Showing posts with label புத்தக கண்காட்சி. Show all posts
Showing posts with label புத்தக கண்காட்சி. Show all posts

Saturday, August 5, 2017

கரம் - 29

புத்தக கண்காட்சி ஒரு பார்வை.
விசாலாமான ஹாலில் மிகுந்த இடவசதியுடன் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.நிறைய பதிப்பகங்கள் இடம் பெறவில்லை.வரலாறு, காமிக்ஸ், ஆங்கில புத்தகங்கள், குழந்தைகள் புத்தகங்கள், தமிழ் நாவல்கள் என எப்பவும் போல..கவிதைப்புத்தகங்கள் நல்லவேளை கண்ணில் படவே இல்லை.சுஜாதா பேனர்களில் இன்னமும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்..வாசகர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவே.பிரபல பதிப்பகங்களில் முக்கியமாய் கார்டு ஸ்வைப்பிங் மெசின் இல்லை.கேட்டால் சென்னை புக் ஃபேரில் இருக்காம்..வேறு என்ன பண்ணலாம் என்று கேட்டால் 2% அதிகம் கொடுத்தால் பக்கத்து ஸ்டாலில் ஸ்வைப் பண்ணிக்கொள்ளலாமாம்.
புக் வாங்கும் ஆர்வம் இதனால் கூட மங்கிப்போகலாம்.நானும் எந்த ஸ்டாலில் ஸ்வைப்பிங் மெசின் இருக்கிறதோ அங்கு மட்டுமே வாங்க முடிந்தது.ஜெயமோகனுக்கென்றே தனி ஸ்டால் ஒன்றும் போட்டிருக்கிறார்கள்.புத்தக கண்காட்சிகளில் மதம் சம்பந்தபட்ட ஸ்டால்களும் தற்போது நிறைய இடம் பெற துவங்கியுள்ளன.


கூட்டத்தை காட்டுவதற்காக கல்லூரிகளை சேர்த்திருப்பர் போல.மாணவர்கள் கூட்டம் ஜோடி ஜோடியாக செல்பி க்களில் மூழ்கியிருக்கின்றனர்.புத்தகங்களின் விலை தாறுமாறு...இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பது போல சம்பந்தமற்ற இரண்டு மூன்று ஸ்டால்கள்.
இந்த கண்காட்சியில் வரவேற்க தக்கது வாசகர் எழுத்தாளர் சந்திப்பு மையம் மற்றும் வாசகர் ஓய்வு மையம்.கால்கடுக்க சுற்றி வந்து அக்கடாவென்று உட்கார சேர்கள் போடப்பட்டிருக்கின்றன.கோவை எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு என ஒரு ஸ்டாலும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.நாடகம், கலை விழாக்களுக்கு என தனி அரங்கம் அமைத்துள்ளனர்.மாலை நேரம் நிச்சயம் அறிவுப்பசி தீரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

ஃபுட் கோர்ட் இந்த தடவை முழுதும் வட இந்திய நபர்களே ஆக்ரமிப்பில் இருக்கின்றனர்.கரும்பு ஜூஸ், பானிபூரி, ஜிகர்தண்டா, கார்ன் என ஒரு சில அயிட்டங்களே இடம் பெற்றிருக்கின்றன.
வெரைட்டி ரைஸ், பிரியாணி, காபி போன்றவைகளும் இருக்கின்றன.சுவை எப்பொழுதுமே நன்றாக இருக்காது என்பதால் ரிஸ்க் எடுப்பதில்லை.

இந்த தடவை வி.மு வின் நீர் புத்தகம், கருந்தேளின் தி.எ.வாங்க புத்தகம், சரவணன் சந்திரன் அவர்களின் ஒரு சில புத்தகங்கள், என கொஞ்சம் வாங்கியிருக்கிறேன்.
இனி அடுத்த புத்தக கண்காட்சியில் சந்திப்போம்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Thursday, September 1, 2016

கரம் - 24

பார்த்தது:
                மலையாளத்தில் நிறைய படங்கள் பார்த்தேன்.களி மற்றும் கம்மாட்டி பாடம் இந்த இரண்டும் ஓரளவுக்கு ரசிக்க வைத்தன.ஆக்சன் ஹீரோ பிஜு இன்னும் பயங்கரமா ரசிக்க வைத்தது.அதற்கப்புறம் மகேஷிண்ட பிரதிகாரம், டார்விண்டே பரிமாணம், ஜேக்கபிண்டே சொர்க்கராஜ்யம், லீலா இப்படி பல படங்கள் சுவாரஸியமற்று இருந்தன.மலையாள ரசனை நமக்கு ஒத்து போவதில்லை போல...


