Tuesday, October 18, 2011

திருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு வந்தேன்.இப்போது கோவில் மிகவும் நன்றாக பராமரிக்கப்பட்டு இருக்கிறது.கோவிலை சுற்றி பக்தர்களின் வசதிக்காக வெளி பிரகாரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.அப்புறம் தரிசனம் பெற செல்பவர்கள் வரிசையாக செல்ல வழி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.தரிசனம் டிக்கெட் வாங்கிகொண்டு உள்ளே நுழைந்தால் ரொம்ப தூரம் செல்ல வேண்டிய பிரமை ஏற்படுகிறது.உள்ளே மாடிப்படிகள் எல்லாம் வைத்து இருக்கிறார்கள்.எல்லாம் கடந்து சென்றால் முருகனை தாரளமாக தரிசித்து வரலாம்.முருகனின் கோஷம் அரோகரா அதிகம் ஒலிக்கவில்லை.ஆயினும் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.நாழிகிணறு என்று ஒரு சுனை இருக்கிறது.மொத்தம் உள்ள 24 சுனைகளில் இந்த நாழி கிணறில் மட்டுமே நீர் வருகிறது.கோவிலை ஒட்டி உள்ள கடல் எப்போதும் அலையுடன் இருக்கிறது.பக்தர்கள் அதில் நீராடி கொண்டு இருக்கின்றனர்.கோவையில் இருந்து திருந்செந்தூர் 490 கிலோமீட்டர் இருக்கிறது.பல்லடம், திண்டுக்கல், மதுரை, அருப்புகோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் என சென்றோம்.






இன்னும் தொடரும் .....
திருச்செந்தூர் பயணத்தில் எடுத்த புகைப்படங்கள்

3 comments:

  1. நல்ல படப்பிடிப்பு.

    ReplyDelete
  2. நல்ல படப்பிடிப்பு.

    ReplyDelete
  3. வாங்க ..விமலன் ..நன்றி ..படம் பார்த்ததுக்கு ..

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....