Thursday, February 27, 2014

கோவை மெஸ் - பாவ் ஆம்லெட் குருமா, மட்கான்(MADGOAN), கோவா (GOA)

கோவாவின் மட்கான் நகராட்சி ஆபிஸ் பகுதியில் ஒரு சாயந்திர வேளை சுற்றிக்கொண்டிருந்த போது, கோவாவின் அம்மணிகளை அரைகுறை ஆடையில் பார்த்த ரசித்த களைப்பில் கண்கள் மட்டுமே பசியாறிக்கொண்டிருந்தது.அங்குமிங்கும் நடந்த களைப்பில் எங்காவது சாப்பிட கிடைக்குமா என்று தேடியலைந்ததில் ஒரு தள்ளுவண்டி கடை சுற்றி ஒரே கூட்டம்.எட்டிப்பார்த்ததில் ஒரே ஒரு ஆள் மிக வேக வேகமாக முட்டை உடைத்து வெங்காயம் போட்டு கலக்கி ஆம்லெட் போட்டு அதை இரண்டாக கட் பண்ணி  ஒன்றை தட்டில் வைத்து அதில் சிக்கன் குருமாவை ஆம்லெட் மூழ்குமளவுக்கு ஊற்றி வெங்காயம் தூவி கையில் ஒரு பாவ்(பன்) கொடுத்து கொண்டிருந்தார்....நிமிட நேர இடைவெளியில் பலஆம்லெட்டுகள் தட்டுக்களை நிறைத்துக்கொண்டிருந்தது கூடவே வாடிக்கையாளர்களின் வயிற்றையும் மனத்தையும்...

கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகி நிற்க, சுற்றுப்புறத்தினை வாசனையால் நனைத்துக்கொண்டிருந்த ஆம்லெட்டும், சிக்கன் குருமாவும் நமது மூக்கைத்துளைக்கவே நமக்கொன்று சொல்ல உடனடியாக சூடாக வந்தது.சூடான ஆம்லெட், சுவையான சிக்கன் குருமா, தூவிய வெங்காயம், தொட்டுக்கொள்ள பாவ்.....கொஞ்சம் பாவினை பிய்த்து, ஆம்லெட்டில் கொஞ்சம் எடுத்து குருமாவில் தோய்த்து சாப்பிட செம டேஸ்ட்.....இப்படியே ஒவ்வொரு விள்ளலுமாக எடுத்து தோய்த்து தோய்த்து சாப்பிட உலகம் மறந்து போனது.எங்களைப்போலவே பலரும் ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.




கிடைத்த இடைவெளியில் இது என்னவென்று கேட்க இந்தியில் ஏதோ கடி என்று சொன்னார்..அப்புறம் திரும்ப கேட்க, ஆங்கிலத்தில் ப்ரெட் குருமா ஆம்லெட் என்று சொன்னார்.பேரு என்னமோ இருக்கட்டும்...ஆனா சுவையாக இருக்கிறது.மீண்டும் இன்னொன்றினை கேட்டு வாங்கி அதுவும் விள்ளலும் தோய்த்தலுமாக வயிற்றுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.

கோவா மட்கான் பக்கம் போனிங்கன்னா, முனிசுபல் ஆபிஸ் பக்கத்துல இருக்கிற பெட்ரோல் பங்க் எதிரில் இவரைக்காணலாம்.விலை 40 ரூபாய்.தள்ளுவண்டிக்கடை என்றாலும் மிக சுத்தமாக இருக்கிறது.

கிசுகிசு : சாப்பிட்டு முடித்தவுடன் இந்தக்கடைக்கு எதிரில் இருக்கிற அழகிய பூங்காவில் அமர்ந்து கொண்டு மீண்டும் விட்ட வேலையை ஆரம்பித்தோம் சிறிது நேரம்.....(மட்கான் பஸ்ஸ்டாண்டு அருகில் இருப்பதால் அரைகுறை அம்மணிகளை ரசிக்கமுடியும்....)

நேசங்களுடன்

ஜீவானந்தம்

10 comments:

  1. ரெம்ப வித்தியாசமான ஐட்டமா இருக்குது. உங்களுக்கு மட்டும் எப்படித்தான் வித்தியாசமா சிக்குதோ.. சூப்பர் தலைவரே வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
    Replies
    1. வட இந்தியாவில் இது ரொம்ப பேமஸ்...பாவ்பாஜின்னு சொல்வாங்க.அது வெஜிடபிள்....ஆனா இங்க ஆம்லெட் வித் சிக்கன் குருமான்னு செம டேஸ்டியா தர்றாரு.....

      Delete
  2. 2 (தானே...?) பாவ் எல்லாம் சரி... காலையில் சிரமம் இல்லையே...? ஆவ்வ்வ்வ்வ்...!

    ReplyDelete
    Replies
    1. கோவாவில் எந்த கடையில் சாப்பிட்டாலும் ஒரு பன்னை வச்சிடுவாங்க...அதுமட்டுமல்ல. மசால் போண்டா, முட்டை போண்டா வாங்கும்போது கூட பன்னை கட் பண்ணி நடுவுல போண்டா வச்சி தருவாங்க....நான் ப்ன் இல்லாம வாங்கிக்கிவேன்...என் நண்பன் புலம்புனான்...காலையில் ஒன்னும் வரமாட்டேன்குது அப்படின்னு.....ஹிஹிஹி

      Delete
  3. Unga pathivai padicha pinne pasikkuthu boss......kalakkureenga !

    ReplyDelete
    Replies
    1. உங்களைவிடவா பாஸ்...வெரைட்டி வெரைட்டியா தர்றீங்க....

      Delete
  4. ஆஹா மும்பைக்கு போனா பாவ் பாஜி கோவாக்கு போனா ஆம்லெட் சிக்கன் குருமா பாவ்... அடடா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கோவாக்கு போனப்ப இந்த மாதிரி பார்க்காம போயிட்டோமே.. அது சரி ஜீவா... வெஜ் எதுவும் இல்லையாப்பா? வெஜ்ஜும் அப்பப்ப தாங்கப்பா... த.ம.2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி க்கா.....
      வெஜ்ல வெரைட்டியே இருக்க மாட்டேங்குது...

      Delete
  5. இன்னிக்கு 'சிவராத்திரி'.அதனால, நான் படிக்கல.ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா....வருகைக்கு நன்றி...

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....