Showing posts with label இனிப்பு. Show all posts
Showing posts with label இனிப்பு. Show all posts

Wednesday, July 22, 2015

கோவை மெஸ் - சேட் டீக்கடை, மூணு ரோடு,சூரமங்கலம் மெயின்ரோடு, சேலம்.

                            சேலம் மூணு ரோடு..கோவையில் இருந்து வருகிற பேருந்துகள் இந்த வழியாகத்தான் பஸ் ஸ்டாண்ட்க்குச் செல்லும்.அப்படித்தான் நானும் வந்து இறங்கினேன் இங்கு.இறங்கிய நேரம் என்னவோ மாலை நேரம்.கோவையில் இருந்து மூன்று மணி நேரம் பேருந்தில் அமர்ந்து வந்தது ஒரு மாதிரியாயிருக்க ஆதலால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள பக்கத்திலிருந்த டீக்கடைக்கு சென்றேன்.ரொம்ப சாதாரண டீக்கடை.பெரிதாக பேக்கரி போன்று ஆடம்பரமில்லாத கடை. கடைக்குள்ளும் நுழையவில்லை.ரோட்டில் இருந்தபடியே டீ ஆர்டர் பண்ணினேன்.நமக்கு தேவை டீ தானே..கடை எப்படி இருந்தால் என்ன  என்கிற மனோ பாவத்துடன் ஒரு டீ சொன்னேன்.மாஸ்டரும் டீ தயாரிப்பதில் மும்முரமாய் இருக்க நானோ வெளியே ரோட்டை வேடிக்கைப்பார்த்தபடி இருந்தபோது, சாப்....சாய் ரெடி என குரல் கேட்க,  அட... சேட்டுக்கடை !.. என்றபடியே வாங்கி டீ சூடான டீயை பருக,  குடித்துப்பார்த்ததில் டீ செம டேஸ்ட்.ஏலக்காய் மணம் தூக்க டீயும் நல்ல திக்காக இருக்க செம டேஸ்ட்.ஒரு சாதாரண டீ தான்..இதை இவ்வளவு டேஸ்டாக போட முடியுமா என்று ஆச்சர்யப்பட்டு கடைக்குள் நுழைய, கடையின் டேபிளில் ஏகப்பட்ட வெரைட்டியான பலகாரங்கள்...

                                              எல்லாம் அவங்க ஊர் பலகாரம் போல.அத்தனையும் அந்த இடத்திலேயே செய்கிறார்கள்.கொழுக்கட்டை வடிவில் ஒரு இனிப்பு பலகாரம், அப்பளம் போன்று ஒரு மொறு மொறு கார பலகாரம், ரவா லட்டுகளில் இரண்டு வகை , மிக்சர் என தட்டுக்களில் பரப்பி வைத்து இருந்தனர்.டீயும் செம டேஸ்டாக இருக்க, சூடாய் குடித்துக்கொண்டே அப்பளம் ஒன்றை எடுத்துக்கொறிக்க, அதுவும் செம டேஸ்ட்.கொஞ்சம் கொஞ்சமாய் அப்பளம் கொறித்து, ஒவ்வொரு மிடக்காய் டீயும் கலந்து சாப்பிட ஆஹா...செம டேஸ்ட்....





