Showing posts with label குடல். Show all posts
Showing posts with label குடல். Show all posts

Friday, December 1, 2017

கோவை மெஸ் – ஹோட்டல் ஸ்ரீ ராம விலாஸ், நாராயணபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், KOVAI MESS - SHRI RAMAVILAS, NARAYANAPALAYAM, TRICHENGODE, NAMAKKAL

கோவை மெஸ் – ஹோட்டல் ஸ்ரீ ராம விலாஸ், நாராயணபாளையம்,, திருச்செங்கோடு
                  எப்பவோ ஒருமுறை நம்ம நண்பர் திருச்செங்கோட்டுல ஒரு கடையில் இட்லியும் குடல்கறியும் கிடைக்கும் என சொல்லியிருந்தார்.சமீபத்தில் ஒரு காலை நேரம் 7.30 மணி அளவில் சங்ககிரியில் இருந்து திருச்செங்கோடு வந்து கொண்டிருந்த போது இந்த கடை ஞாபகத்திற்கு வரவே அடுத்த நிமிடம் விசாரித்து அங்கே ஆஜரானேன்.


                   காலையிலேயே தயாராக இருந்தது ஹோட்டல்.சின்ன ஹோட்டல் தான். அரதப்பழசான மூன்று டேபிள்கள் தான் போடப்பட்டிருக்கின்றன.அக்மார்க் கிராமத்து ஓட்டு வீட்டு ஹோட்டல்.கைகழுவ, இலை போட வெளியே தொட்டிகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.அந்த காலை வேளையிலும் உள்ளே எனக்கு முன்பே ஒரு வாடிக்கையாளர் அமர்ந்து ருசித்துக்கொண்டிருந்தார். நானும் அதில் இணைந்து கொண்டேன்.
                     டேபிளில் அமர்ந்ததும் இலை வைக்கப்பட்டு சின்ன சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டது.தண்ணீரை இலையில் தெளித்தவுடன், இட்லி வந்து சேர்ந்தது.குஷ்பு மாதிரி கும்மென்று இருக்கும் என்று நினைத்தால் இலியானா மாதிரி வத்தலாய் இருந்தது.கொஞ்சம் மிருதுத் தன்மை குறைவாக இருப்பது தெரிந்தது.இட்லி வைத்தவுடன், கூடவே ஒரு தட்டில் இருந்து குடல் குழம்பினை ஊற்றினர்.பார்க்க கரு கருவென இருக்க, கூட ரத்தம் சேர்த்து சமைக்கப்பட்டிருக்கிறது.இலியானாவின் இடுப்பு பிரதேசத்தினை ஒரு கிள்ளு கிள்ளி, குடல் குழம்பில் தொட்டு சுவைத்து பார்க்கவும், இனம் புரியாத சுவை ஒன்று நாக்கில் நாட்டியமாடியது.குடல் குழம்பின் சுவை கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை ஈர்க்க ஆரம்பித்தது.நாளைந்து விள்ளல்கள் தான் வருகின்றது ஒரு இட்லியில்.பிய்த்து, குழம்பில் தோய்த்து கொஞ்சம் குடல்கறியோடு சேர்த்து சாப்பிட அந்த குழம்பிற்கு நம்மை அடிமையாக்குகிறது.இட்லிக்கு தனியாக சால்னா தருகிறார்கள் அது தண்ணீர் மாதிரி இருக்கிறது,ஆனாலும் சுவையாக இருக்கிறது.
                சிக்கன் குழம்பும் கொஞ்சம் டேஸ்டுக்கு சாப்பிட்டு பார்த்தேன்.அதுவும் நல்ல சுவையுடன் இருக்கிறது.
                 எட்டு இட்லிகள் வரை சாப்பிட்டு விட்டு வெளியே வர ஒவ்வொருவராய் வர ஆரம்பிக்கின்றனர்.



            குழம்பின் ரகசியமும், இட்லியின் ரகசியமும் நம்மை ஆச்சர்யப் படுத்துகிறது.குடல் கறியோடு, தலைக்கறி, ரத்தம், சுத்துக்கொழுப்பு சேர்த்து சமைக்கின்றனர்.எண்ணைய் இல்லாது, மிளகாய் காரம், மசாலாப்பொடிகள் இல்லாது இந்த குடல் கறி குழம்பு தயாராகிறது.அதான் அனைத்து சுவைகளும் ஒன்று சேர்ந்து செமயான சுவையைத் தருகிறது.