ருசித்தது:
வாங்க சாப்பிடலாம்

                  ஒரு மதிய நேரம்.கோவையின் வ உ சி பார்க், நேரு விளையாட்டு அரங்கத்தை சுற்றி வண்டியை ஓட்டிய போது கண்ணில் பட்டது "வாங்க சாப்பிடலாம்" என்கிற ஹோட்டல்.புதுசா ஆரம்பிச்சிருக்காங்க போலிருக்கு ஒரு கை ..சாரி ஒரு வாய் பார்க்கலாம்னு உள்ளே போனோம்.கீழே டேபிள் சேர் போட்டு இருக்காங்க, ஒரு ஈ. காக்கா காணோம்.பார்த்தா மாடிக்கு போற ஒரு படி இருக்கு.ஏறி உள்ள போனா பரந்து விரிந்து இருக்கு.நல்ல இண்டீரியர்.தாராளமான இடவசதியில் டேபிள்கள் போடப்பட்டிருக்கின்றன.

                  அங்கொன்றும் இங்கொன்றுமாய் டேபிள்கள் நிறைந்திருக்க, நாங்கள் ஒரு டேபிளை நிறைத்தோம்.சாப்பிட வந்தவர்களைவிட சர்வர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.அதில் நேபாளிகளும் அடக்கம்.இலையை விரித்தனர்..பெரிய மெனு புக்கை தந்துவிட்டு சென்றனர்.புதிதாய் எதுவுமில்லை.பொதுவாய் எல்லா ஹோட்டலிலும் அச்சடிக்கப்பட்டு இருக்கும் ஒரே மெனு தான்.சிறப்பு மெனு என்று எதுவும் இல்லை.

                    பிச்சிப்போட்ட கோழி என்கிற டிஷ் என்னை கவர்ந்தது.ஆர்டர் போட்டேன்.பின் தந்தூரி, லாலி பாப், பிரியாணி, நான் வெஜ் மீல்ஸ் , தயிர்சாதம் இப்படி அனைத்தும் ஆர்டரிட்டேன்.

                     ஒவ்வொன்றாய் வந்தது.பிச்சிப்போட்ட கோழி...இது எந்த வகையான மெனு என்றே தெரியவில்லை.முட்டையை மிக்ஸ் பண்ணி கோழியை போட்டு குருமா ஊத்தி கல்லில் ஃபிரை பண்ணி கொத்து புரோட்டா போல் இருந்தது.நன்றாகவே இல்லை.கோழிக்குன்டாண சுவை முட்டையில் அடங்கிப்போய் நம் நாவை அடக்கம் செய்து விட்டது..அடுத்து பிரியாணி..பேரு ஆம்பூர் பிரியாணி...ஆம்பூர் போய் சாப்பிட்டிருப்பாரா மாஸ்டர் என்று தெரியவில்லை.குழைந்த போன சாதம்.நிறமில்லை.மணமில்லை.சுவையும் சுத்தமாய் இல்லை..

அடுத்து தந்தூரி...கொஞ்சம் கூட உப்பு உரைப்பு காரம் என்று எதுவுமில்லை.தந்தூரிக்கான மணம் என்பதே இல்லை.கோழியை மசாலாவோடு நெருப்பில் வாட்டினால் ஒரு வித மணம் ஏற்படும்.அது ஆளையே தூக்கும்.நாவின் சுவை நரம்புகளை துடிக்க வைக்கும்.நாசியின் நரம்புகளை மிரளவைக்கும்.வயிற்றுக்குள் பசி நரம்புகள் நம்மை தூண்டவைக்கும். அந்தமாதிரி எதுவுமே ஏற்படவில்லை பக்கத்தில் வைத்த போதும், சாப்பிட்ட போதும்...மசாலாக்கள் அரைகுறையோடு தந்தூரியின் பாகங்களில் இருக்க, சுவை சுத்தமாய் இருந்தது.

              லாலிபாப்...வெள்ளிபேப்பர் சுத்தப்பட்டு கருஞ்சிவப்பாய் வந்தது.கோழிக்கறியின் மெது மெது தன்மை இல்லாது கெட்டிப்பட்டு இருந்தது.பஞ்சு போன்ற தன்மை இறுகிக்கிடந்தது.
தயிர் சாதம்...வெறும் மாதுளை முத்துக்களை நிரப்பி கலர்புல்லாய் கொண்டு வந்ததுதான் மிச்சம்..தயிர்சாதம் கூட டேஸ்டாய் செய்ய முடியாமல் ஒரு ஹோட்டல்...
                     நான் வெஜ் மீல்ஸ்.பேரில் மட்டும் தான்..ஒரு எலும்பைக்கூட காணவில்லை.வெரைட்டியான குழம்பும் இல்லை...
இந்த ஹோட்டல் நடத்துறவங்க தயவு செஞ்சு அக்கம் பக்கம் இருக்கிற ஹோட்டல்ல சாப்பிட்டு பாருங்க.சுவை எப்படி இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு மெனு போடுங்க.ஹோட்டலை நடத்துங்க.
பிச்சிப்போட்ட கோழி வளர்மதி மெஸ்ல சாப்பிடுங்க..செம டேஸ்டா இருக்கும்..தந்தூரி சிக்கனை கொக்கரக்கோல சாப்பிடுங்க ஏ ஒன்னா இருக்கும்..

