Showing posts with label ஒகேனக்கல். Show all posts
Showing posts with label ஒகேனக்கல். Show all posts

Wednesday, September 26, 2012

ஒகேனக்கல் - தருமபுரி மாவட்டம் - பயணம் - 2


ஒகேனக்கல் - தருமபுரி - பயணம் 
டிக்கெட் வாங்கி கொண்டு தொங்குபாலம் சென்றோம்.பாலத்தில் இருந்து பார்க்க மிக அம்சமாய்...ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நிறைய அருவிகள்...அதைவிட அம்மணிகள்... எவ்ளோ அழகா இருக்கு அருவிகள்..ரசிக்க ரசிக்க மனம் விலகவே இல்லை. பாலம் கடந்து மெயின் அருவிக்கு செல்ல நிறைய பாறைகள் கல்வெட்டுகளாய்.... காதலர்களின் பெயர் பொறித்ததினால்......அப்படியே வழி சொல்லும் அம்புகுறிகள்...தட்டு தடுமாறி  (இது வந்து அந்த தட்டு தடுமாறி இல்ல...பாறைகளின் இடையில் செல்லும் போது ஏற்படும் தட்டு தடுமாறி... இல்லேனா நம்மளை வேற மாதிரி நினைச்சிடுவாங்க...) செல்கையில் அம்மணிகளின்  சாரி அருவிகளின்  அழகில் அதிசயத்து போனோம்...என்ன அழகு.. என்ன குளிர்ச்சி...சும்மா....சில்லுனு ..இப்படி ...நிறைய...
 

மெயின் அருவி செல்லும் வழியெங்கும் திடீர்கடைகள்..மீன் மிக பிரதான உணவாய்.... 
கைக்கெட்டும் தூரத்தில் வெள்ளமென பாய்ந்து வரும் அருவிகளை ரசித்த படி சினி பால்ஸ் மெயின் அருவி சென்றோம்..சினி பால்ஸ் இல்  குளிக்க ஐந்து ரூபாய்.உயரமா நின்னு பார்க்க மூணு ரூபாய் என நிறைய பேரு அங்கங்க பணம் வாங்குறாங்க.நாங்களும் விதிவிலக்கு இல்லை என்பதால்  குளிக்க டோக்கன் வாங்கிட்டு உள் நுழைந்தோம். மரங்களுக்கு இடையில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
முதலில் அருவிகள் கொட்டுகிற இடத்திற்கு சென்று விட்டு பின்னர் குளிக்கலாம் என்று மெயின் அருவிக்கு சென்றோம்...நீண்ட கால்வாய் போல இருக்கிறது..ஆங்காங்கே அருவிகள் கொட்டுகிறது.மிக ரம்மியமாக இருக்கிறது.இந்த பக்கம் தமிழ்நாடு பார்டர், அந்த பக்கம் கர்நாடகா பார்டர் என அழகாய் பிரிந்து இருக்கிறது.
சமதளத்தில் வருகிற வெள்ளம் பாறைகளுக்கு இடையே பிளந்து ஓ வென கொட்டுகிறது.இதன் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும்.அவ்ளோ அருமையாக இருக்கிறது.கொட்டும் அருவியை எவ்வளவு நேரம் ரசித்தாலும் அலுக்கவில்லை.. அம்மணிகளை போல.....
சரி...குளிக்கலாம் என்று சினி பால்ஸ் வந்தோம்..வரும்போது காலியாக இருந்த அந்த அருவி கொட்டுகிற இடத்தில் அம்மணிகள் நாலு பேரு இருக்க ....கூட்டம் மொய்க்க ஆரம்பித்தது....ரசிக்க ஒரு கூட்டம்...பார்க்க ஒரு கூட்டம்....குளிக்க ஒரு கூட்டம் என முண்டியடித்தது..
அப்போ தான் ஒரு பாடல் நம்ம சிற்றறிவுக்கு எட்டுச்சு..
தேவதை குளித்த
துளிகளை எல்லாம்
தீர்த்தம் என்றே
நான் குடிப்பேன்...
ஒருவேளை..இந்த மாதிரி காட்சியை பார்த்து தான் வைரமுத்துவும் எழுதி இருப்பாரோ... ஒரு டவுட்டு...
அப்புறம் ரொம்ப நேரம் அம்மணிகளும் நல்லா படம் காட்டவும்..ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு இருந்தது...அம்மணிகளின் நீராடலை சமாளிக்க முடியாமல் கூட வந்தவர்களின் கண்ணீர் அருவியோடு கலந்து சென்று கொண்டு இருந்தது.எப்படியோ கஷ்டப்பட்டு அம்மணிகளை அருவியில் இருந்து வெளியேற்றி....ஏகப்பட்ட ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டி கொண்டனர்(....ம்ம்ம்...போச்சே...வடை...போச்சே...)
அப்புறம் நேரம் ஆக ஆக அம்மணிகளின் சாரி அருவிகளின் அழகில் பசியை மறந்து விடுவோம்  என்றெண்ணி அங்கிருந்து விலக ஆரம்பித்தோம்... கொஞ்சம் கூட விலக மனமில்லாமல்..
வரும் வழியில் எல்லாம் ஆங்காங்கே கொட்டுகிற அருவியின் அழகை பருகியவாறே...அவ்வப்போது அம்மணிகளையும்...
 