                அதே போல் இட்லியும். உளுந்து சேர்க்காமல், வெறும் அரிசி, வெந்தயம் மட்டும் சேர்த்து அரைத்து இட்லி தயாரிக்கின்றனர்.அதான் இட்லி இலியானா போல் தட்டையாக இருக்கிறது.சாப்பிட்டவுடன் மீண்டும் பசியை தூண்டும் வகையில் இந்த இட்லி இருக்கிறது.
                        கடையை நிர்வகிப்பவர்கள்  கணவன் மனைவி இருவர் மட்டுமே.தந்தை காலத்திற்கு பின் இவர்கள் நடத்துகின்றனர். கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கும் மேலாக இந்த கடை செயல்பாட்டில் இருக்கிறதாம்..அவர்களுக்கென்று வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களாம். லாரி டிரைவர்கள் முதல், ரிக் தயாரிப்பாளர்கள், வேலை செய்பவர்கள் என பலரும் இருக்கின்றனராம்.கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் வாடிக்கையாளர்கள் பலரும் இருக்கிறார்களாம்.
காலை 7.30 மணி முதல் மதியம் 3 மணி வரை.தான்.
               மதியம் சாப்பாடுக்கு கோழி சாறு செம டேஸ்ட்டாக இருக்குமாம்.வரச்சொல்லி இருக்கிறார் கடை ஓனர்.நேரம் வாய்க்கும் போது மதியம் முயற்சித்து பார்க்க வேண்டும்..
                விலை எப்பவும் போல குறைவுதான்.இட்லி 5 ரூபாய், குடல் 80 ரூபாய்.எப்பவாது அந்தப்பக்கம் போனீங்கன்னா முயற்சி செய்து பாருங்கள்..திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் ரோட்டில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நாராயணபாளையத்தில் இடது புறம் இருக்கிறது.
          திருச்செங்கோட்டில் நிறைய ஹோட்டல்கள் காலையிலேயே இட்லி குடல் குழம்பினை தருகின்றனர்.இங்கு மட்டும் குடலுக்கு அவ்வளவு டிமாண்ட்.கறிக்கடை காரர்களிடம் முன்பே சொல்லி வைத்து விட்டால் தான் குடல் கிடைக்குமாம்.கறிக்கடைக்கு வருபவர்கள்  முதலில் கேட்கும் கேள்வியே குடல் இருக்கிறதா என்பது தானாம்....விலையும் அது போல கிலோ ரூ.450 வரை போகிறதாம்.


நேசங்களுடன்

ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Tuesday, August 11, 2015

கோவை மெஸ் - நியூ ஷோபா ஹோட்டல், மடவாளம், திருப்பத்தூர்

                            திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் என்கிற ஊருக்கு செல்கின்ற வழியில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் மடவாளம் என்கிற ஊர் இருக்கிறது.ஒரு வேலை விசயமாக அந்த ஊர் வழியே சென்ற போது கூட வந்த நண்பர் இந்த ஊரில் ஒரு ஹோட்டல் இருக்கிறது.நான்வெஜ் ரொம்ப நல்லாயிருக்கும் என்றும், திருப்பத்தூரில் இருந்து வந்து  இங்கு சாப்பிட்டுவிட்டு செல்வோம் என சொல்லவும், அடுத்த நிமிடத்தில் அந்த ஹோட்டலில் ஆஜரானோம்.
                      ரோட்டு ஓரத்திலேயே இருக்கிறது இந்த நியூ ஷோபா ஹோட்டல்.சின்ன கடைதான்.பத்துக்கு பத்து ரூம் அளவு கொண்ட இரு கடைகள் ஒன்று சேர்ந்து ஒரு ஹோட்டலாக இருக்கிறது.ஒரு ரூம் சமையல் அறையாக இருக்கிறது.ஹோட்டல் வெளியே கூண்டுக்குள் அடைபட்ட காடைகள், என்னிக்கு ரோஸ்ட் ஆவோம் என்று தெரியாமலே கீச் கீச் என கத்திக்கொண்டிருந்தன.ஹோட்டலுக்குள்ளே நுழையும் முன்பே வரவேற்கிறது, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த மட்டன் குழம்பின் வாசனையும்,  அடுத்து அந்த ஹோட்டல் உரிமையாளரும்....கடைக்கு வெளியே தயாரான குஸ்கா பெரிய பாத்திரத்தில் இருக்கிறது.அதன் வாசம் நம்மை உள்ளிழுக்கிறது.... 