விலை எப்பவும் போல அதிகம்தான்.இதில் 20% தள்ளுபடி வேற..
வாங்க சாப்பிடலாம்...சத்தியமா இன்னொரு வாட்டி போக மாட்டேன்..
நேரு அரங்கில் பர்மா பாய் ஓட்டல் அருகே இருக்கிறது.ஹோட்டல் அலங்கார் நடத்தும் இந்த வாங்க சாப்பிடலாம்...
போங்க உங்களுக்கு ஒரு அனுபவம் வேண்டுமென்றால் ....

படித்தது
கொடிசியாவில் புத்தக கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது.நானும் என் பங்குக்கு பல புத்தங்கங்களை வாங்கி வைத்துள்ளேன்.இனி தான் ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பிக்கனும்.கடந்த வருடங்களை விட இந்த தடவை கொடிசியாவில் செம கூட்டம்.தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை இருக்கவும், மக்கள் குடும்பத்தோடு குவிந்து விட்டனர்.
கூடின கூட்டமெல்லாம் புக் வாங்க அல்ல.தினமலர் ஷாப்பர்ஸ் ஷாப்பிங் கண்காட்சி போட்டு இருந்தாங்க.எல்லாரும் அங்க தான் போய்ட்டு எஞ்சாய் பண்ணிட்டு வருகிறார்கள்.
ஏதோ நம்மளை மாதிரி ஆட்கள் தான் புத்தக கண்காட்சிக்கு போய்ட்டு வருகிறார்கள்.சில பதிப்பகங்களை வாழ வைக்கிறார்கள்.எழுத்தாளர்களை வளர வைக்கிறார்கள்...



நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, December 12, 2013

கரம் - 12 (12.12.13)

புத்தககண்காட்சி 
கடந்த வாரம் கோவையில் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது.மிகக்குறைந்த அளவே ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன.புத்தகவிற்பனை மிக மந்தமாக இருந்தது என்று சொல்லலாம்.வரவேற்பின்றி தூங்கி வழிந்தன ஸ்டால்களும் கூடவே விற்பனையாளர்களும்.ஸ்டால் போட்ட காசுக்காவது புத்தகம்லாம் வித்திருக்குமா என்பது சந்தேகமே.நான் மூணு மணி வாக்குல உள்ளே நுழைந்தேன்.உலக சினிமா ரசிகன் கூட வந்ததினால் தள்ளுபடி விலையில சுஜாதா புக், ஜெயமோகன் புக் வாங்கிட்டு வந்தேன்.உள்ளே ஒரு சுத்து சுத்திட்டு வந்ததால் சூடா டீ சாப்பிடலாமே அப்படின்னு வெளியே இருக்கிற கேண்டீன்ல டீ சாப்பிட்டா அதுவும் ஆறிக்கிடக்குது...புத்தக கண்காட்சி போலவே....


******************************
ஒரு ஸ்டால்ல சுஜாதா எழுதின புக் பார்த்தேன்.புத்தக அட்டைப்படத் தலைப்பே ரொம்பத் தப்பா இருந்துச்சு.எப்படி இவ்ளோ பெரிய மிஸ்டேக் பண்ணி இருப்பாங்க அப்படின்னு யோசிச்சுகிட்டே ஒரு கிளிக் கிளிக்கிட்டேன்.
புத்தகத்தோட பேரு ஒரு பிராயாணம், ஒரு கொலை, 
ஆனா உள்பக்கம் சரியா பிரிண்ட் பண்ணி இருக்காங்க ஒரு பிரயாணம் ஒரு கொலை அப்படின்னு...கூடவே சுஜாதா எழுதின முதல் நாடகம்னு சின்ன குறிப்பு வேற.எப்படி அட்டைப்படத்தினை கோட்டை விட்டாங்க பதிப்பகத்தார்?


