டருக்கு சென்று பார்த்த படம் பூலோகம்...
படம் மிக அருமை..ஒரு சேனலின் அதிபருக்கும், குத்துச்சண்டை வீரருக்கும் நடக்கும் யுத்தமே இந்த பூலோகம்...படம் மிக நன்றாக இருக்கிறது...

2016 இல் தியேட்டருக்கு சென்று பார்த்த முதல் திரைப்படம்
தாரை தப்பட்டை...
பாலாவின் அதே டிரேட் மார்க் படம்..செம...சின்ன சின்ன ஹாஸ்யங்களுடன் நன்றாகவே இருக்கிறது.நிறைய விமர்சனங்களை படித்து தொலைத்ததினால் என்னவோ ஹீரோ எப்போ வில்லனின் குரல்வளையை கடிப்பான்......கொல்வான் என்கிற எதிர்பார்ப்பு வந்து தொலைக்கிறது.இனி சத்தியமாய் விமர்சனம் படிக்கவே கூடாது.ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கிறது.எந்த மாதிரி மனநிலையில் அவன் படம் பார்க்கிறான் என்பதை பொறுத்து படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.என்னைப் பொறுத்த வரையில் படம் நன்றாகவே இருக்கிறது.அதிக வன்முறை, ஆபாசம் என்பதெல்லாம் இல்லை.எங்கள் ஊரில் குறவன் குறத்தி ஆட்டம் ஆடுவார்கள்.அது இன்னும் மோசமாக இருக்கும்.இந்தப்படத்தில் அப்படி ஒன்றும் ஆபாசம் இல்லை.

பாலாவின் ட்ரேட்மார்க் சோடை போகவில்லை.

ருசித்தது:
பனங்கிழங்கு:
நம்ம தோட்டத்துல விளைஞ்சது....

இப்போது பனங்கிழங்கு அரிய பொருள் ஆகிக்கொண்டு வருகிறது.பனைமரம் அழிப்பு காரணமாக இது அதிகம் கிடைப்பது இல்லை...தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இது கிடைக்கிறது.
பனஞ்சீம்பு..
கிழங்கை தோண்டி எடுக்கும் போது அதனுடன் உள்ள கொட்டையை இரண்டாக வெட்டினால் அதில் சீம்பு கிடைக்கும்.சாப்பிட சுவையாக இருக்கும்.இதுவும் மிக அரிதான மருத்துவ குணம் வாய்ந்த பொருள்...சாப்பிட்டுப்பார்த்தால் கொஞ்சம் இனிப்பும், உப்பும் கலந்த மாதிரி இருக்கும்.ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பெயரை சொல்கிறார்கள் இதற்கு.


நேசங்களுடன்
ஜீவானந்தம்


1 comment:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....