                         டீ சாப்பிட்டு முடித்தவுடன் அந்த கொழுக்கட்டை இனிப்பு பலகாரத்தினை சாப்பிட்டு பார்க்க, உள்ளே தேங்காய் சேர்த்து சுவையாக செய்திருந்தனர்.நன்றாக இருக்கிறது சாப்பிட.டீயும் பலகாரமும் சாப்பிட்டுவிட்டு, அடுத்த தெருவில் இருக்கும் நாங்கள் பணி செய்து கொண்டிருக்கும் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் இந்த கடையைப்பத்தி சொன்ன போது, அவர்களும் நாங்களும் அங்கு தான் டீ குடித்துக்கொண்டிருக்கிறோம் என்று ஒரே கோரஸாய் சொன்னார்கள்..ஒரு வாரம் அங்கு நம் ஆட்கள் வேலை செய்தபோது அந்த கடையில் தான் காலை மாலை இருவேளையும் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் என்பது எக்ஸ்ட்ரா தகவல்..
டீ அவ்ளோ அருமை.ஏலக்காய் மணம் வீச மிடக்கு மிடக்காய் குடிக்க ஆஹா...அருமை...
இந்தக்கடைக்கு போர்டெல்லாம் இல்லை.கடை பேரு என்னவென்று எழுதட்டும் என கேட்க, சேட்டான்கடை என்று எழுதுங்கள் என்று சொன்னார் கடைக்காரர்.போட்டோவில் இருப்பவர்கள் தான் டீக்கடைக்கு சொந்தக்காரர்கள்...
மூணுரோட்டில் இருக்கிறது இந்த போர்டில்லாத சேட்டான் கடை...(கடைக்கு பக்கத்திலேயே டாஸ்மாக் வேற இருக்கு...அங்க கூட போயிருக்கலாம் தான்..ஆனா வேலை முக்கியமாச்சே.....வேலை முடித்துவிட்டு திரும்பி வரும் போது அந்த டாஸ்மாக்கில் தான் நம்ம பகார்டி வாங்கினேன் என்பது வேற விசயம் )

நேசங்களுடன் 
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Thursday, April 2, 2015

சமையல் – இனிப்பு - பப்பாளி அல்வா (PAPAYA HALWA)

                         இப்போ பப்பாளி சீசன் போல...எங்க பார்த்தாலும் பப்பாளி பழங்களா தெரியுது.எங்க கிராமத்துல ஒவ்வொரு வீட்டின் புழக்கடையிலும் ஒண்ணு ரெண்டு பப்பாளி மரங்கள் இருக்கும்.காசு கொடுத்து வாங்கி தின்ற பழக்கம் இல்லை இதுவரைக்கும்.வீட்டு மரங்களில் பழுக்கின்ற பழங்களை எங்கள் தேவைக்கு போக மீதி அக்கம்பக்கத்து வீட்டினருக்கு கொடுத்து விடுவோம். மரத்திலேயே பழுத்து இருப்பதால் நல்ல ருசியும் மணமும் இருக்கும் ஆனால் இப்போது நகரத்தில் விற்கிற காய்கள் அனைத்தும் கல் வைத்து பழுக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றதால் சாப்பிட பிடிப்பதில்லை.

                         அப்படி ஊருக்கு சென்றிருந்த போது கொண்டு வந்திருந்த பழங்களில் செய்த பதார்த்தம் தான் இந்த அல்வா. இதுவரைக்கும் எங்கேயும் சாப்பிட்டதில்லை.புதிதாய் முயற்சித்து பார்ப்போமே என்றதில் நல்ல ரிசல்ட்.நம்ம அம்மணிக்கும் சந்தோசம்... சுவை நன்றாக வந்து இருக்கிறது.

தேவையான பொருட்கள்:
பப்பாளி  - 1 பழம்
சர்க்கரை – கால்கிலோ
நெய் – 200 மிலி
முந்திரி – சிறிதளவு
பாதாம் – சிறிதளவு
ஏலப்பொடி - சிறிதளவு

செய்முறை:
ப்ப்பாளி பழத்தினை தோல் சீவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
அடுப்பினை பற்றவைத்து வாணலியில் சிறிதளவு நெய்விட்டு அரைத்த பப்பாளி விழுதினை விட்டு வதக்க வேண்டும்.
பச்சை வாசம் போகும்போது சர்க்கரையை கொட்டி கிளறவேண்டும்.
ஏலக்காய் பொடி தூவவேண்டும்
நன்கு வேகும் வரை கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டு வதக்கி நன்கு வெந்தபின் வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் போது கொஞ்சம் நெய்யில் முந்திரி பாதாம் பருப்புகளை வறுத்து அல்வாவுடன் சேர்த்து கிளறவும்.







 

சுவையான சூப்பரான அல்வா ரெடி....
சூடாகவோ ஆறவைத்தோ சாப்பிட செமையாக இருக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...