Friday, September 11, 2020

கரம் - 38 கொரோனோ பாதிப்புகள்

இப்ப இருக்கின்ற வேலை இல்லாத நிலைமையில், தத்தம் பொருளாதார பாதிப்பின் சுமையினை ஈடுகட்ட நிறைய பேர் உணவுத்தொழிலாக திடீர் ஹோட்டல்கள், வீட்டு சமையல்கள், ஹோம்மேட் டெலிவரி என ஆரம்பித்திருக்கின்றனர்.நல்ல விசயம் தான்.ஆனால் எதை செய்து கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்று நினைத்து விட்டார்கள் போல..

நம் ஆபீசுக்கு பக்கத்து தெருவில் ஒரு கடைக்காரர் பிட் நோட்டிஸ் கொடுத்து ஆரம்ப சலுகை விலையாக சிக்கன் பிரியாணி, பெப்பர் சிக்கன், சில்லி சிக்கன் என எது வாங்கினாலும் ரூ.50 என விளம்பர படுத்தினார். முக்கியமாய் முஸ்லீம் அன்பரோட கடை அது.கொரோனோ பரவல் காரணமாக இப்பொழுது நான் எங்கும் வெளியே செல்வதில்லை. வீட்டிலிருந்தே மதிய உணவையும் கொண்டு வந்து விடுகிறேன்.அந்த நாளன்று அந்த பக்கமாய் போன நம் சூப்பர்வைசர் இந்த பிட் நோட்டிசை கண்டதும் போன் அடிக்க, சரி டேஸ்ட் பார்க்கலாம், நாமும் எவ்வளவு நாள்தான் வீட்டுச்சோறையே சாப்பிடுவது கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பார்ககலாமே என பெப்பர் சிக்கன் வாங்கி வா என சொல்ல, பையனும் வாங்கி வந்தான்.

                        பிளாஸ்டிக் டப்பாவில் பேக் பண்ணி கொடுத்திருந்தார்கள்.ஓபன் பண்ணி பார்த்தால் எந்த வித மணமும் இல்லை.சிக்கனை வேக வைத்து மிளகு பொடி என்கிற பெயரில் காரமில்லாத ஏதோ ஒரு தூளில் பிரட்டி வைத்திருக்கின்றனர்.சிக்கனும் ஏதோ கடமைக்கு வெந்திருக்கும் போல.

                                    உப்பு உரைப்பு இல்லை.மசாலா வாசனை இல்லை.மிளகுப்பொடியும் மரத்தூளை போல இருக்க, வாயில் வைத்தவுடன் துப்பத்தான் தோன்றியது.அப்படியே எடுத்து வெளியே கொட்டிவிடு தம்பி என்று சொல்ல அது உடனே குப்பைக்கு தான் போனது.பாய் வீட்டு கடை சரி டேஸ்ட் நல்லா இருக்கும்னு வாங்கியது தப்பாக போய்விட்டது.நல்லவேளை பிரியாணி, இன்னும் மற்ற அயிட்டங்கள் எதுவும் வாங்க வில்லை.இந்த மகா மோசமான உணவுக்கு பிட் நோட்டிஸ் வேறு.அதிலும் வீட்டு விசேசங்களுக்கு ஆர்டரின் பேரில் சமைத்து தரப்படுமாம்...

பிட் நோட்டிசை பார்த்து எத்தனை பேர் வாங்கி இருப்பார்கள்..முதலில் நன்கு சுவையாக சமைக்க கற்றுக் கொண்டு இந்த மாதிரி கடைகளை ஆரம்பியுங்கள்.சமைக்கும் போதாவது கொஞ்சம் டேஸ்ட் பாருங்கள்.ஏனோ தானோ என்று சமைத்து வாடிக்கையாளர்களின் உடலை கெடுக்காதீர்கள்.காசையும் கொடுத்து வியாதியையும் வாங்க வேண்டியிருக்கிறது.நம்ம சூப்பரிடமும் சொன்னேன்.. போய் கடைக்காரரிடமே சொல்..மிக மட்டமான சுவை என்று.. அவனும் போய் சொல்லிவிட்டு வந்திருக்கிறான்...ரெடிமேட் பதில் ஒன்றை சொல்லியிருக்கிறார்கள்.

            இந்த கொரோனோவை விட இவர்கள் தயாரிக்கும் உணவு மிக மோசமாக இருக்கிறது..

2 comments:

  1. வெளியே உண்பதை தவிர்ப்பதே நல்லது.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சார்...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....