Saturday, August 5, 2017

கரம் - 29

புத்தக கண்காட்சி ஒரு பார்வை.
விசாலாமான ஹாலில் மிகுந்த இடவசதியுடன் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.நிறைய பதிப்பகங்கள் இடம் பெறவில்லை.வரலாறு, காமிக்ஸ், ஆங்கில புத்தகங்கள், குழந்தைகள் புத்தகங்கள், தமிழ் நாவல்கள் என எப்பவும் போல..கவிதைப்புத்தகங்கள் நல்லவேளை கண்ணில் படவே இல்லை.சுஜாதா பேனர்களில் இன்னமும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்..வாசகர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவே.பிரபல பதிப்பகங்களில் முக்கியமாய் கார்டு ஸ்வைப்பிங் மெசின் இல்லை.கேட்டால் சென்னை புக் ஃபேரில் இருக்காம்..வேறு என்ன பண்ணலாம் என்று கேட்டால் 2% அதிகம் கொடுத்தால் பக்கத்து ஸ்டாலில் ஸ்வைப் பண்ணிக்கொள்ளலாமாம்.
புக் வாங்கும் ஆர்வம் இதனால் கூட மங்கிப்போகலாம்.நானும் எந்த ஸ்டாலில் ஸ்வைப்பிங் மெசின் இருக்கிறதோ அங்கு மட்டுமே வாங்க முடிந்தது.ஜெயமோகனுக்கென்றே தனி ஸ்டால் ஒன்றும் போட்டிருக்கிறார்கள்.புத்தக கண்காட்சிகளில் மதம் சம்பந்தபட்ட ஸ்டால்களும் தற்போது நிறைய இடம் பெற துவங்கியுள்ளன.


கூட்டத்தை காட்டுவதற்காக கல்லூரிகளை சேர்த்திருப்பர் போல.மாணவர்கள் கூட்டம் ஜோடி ஜோடியாக செல்பி க்களில் மூழ்கியிருக்கின்றனர்.புத்தகங்களின் விலை தாறுமாறு...இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பது போல சம்பந்தமற்ற இரண்டு மூன்று ஸ்டால்கள்.
இந்த கண்காட்சியில் வரவேற்க தக்கது வாசகர் எழுத்தாளர் சந்திப்பு மையம் மற்றும் வாசகர் ஓய்வு மையம்.கால்கடுக்க சுற்றி வந்து அக்கடாவென்று உட்கார சேர்கள் போடப்பட்டிருக்கின்றன.கோவை எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு என ஒரு ஸ்டாலும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.நாடகம், கலை விழாக்களுக்கு என தனி அரங்கம் அமைத்துள்ளனர்.மாலை நேரம் நிச்சயம் அறிவுப்பசி தீரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

ஃபுட் கோர்ட் இந்த தடவை முழுதும் வட இந்திய நபர்களே ஆக்ரமிப்பில் இருக்கின்றனர்.கரும்பு ஜூஸ், பானிபூரி, ஜிகர்தண்டா, கார்ன் என ஒரு சில அயிட்டங்களே இடம் பெற்றிருக்கின்றன.
வெரைட்டி ரைஸ், பிரியாணி, காபி போன்றவைகளும் இருக்கின்றன.சுவை எப்பொழுதுமே நன்றாக இருக்காது என்பதால் ரிஸ்க் எடுப்பதில்லை.

இந்த தடவை வி.மு வின் நீர் புத்தகம், கருந்தேளின் தி.எ.வாங்க புத்தகம், சரவணன் சந்திரன் அவர்களின் ஒரு சில புத்தகங்கள், என கொஞ்சம் வாங்கியிருக்கிறேன்.
இனி அடுத்த புத்தக கண்காட்சியில் சந்திப்போம்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்



1 comment:

  1. புத்தகத் திருவிழா - கோவையில்!

    வாழ்த்துகள். நெய்வேலி புத்தகத் திருவிழாவிற்கு ஒரு முறையேனும் போக வேண்டும் - எங்க ஊர் ஆச்சே...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....