Showing posts with label அவினாசி. Show all posts
Showing posts with label அவினாசி. Show all posts

Thursday, July 2, 2015

கோவை மெஸ் - திருமூர்த்தி டீ ஸ்டால், இட்லி கடை, அவினாசி

                கோவையில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில், என்னுடன் பயணித்த நண்பர் ஒருவருடன் பொதுவாய் அரசியல் முதல் சாப்பாடு வரை அலசியபடி வந்து கொண்டிருக்க லேசாய்ப்பசி எடுக்க ஆரம்பித்தது.அப்போது தான் அவர் சொன்னார், அவினாசியில் ஒரு ஹோட்டல் இருக்கிறது ஆனால் சைவம் மட்டும் தான்...இட்லி, தோசை இது மட்டும் தான் கிடைக்கும்.இட்லி குருமா அவ்வளவு டேஸ்டாக இருக்கும் என சொல்ல, காலை நேர உணவை இங்கு முடித்து கொள்ளலாம் என பைபாஸில் வந்து கொண்டு இருந்த நாங்கள் அவினாசிக்கு வண்டியை ஓரங்கட்ட ஆரம்பித்தோம்.
                    அவினாசியில் இன்னும் பரபரப்படையாத காலைப்பொழுது..மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது.பி.எஸ் என் எல் ஆபிஸ் எதிரில் வண்டியை நிறுத்திவிட்டு ரோட்டை கடந்து அந்த ஹோட்டலுக்கு வந்தோம். ஹோட்டல் என்கிற அமைப்பே இல்லை.ஒரு டீக்கடை தான்.ஓடு போட்ட சின்ன வீடு...முன்புறம் டீ பாய்லர்...ஆனால் அந்த ஹோட்டல் முன்பு வித விதமான கார்களின் வரிசை.

ஆச்சர்யமாகி கடைக்குள் பார்த்தால் உள்ளே நான்கு பெஞ்ச் போடப்பட்டிருக்கிறது. காலையிலிலேயே ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. இரண்டு சீட் மட்டும் காலியாக இருக்க, நாங்கள் அமர்ந்து கொண்டோம்...ஒரு பத்து நிமிட்த்திற்குள்....வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, கடையின் ஓனர் இலை அனைவருக்கும் வைத்தார்.பின் தண்ணீர்.பின் ஆளுக்கு இரண்டிரண்டு இட்லி.பின் சட்னி , சாம்பார்..அதாவது குருமா...


ஒரு பந்தியில் எப்படி பரிமாறுவார்களோ அப்படி அனைவருக்கும் வரிசையாய் பரிமாறிக்கொண்டிருந்தார்..
இட்லிக்கு அந்த குருமா செம....அரைத்துவிட்ட தேங்காயுடன் சோம்பு பட்டை வாசத்துடன் மிக மிக செம டேஸ்ட் உடன்...இட்லிக்கு ஏதுவாக அந்த குருமா...இட்லியும் சாப்டாக இருக்க, இரண்டும் ஒரு சில நொடிகளில் இலையை விட்டு காணாமல் போய்விட்டிருந்தது.அடுத்த சில நிமிடங்களில் ஆவி பறக்க தோசை ஒவ்வொன்றாய் இலையில் வைத்து விட்டு பின் சட்னி சாம்பார் என வரிசைகட்டி வர, ஒருத்தரே தான் அத்தனையும் பரிமாறுகிறார்.
தோசைக்கும் அதே குருமா தான்...இரண்டும் செம காம்பினேசன்.சாப்பிட்டுக் கொண்டிருக்க அதற்குள் வாடிக்கையாளர்கள் கூட்டம் மொய்க்கிறது.காத்திருக்க ஆரம்பிக்கின்றனர்.முதல் பந்தி முடிந்தவுடன் அடுத்த பந்தி ஆரம்பிக்கிறது.சில நிமிடங்களில் மீண்டும் நிறைகிறது அந்த நான்கு பென்ச்கள்.மீண்டும் அதே வரிசையாய் பரிமாறப்பட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர்.


நாங்கள் இரண்டு இட்லி இரண்டு தோசை சாப்பிட்டு விட்டு பொறுமையாய் வெளியேறினோம்.நல்ல சுவை, சுடச்சுட தோசை...சூடான குருமா..நன்றாக இருக்கிறது.
குருமா சாப்பிட்டவுடன் உடனே சொன்னேன்..இந்த மாதிரி தான் என் அம்மா குருமா வைப்பார்கள் என்று....
கடையை விட்டு வெளியேற வரிசையாய் நிறைய கார்கள் வருகின்றன அவர் கடைக்கு ஒரு கெளரவத்தினை அளிக்கின்றன.

நண்பர் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக அங்கு சாப்பிட்டு வருகிறாராம்.டேஸ்ட் அப்படியே தான் இருக்கிறது எனவும், ஒரு சில முகூர்த்த தினங்களில் அரைமணி நேரம் கூட காத்திருந்து சாப்பிட்டுவிட்டு வருவாராம்.கார்களின் வரிசை நிறுத்தக்கூட இடம் இருக்காதாம்...

அவினாசி போனா சாப்பிட்டு பாருங்க...செம டேஸ்ட்...