*************************************
கரூர்ல சிக்கன் வாங்க ஒரு கடைக்கு சென்றிருந்தபோது கடையில ஒரு கிரைண்டர் மாதிரி இருந்துச்சு.எவ்ளோ கறி வேணும்னு கடைக்காரர் கேட்க, ஒரு கிலோ ன்னு சொல்ல, உடனே உயிரோட இருந்த பிராய்லர் கோழி ஒண்ணை பிடிச்சி கழுத்த முறிச்சி சுடுதண்ணியில் போட்டு கொஞ்ச நேரம் அப்படி இப்படி திருப்பி அதை எடுத்து கிரைண்டர்ல போட்டு ஆன் பண்ணவும், பயந்தே போயிட்டேன்..கோழியை அரைச்சு மாவா கொடுத்திருவாரோ அப்படின்னு.... ஆனா கொஞ்ச நேரத்துல வெளிய எடுத்து பார்த்தா கோழி டிரஸ் இல்லாம இருக்கு.......ஆச்சரியப்பட்டு கிரைண்டருக்குள்ள எட்டிப்பார்த்தா கல்லுக்குப்பதிலா நீட்ட நீட்டமா ரப்பர் புஷ் நிறைய இருக்கு.கோழி இறகை பிடுங்கறதுக்காக பண்ணின மெசினாம்...ரெண்டு நிமிசத்துல சீக்கிரம் வேலையாகுது.மணிக்கணக்கா உட்கார்ந்து பிடுங்க தேவையில்ல.இப்படி பண்றது தோலோட கறி வாங்குறவங்களுக்கு மட்டும் தானாம்.அதுக்கப்புறம் மிச்சமிருக்கிற கொஞ்ச நஞ்ச முடிகளை லைட்டா பொசுக்கி மஞ்சள் போட்டு தேய்ச்சு கழுவி வெட்டி கொடுத்தாங்க...அப்புறமென்ன....அடுத்து சமையல் தான்...



*******************************
சிங்கப்பூர் கலவரம்
சிங்கப்பூரில் கலவரம் என்று நண்பன் அங்கிருந்து சொல்லும் போது கொஞ்சம் அதிசயமும் ஆச்சர்யமும் பட்டேன்.கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கிற ஊரில் எப்படி இப்படி நேர்ந்தது என்பதை நினைக்கும் போது தான் ஆச்சர்யமாகிறது.


டேக்கா என்று சொல்லப்படும் லிட்டில் இந்தியாவில் கடந்த முறை சென்ற போது கலவரம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள பொது மைதானத்தில் அமர்ந்து பேசி இருக்கிறோம்.சனி ஞாயிறு மட்டும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அந்த மைதானத்தில்  ஆங்காங்கே கூடி மது குடிப்பது வழக்கம்.அங்கு குவியும் தமிழர்கள் அனைவரும் கடின உழைப்பு தொழிலாளிகள். நண்பர்களோடு சேர்ந்து அரட்டை மற்றும் மது குடிப்பது வழக்கம்.இது எப்பவும் இருப்பதுதான்.தன் கண்முன்னே சக தொழிலாளி ஒருவர் இறந்ததைப் பார்த்தவுடன், போதையில் இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு செஞ்ச கண்மூடித்தனமாக செயல் தான் இது.40 வருடமாக எந்த கலவரமும் இல்லாத சிங்கப்பூரில் இந்நிகழ்வு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம்.இது நாள் வரை அனுபவித்து வந்த சலுகைகள் இனி குறையலாம்.இந்த கலவரம் ஏற்பட்டதால் இனி சனி ஞாயிறு அந்த பகுதிகளில் மது விற்பனை கிடையாதாம்.கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவருக்கும் 10ஆண்டு சிறைத்தண்டனை 8 கேன் ( சவுக்கடி ) நிச்சயமாம்.
நாடு விட்டு நாடு பொழைக்கபோன இடத்துல நாமதான் சூதானமா நடந்துக்கனும்.அதை விட்டுட்டு வம்பு வழக்குன்னு போயிட்டா நம்மள நம்பி இருக்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்றது.

**********************************
12.12.1950
இந்த நாளை யாராலும் மறக்க முடியாது.ஏன்னா சூப்பர் ஸ்டாரோட பிறந்தநாள்.சிறுவயதில் இருந்து பார்த்து ரசித்து இன்னமும் அவரின் ரசிகனாக இருப்பதில் கொஞ்சம் பெருமிதம் தான்.பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா...நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.



நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, January 11, 2013

கோவை பதிவர்களின் புத்தகம் வெளியீடு

வணக்கம் நண்பர்களே...
சென்னையில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் நம்ம கோவை பதிவர்களின் புத்தகங்கள் வெளியிடப் படுகிறது.டிஸ்கவரி புக் பேலஸில் (அரங்கு எண் 43, 44 ) அனைவரது புத்தகங்களும் கிடைக்கும்.ஆதரவு தர வேண்டுகிறோம்...


எப்படியோ ஊர் ஊராய் சுத்தியதில் கொஞ்சம் உருப்படியா பண்ணியிருக்கேன் போல.... எல்லாத்தையும் தொகுத்து ஒரு புத்தகம் மாதிரி போட்டாச்சு... இனி படிச்சிட்டு உங்க அபிப்ராயம் சொல்லுங்க...இரண்டாம் பாகம் வெளியிடனும்....


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...