Sunday, March 22, 2015

கோவை மெஸ் - ராய்பூர் தர்பார் ரெஸ்டாரண்ட், திருப்பத்தூர்

              திருப்பத்தூரில் தான் கடந்த ஒரு மாதமாக மையம் கொண்டிருப்பதால் நிறைய ஹோட்டல்களில் சாப்பிடும் அனுபவம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
திருப்பத்தூர் அருகே பிரியாணிக்கு புகழ்பெற்ற மிக முக்கியமான சிறு குறு பெரு நகரங்களான வாணியம்பாடி, ஆம்பூர் வேலூர்  இருப்பதால் திருப்பத்தூரிலும் அதே போன்ற சுவையினை தேடி அலைந்த போது தான் கண்ணில் சிக்கிய ஹோட்டல் ராய்பூர்.
               ஹோட்டல் கொஞ்சம் விஸ்தாரமாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் பொது ஹால், ஏசி ஹால் என பிரித்து வைத்து இருக்கின்றனர். திருப்பத்தூரில் அடிக்கின்ற வெயிலுக்கு ஏசிதான் பெஸ்ட் என்றாலும் நாங்கள் போன அன்று ஏசியின் தற்காலிக சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
எனவே காற்றோட்டமாக பொது ஹாலிலேயே அமர்ந்தோம்.ஹால் காற்றோட்டமாக இருந்தாலும் டேபிள்கள் மக்களால் நிரம்பியிருந்தது.


             தந்தூரி சிக்கன், சிக்கன் 65, மஞ்சூரியன், மட்டன் பிரியாணி, காடை ரோஸ்ட் என அசைவமும் மஸ்ரூம் 65, பேபிகார்ன், என ஒரு சில சைவ மெனுக்களும் விளம்பர போர்டுகளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. 

                    மெனு கார்டு தந்ததும் சிக்கன் பிரியாணி தான் ஆர்டர் பண்ணினோம்.. நன்கு வாசத்துடன் பிரியாணி பிளேட்டில் வந்து இறங்கியது. பொலபொலவென்று தங்க நிறத்தில் மின்னிய பாசுமதி அரிசி பார்க்கும் போதே பசியை அதிகப்படுத்திக்கொண்டிருந்தது

நீள நீளமான பாசுமதி அரிசியுடன் சிக்கன் கலந்து ஒருவித சுவையை ஏற்படுத்தி நம் பசியை தூண்டிவிட்டிருந்தது.ஒரு தட்டு நிறைய பிரியாணியுடன் சிக்கன் பீஸ்கள் நிறைந்து தட்டை நிரப்பி இருந்தது.கொஞ்சம் எடுத்து வாயில் வைக்கவும் பிரியாணியின் சுவை நம்மை உள்ளுக்குள் இழுக்கிறது.சாப்பிடுவதே தெரியவில்லை.அவ்வளவு அதிகமாக தெரிந்த பிரியாணி சீக்கிரம் காலியாகி விட்டிருந்தது.இடையே சிக்கன் பீஸ் நன்றாக வெந்து மெலிதாய் பிரிந்து விட்டிருந்தது.உப்பும் உரைப்பும் செமயாக இருந்தது.
கூடவே ஆர்டர் செய்திருந்த தந்தூரி சிக்கனும் உடனே டேபிளுக்கு வர அதுவும் காலியாக ஆரம்பித்து விட்டிருந்தது.


தந்தூரி நன்றாக மெது மெதுவென்று இருக்க வாயில் வைக்க கரைந்து ஓடியது. எலும்பு மட்டும் அவ்வப்போது வெளியே வந்து விழுந்தது வாயிலிருந்து.
கூட வந்த நண்பரின் பையனுக்காக சிக்கன் நூடூல்ஸ் ஆர்டர் செய்து இருந்தோம்.அதை கொஞ்சம் டேஸ்ட் பார்த்ததில் அதுவும் நன்றாக இருந்தது.

கடைசியாக வந்த மெனு காடை...ஜப்பான் காடை....நன்கு செக்க செவந்த நிறத்தில் கால்களை பிய்த்து தின்பதற்கு ஏற்றப்படி மல்லாந்து கிடந்தது.
நன்கு மொறு மொறு வென்று இருக்கிறது கடித்து தின்பதற்கு.சுவையும் அபாரம்.

மொத்தத்தில் அனைத்தும் சூப்பர்.
பிரியாணி செம டேஸ்ட்.உதிரி உதிரியாக மிக சுவையாக இருக்கிறது.அந்த பாசுமதி அரிசி செம டேஸ்ட்.வட மாவட்டங்களில் மட்டும் இந்த பாசுமதி அரிசி பிரியாணிக்காக  பயன்படுத்துகின்றனர்.சுவை நன்றாக இருக்கிறது.
எல்லாம் சாப்பிட்டு பில் மொத்தம் 450 தான் வந்தது.
திருப்பத்தூர் போனீங்கன்னா ஒரு கை பாருங்க….
அடுத்து ஆம்பூர் போறேன்….அங்க ஊர்ப்பட்ட பிரியாணி கடை இருக்கு.எல்லாம் டேஸ்ட் பண்ணிட்டு திரும்ப வர்றேன்..
நேசங்களுடன்
ஜீவானந்தம்.




1 comment:

  1. அடுத்து ஆம்பூர் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிங்க...!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....