பி எஸ் என் எல் ஆபிஸ் அருகில் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Friday, May 17, 2013

அருள்மிகு அவினாசியப்பர் / அவினாசிலிங்கேசுவரர் கோவில், அவினாசி, திருப்பூர்

                அவினாசி வழியா சேலம் செல்லும் போதெல்லாம் இங்க இருக்கிற சிவன் கோவிலை பார்த்து ிசம் பண்ணும் அப்பின்னநினைப்பேன்.ரொம்ப காலமா அது நிறைவேறாம போய் இருந்தது.எப்படியோ இப்பொழுது நிறைவேறி இருக்கிறது.மிக விசாலமாக இருக்கிறது இந்தக்கோவில்.பரந்து விரிந்து கிடக்கிற கோவிலின் ஆரம்பமாய் அரசமரத்தடி பிள்ளையார் வீற்றிருக்கிறார்.கார் பார்க்கிங்கில் வண்டியிறத்ிவிட்டு நக்க ஆரம்பித்ேன்.வெயிலின் ாக்கம் வெறங்கால்கில் ெரிந்து. ஆனாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் வேடந்தங்கல் பைகள் போல அம்மிகள் விசட்டி வந்தில் வி ஆனு மினுள்....மில் ிவின் ிசம் பெறுவோம் பின் சிலின் ிசம்  என ுடிவு பண்ணி உள்ளே நுழந்தேன்
        சிவ சிவ என பெயர் பொறித்த கோவில் கோபுரம் நம்மை வரவேற்கிறது.கோபுரம் நுழைவாயில் முன் கொடிமரம் இருக்கிறது.உள் நுழைந்ததும் ஏகப்பட்ட தூண்கள்.உள்ளே கோவிலும் பரந்து விரிந்து இருக்கிறது.சிவனை நோக்கி நந்தியும் கொடிமரமும் இருக்கிறது.முதலில் சிவனை சுற்றி இருக்கிற அத்தனை சன்னிதிகளிலும் ஒரு வருகைப்பதிவினை உறுதி செய்திவிட்டு சிவனை தரிசிக்க கருவறைக்குள் நுழைந்தேன்.ஐந்து தலை பாம்பின் கீழ் சிவன் லிங்கம் வடிவில் வீற்றிருக்கிறார்.மனமுருக வேண்டிக்கொண்டு வெளியேறினேன்.
           கோவில் பிரகாரத்தில் சனிபகவானுக்கு தனி சன்னதியும் நவக்கிரக நாயகர்களுக்கு தனி சன்னதியும் இருக்கிறது.அதுபோலவே பிள்ளையார், முருகன் ஆகியோருக்கும் தனி சன்னதி இருக்கிறது.காலபைரவர் சந்நிதி உள்பிரகாரத்தில் இருப்பது இங்கு மட்டும் தான்; இவருக்கு வடைமாலை அணிவிப்பது விசேஷமான பிரார்த்தனையாம்.
         கோவிலின் தல பெருமை சொல்லும் கல்வெட்டுகள் இருக்கின்றன.63 நாயன்மார்கள், வராகி, வீரபத்ரன், சாமுண்டி போன்ற தெய்வங்களும், பஞ்ச பூத லிங்கங்களும் கோவில் பிரகாரத்தில் இருக்கின்றன.இந்த கோவில் அருகிலேயே கருணாம்பிகா சன்னதியும் இருக்கிறது.இங்கு அம்மன் ஆட்சிபீட நாயகி என்பதால் சுவாமிக்கு வலப்புறம் வீற்றிருக்கிறாள்.
                   சிவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி ராஜகோபுரமும், கொடி மரமும் உள்ளது.  சிவாலயங்களில் சிவனுக்கு பின்புறம் அருள்பாலிக்கும் விஷ்ணு, இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனை பார்த்தபடி அருளுகிறார். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

              கோயிலின் தலவிருட்சமான பாதிரிமரம் பிரமோற்ஸவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது. மரத்தின் இத்தகைய இயல்பானது, இறைவனின் மீது தலவிருட்சம் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது என தலபுராணம் கூறுகிறது.இங்குள்ள இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மை கிடைக்கும். அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சனிபகவானை வழிபாடு செய்தால் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.
        காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தலத்ின் இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.
              இதன் தல வரலாறு என்னவெனில் சுந்தரர் இவ்வூரில் உள்ள தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடப்பதையும், மற்றொரு வீட்டில் பெற்றோர் சோகமாக இருப்பதையும் கண்டார். இதற்கான காரணத்தை விசாரிக்கையில், இரு வீட்டிலும் நான்கு வயதுடைய பையன்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் நடத்தியிருக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
           இதனை அறிந்த சுந்தரர் இத்தல இறைவனை கோயிலுக்குள் வெளியே நின்று மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவிநாசியப்பரின் அருளால் முதலை வாய்க்குள் 3 ஆண்டுகளுக்கு முன் போன பையன் 7 வயது வளர்ச்சியுடன் வெளியே வந்தான். இவனை பெற்றோரிடம் அழைத்து சென்று அவர்களது விருப்பப்படி பூணூல் கல்யாணமும் நடத்தி வைத்தார். இது இத்தலத்தில் முக்கிய நிகழ்ச்சியாகும். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் 3 நாட்கள் "முதலைவாய்ப்பிள்ளை உற்ஸவம்' நடக்கிறது.
இக்கோவிுக்கு வெளியாமைக்குளம் இருக்கிறு.இந்தோவிலின் முக்கிய ிருவிாவாக ேரோட்டம் இருக்கிறு.சித்ிரை மத்ில் வெகு விமிசையாகைபெறும்.
 
காலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும்.


ேசங்ுடன்
ீவானந்தம்

  

இன்னும் கொஞ்சம்...