 
எப்படியோ மனசை கட்டுப்படுத்தி அருவிக்கூட்டத்தில் இருந்து வெளியில் வர மீன் குழம்பு வாசம் ஆங்காங்கே வர பசியின் முகம் வெளியே தெரிய ஆரம்பித்தது.
மீன் சமைக்கும் இடத்திற்கு செல்ல ரெடியாகி கொண்டு இருந்தது மனம்.பாவைகளை பார்வையால் ருசித்த தெம்பில் எப்படியோ சமைக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். எல்லாம் ரெடியாக இருக்க, அனைவரும் வட்ட மேஜை மாநாட்டை கூட்ட, பாக்கு மட்டை தட்டில் மீன் வறுவல் வைக்கவும்....உடனடியாய் காணாமல் போய் கொண்டு இருந்தது...
 
 
மீனின் ருசியில் வயிறு அதி பயங்கரமாய் கபளீகரம் செய்து கொண்டு இருந்தது...அப்புறம் சாதம், மீன் குழம்பு, ரசம் என கலந்து கட்டி அடிக்க சமையல் பாத்திரம் தன் எடையை இழக்க ஆரம்பித்தது....எல்லாம் முடிந்து.... மனம் நிறைய மகிழ்ச்சியுடன், வயிறு நிறைந்த திருப்தியுடன் கிளம்பினோம்...
இங்கே இருக்கும் பெண்கள் சுற்றுலா வர்ற அனைவருக்கும் சமையல் செய்து தருவது ஒரு குடிசைத் தொழிலாக இருக்கிறது.நன்றாக சமைத்து தருகிறார்கள்.உப்பு, காரம், அளவாய் இட்டு மிக சுவையுடன் இருக்கிறது.நாங்கள் ஆறு பேர் சாப்பிட சாதம், குழம்பு, ரசம், வறுவல், செய்ய 500 ரூபாய்..மீன் நாங்களே வாங்கி கொடுத்து விட்டோம்.மூணு கிலோ கெழுத்தி மீன் 300 ரூபாய். மொத்தம் 800 ரூபாய்.அப்புறம் பாக்கு மட்டை, தண்ணீர் என ஒரு 60 ரூபாய்..அவ்ளோதான்.சாப்பிட இட வசதி இருக்கிறது.
நல்ல சுவையான உணவு கிடைக்கும்.எங்களுக்கு சமையல் செய்த அம்மணி பெயர் சங்கீதா. போன் நம்பர் 9047478177.அவங்களும் அவங்க அம்மாவும் ரொம்ப வருசமா இங்க இருக்காங்களாம்.நீங்கள் அங்கே சென்றால் கண்டிப்பாக இவங்களுக்கு ஒரு நல்ல ஆர்டர் தரணும்.
குடிக்க தண்ணீர் பாட்டில் வாங்கும் போது பார்த்து கவனமாக வாங்கவும்.டூப்ளிகேட் நிறைய இருக்கு.சொந்த காசுல சூன்யம் வச்சிக்காதீங்க...
அப்புறம்...
திரும்பி செல்லும் போது வண்டியில் இறங்கிய கேரள அம்மணிகளை கண்டதும் மீண்டும் அருவிக்கே செல்ல மனம் துடித்தது...எண்ட குருவாயூரப்பா.....மறுபடியுமா....

