Sunday, June 19, 2011

சிதம்பரம் பயணம் 1

 சிதம்பரம் நடராஜர் கோவில்
சனிக்கிழமை அன்னிக்கு சிதம்பரம் கோவிலுக்கு போனேன் ,நல்ல பரந்து விரிந்த கோவில்..





ஏனோ பராமரிப்பின்றி கிடக்கிறது.பூஜை வேளைகளில் மட்டும் கதவை திறந்து வைக்கிறார்கள். நான்கு கோபுரங்களின் வழியே கோவிலின் உள்ளே செல்லலாம்.குளம் இருக்கிறது.நான் போன நேரம் மதியம் ஆனதால் உள்ளே வெயில் வாட்டி வதைத்து விட்டது.அப்புறம் மக்கள் எல்லாரும் குறுக்கு வழி சாலையாக இக்கோவிலின் பிரகாரத்தை உபயோகம் செய்கிறார்கள்.ஒவ்வொருவரும் கையிலே செருப்பை பிடித்து கொண்டு வலம் வருகிறார்கள் (ஹி..ஹி..ஹி..கோவிலுக்குள்ளே செருப்பு போடாமல் இருக்கவாம்) அதாவது குறுக்கால பூந்து வெளிய வருவது.
அப்புறம் கூட்டம் ஒண்ணும் அதிகமா இல்லே.மகனால், மருமகளால் கைவிடப்பட்ட இரண்டு முதியோர் பிச்சை எடுத்து கொண்டு இருந்தனர்.




அப்புறம் எப்போவாவது வரும் கஸ்டமரை நோக்கி கிளியும் அவரது ஓனரும் காத்துகிட்டு இருந்தார்கள் .அப்புறம் எப்பவும் வழக்கம் போல கோவில்களில் மட்டுமே தங்களது அன்பை பரிமாறி கொள்ளும் நல்ல / கள்ள உறவினர்களும் அங்கங்கே இருந்தனர்.கோவிலின் சுற்று சுவரில் கல்வெட்டு இருக்கிறது அப்புறம் கோவில் மட்டும் நல்ல பராமரிப்பினை மேற் கொண்டால் வருமானம் பல மடங்கு பெருகும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....