Friday, July 31, 2015

கோவை மெஸ் - மங்களவிலாஸ், புதிய பேருந்து நிலையம் எதிரில், சேலம் - 4

                              திருப்பத்தூரில் இருந்து சேலம் வந்தபோது சாப்பிடலாம்னு வண்டியை ஓரம் கட்டின இடம் சேலம் பஸ் ஸ்டாண்ட்.பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்க்க ஒவ்வொரு சந்துலயும் ஏதாவது ஹோட்டல் இருக்கும்.ஒரு சில ஹோட்டல்களில் தான் நல்ல காரஞ் சாரமா இருக்கும்.ஏற்கனவே சேலம் கொஞ்சம் ஹாட்டான இடம்..அடிக்கிற வெயிலுக்கு நல்லா காரஞ்சாரமா சாப்பிட்டா மூக்குல தண்ணீ வரும்.....அப்படிப்பட்ட காரஞ்சாரமான ஹோட்டல் தான் இந்த மங்களவிலாஸ்.சேலத்துல மொத்தம் ஐந்து கிளைகள் வச்சிருக்காங்க... நாங்க போனது செல்வி மெஸ் இருக்கிற சந்தில்...செல்வி மெஸ்ஸில் ஏற்கனவே சாப்பிட்ட அனுபவம் இருப்பதாலும், மங்களவிலாஸில் டேஸ்ட் கொஞ்சம் கூடுதலாய் இருப்பதாலும் மீண்டும் மங்களவிலாஸ் கடைக்கே சென்றோம்....
ஒரே ஒரு ஒத்த போஸ்ட்..அதுல ஏகப்பட்ட போர்டு போட்ட மங்களவிலாஸ் ஹோட்டல் நம்மை வரவேற்கிறது.
                     உள்ளே நுழைந்ததும் சாம்பிராணி மணம் மணக்க மணக்க சாப்பிடும் ஹால் இருக்க, ஒரு ஒரமாய் டேபிளை தேர்ந்தெடுத்து அமர்ந்தோம்.சர்வர் வாழை இலை போடவும், பிரியாணியும், நாட்டுக்கோழி சுக்கா வருவலும், ஏற்கனவே இந்த ஹோட்டலில் மிக டேஸ்டாக குடல் ஃப்ரை சாப்பிட்ட அனுபவம் இருப்பதால் குடல் ஃப்ரையும் சொல்ல, ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது.
                        பிரியாணி எப்பவும் போலதான்.சீரகசம்பா அரிசியில் மட்டன் துண்டுகள் நன்றாக பஞ்சு போல மென்மையாக வெந்து இருக்க, சாப்பிடவும் சுவையாக இருந்தது.சுக்கா குழம்பினை கொஞ்சம் தொட்டு பிரியாணியோடு சாப்பிட செம டேஸ்ட் தான்..என்ன திண்டுக்கல்லில் தருவது போல் கத்திரிக்காய், மட்டன் எலும்பு துண்டுகள் போட்ட தாழ்ச்சா தருவதில்லை. வெறும் தயிர் வெங்காயம் மட்டும்தான்..ஆனால் சுக்கா குழம்போடு பிரட்டி சாப்பிட பிரியாணி ஏகத்திற்கும் இறங்குகிறது உள்ளே...
நாட்டுக்கோழி சுக்கா...நன்கு கெட்டியான மசாலா சேர்த்த குழம்புடன் சுக்கா செம டேஸ்ட்...பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரோ சூப்பர்....
அடுத்து குடல் ஃப்ரை...
                      சான்சே இல்லை....இப்படி ஒரு டேஸ்ட் இருக்குமா என்றால் அது இந்த குடல் ஃப்ரை டேஸ்ட்தான்...குடல் தோசைக்கல்லில் போட்டு நன்கு வறுத்து மசாலாவெல்லாம் சுண்டவைத்து பெப்பரும் காரமும் நன்கு கலந்து சூடாய் சாப்பிட ......செம டேஸ்ட்...கூட அந்த கறிவேப்பிலை... ஆஹா...செம பொருத்தம்...குடல் கறி என்றாலே கொஞ்சம் குடலின் ஒரு வித வாசம் வீசும்...அந்த மணம் கொஞ்சம் கூட இல்லை..நன்கு மசாலா சுண்ட வைத்தது சாப்பிட சாப்பிட ஏ..ஒன்...குடலின் ஒவ்வொரு துண்டும் செம டேஸ்ட்...நன்றாக இருக்கிறது குடல் ஃப்ரை....என்ன...அளவுதான் குறைவாக இருக்கிறது...ஆனால் டேஸ்ட்...செம...
                    இதெல்லாம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் சாதம் வாங்கி ரசம் ஊற்றி சாப்பிட்டால் அமிர்தம் தான்...நன்கு ஹெவியாய் சாப்பிட்டு இருந்தால் நன்கு ஜீரணமாகும்.அதுவும் ரசம் செம டேஸ்ட்...எக்ஸ்ட்ரா ஒரு கிளாஸ் வாங்கி குடித்துவிட்டுதான் இலையை விட்டு.... இடத்தினை விட்டு..... எழுந்திரிச்சேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...
                இந்த ஹோட்டலில் நாட்டுக்கோழி மட்டும் தான் உபயோகப்படுத்துகிறார்கள். பிராய்லர் கிடையாது.அதனால்தான் விலையும் சற்று கூடுதல்.
                    சாப்பாடு சாப்பிட்டால் விதவிதமான குழம்பு வகைகள் உண்டு..அவை அனைத்தும் ரொம்ப கெட்டியாய் மிக சுவையாய் இருக்கும்.அவ்வளவு டேஸ்ட்...

அந்தப்பக்கம் போனால் கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க...
குடல் ஃப்ரையும், அந்த ரசமும் சான்சே இல்ல.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்






4 comments:

  1. சாப்பாட்டு விசயத்தில் இன்றைய தேதியில் சேலத்தை அடிக்க எந்த ஊரும் இல்லை.

    ReplyDelete
  2. அடுத்த வாரம் சேலம் தான்...

    ReplyDelete
  3. படிக்கும்போதே சுவைக்கணும்னு தோணுது.. ஆனால் ஒரு வேளை சாப்பாட்டுக்கு 500 ரூபாயா? என நினைக்கும்போதே சாப்பிடாமலேயே சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டுவிட்டது...! ஹா..ஹா...!!!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....