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

Saturday, September 22, 2012

ஒகேனக்கல்,தருமபுரி மாவட்டம் - பயணம் 1

ஜோலார்பேட்டையில் ஒரு வேலை காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு கிளம்ப வேண்டியதாகி விட்டது.கோவையில் இருந்து காலை வண்டியில் கிளம்பினோம் நானும் நம்ம டிரைவரும்.போற வழியில் நம்ம நண்பர்களை பிக்கப் செய்து கிட்டு சேலம் வழியா தொப்பூர் தாண்டி செல்லும் போது எதேச்சையா நம்ம பயபுள்ள ஒருத்தன் ஒகேனக்கல் பத்தி பேச்சை எடுக்க, சரி அங்க போலாம் அப்படின்னு உடனே முடிவு எடுத்து முதலில் வந்த இடது ரோட்டில் திருப்பினோம்.(ஒரு டவுட்டுக்கு அங்க இருந்த பொட்டிகடையில் விசாரித்து பெங்களுர் சாலையில் இருந்து உள் நுழைந்தோம்.தொப்பூர்ல இருந்து 10 கி.மீ இடைவெளியில் இடது புறம் ஒரு பாதை பிரிகிறது.) ஜருகு என்கிற ஊர் வழியே சென்று அச்சனஹள்ளி அடைந்து பென்னாகரம் சென்றோம்.
கிட்டதட்ட 60 கிலோ மீட்டர் இருக்கும்.தருமபுரி போய் பென்னாகரம் வழியாக செல்ல வேண்டிய ஒகேனக்கலுக்கு குறுக்கு பாதையில் பயணித்து விரைவில் பென்னாகரம் சென்று அடைந்தோம்.பென்னாகரம் செல்லும் வரைக்கும் ஆங்காங்கே நிறைய... மலைப்பாதைகள் தான்.மலைகள் தான்.பசுமைத்தோல் போர்த்திய மலையாய்...
இறங்கியும் ஏறியும் செல்ல வேண்டி வந்தது.வழி நெடுக நிறைய புளிய மரங்கள்.மலைப்பாதையில் நிறைய கருவேலம் மரங்கள்...
பென்னாகரத்தில் இருந்து 17 கி,மீ ஒகேனக்கலுக்கு.சம தளத்தில் பாதி தூரம் சென்றவுடன் செக் போஸ்ட் வரவேற்கிறது.வண்டி நம்பரை எழுதி விட்டு டோக்கன் வாங்கி கொண்டு மலைப்பாதையில் பயணித்தோம்.முடிவில் இந்தியாவின் நயாகரா விற்கு வந்து சேர்ந்தோம்...
இறங்கியவுடன் கூட்டம் மொய்க்க ஆரம்பித்தது...மீன்,சாப்பாடு சமையல் செய்யவும், பரிசலில் செல்லவும் ...

இருங்க சொல்கிறோம் என்று சொல்லியபடியே நழுவ...கடைசி வரைக்கும் எங்களிடம் போராடி மீன் மார்க்கெட் வரை வந்து தனக்கான ஆர்டரை பெற்றுக்கொண்ட ஒரு அம்மணி ரொம்ப சந்தோசத்தில் ....
அருவிக்கு செல்லும் வழியில் நிறைய துணி கடைகள்.ஏகப்பட்ட மீன் கடைகள்.நிறைய சாப்பாட்டு கூடங்கள், சமையல் செய்யும் இடம் என....


மீன் மார்க்கெட் .....ரொம்ப பெரிதில்லை..ஒவ்வொரு கடையும்  கலர் கலர் குடையுடன்  கொஞ்சம் கொஞ்சம் பெரிய மீன்களுடன்...கெழுத்தி, ஆரான், கட்லா, ரோகு என குறிப்பிட்ட சில வகைகள் மட்டுமே.


 ஆங்காங்கே மசாலா பொடியில் பிரட்டிவைக்கப்பட்ட மீன் துண்டுகள் வாடிக்கையாளரை எதிர்பார்த்து கருவாடாய் காய்ந்து கொண்டிருந்தது...
அதேமாதிரி சமைத்த உணவுகளை சாப்பிட நிறைய இடங்கள்..நம்ம ஜாதிக்கார பயலுங்க தான் அதிகம்...நீரிலும் ...நிலத்திலும்... தள்ளாடியபடியே...
.உள்ளே செல்ல செல்ல ஒருவித மணம் நாசியை துளைக்கிறது.சுவையான வாசத்துடன் மீன்கள் கொதித்து கொண்டு இருக்கின்றன நிறைய இடங்களில்..

நாங்கள் கெழுத்தி மீன் மூன்று கிலோ வாங்கி அந்த அம்மணியிடம் கொடுத்துவிட்டு அருவியை காண சென்றோம்...
சீகக்காய், எண்ணெய்  தடவிய திறந்த மார்புகளுடன் ஆண்களும் , தலை விரிகோலமாக பெண்களும் ஆங்காங்கே...மரங்களுக்கு,  பாறைகளுக்கு  இடையில் வெள்ளம் பாய்ந்து வருகிறது.அருவிகள் பாய்ந்தோடும் அழகினை ரசித்தபடியே முன்னேறினோம்.
 

அப்புறம் எப்பவும் போல அம்மணிகள் வருகையினால் (மூணு ஸ்டேட் வேற.... கேரளா, தமிழ்நாடு, கர்னாடகா ) மனம் அருவியை விட செம..சில்லுனு இருக்கு..
பாவைகளை
பார்த்ததும்
பரவசமாகி
பஞ்சாகி
போனது
மனசு.........அட கவிதை.....
கன்னியரை கண்டால் கவிதையும் கொட்டுகிறதே அருவி மாதிரி...
பறவைகள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்...அந்த பாட்டை பாடியபடியே....
பாறைக் கூட்டங்களில் ஆங்காங்கே அம்பு குறி வழி சொல்ல  மெயின் அருவியை  நோக்கி சென்றோம்..

இன்னும் இருக்குங்க...

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...