Wednesday, June 22, 2011

சுகமான பயணம்...சிதம்பரம்

கடந்த வியாழன் அன்று இரவு சிதம்பரம் போக பிளான் பண்ணிட்டு ஆன்லைன் மூலம் KPN ட்ராவல்ஸ் இல் டிக்கெட் புக் பண்ணினேன்.டிக்கெட் புக் பண்ணும்போதே ஜன்னல் ஓர டிக்கெட் தான் புக் பண்ணினேன்.(எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன பண்றது ) 9 மணிக்கு பஸ் புறப்படும் நேரம்.நான் 8 .30 மணிக்கு நம்ம ஆம்னி பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டேன்.நம்ம ஹீரோ நிக்கிறாரு(ஹி..ஹி ..பஸ் தான்)
ஏசி வண்டி தான்.(போன வாரம் தான் கொண்டு போய் சாத்துனாங்களே..21 பேரை.... )நானும் உள்ள போறேன் ..ங்கொய்யால..ஒருத்தனையும் காணோம்..எல்லாரும் பயந்துட்டாங்க போல இருக்கு யாரும் வரல.


அப்புறம் ஒரு பெண்மணி மட்டும் வந்து ஏறினாங்க.9 .15 ஆச்சு.வண்டியை எடுத்தாச்சு.நாங்க ரெண்டு பேரும் மட்டும் இருக்கோம்..வண்டி செம ஸ்பீட்.அவினாசி யில் வண்டி நின்னுச்சு.நாலு பேரு ஏறினாங்க.ஆக மொத்தம் ஆறு பேரோட வண்டி கிளம்புச்சு.எனக்கு தூக்கம் சுத்தமா வரல.வண்டியோட ஸ்பீட் அப்புறம் 21 பேரோட ஞாபகம்..பின்னாடி ரெண்டு பேரு மார்ச்சுவரில பொணத்த எப்படி வெள்ளை துணியில சுத்தி வைப்பாங்களோ அப்படி போர்த்திக்கிட்டு ரெண்டு பேரும் தூங்கறாங்க.அதை பார்க்கவும் வேற பயம்..ஞாபகங்கள் சுத்தி சுத்தி அடிக்குது. ரொம்ப குளிர் வேற ..பெட்ஷீட் குடுக்காம ஒரு சின்ன ஷால் குடுத்தாங்க..அத வச்சிக்கிட்டு வேற ரொம்ப போராட்டம்.1 .15 க்கு சேலம் வந்துச்சு.2 .15 க்கு ஆத்தூர் அப்புறம் 4 .15 க்கு நெய்வேலி அப்புறம் 5 .15 க்கு சிதம்பரம்..எல்லாம் 15 நிமிட முடிவிலேயே ஒவ்வொரு ஊரும் வந்துச்சு.நானும் தூக்கம் வராம அப்படி இப்படி புரண்டு கொண்டிருந்தேன்.எப்படியோ சிதம்பரம் வந்த வுடன் தான் நிம்மதியை அடைந்தேன்..எப்படியோ உயிர் தப்பியாச்சு என்று ...

நேசங்களுடன்
ஜீவானந்தம் 

1 comment:

  1. இனி வரும் காலத்திலும் பத்திரமான பயணத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....