                      உள்ளே ஒரு செல்ப் இருக்கிறது..அதில் ஏகப்பட்ட குண்டாக்கள்...எல்லாம் இலை போட்டு மூடப்பட்டு இருக்க அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு டேபிளில் அமர்ந்தவுடன், கடைக்காரர் வாழையிலையை போட்டுவிட்டு ஒப்பிக்க ஆரம்பித்தார்......
          சிக்கன் பிரியாணி, குஸ்கா, சிக்கன் வருவல், மட்டன் வருவல், காடை ரோஸ்ட், இரத்தப்பொரியல், தலைக்கறி, குடல்கறி, ஈரல் ஃப்ரை, மீன் ஃப்ரை, முட்டைக்குழம்பு என வரிசையாய் சொல்ல, அவரது வாயையே பார்த்துக்கொண்டிருந்தோம்... என்னது......இந்த ஊரில் இருக்கிற இந்த சின்னக்கடையில் இவ்ளோ வெரைட்டியா ...என ஆச்சர்யப்பட்டபடியே, குஸ்காவும், சைடுக்கு மீனும், குடல் கறியும் சொன்னோம்...நாமும் எவ்வளவு அயிட்டம் தான் டெய்லியும் சாப்பிடுவது....(டேஸ்ட்க்காக எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடத்தான் முடிகிறது...)
           
            நண்பர் சாதம் வாங்கிக்கொள்ள, நான் குஸ்கா வாங்கிக்கொண்டு குடல்ஃப்ரையை டேஸ்ட் பண்ண ஆரம்பித்தேன்...குடல் ஃப்ரை நன்றாகவே இருக்கிறது.சாதத்தோடு குழம்பினை பிசைந்து சாப்பிட செம டேஸ்டாக இருக்கிறது.குஸ்காவும் பிரியாணி மணத்துடன், நன்கு சுவையாக இருக்கிறது.அரிசியும் நன்கு வெந்து பொலபொலவென்று பிரியாணி போல் உதிரி உதிரியாக இருக்கிறது.தனியாய் வேகவைத்த சிக்கன் அல்லது மட்டன் இதனோடு சேர்த்தால் சுவைமிகுந்த சிக்கன்/மட்டன் பிரியாணி ரெடி....
ரத்தப்பொரியல் சின்ன வெங்காயம் சேர்த்து மிக சுவையாக இருந்தது.
                   குஸ்காவுக்கு தொட்டுக்கொள்ள அவ்வப்பொழுது சிக்கன் குழம்பும், மட்டன் குழம்பும் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன்..இரண்டும் நல்ல சுவை...குஸ்காவுக்கு செம காம்பினேசன்...
அப்புறம் மீன்...பொரித்தது....சுவை எப்பவும் போல ஓகே...
சாப்பிட்டு முடித்து வெளிவர, இன்னும் நான்கு பேர் உள்ளே நுழைந்தனர்....
விலை மிகக்குறைவாகத்தான் இருக்கிறது..
           ஒரு சின்ன ஊர் தான்..அதில் இவ்வளவு வெரைட்டி இருப்பது ஆச்சர்யம்தான்...மிலிட்டரி ஹோட்டல் போல அவ்வளவு மெனுக்கள்.....கிட்டத்தட்ட பலவருடங்களாக நல்ல சுவையுடன் இந்த ஹோட்டலை நடத்தி வருகின்றனர்......உண்ட திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினோம்.... அந்தப்பக்கம் போனிங்கன்னா ஒரு வாய் சாப்பிட்டு விட்டு வாங்க...

ஆட்டுக்கால் பாயா சாப்பிடனுமா...திருப்பத்தூரில்.....


நேசங்களுடன்
ஜீவானந்தம்





இன்னும் கொஞ்சம்...